Wednesday, June 3, 2009

தள்ளாத வயதிலும் தணியாத அதிகார போதை





இன்று கருணாநிதிக்கு 86வது பிறந்த நாள்.

சிறந்த தமிழறிஞர், சிறந்த நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி, சிறந்த எழுத்தாளர், என்றெல்லாம் கருணாநிதியை புகழ வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தகுதி இல்லாதவர் அல்ல கருணாநிதி.

ஆனால், இந்த அனைத்துத் தகுதிகளையும் விட, இன்று குடும்பத் தலைவர் என்று மட்டுமே கருணாநிதி வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.

ஈழத் தமிழர்களின் மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் அவர்கள் முதுகில் குத்தி குடும்ப நலனுக்காக அவர்களை கைகழுவி விட்ட முழுத்துரோகி என்றுதான் இவரை வரலாறு பதிவு செய்யும்.

கடந்த வாரம் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், பல ஆண்டுகள் முன்பே இந்த பொறுப்புக்கு வரும் அளவுக்கு தகுதி உள்ளவர் தான். எமெர்ஜென்சியில் சிறையிலிருந்தவர். கருணாநிதி நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு பெற்றவர். இவ்வளவு ஏன், 57 வயது ஆன பின்பும் கூட, இன்றும் இளைஞர் அணித் தலைவராக இருந்து தன் பொறுப்புகளை செவ்வனே நடத்தி வருபவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுதும் சரி, சென்னை மாநகர மேயராக இருந்த பொழுதும் சரி, சென்னை நகரம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொழுதும், உள்ளாட்சி நிர்வாகம் செய்வதிலும், கருணாநிதியை விட அதிகம் நிதானத்தோடு பல சமயங்களில் நடந்து கொண்டுள்ளார்.

இவ்வாறெல்லாம் பல நியாயங்கள் இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் கழித்து, அதுவும் கடும் நெருக்கடிக்குப் பிறகு கருணாநிதி இந்த முடிவை எடுத்திருப்பது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அதுவும், காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கேட்கும் நிலையில், துணை முதல்வர் பதவியை அவர்கள் கோரக்கூடும் என்றும், ஸ்டாலின் கடும் அதிருப்தியில், கருணாநிதியிடம் கோபப்பட்டதாகவும், மூத்த மகன் அழகிரி கேபினெட் அமைச்சராக ஆன பின்னர், ஸ்டாலினுக்கு அதிகாரம் உயர்த்தி அளிக்கப் படாவிட்டால், குடும்பத்தினுள்ளே அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது என்பதால், அதற்குப் பிறகே கருணாநிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிக்கையில் வரும் செய்திகள், கருணாநிதி மனமார இந்த முடிவுகளை எடுக்கவில்லை, ஏதோ நெருக்கடியிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்று வந்த பொழுது கருணாநிதி விட்ட அறிக்கைகளையும், திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதையும் நினைவுபடுத்திப் பாருங்கள்.
"நான் பிழைப்பேனா என்பதே எனக்குத் தெரியாது,

மறு பிறவி எடுத்து வந்திருக்கிறேன் ;

நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை

தயவு செய்து வாக்களியுங்கள்,

உயிருக்கே ஆபத்து என்ற இரு கண்டங்களில் இருந்து
எழுந்து வந்திருக்கிறேன்.

இப்படிக் கழிவிரக்கம் கொண்டு, தள்ளாத வயதில், மூட்டை போல சுமந்து செல்லப் படுகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் வசைகளையும் பொறுத்துக் கொண்டு, கருணாநிதியை பிடிவாதமாக அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி யாராவது வற்புறுத்துகிறார்களா என்ன ?

ஸ்டாலின் துணை முதல்வராக ஆன பின்னும், கருணாநிதி தன் கையில் வைத்திருக்கும் இலாக்காக்களைப் பாருங்கள்

1) ஐஏஎஸ்
2) ஐபிஎஸ்
3) ஐஎப்எஸ்
4) லஞ்ச ஒழிப்பு
5) உள் துறை
6) காவல் துறை
7) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை
8) மொலாசஸ்
9) தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், லஞ்ச ஒழிப்பு, உள் துறை, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மற்றும் மொலாசஸ் ஆகிய துறைகள், மிகுந்த வேலைப் பளு மற்றும் அதிகாரம் நிறைந்த துறைகள். என்னால் முடியவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை, என்றெல்லாம் புலம்பும் கருணாநிதி மேற்கூறிய துறைகளை ஏன் மகன் உட்பட வேறு யாருக்கும் அளிக்க மறுக்கிறார் தெரியுமா ?

அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டால், அதிகாரிகள் அனைவரும் ஸ்டாலினைப் பார்த்து வேலையை முடித்துவிட்டுப் போய் விடுவார்கள், நம் பிறந்த நாளுக்கு நீண்டு நெடிந்து வீட்டு வாசலில் நிற்கும் அதிகாரிகள் கூட்டம், ஸ்டாலின் வீட்டுக்குப் போய் விடும் என்ற எண்ணமே காரணம்.

அனைத்து அதிகாரங்களையும் மகன் ஸ்டாலினுக்கும், மகள் கனிமொழிக்கும், தன் அமைச்சரவை சகாக்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, தான் மிகவும் நேசிப்பதாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அடிக்கடி பிரலாபிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் அல்லவா ?

செய்ய மாட்டார் கருணாநிதி. தன் இறு்தி மூச்சு வரைக்கும் அதிகாரத்தை கைவிட மாட்டார்.

இருப்பினும், தமிழாய்ந்த அறிஞரான கருணாநிதி, அவர் படித்த தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துளை இனியாவது கருத்தில் கொண்டு, அதிகார போதையை விட்டு ஒழிப்பார் என்ற நப்பாசையுடன், அவர் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.

ஒப்பாரி

தள்ளாத வயதிலும் தணியாத அதிகார போதை





இன்று கருணாநிதிக்கு 86வது பிறந்த நாள்.

சிறந்த தமிழறிஞர், சிறந்த நிர்வாகி, சிறந்த ராஜதந்திரி, சிறந்த அரசியல்வாதி, சிறந்த எழுத்தாளர், என்றெல்லாம் கருணாநிதியை புகழ வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கிறது. இந்தப் புகழ்ச்சிக்கெல்லாம் தகுதி இல்லாதவர் அல்ல கருணாநிதி.

ஆனால், இந்த அனைத்துத் தகுதிகளையும் விட, இன்று குடும்பத் தலைவர் என்று மட்டுமே கருணாநிதி வரலாற்றில் குறிப்பிடப் படுவார்.

ஈழத் தமிழர்களின் மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் அவர்கள் முதுகில் குத்தி குடும்ப நலனுக்காக அவர்களை கைகழுவி விட்ட முழுத்துரோகி என்றுதான் இவரை வரலாறு பதிவு செய்யும்.

கடந்த வாரம் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், பல ஆண்டுகள் முன்பே இந்த பொறுப்புக்கு வரும் அளவுக்கு தகுதி உள்ளவர் தான். எமெர்ஜென்சியில் சிறையிலிருந்தவர். கருணாநிதி நடத்திய அனைத்து இயக்கங்களிலும் பங்கு பெற்றவர். இவ்வளவு ஏன், 57 வயது ஆன பின்பும் கூட, இன்றும் இளைஞர் அணித் தலைவராக இருந்து தன் பொறுப்புகளை செவ்வனே நடத்தி வருபவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுதும் சரி, சென்னை மாநகர மேயராக இருந்த பொழுதும் சரி, சென்னை நகரம் வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட பொழுதும், உள்ளாட்சி நிர்வாகம் செய்வதிலும், கருணாநிதியை விட அதிகம் நிதானத்தோடு பல சமயங்களில் நடந்து கொண்டுள்ளார்.

இவ்வாறெல்லாம் பல நியாயங்கள் இருந்தாலும், இத்தனை ஆண்டுகள் கழித்து, அதுவும் கடும் நெருக்கடிக்குப் பிறகு கருணாநிதி இந்த முடிவை எடுத்திருப்பது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அதுவும், காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கேட்கும் நிலையில், துணை முதல்வர் பதவியை அவர்கள் கோரக்கூடும் என்றும், ஸ்டாலின் கடும் அதிருப்தியில், கருணாநிதியிடம் கோபப்பட்டதாகவும், மூத்த மகன் அழகிரி கேபினெட் அமைச்சராக ஆன பின்னர், ஸ்டாலினுக்கு அதிகாரம் உயர்த்தி அளிக்கப் படாவிட்டால், குடும்பத்தினுள்ளே அது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது என்பதால், அதற்குப் பிறகே கருணாநிதி அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முடிவுக்கு வந்ததாகவும் பத்திரிக்கையில் வரும் செய்திகள், கருணாநிதி மனமார இந்த முடிவுகளை எடுக்கவில்லை, ஏதோ நெருக்கடியிலேயே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சென்று வந்த பொழுது கருணாநிதி விட்ட அறிக்கைகளையும், திருச்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதையும் நினைவுபடுத்திப் பாருங்கள்.
"நான் பிழைப்பேனா என்பதே எனக்குத் தெரியாது,

மறு பிறவி எடுத்து வந்திருக்கிறேன் ;

நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை

தயவு செய்து வாக்களியுங்கள்,

உயிருக்கே ஆபத்து என்ற இரு கண்டங்களில் இருந்து
எழுந்து வந்திருக்கிறேன்.

இப்படிக் கழிவிரக்கம் கொண்டு, தள்ளாத வயதில், மூட்டை போல சுமந்து செல்லப் படுகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் வசைகளையும் பொறுத்துக் கொண்டு, கருணாநிதியை பிடிவாதமாக அதிகாரத்தை கையில் வைத்துக் கொள்ளச் சொல்லி யாராவது வற்புறுத்துகிறார்களா என்ன ?

ஸ்டாலின் துணை முதல்வராக ஆன பின்னும், கருணாநிதி தன் கையில் வைத்திருக்கும் இலாக்காக்களைப் பாருங்கள்

1) ஐஏஎஸ்
2) ஐபிஎஸ்
3) ஐஎப்எஸ்
4) லஞ்ச ஒழிப்பு
5) உள் துறை
6) காவல் துறை
7) மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை
8) மொலாசஸ்
9) தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் பாதுகாப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், லஞ்ச ஒழிப்பு, உள் துறை, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை மற்றும் மொலாசஸ் ஆகிய துறைகள், மிகுந்த வேலைப் பளு மற்றும் அதிகாரம் நிறைந்த துறைகள். என்னால் முடியவில்லை, உடல் ஒத்துழைக்கவில்லை, என்றெல்லாம் புலம்பும் கருணாநிதி மேற்கூறிய துறைகளை ஏன் மகன் உட்பட வேறு யாருக்கும் அளிக்க மறுக்கிறார் தெரியுமா ?

அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டால், அதிகாரிகள் அனைவரும் ஸ்டாலினைப் பார்த்து வேலையை முடித்துவிட்டுப் போய் விடுவார்கள், நம் பிறந்த நாளுக்கு நீண்டு நெடிந்து வீட்டு வாசலில் நிற்கும் அதிகாரிகள் கூட்டம், ஸ்டாலின் வீட்டுக்குப் போய் விடும் என்ற எண்ணமே காரணம்.

அனைத்து அதிகாரங்களையும் மகன் ஸ்டாலினுக்கும், மகள் கனிமொழிக்கும், தன் அமைச்சரவை சகாக்களுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, தான் மிகவும் நேசிப்பதாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அடிக்கடி பிரலாபிக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் அல்லவா ?

செய்ய மாட்டார் கருணாநிதி. தன் இறு்தி மூச்சு வரைக்கும் அதிகாரத்தை கைவிட மாட்டார்.

இருப்பினும், தமிழாய்ந்த அறிஞரான கருணாநிதி, அவர் படித்த தமிழ் நூல்களில் உள்ள நல்ல கருத்துளை இனியாவது கருத்தில் கொண்டு, அதிகார போதையை விட்டு ஒழிப்பார் என்ற நப்பாசையுடன், அவர் பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்.

ஒப்பாரி

Monday, June 1, 2009

அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,


படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும்


சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே.....

உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன..... என்னுடைய சம்பளம், எல்.டி.சி, ஜிபிஎஃப், சரியாக வருகிறதா என்பதை மட்டுமே சிந்தித்து, சுவாசித்து, உயிர் வாழும் சுயநலக் கூட்டமாய் இந்த அரசு ஊழியர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்த நிலையை மாற்றி ஓரளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில், ஒரு சமூக உணர்வை தோற்றுவிக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தாலும், குறைந்த அளவு வெற்றியைக் கூட அம்முயற்சி தரவில்லை என்பது தான் யதார்த்தம்.

அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறார்கள் என்ற உணர்வு துளியும் இன்றி அரசு அலுவலகத்தை அணுகும் பொது மக்களை இவர்கள் நடத்தும் விதம் என்ன என்பதை சாதி சான்றிதழுக்காகவும், மின் இணைப்புக்காகவும், பத்திரம் பதிவதற்காகவும், பொது மக்கள் நன்கு அறிவார்கள்.

லஞ்சம் கொடுக்காமல், அரசு அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காது என்பதும், பெரும்பாலான அலுவலகங்களில், ப்ரோக்கர்களின் தயவு இல்லாமல், காரியம் நடக்காது என்பதும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி, லஞ்ச ஊழலை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், மாறாக, திமுக ஆட்சி நடத்தி வரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், நாடறிந்த உண்மை.

அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில், சாமான்ய மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும், மக்களுக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், மனதில் கொண்டால்,
அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொறுத்தமானதே..... இல்லையெனில்... ....

கருணாநிதி அடிக்கும் கொள்ளையில், அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதே ஆகும்.

/ஒப்பாரி/

அரசு ஊழியர்களும், கொடை வள்ளல் கருணாநிதியும்.,,,


படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும்


சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே.....

உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன..... என்னுடைய சம்பளம், எல்.டி.சி, ஜிபிஎஃப், சரியாக வருகிறதா என்பதை மட்டுமே சிந்தித்து, சுவாசித்து, உயிர் வாழும் சுயநலக் கூட்டமாய் இந்த அரசு ஊழியர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்த நிலையை மாற்றி ஓரளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில், ஒரு சமூக உணர்வை தோற்றுவிக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தாலும், குறைந்த அளவு வெற்றியைக் கூட அம்முயற்சி தரவில்லை என்பது தான் யதார்த்தம்.

அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறார்கள் என்ற உணர்வு துளியும் இன்றி அரசு அலுவலகத்தை அணுகும் பொது மக்களை இவர்கள் நடத்தும் விதம் என்ன என்பதை சாதி சான்றிதழுக்காகவும், மின் இணைப்புக்காகவும், பத்திரம் பதிவதற்காகவும், பொது மக்கள் நன்கு அறிவார்கள்.

லஞ்சம் கொடுக்காமல், அரசு அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காது என்பதும், பெரும்பாலான அலுவலகங்களில், ப்ரோக்கர்களின் தயவு இல்லாமல், காரியம் நடக்காது என்பதும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி, லஞ்ச ஊழலை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், மாறாக, திமுக ஆட்சி நடத்தி வரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், நாடறிந்த உண்மை.

அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில், சாமான்ய மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும், மக்களுக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், மனதில் கொண்டால்,
அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொறுத்தமானதே..... இல்லையெனில்... ....

கருணாநிதி அடிக்கும் கொள்ளையில், அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதே ஆகும்.

/ஒப்பாரி/

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !




அன்பரே !


உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும்.

உங்களுக்கு அப்போது பிடித்த 'காகிதப் பூ' கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், உங்கள் நடிப்பில் நான் மனதைப் பறிகொடுத்ததுதான் உண்மை.

அனைத்து சாதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நீங்கள் என்னை மணம் புரிந்தீர்களா என்பதை நான் அறியேன்; ஆனால் திருமணமான நாள் முதலாகவே, என்னை நீங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தடத்தி வந்திருக்கிறீர்கள்.

என்னதான் ஆயினும் அக்காள் தயாளுதான் மூத்தவர் என்பதால் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுரிமை அளித்ததை இத்தனை காலம் பொறுத்தே வந்திருக்கிறேன். ஆனாலும், இனி பொறுப்பது பயன் தராது என்று தோன்றுகிறது.

எங்களோடு நெருக்கமாக இருக்கும், எங்கள் உறவினர், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையை என்ன பாடு படுத்தினீர்கள் ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாவோடு அப்படி என்ன தவறாக பேசி விட்டார் ?
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அவர் அத்தை மகனை நடவடிக்கை எடுக்காமல் விடச் சொன்னார் !

இது என்ன அப்படி ஒரு குற்றமா ?

அந்த வீணாய்ப் போன உபாத்யாய் இதையெல்லாம் டேப் பண்ணி வைத்திருப்பார் என்று யாருக்கு தெரியும் ?

அப்படி எல்லோரும் டேப் பண்ணி வைத்திருந்தால் நீங்கள் எத்தனை முறை பதவி விலக நேர்ந்திருக்கும் ?

சர்க்காரியா கமிஷன் உங்களை விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சொல்லவில்லையா ?

அதற்குப் பிறகு நீங்கள் முதல்வராக வில்லையா ?

உங்களோடு அமைச்சர்களாக இருக்கும் எத்தனை பேர் ஊழல் குற்றச் சாட்டுக்கு
ஆளானார்கள் ?

அனைவரும் பதவி விலகி விட்டார்களா என்ன ?

ஏதோ போன் பேசி விட்டார் என்று பூங்கோதையை ராஜினாமா செய்யச் சொல்லி எவ்வளவு நெருக்கடி தந்து ராஜினாமா செய்ய வைத்தீர்கள் ? உங்கள் நெருக்கடி இல்லையென்றால் பூங்கோதை தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு சுயமரியாதை உள்ளவரா என்ன ?

தேர்தல் நெருங்கவும் நாடார்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத் தான் பூங்கோதையை மீண்டும் அமைச்சர் ஆக்கினீர்கள் என்பது நாங்கள் அறியாததா ?

பிறகு நான் உங்களிடம் வேறு என்ன கேட்டேன் ? நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டு வந்தார்கள் என்பதற்காக, கள் இறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மக்கள் என் "மந்திரத் தமிழில் மயங்கிக் கிடக்கிறார்கள்; அவர்களுக்கு வேறு போதை வேண்டியதில்லை" என்று "இருட்டுக் கடை அல்வா" கொடுத்தீர்கள்.

ஆனால் மூத்தவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.

கடந்த மன்மோகன் அரசாங்கதில் என் மகளை நான் பெற்ற செல்வத்தை, கனிமொழியை மந்திரியாக்குங்கள் என்று மன்றாடிக் கேட்டும் மறுத்து விட்டீர்கள். மூத்தவர் பிள்ளைகளுக்கும் உங்கள் அக்காள் பேரன்களுக்கும் மட்டும் கட்சிப் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் வாரி வழங்குகின்றீர்கள். இந்த மந்திரி சபையிலாவது கேபினெட் அமைச்சர் பதவி வாங்கித் தருவீர்கள் என் எதிர்ப்பார்த்தால் முதல் முறை எம்பி ஆன மூத்தவர் மகனுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.

தற்போது, ஸ்டாலினையும், துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்தது போல் எனக்கும் என் மகளுக்கும் இதயத்தில் இடம் அளிக்கிறேன் என்ற வழக்கமான அல்வாவைத்தான் கிண்டிக் கொடுப்பீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மூத்தவர் மகன் அழகிரிக்கு முன் என் மகள் எம்.பி ஆகவில்லையா ? ஆனால் அவர் அமைச்சராகி விட்டார், என் மகள் இன்னும் எம்.பியாகவே உள்ளார். இதுதான் உங்கள் நெஞ்சுக்கு நீதியா ?

ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் உங்கள் கபட நாடகத்தை நான் கண்டு கொண்டேன். மந்திரி பதவி தருகிறேன், தருகிறேன் என்று கடைசியில் என் மகள் கனிமொழியை "சென்னை சங்கமத்தில்" கரகாட்டம் ஆட விட்டு விடுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது.

ஏற்கனவே மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில், டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுரில் "தலப்பாக்கட்டு பிரியாணி" கடை வைத்து விட்டார். என் மகளும் கரகாட்டப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறாள்.

இதற்கு மேலும், உங்களுடன் இருந்து, நீங்கள் கொடுக்கும் அல்வாவை சாப்பிட நானும் என் மகளும் தயாராக இல்லை.

அதனால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து விட்டேன். விவாகரத்து பெறலாம் என்றால், ஏற்கனவே நீங்கள் போலீசை வைத்து வக்கீல்களை அடித்து நொறுக்கியதால், என் வழக்கை எந்த வக்கீலும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். வேறு வழியில்லாமல், என் வழக்கை நானே வாதாடி நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஜீவனாம்சம் வழங்குவதிலாவது, குறை வைக்காமல், நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் ஒரு லட்சம் கோடியை, சரியாக பங்கீடு செய்து, எனக்கும் என் மகளுக்கும் பிரித்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

கனத்த இதயத்தோடு உங்களை விட்டுப் பிரியும்


காகிதப்பூ கதாநாயகி
கனிமொழியின் தாய்.