Monday, July 27, 2009

சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்




கடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.


இத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.


தீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.


இந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.


இச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.


நளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.


சிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்னும் காட்சியே இது.


ஒப்பாரி

சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்




கடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.


இத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.


தீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.


இந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.


இச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.


நளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.


சிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்னும் காட்சியே இது.


ஒப்பாரி

Sunday, July 19, 2009

சிறையில் நடந்த சித்திரவதை ! சீறிய உயர்நீதிமன்றம் !



கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சாரதா என்ற 55 வயது பெண்மணி, ரயில்வே போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டு வேலூர் பெண்களுக்கான சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அடைக்கப்படுகையில் ரூ.5000/- பணத்தை மறைத்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் சாரதா. சிறை அதிகாரிகள் பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்தால் கடும் தண்டனை என்று அவருடன் இருந்த சக கைதி அறிவுறுத்தியதன் படி, தன்னிடம் இருந்த பணத்தை அக்கைதியிடம் ஒப்படைத்துள்ளார் சாரதா.


இரண்டு நாட்கள் கழித்து, சாரதா அப்பணத்தை திருப்பி கேட்கையில், அக்கைதி கொடுக்க மறுக்கவே, உடனடியாக ஜெயிலரிடம் புகார் செய்யப் போகிறேன் என்று சொல்லி புறப்பட்ட சாரதாவை, கஸ்தூரி, தனம் மற்றும் முனீஸ்வரி ஆகிய கான்விக்ட் வார்டர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று அச்சிறையில் இருந்த நளினி, இத்தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். அவரின் முயற்சியையும் மீறி, அனைவராலும் சூழப்பட்டு, சாரதா கடுந்தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார். நிர்வாணப்படுத்தப் பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப் பட்டு தலைமுடியை சிறைக்கதவில் கட்டி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார். அன்று இரவு முழுவதும், அவருக்கு ஆடை வழங்கப் படாமல் கதறியபடி இருந்துள்ளார்.



மனித மனதை பதறச் செய்யும் இந்த கொடுமையான சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 4 நாட்கள் சாரதா மீதான இந்தத் தாக்குதல் தொடர்ந்தபடி இருந்தது.



நளினி


4 நாட்கள் கழித்து, தன் கட்சிக்காரரான நளினியைப் பார்க்க வழக்கறிஞர் புகழேந்தி சென்றார். அப்போது, அவரிடம் நளினி நடந்த விபரங்களைத் தெரிவிக்க, புகழேந்தி துரிதமாக நடந்த கொடுமைகள் குறித்து, உள்துறைச் செயலர் மற்றும் சிறை டிஜிபிக்கும் தந்தி அடித்தார். மறுநாளே, சாரதா மீது நடந்த தாக்குதலை விரிவாக விளக்கி, சாரதாவிற்கு மருத்துவ சிகிச்சை, சிறை அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சாரதாவிற்கு இழப்பீடு கேட்டு ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு, ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. உடனடியாக நீதிமன்றம், தாக்குதலுக்கு உள்ளான சாரதாவிற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும், சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.


மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தபொழுது, அரசு தாக்கல் செய்த மனுவில் திருப்தி அடையாத நீதிமன்றம், வேலூர் மாவட்ட நீதிபதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. பாதிக்கப் பட்ட சாரதாவை நேரில் அழைத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எலிப்பி தர்மாராவ் ஆகியோர் நடந்தவைகளை விசாரித்தனர். அப்போது சாரதா, நளினி மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், தான் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விபரத்தையும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், கடந்த 17.07.2009 அன்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு.


“நன்பகல் 2 மணிக்கு வெளிச்சத்தில் சிறை வளாகத்துக்குள் இப்படி ஒரு கொடுந்தாக்குதல் நடந்த சமயத்தில் சிறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இந்நீதிமன்றம் கவலை கொள்கிறது. சிறை அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட கன்விக்ட் வார்டர்களால் இத்தாக்குதல் நடந்திருப்பதால் கன்விக்ட் வார்டர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், இச்சம்பவம் நடந்திருப்பது தங்களுக்கு தெரியாது என்று சிறை அதிகாரிகள் கைகழுவி விட முடியாது. ஏனெனில், பாதிக்கப் பட்டவரின் அலறல் அவர்களுக்கு கட்டாயம் கேட்டிருக்கும். பாதிக்கப் பட்ட நபர், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சி புகார் கொடுக்காமல் இருந்தாலும் கூட, சிறை அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் சாரதா மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு நபர் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அதே பதில் மனுவில், சாரதா சிறைக்குள் அனுமதிக்கப் படுகையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிகளுக்கேற்ப சிறையின் மருத்துவ அலுவலர் சாரதாவை பரிசோதித்து சாரதா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று எவ்வித அறிக்கையும் தரவில்லை. இந்நிலையில், இந்நீதிமன்றத்தின் முன் இவ்வழக்கு வந்த உடன், ஒரு நபர் எப்படி மனநிலை பாதிக்கப் பட்டவராக மாறுவார் என்று தெரியவில்லை.


சிஎம்சி மருத்துவர் அறிக்கையிலும், சிறையின் மருத்துவ அலுவலரின் அறிக்கையிலும், சாரதாவின் மனநிலையில் எந்தவிதமான பாதிப்பும் இருப்பதாக எந்தக் குறிப்பும் காணப்படாத நிலையில், எதிர் மனுதாரரின் (சிறைக் கண்காணிப்பாளர்) வாதத்தை, இந்நீதிமன்றம், உறுதியாக தள்ளுபடி செய்கிறது.


இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்கையில், சாரதா மிகவும் கொடுமையான முறையில், கன்விக்ட் வார்டர்களால் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், இச்சம்பவத்தை மூடி மறைக்க சிறைக் கண்காணிப்பாளர் முயற்சி எடுத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.


சிறை விதிகளின் படி, கன்விக்ட் வார்டர்கள் என்பவர்கள் பொது ஊழியர்கள் ஆவர் என்பதால், அவர்களால் நடந்த இத்தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப் பட்ட நபர் அடைந்த கடுந்துன்பங்களுக்கும், உளைச்சல்களுக்கம் நட்ட ஈடாக, ரூ.50,000/- இழப்பீடாக வழங்க இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


படிப்பறிவில்லாத ஏழை கைதிகளுக்கும், ஏழைகளுக்கும் பாடுபடும் மனுதாரர் (வழக்கறிஞர் புகழேந்தி) இக்கொடுமையை இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறோம்.

நடந்த சம்பவங்களைப் பார்க்கையில், ஒரு அபலைப் பெண் கைதி, சிறைக்குள்ளேயே கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்க்கையில், வேலூர் சிறையில் பணியாற்றும் அதிகாரிகள், கடமை தவறியவர்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்த அன்று, அச்சிறையின் தலைமை பொறுப்பில் எந்தெந்த அதிகாரிகள் இருந்தார்களோ அவர்களுக்கெதிராக உள்துறை செயலாளரும், சிறைத்துறை டிஜிபியும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.




நளினி


அடக்குமுறைக்கு அஞ்சாமல், அநீதியை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய போராளி நளினியை மனதாரப் பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் புகழேந்தி


சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து மக்களுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தியை மனதார பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்


இவ்வழக்கில், மிகச் சிறப்பாக வாதாடி, ஒரு நல்ல தீர்ப்பு வர பெரும் காரணமாக இருந்த, மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துரைகள்.



/ஒப்பாரி/

சிறையில் நடந்த சித்திரவதை ! சீறிய உயர்நீதிமன்றம் !



கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சாரதா என்ற 55 வயது பெண்மணி, ரயில்வே போலீசாரால் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப் பட்டு வேலூர் பெண்களுக்கான சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அடைக்கப்படுகையில் ரூ.5000/- பணத்தை மறைத்து தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் சாரதா. சிறை அதிகாரிகள் பணம் வைத்திருப்பதை கண்டுபிடித்தால் கடும் தண்டனை என்று அவருடன் இருந்த சக கைதி அறிவுறுத்தியதன் படி, தன்னிடம் இருந்த பணத்தை அக்கைதியிடம் ஒப்படைத்துள்ளார் சாரதா.


இரண்டு நாட்கள் கழித்து, சாரதா அப்பணத்தை திருப்பி கேட்கையில், அக்கைதி கொடுக்க மறுக்கவே, உடனடியாக ஜெயிலரிடம் புகார் செய்யப் போகிறேன் என்று சொல்லி புறப்பட்ட சாரதாவை, கஸ்தூரி, தனம் மற்றும் முனீஸ்வரி ஆகிய கான்விக்ட் வார்டர்கள் மற்றும் சிறை அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று அச்சிறையில் இருந்த நளினி, இத்தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார். அவரின் முயற்சியையும் மீறி, அனைவராலும் சூழப்பட்டு, சாரதா கடுந்தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார். நிர்வாணப்படுத்தப் பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப் பட்டு தலைமுடியை சிறைக்கதவில் கட்டி மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானார். அன்று இரவு முழுவதும், அவருக்கு ஆடை வழங்கப் படாமல் கதறியபடி இருந்துள்ளார்.



மனித மனதை பதறச் செய்யும் இந்த கொடுமையான சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து 4 நாட்கள் சாரதா மீதான இந்தத் தாக்குதல் தொடர்ந்தபடி இருந்தது.



நளினி


4 நாட்கள் கழித்து, தன் கட்சிக்காரரான நளினியைப் பார்க்க வழக்கறிஞர் புகழேந்தி சென்றார். அப்போது, அவரிடம் நளினி நடந்த விபரங்களைத் தெரிவிக்க, புகழேந்தி துரிதமாக நடந்த கொடுமைகள் குறித்து, உள்துறைச் செயலர் மற்றும் சிறை டிஜிபிக்கும் தந்தி அடித்தார். மறுநாளே, சாரதா மீது நடந்த தாக்குதலை விரிவாக விளக்கி, சாரதாவிற்கு மருத்துவ சிகிச்சை, சிறை அதிகாரிகள் மேல் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சாரதாவிற்கு இழப்பீடு கேட்டு ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு, ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. உடனடியாக நீதிமன்றம், தாக்குதலுக்கு உள்ளான சாரதாவிற்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறும், சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சிறைக் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.


மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்தபொழுது, அரசு தாக்கல் செய்த மனுவில் திருப்தி அடையாத நீதிமன்றம், வேலூர் மாவட்ட நீதிபதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. பாதிக்கப் பட்ட சாரதாவை நேரில் அழைத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் எலிப்பி தர்மாராவ் ஆகியோர் நடந்தவைகளை விசாரித்தனர். அப்போது சாரதா, நளினி மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், தான் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விபரத்தையும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம், கடந்த 17.07.2009 அன்று சிறப்பான தீர்ப்பை வழங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு.


“நன்பகல் 2 மணிக்கு வெளிச்சத்தில் சிறை வளாகத்துக்குள் இப்படி ஒரு கொடுந்தாக்குதல் நடந்த சமயத்தில் சிறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இந்நீதிமன்றம் கவலை கொள்கிறது. சிறை அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட கன்விக்ட் வார்டர்களால் இத்தாக்குதல் நடந்திருப்பதால் கன்விக்ட் வார்டர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், இச்சம்பவம் நடந்திருப்பது தங்களுக்கு தெரியாது என்று சிறை அதிகாரிகள் கைகழுவி விட முடியாது. ஏனெனில், பாதிக்கப் பட்டவரின் அலறல் அவர்களுக்கு கட்டாயம் கேட்டிருக்கும். பாதிக்கப் பட்ட நபர், மேலும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சி புகார் கொடுக்காமல் இருந்தாலும் கூட, சிறை அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


அரசு தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் சாரதா மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு நபர் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அதே பதில் மனுவில், சாரதா சிறைக்குள் அனுமதிக்கப் படுகையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிகளுக்கேற்ப சிறையின் மருத்துவ அலுவலர் சாரதாவை பரிசோதித்து சாரதா மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று எவ்வித அறிக்கையும் தரவில்லை. இந்நிலையில், இந்நீதிமன்றத்தின் முன் இவ்வழக்கு வந்த உடன், ஒரு நபர் எப்படி மனநிலை பாதிக்கப் பட்டவராக மாறுவார் என்று தெரியவில்லை.


சிஎம்சி மருத்துவர் அறிக்கையிலும், சிறையின் மருத்துவ அலுவலரின் அறிக்கையிலும், சாரதாவின் மனநிலையில் எந்தவிதமான பாதிப்பும் இருப்பதாக எந்தக் குறிப்பும் காணப்படாத நிலையில், எதிர் மனுதாரரின் (சிறைக் கண்காணிப்பாளர்) வாதத்தை, இந்நீதிமன்றம், உறுதியாக தள்ளுபடி செய்கிறது.


இந்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்கையில், சாரதா மிகவும் கொடுமையான முறையில், கன்விக்ட் வார்டர்களால் கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், இச்சம்பவத்தை மூடி மறைக்க சிறைக் கண்காணிப்பாளர் முயற்சி எடுத்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.


சிறை விதிகளின் படி, கன்விக்ட் வார்டர்கள் என்பவர்கள் பொது ஊழியர்கள் ஆவர் என்பதால், அவர்களால் நடந்த இத்தாக்குதலுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப் பட்ட நபர் அடைந்த கடுந்துன்பங்களுக்கும், உளைச்சல்களுக்கம் நட்ட ஈடாக, ரூ.50,000/- இழப்பீடாக வழங்க இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.


படிப்பறிவில்லாத ஏழை கைதிகளுக்கும், ஏழைகளுக்கும் பாடுபடும் மனுதாரர் (வழக்கறிஞர் புகழேந்தி) இக்கொடுமையை இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக பாராட்டுகிறோம்.

நடந்த சம்பவங்களைப் பார்க்கையில், ஒரு அபலைப் பெண் கைதி, சிறைக்குள்ளேயே கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலைகளைப் பார்க்கையில், வேலூர் சிறையில் பணியாற்றும் அதிகாரிகள், கடமை தவறியவர்கள் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்தக் கொடுமை நிகழ்ந்த அன்று, அச்சிறையின் தலைமை பொறுப்பில் எந்தெந்த அதிகாரிகள் இருந்தார்களோ அவர்களுக்கெதிராக உள்துறை செயலாளரும், சிறைத்துறை டிஜிபியும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.




நளினி


அடக்குமுறைக்கு அஞ்சாமல், அநீதியை எதிர்த்து துணிச்சலாக குரல் எழுப்பிய போராளி நளினியை மனதாரப் பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் புகழேந்தி


சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து மக்களுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் புகழேந்தியை மனதார பாராட்டுகிறோம்.


வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்


இவ்வழக்கில், மிகச் சிறப்பாக வாதாடி, ஒரு நல்ல தீர்ப்பு வர பெரும் காரணமாக இருந்த, மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துரைகள்.



/ஒப்பாரி/

Sunday, July 5, 2009

நீதி எனும் மாயை !


நீதிபதி ரகுபதி


திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும் பெயில் மார்க்கையே வாங்கி-யிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மூன்று முறை முயன்றும் பாஸ் ஆகா-விட்டால் எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்தே மொத்தமாக அவரை நீக்க மருத்துவத் துறை-யில் விதி இருக்கிறது

அதனால் உஷாரான கிருபா தரப்பு, பிடிக்க வேண்டிவர்-களைப் பிடித்து பாஸ் மார்க் போட வைத்த-தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் இது சி.பி.ஐ.யின் கவனத்திற்குப் போக, அவர்கள் விசாரணை வளையத்தைச் சுருக்கி டாக்டர் கிருஷ்ண-மூர்த்தி-யையும் அவரது மகன் கிருபாவையும் கைது செய்யும் ஸ்டேஜுக்கு வந்து-விட்டார்கள். இதனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள் இருவரும்.

முதல் முறை இவர்களது மனு தள்ளுபடி ஆனது. இரண்டாவது முறை ஜூன் 29 அன்று வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக ஒரு வக்கீலின் மொபைலில் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர், அன்றைய நிலையில் வழக்கின் தன்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படியே இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ரகுபதியிடமும் பேசி, இந்த வழக்கில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கும்படி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கையிலேயே, இவ்வாறு நீதிபதி தனக்கு தொலைபேசியில் முன் ஜாமீன் வழங்குமாறு ப்ரெஷ்ஷர் வந்தது என்று சொல்லியிருப்பது இந்தியாவெங்கும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதித் துறையில் அரசியல் தலையீடு ஒன்றும் புதிதல்ல. நீதிபதியாக இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபையெல்லாம் நீதிபதிகள் காற்றில் பறக்கவிட்டு பல நாட்கள் ஆகின்றன. நீதிபதி ரகுபதி வெளிப்படையாக இவ்விஷயத்தை சொன்னதால் இது பரபரப்பு ஆகியிருக்கிறது. இது போன்ற தலையீட்டை சொல்லாமல் மறைத்த நீதிபதிகள் எத்தனையோ ? அரசியல் தலையீட்டால் வந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த நீதிபதிகள் எத்தனையோ ? அவைகள் என்றும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை.

அரசியல் ஆதரவு இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திலோ, அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமிக்கப் படுவது கனவிலும் நடக்காது என்று நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை உடைய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெரியும்.


சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்ற 11 நீதிபதிகளில் திரு.எஸ்.கே.கிருஷ்ணன், திரு.சி.டி.செல்வம் மற்றும், திரு.ராஜா சங்கர் ஆகிய நீதியரசர்கள், நியமன ஆணை வந்த மறுநாள், கருணாநிதியை சந்தித்து தங்கள் நன்றி விசுவாசத்தை தெரிவித்தார்கள்.




இவ்வாறு இவர்கள் சந்தித்ததை தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டு பறைசாற்றிக் கொண்டது.


உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப் பட்டவர்கள் இப்படி வெளிப்படையாக கருணாநிதியை சந்தித்து தங்கள் அரசியல் சார்பை வெளிப்படுத்தினால் சாமான்ய மக்கள், இந்த நீதிபதிகள் தங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எப்படி நம்புவார்கள் ? இந்த நீதிபதிகள் அரசுக்கு எதிரான வழக்கை விசாரிக்கையில், அரசியல் தலையீடு வந்தால் மறுக்கப் போகிறார்களா அல்லது நீதிபதி ரகுபதி போல் இதை வெளியில் சொல்வார்களா ? இந்த ரகுபதி நீதிபதியே, தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வரும் வாய்ப்பு இருந்திருந்தால் இதை வெளியே சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே !


திமுக வினர் இதுபோல் நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் தலையிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, வழக்கில் சிக்கிய தன் உறவினரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாவிடம் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் வெளியே வந்து அதனால் அவர் அமைச்சர் பதவி பறிபோனது. மக்கள் அதை மறந்ததும், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் நாம் கண்டதே.




தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கையில் டாடா ஸ்கை டிடி.எச் வசதிகள் தொடங்க அனுமதி தராமல் இழுத்தடித்தைதையும், பிறகு மன்மோகன் சிங் தலையிட்டு அனுமதி கொடுத்ததையும் நாம் கண்டோம். இதுபோல், திமுகவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், நீதித்துறை தன்னுடைய மாண்பையும் அதிகாரத்தையும் அரசியல்வாதிகள் காலடியில் அடகு வைத்துள்ள நிலைதான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் புகுந்து அங்கிருந்த நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியது கருணாநிதியின் காவல்துறை. அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது இந்த வெட்கங்கெட்ட சென்னை உயர்நீதிமன்றம். இன்று வரை அச்சம்பவம் தொடர்பாக ஒரு காவலர் கூட இடை நீக்கம் செய்யப் படவில்லை என்றால், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் அதிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.





அந்த சம்பவம் நடந்த அன்று இரவே, தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், கமிஷனரையும், டிஜிபியையும், இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால், முன்ஜாமீன் வழங்கச் சொல்லி மிரட்டல் விடும் தைரியம் மத்திய அமைச்சருக்கு வந்திருக்குமா ?
இவ்வளவு நடந்தும் கூட, அந்த மத்திய அமைச்சரின் பெயரை அந்த நீதிபதி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது தான் வெட்கக் கேடு. வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாத நீதிபதி, மிரட்டினார் என்று மட்டும் ஏன் சொல்ல வேண்டும் ?


எதிர்க்கட்சித் தலைவர் செல்வி.ஜெயலலிதா, வெளிப்டையாக, நீதிபதியை மிரட்டியது அமைச்சர் ஆ.ராசா தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் பினாமி, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் என்று அறிக்கை விட்ட பின்பு கூட, மன்மோகன் சிங் அமைதி காக்கிறார் என்றால், நீதித்துறையை மிரட்டும் ஆ.ராசாவின் செயலுக்கு மன்மோகன் சிங்கும் உடந்தை என்றே பொருள்.

நீதிபதிகளும், வானத்திலிருந்து உதித்த ஒழுக்க சீலர்கள் அல்ல. “வாழும் உரிமை“ கூட ஒரு மனிதனுக்கு இல்லை என்று நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, தீர்ப்பளித்தவர்கள்தானே இந்த நீதிமான்கள் ! இவர்களிடம், நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.


அரசியல்வாதிகளிடம் சலுகைகளை எதிர்ப்பார்த்து, இந்த நீதியரசர்கள் (!!!???) கையேந்தி நிற்கும் வரை, நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தே தீரும்.


அது வரை நீதி என்பது ஒரு மாயைதான் !
/ஒப்பாரி/


நீதி எனும் மாயை !


நீதிபதி ரகுபதி


திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும் பெயில் மார்க்கையே வாங்கி-யிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மூன்று முறை முயன்றும் பாஸ் ஆகா-விட்டால் எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்தே மொத்தமாக அவரை நீக்க மருத்துவத் துறை-யில் விதி இருக்கிறது

அதனால் உஷாரான கிருபா தரப்பு, பிடிக்க வேண்டிவர்-களைப் பிடித்து பாஸ் மார்க் போட வைத்த-தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் இது சி.பி.ஐ.யின் கவனத்திற்குப் போக, அவர்கள் விசாரணை வளையத்தைச் சுருக்கி டாக்டர் கிருஷ்ண-மூர்த்தி-யையும் அவரது மகன் கிருபாவையும் கைது செய்யும் ஸ்டேஜுக்கு வந்து-விட்டார்கள். இதனால் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள் இருவரும்.

முதல் முறை இவர்களது மனு தள்ளுபடி ஆனது. இரண்டாவது முறை ஜூன் 29 அன்று வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக ஒரு வக்கீலின் மொபைலில் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர், அன்றைய நிலையில் வழக்கின் தன்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படியே இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் ரகுபதியிடமும் பேசி, இந்த வழக்கில் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கும்படி மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கையிலேயே, இவ்வாறு நீதிபதி தனக்கு தொலைபேசியில் முன் ஜாமீன் வழங்குமாறு ப்ரெஷ்ஷர் வந்தது என்று சொல்லியிருப்பது இந்தியாவெங்கும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதித் துறையில் அரசியல் தலையீடு ஒன்றும் புதிதல்ல. நீதிபதியாக இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபையெல்லாம் நீதிபதிகள் காற்றில் பறக்கவிட்டு பல நாட்கள் ஆகின்றன. நீதிபதி ரகுபதி வெளிப்படையாக இவ்விஷயத்தை சொன்னதால் இது பரபரப்பு ஆகியிருக்கிறது. இது போன்ற தலையீட்டை சொல்லாமல் மறைத்த நீதிபதிகள் எத்தனையோ ? அரசியல் தலையீட்டால் வந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த நீதிபதிகள் எத்தனையோ ? அவைகள் என்றும் வெளிச்சத்துக்கு வரப்போவதில்லை.

அரசியல் ஆதரவு இல்லையென்றால் உயர்நீதிமன்றத்திலோ, அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நீதிபதியாக நியமிக்கப் படுவது கனவிலும் நடக்காது என்று நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை உடைய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெரியும்.


சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவியேற்ற 11 நீதிபதிகளில் திரு.எஸ்.கே.கிருஷ்ணன், திரு.சி.டி.செல்வம் மற்றும், திரு.ராஜா சங்கர் ஆகிய நீதியரசர்கள், நியமன ஆணை வந்த மறுநாள், கருணாநிதியை சந்தித்து தங்கள் நன்றி விசுவாசத்தை தெரிவித்தார்கள்.




இவ்வாறு இவர்கள் சந்தித்ததை தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டு பறைசாற்றிக் கொண்டது.


உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப் பட்டவர்கள் இப்படி வெளிப்படையாக கருணாநிதியை சந்தித்து தங்கள் அரசியல் சார்பை வெளிப்படுத்தினால் சாமான்ய மக்கள், இந்த நீதிபதிகள் தங்களுக்கு நீதி வழங்குவார்கள் என்று எப்படி நம்புவார்கள் ? இந்த நீதிபதிகள் அரசுக்கு எதிரான வழக்கை விசாரிக்கையில், அரசியல் தலையீடு வந்தால் மறுக்கப் போகிறார்களா அல்லது நீதிபதி ரகுபதி போல் இதை வெளியில் சொல்வார்களா ? இந்த ரகுபதி நீதிபதியே, தனக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வரும் வாய்ப்பு இருந்திருந்தால் இதை வெளியே சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே !


திமுக வினர் இதுபோல் நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் தலையிடுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, வழக்கில் சிக்கிய தன் உறவினரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாவிடம் அமைச்சர் பூங்கோதை பேசிய விவகாரம் வெளியே வந்து அதனால் அவர் அமைச்சர் பதவி பறிபோனது. மக்கள் அதை மறந்ததும், மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் நாம் கண்டதே.




தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கையில் டாடா ஸ்கை டிடி.எச் வசதிகள் தொடங்க அனுமதி தராமல் இழுத்தடித்தைதையும், பிறகு மன்மோகன் சிங் தலையிட்டு அனுமதி கொடுத்ததையும் நாம் கண்டோம். இதுபோல், திமுகவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல.

ஆனால், நீதித்துறை தன்னுடைய மாண்பையும் அதிகாரத்தையும் அரசியல்வாதிகள் காலடியில் அடகு வைத்துள்ள நிலைதான் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் புகுந்து அங்கிருந்த நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கியது கருணாநிதியின் காவல்துறை. அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தது இந்த வெட்கங்கெட்ட சென்னை உயர்நீதிமன்றம். இன்று வரை அச்சம்பவம் தொடர்பாக ஒரு காவலர் கூட இடை நீக்கம் செய்யப் படவில்லை என்றால், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் அதிகாரத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.





அந்த சம்பவம் நடந்த அன்று இரவே, தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், கமிஷனரையும், டிஜிபியையும், இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தால், முன்ஜாமீன் வழங்கச் சொல்லி மிரட்டல் விடும் தைரியம் மத்திய அமைச்சருக்கு வந்திருக்குமா ?
இவ்வளவு நடந்தும் கூட, அந்த மத்திய அமைச்சரின் பெயரை அந்த நீதிபதி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது தான் வெட்கக் கேடு. வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாத நீதிபதி, மிரட்டினார் என்று மட்டும் ஏன் சொல்ல வேண்டும் ?


எதிர்க்கட்சித் தலைவர் செல்வி.ஜெயலலிதா, வெளிப்டையாக, நீதிபதியை மிரட்டியது அமைச்சர் ஆ.ராசா தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் பினாமி, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப் படவேண்டும் என்று அறிக்கை விட்ட பின்பு கூட, மன்மோகன் சிங் அமைதி காக்கிறார் என்றால், நீதித்துறையை மிரட்டும் ஆ.ராசாவின் செயலுக்கு மன்மோகன் சிங்கும் உடந்தை என்றே பொருள்.

நீதிபதிகளும், வானத்திலிருந்து உதித்த ஒழுக்க சீலர்கள் அல்ல. “வாழும் உரிமை“ கூட ஒரு மனிதனுக்கு இல்லை என்று நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, தீர்ப்பளித்தவர்கள்தானே இந்த நீதிமான்கள் ! இவர்களிடம், நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்.


அரசியல்வாதிகளிடம் சலுகைகளை எதிர்ப்பார்த்து, இந்த நீதியரசர்கள் (!!!???) கையேந்தி நிற்கும் வரை, நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தே தீரும்.


அது வரை நீதி என்பது ஒரு மாயைதான் !
/ஒப்பாரி/


Saturday, June 27, 2009

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் முதல் 100 நாட்களுக்குள்ளே இந்த தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கான ஒரு திட்டம் தயாராகி விடும் என்று அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் இலங்கை மாடலை கடைபிடித்து மாவோயிஸ்ட் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களை அழிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தாக்குதலுக்கு உள்ளான வனவாசி சேத்னா ஆசிரமத்தை பார்வையிட வந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியல்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவிடம்தான் வெளியிடப்பட்டது.
இலங்கை மாடல் என்றவுடனே 1975ம் ஆண்டு ஜுன் 25-26 நள்ளிரவு அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்த “இந்திய அரசியலமைப்பு பிரிவு 352 (1)ல் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியாவின் பாதுகாப்பு உள்நாட்டு குழப்பங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், நெருக்கடி நிலையை அறிவிக்கிறேன்” என்று வெளியிட்ட அந்த அறிவிப்புதான் நிலைவுக்கு வருகிறது.
20 மாதகாலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை, போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் நெறிக்கப் பட்டது. பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அடங்கிப் போனார்கள்.
அரசு நிர்வாகம், வளையச் சொன்னால், தவழ்ந்து போனது. நீதித்துறையும் அடங்கிப் போய், நெருக்கடி நிலையில், குடிமக்களுக்கு “வாழும் உரிமை“ கூட இல்லை என்று தீர்ப்பளித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், அதிகாரத்தின் அடிவருடிகளாய் மாறிப்போனது.
குடியரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும், அரசு நிர்வாகம் மற்றும் அதன் உறுப்புகள் எவ்வாறு கடுந்தாக்குதலுக்கு உள்ளாகின என்பது, நெருக்கடி நிலையின் நிகழ்வுகளை தொகுக்குத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
சில ஆயிரம் நபர்களுக்கு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கைது, சித்திரவதை என்பதையும் தாண்டி நெருக்கடி நிலை, மிகவும் மோசமானது. அது சுதந்திரம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மறுத்து. உரிமைகள் வழங்க ஒரு புதிய நியதியையும், ஒரு புதிய அதிகார மையத்தையும் உருவாக்கியது. அதிகாரத்தை செலுத்துவதற்கான தடையை நீக்கி, எல்லையில்லா அதிகாரத்தை வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்துக்கும், மக்களை மாக்களாக நடத்துவதற்கும் நெருக்கடி நிலை பயன்பட்டது.
மொத்தத்தில், நேர்த்தியாக வடித்தெடுக்கப் பட்டு கவனமாக வளர்த்தெடுக்கப் பட்ட, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை நெருக்கடி நிலை, அழித்து விட்டது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் குடியாட்சி சமூகத்தின் மீது ஒருங்கிணைந்த அதிகாரத்தை செலுத்தியதன் மூலமாக, நிர்வாகமே சீர்குலைந்தது.
கொடுமை என்னவென்றால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழிந்த பின்னும், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட, அழிவுகள் சரி செய்யப்படவில்லை. மாறாக, ஒருங்கிணைந்த எதெச்சதிகாரம் இன்னும் தொடர்கிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த கொடுமைகள் இன்றும் தொடரும் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறலுக்கான அளவுகோலாக மாறி விட்டது.
இதைவிட கொடுமையான விஷயங்களும் நடக்கின்றன. அரசியல் தலைவர்களின் கொடும்பாவியை எரித்ததற்காக இளைஞர்கள் மீதும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஒரு வருடம் தொடர்ச்சியாக, விசாரணையின்றி சிறையில் வைக்க வழிவகை செய்வதுதான் “தேசிய பாதுகாப்புச் சட்டம்“‘. சிறிது காலம் முன்பு வரை பிரதமர் கனவில் இருந்த மாயாவதி, தனது மாநிலத்தில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளார். இதே மாநிலத்தில், ஒரு எட்டு வயது சிறுவன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளான்.
துணை ராணுவமும், கமாண்டோ வீரர்களும் எப்படி லால்கரை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கதையில் இன்று தேசம் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், சிபிஎம் ஆளும் இம்மாநிலத்தில், இந்தக் கதையின் பின்னால் உள்ள உண்மைக் கதை சொல்லப் படுவதில்லை. தான்தான் சிறந்த கட்சி என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வதற்கு 32 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளதை சிபிஎம் பயன் படுத்திக் கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒரு எதெச்செதிகார மையம் உருவாகி விட்டது. பஞ்சாயத்து, எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும், சிபிஎம் கட்சியினர் அனைத்தும், ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஊழலை எதிர்த்தோ, நிர்வாகக் குறைகளைப் பற்றியோ மேல் முறையீடு செய்வதள்கு எந்த வழியும் இல்லை. அடிப்படை நிர்வாகமே முடங்கிப் போய், அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு மோசமான சூழ்நிலை இது.
தேசிய அளவிலும், நிர்வாகம் பாரபட்சமாகவும், தான்தோன்றித் தனமாகவும்தான் இருக்கிறது. நெருக்கடி நிலையின் போது இருந்த அதே துதிபாடல்களும், வழிபடல்களும் இன்னும் காங்கிரசில் தொடர்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்திரா காந்தி, இன்று சோனியா காந்தி. தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகள், செல்வந்தர்கள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப் பட்டு, ஏழைகளுக்கு வறுமையை ஒழிப்போம் போன்ற வெற்று கோஷங்கள் மட்டும் வழங்கப் படுகிறது. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டு, பணக்காரர்கள் விருந்து வைத்து கொண்டாடுகையில், அதில் விழும் எச்சில் இலைகளை வைத்து உயிர் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுதான், நெருக்கடி நிலையின் தாக்கம். இதுதான், இந்திய அரசு நிர்வாகத்தின் இன்றைய சோக நிலை.
மோசமான நிர்வாகத்திற்கும், அநீதிகளுக்கும், தியான்மென் சதுக்கம் மற்றும் இலங்கையில் நடந்தது போன்ற கடும் ஒடுக்குமுறைகள் பதிலாக அளிக்கப் படுகின்றன.
“வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறுபவர்கள், மீண்டும் அத்தவறைச் செய்வார்கள்” என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறினார். நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்திய பாடப்புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும், அரசு ஆவணங்களிலும், ஆய்வறிக்கைகளிலும், வசதியாக மறைக்கப் பட்டுவிட்டதால், மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நோக்கி இந்திய ஆட்சியாளர்கள் வெகு வேகமாக சென்று வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து கடுமையாக தாக்குதலுக்குள்ளான இந்தியாவின் நிர்வாகத்தையும், அதன் உறுப்புகளையும் பலப்படுத்த தவறி தவறான பாடங்களையே கற்றுக் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தேசத்தின் ஆபத்திலேயே…

எம்.ஜி.தேவசகாயம்.

நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.