Saturday, August 8, 2009

முத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன


முத்துக்கருப்பன், IPS



2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் போட்டிகள் அதிகம் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார் முத்துக்கருப்பன் IPS. கூடுதல் டிஜிபி தரத்திலான அதிகாரிகள் தான் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளராக நியமிக்கப் படுவது வழக்கம். ஆனால், ஐஜி அந்தஸ்த்திலான முத்துக்கருப்பன் நியமிக்கப் பட்டது அப்போதே பலரது புருவங்களை உயர்த்தியது.



கருணாநிதியின் நள்ளிரவு கைது


முக்கிய பதவிக்கு வந்த முத்துக்கருப்பன், ஆட்சிக்கு விசுவாசமாக இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 2001 ஜுன் 21 அன்று நள்ளிரவு, கருணாநிதியை வீட்டுக் கதவை உடைத்து, வலுக்கட்டாயமாக கைது செய்தார் முத்துக் கருப்பன். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்து பிஜேபி அரசில் மூன்று கேபினெட் மந்திரிகளை வைத்திருந்தார் கருணாநிதி. அவர் கொடுத்த நெருக்கடியில், ஏறக்குறைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானது.



ஜார்ஜ் IPS




க்ரிஸ்டோபர் நெல்சன் IPS



முத்துக்கருப்பன், IPS



பிஜேபி அரசில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக கருணாநிதி, கைது நடவடிக்கையில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன், முத்துக் கருப்பன், ஜார்ஜ் ஆகிய மூன்று அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்ற வைத்தார். ஆனால் இந்த மூவரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடினார் முத்துக் கருப்பன். சென்னை அண்ணா நகரில் ஒரு இடம் தொடர்பாக இரு நபர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப் பட்டது. இதில் ஒரு தரப்புக்கு சாதகமாக முத்துக் கருப்பன் செயல்பட்டார். 30.08.2001 அன்று காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இறந்து அவரது உடல் அஞ்சலிக்காக காமாராஜர் அரங்கில் வைக்கப் பட்டிருந்தது. சென்னை நகரில் பல காவர்கள் பாதுகாப்பு பணிக்காக காமராஜர் அரங்கில் குவிக்கப் பட்டிருந்தனர்.

இதைப் பயன்படுத்தி, முத்துக் கருப்பன் ஏறக்குறைய 30 காவலர்களை போலீஸ் வேனில் ஏற்றி அண்ணா நகருக்கு அனுப்பி அங்கு தற்காலிகமாக கட்டப் பட்டிருந்த குடிசையை பிரித்து எரிந்து, இந்த இடம் இன்னாருக்கு சொந்தமானது என்று ஒரு பெயர்ப்பலகையை வைத்தார்.
சம்பந்தப்பட்ட நபரிடம், அந்த இடத்தை ஜெயலலிதா வாங்க விரும்புகிறார் என்று மிரட்டியுள்ளார் என்ற தகவலை அறிந்த உடனடியாக முத்துக் கருப்பனை கமிஷனர் பதவியிலிருந்து மாற்றி, தற்காலிக பணிநீக்ககம் செய்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ப்யூரிட்டா மினரல் வாட்டர் என்ற நிறுவனமும், ஒரு பால் பண்ணையும் நடத்தியதாகவும், அதற்காக ஏறக்குறைய 20 காவலர்களை வேலை வாங்கியதாகவும் ஒரு விசாரணையும் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப் பட்டது.

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு மேல் பணி இடை நீக்கத்தில் இருந்தார் முத்துக் கருப்பன். ஜெயலலிதா இருக்கும் வரை பணிக்கு வரவே முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அக்டோபர் 2007ல் பணி இடை நீக்கம் ரத்து செய்யப் பட்டு, பணி வழங்கப் பட்டது. இது போக கடந்த வாரம், அவர் மீது இருந்த வழக்குகள் அனைத்திலும் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த முத்துக் கருப்பன், மீண்டும் திமுக ஆட்சியிலேயே செல்வாக்கு பெறுவது என்பது அதிகாரிகள் எப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு சோரம் போவார்கள் என்பது தானே.


கைது செய்யப் பட்ட கருணாநிதி சிறை வாசலில்



இதே நள்ளிரவு கைதில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ளார். ஜார்ஜ் தற்போது, நாகர்கோயில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளார்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், இந்த அதிகாரிகள் காட்டில் எப்போதும் மழைதான். இவர்களுக்கு எந்த சட்டமும் பொருந்தாது.


ஒப்பாரி

முத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன


முத்துக்கருப்பன், IPS



2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் போட்டிகள் அதிகம் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார் முத்துக்கருப்பன் IPS. கூடுதல் டிஜிபி தரத்திலான அதிகாரிகள் தான் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளராக நியமிக்கப் படுவது வழக்கம். ஆனால், ஐஜி அந்தஸ்த்திலான முத்துக்கருப்பன் நியமிக்கப் பட்டது அப்போதே பலரது புருவங்களை உயர்த்தியது.



கருணாநிதியின் நள்ளிரவு கைது


முக்கிய பதவிக்கு வந்த முத்துக்கருப்பன், ஆட்சிக்கு விசுவாசமாக இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 2001 ஜுன் 21 அன்று நள்ளிரவு, கருணாநிதியை வீட்டுக் கதவை உடைத்து, வலுக்கட்டாயமாக கைது செய்தார் முத்துக் கருப்பன். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்து பிஜேபி அரசில் மூன்று கேபினெட் மந்திரிகளை வைத்திருந்தார் கருணாநிதி. அவர் கொடுத்த நெருக்கடியில், ஏறக்குறைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானது.



ஜார்ஜ் IPS




க்ரிஸ்டோபர் நெல்சன் IPS



முத்துக்கருப்பன், IPS



பிஜேபி அரசில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக கருணாநிதி, கைது நடவடிக்கையில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன், முத்துக் கருப்பன், ஜார்ஜ் ஆகிய மூன்று அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்ற வைத்தார். ஆனால் இந்த மூவரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடினார் முத்துக் கருப்பன். சென்னை அண்ணா நகரில் ஒரு இடம் தொடர்பாக இரு நபர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப் பட்டது. இதில் ஒரு தரப்புக்கு சாதகமாக முத்துக் கருப்பன் செயல்பட்டார். 30.08.2001 அன்று காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இறந்து அவரது உடல் அஞ்சலிக்காக காமாராஜர் அரங்கில் வைக்கப் பட்டிருந்தது. சென்னை நகரில் பல காவர்கள் பாதுகாப்பு பணிக்காக காமராஜர் அரங்கில் குவிக்கப் பட்டிருந்தனர்.

இதைப் பயன்படுத்தி, முத்துக் கருப்பன் ஏறக்குறைய 30 காவலர்களை போலீஸ் வேனில் ஏற்றி அண்ணா நகருக்கு அனுப்பி அங்கு தற்காலிகமாக கட்டப் பட்டிருந்த குடிசையை பிரித்து எரிந்து, இந்த இடம் இன்னாருக்கு சொந்தமானது என்று ஒரு பெயர்ப்பலகையை வைத்தார்.
சம்பந்தப்பட்ட நபரிடம், அந்த இடத்தை ஜெயலலிதா வாங்க விரும்புகிறார் என்று மிரட்டியுள்ளார் என்ற தகவலை அறிந்த உடனடியாக முத்துக் கருப்பனை கமிஷனர் பதவியிலிருந்து மாற்றி, தற்காலிக பணிநீக்ககம் செய்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ப்யூரிட்டா மினரல் வாட்டர் என்ற நிறுவனமும், ஒரு பால் பண்ணையும் நடத்தியதாகவும், அதற்காக ஏறக்குறைய 20 காவலர்களை வேலை வாங்கியதாகவும் ஒரு விசாரணையும் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப் பட்டது.

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு மேல் பணி இடை நீக்கத்தில் இருந்தார் முத்துக் கருப்பன். ஜெயலலிதா இருக்கும் வரை பணிக்கு வரவே முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அக்டோபர் 2007ல் பணி இடை நீக்கம் ரத்து செய்யப் பட்டு, பணி வழங்கப் பட்டது. இது போக கடந்த வாரம், அவர் மீது இருந்த வழக்குகள் அனைத்திலும் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த முத்துக் கருப்பன், மீண்டும் திமுக ஆட்சியிலேயே செல்வாக்கு பெறுவது என்பது அதிகாரிகள் எப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு சோரம் போவார்கள் என்பது தானே.


கைது செய்யப் பட்ட கருணாநிதி சிறை வாசலில்



இதே நள்ளிரவு கைதில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ளார். ஜார்ஜ் தற்போது, நாகர்கோயில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளார்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், இந்த அதிகாரிகள் காட்டில் எப்போதும் மழைதான். இவர்களுக்கு எந்த சட்டமும் பொருந்தாது.


ஒப்பாரி

Thursday, July 30, 2009

லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்பது “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது, லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது, லஞ்சம் வாங்கிய காவலர் கைது“ என்று வரும் செய்திகளை வைத்து ஓரளவு தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில், விஏஓ, உதவியாளர் போன்ற அரசின் கடைநிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? வேறு உயர் அதிகாரிகள் யாருமே லஞ்சம் வாங்குவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. உயர் அதிகாரிகளும் வாங்குகிறார்கள், ஆனால், அவர்கள் “உயர் அதிகாரிகள்“ என்பதனால், அவர்களைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறை பம்முகிறது.


லஞ்ச ஒழிப்புத்துறையின் இணையத் தளத்தில் உள்ள பட்டியலின்படி 2004-2005ல் 534, 2005-2006ல் 750, 2006-2007ல் 488 மற்றும் 2007-2008ல் 683 வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் எவ்வளவு தெரியுமா ? 2004-2005ல் 7, 2005-2006ல் 6, 2006-2007ல் 19 மற்றும் 2007-2008ல் 15. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிராக இவ்வளவு குறைவாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டதன் காரணம், அதிகாரிகள் அவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதா ? இல்லை. அதிகாரிகள் தங்களுக்கெதிராக எந்த ஒரு விசாரணையும் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


ஐநூறும் ஆயிரமும் லஞ்சமாக வாங்குவதும் சட்டப் படி குற்றம்தான் என்றாலும், லட்சத்திலும் கோடியிலும் லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியாக திளைத்துக் கொண்டிருக்கையில், கடைகோடி ஊழியர்களை மட்டும் குறி வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை பிடிப்பது எந்த வகையில் நியாயம் ?


இன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் என்ற எம்.எல்.ஏ, கடந்த வாரம் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். நீக்கப் பட்டதை தொடர்ந்து கருணாநிதியையும், ஸ்டாலினையும் வியாழன் அன்று இரவு சந்தித்து, திமுக வில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியைப் பற்றித்தான் அச்செய்தி விரிவாக விளக்குகிறது. கடந்த செப்டம்பர் 2006ல் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவ்வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. இச்செய்தியை உறுதி செய்யும் வகையில், ஒன்றாக வழக்கு பதிவு செய்யப் பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை புதன் அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


இது தவிர மேலும், இதுபோல் ஜெனிபர் சந்திரன், கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், ஆலடி அருணா, இந்திரா குமாரி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளும், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல், லஞ்ச ஒழிப்புத் துறையால் ஓரங்கட்டப் பட்டன என்றும் தகவல் அப்பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.


நேர்மையான நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். உபாத்யாய் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், தனக்கு பணி தொடர்பாக தொடர்ந்து நெருக்கடிகள் வந்ததால், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து வைத்தார். அவ்வாறு பதிவுசெய்து வைத்த உரையாடலில் ஒன்று பத்திரிக்கையில் வெளியானது. அவ்வுரையாடலில், தலைமைச் செயலாளர் திரிபாதி ஜெயலலிதா மீது, எப்படியாவது வழக்கு பதியச் சொல்லி உபாத்யாவை வற்புறுத்துகிறார். இவ்வுரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, உபாத்யாய் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார். திரிபாதி மீது நடவடிக்கை இல்லை.


இச்செய்திகளையெல்லாம் பார்க்கையில், நேர்மையாக, மனசாட்சிக்குப் பயந்து, விதிகளின்படி நடக்கும் அதிகாரிகள் அறுகி விட்டார்கள் என்பதும், நேர்மையாக இருந்தால் கடுந்துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதும்தான் விளங்குகிறது.


லஞ்ச ஒழிப்புத் துறையும், சுதந்திரமாக செயல்படாமல், எதிரிகளை பழிவாங்க ஆட்சியாளர்கள் கையில் கிடைத்த ஒரு ஆயுதமாகத்தான் செயல்பட்டு வருகிறது.

/ஒப்பாரி/


லஞ்ச ஒழிப்புத் துறை லஞ்சத்தை ஒழிக்கிறதா ? வளர்க்கிறதா ?



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என ஒரு துறை செயல்பட்டு வருகிறது என்பது “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது, லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது, லஞ்சம் வாங்கிய காவலர் கைது“ என்று வரும் செய்திகளை வைத்து ஓரளவு தெரிந்து கொள்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டில், விஏஓ, உதவியாளர் போன்ற அரசின் கடைநிலை ஊழியர்கள் மட்டும்தான் லஞ்சம் வாங்குகிறார்களா ? வேறு உயர் அதிகாரிகள் யாருமே லஞ்சம் வாங்குவதில்லையா என்ற கேள்வியும் எழுகிறது. உயர் அதிகாரிகளும் வாங்குகிறார்கள், ஆனால், அவர்கள் “உயர் அதிகாரிகள்“ என்பதனால், அவர்களைப் பார்த்து லஞ்ச ஒழிப்புத் துறை பம்முகிறது.


லஞ்ச ஒழிப்புத்துறையின் இணையத் தளத்தில் உள்ள பட்டியலின்படி 2004-2005ல் 534, 2005-2006ல் 750, 2006-2007ல் 488 மற்றும் 2007-2008ல் 683 வழக்குகள், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவற்றில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகள் எவ்வளவு தெரியுமா ? 2004-2005ல் 7, 2005-2006ல் 6, 2006-2007ல் 19 மற்றும் 2007-2008ல் 15. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிராக இவ்வளவு குறைவாக வழக்குகள் பதிவு செய்யப் பட்டதன் காரணம், அதிகாரிகள் அவ்வளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதா ? இல்லை. அதிகாரிகள் தங்களுக்கெதிராக எந்த ஒரு விசாரணையும் நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.


ஐநூறும் ஆயிரமும் லஞ்சமாக வாங்குவதும் சட்டப் படி குற்றம்தான் என்றாலும், லட்சத்திலும் கோடியிலும் லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும், அரசியல்வாதிகளும் மகிழ்ச்சியாக திளைத்துக் கொண்டிருக்கையில், கடைகோடி ஊழியர்களை மட்டும் குறி வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை பிடிப்பது எந்த வகையில் நியாயம் ?


இன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்“ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணன் என்ற எம்.எல்.ஏ, கடந்த வாரம் அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். நீக்கப் பட்டதை தொடர்ந்து கருணாநிதியையும், ஸ்டாலினையும் வியாழன் அன்று இரவு சந்தித்து, திமுக வில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியைப் பற்றித்தான் அச்செய்தி விரிவாக விளக்குகிறது. கடந்த செப்டம்பர் 2006ல் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இவ்வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் சேரப்போவதாக தகவல் வந்துள்ளது. இச்செய்தியை உறுதி செய்யும் வகையில், ஒன்றாக வழக்கு பதிவு செய்யப் பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை புதன் அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


இது தவிர மேலும், இதுபோல் ஜெனிபர் சந்திரன், கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன், ஆலடி அருணா, இந்திரா குமாரி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளும், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல், லஞ்ச ஒழிப்புத் துறையால் ஓரங்கட்டப் பட்டன என்றும் தகவல் அப்பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.


நேர்மையான நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். உபாத்யாய் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், தனக்கு பணி தொடர்பாக தொடர்ந்து நெருக்கடிகள் வந்ததால், தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்து வைத்தார். அவ்வாறு பதிவுசெய்து வைத்த உரையாடலில் ஒன்று பத்திரிக்கையில் வெளியானது. அவ்வுரையாடலில், தலைமைச் செயலாளர் திரிபாதி ஜெயலலிதா மீது, எப்படியாவது வழக்கு பதியச் சொல்லி உபாத்யாவை வற்புறுத்துகிறார். இவ்வுரையாடல் வெளியானதைத் தொடர்ந்து, உபாத்யாய் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார். திரிபாதி மீது நடவடிக்கை இல்லை.


இச்செய்திகளையெல்லாம் பார்க்கையில், நேர்மையாக, மனசாட்சிக்குப் பயந்து, விதிகளின்படி நடக்கும் அதிகாரிகள் அறுகி விட்டார்கள் என்பதும், நேர்மையாக இருந்தால் கடுந்துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதும்தான் விளங்குகிறது.


லஞ்ச ஒழிப்புத் துறையும், சுதந்திரமாக செயல்படாமல், எதிரிகளை பழிவாங்க ஆட்சியாளர்கள் கையில் கிடைத்த ஒரு ஆயுதமாகத்தான் செயல்பட்டு வருகிறது.

/ஒப்பாரி/


Wednesday, July 29, 2009

பெரியார் திடல் எனும் சங்கர மடம்



தந்தை பெரியார் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காகவே அளித்தவர். இம்மக்களை மூடத்தனத்திலிருந்து விடுவித்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்க்கையை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அர்ப்பணித்தவர். அந்தப் பெரியாரின் கொள்கைகளை இவ்வுலகமெல்லாம் பரப்புவதே பகுத்தறிவு உள்ள ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால், பெரியாரின் சிந்தனைகள் யாரையும் சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில் “குடியரசு“ இதழ் தொகுப்பை வெளியிடத் தடை கோரி பெரியார் திடலை சங்கர மடமாக மாற்றி வைத்திருக்கும் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில், திங்களன்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்தார்.

நீதியரசர் சந்துரு


வழக்கு விபரங்களுக்குச் செல்லும் முன், பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் தலைவர் வீரமணியின் செயல்பாடுகள் குறித்து காண்பது அவசியம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, யார் ஆட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு துதிபாடுவதில் வீரமணிக்குச் சளைத்தவர்கள் யாரும் கிடையாது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், “தடா“ என்ற ஒரு கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தில் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இக்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டமளித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பியவர்தான் இந்த வீரமணி.



பெரியார் திடலை தன் சொந்த சொத்தாக பாவித்து யாருக்கும் அதில் உரிமை கிடையாது என்பது போல் வீரமணி நடந்து கொண்டிருக்கிறார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அவ்வருமானம் எவ்வாறு செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.
இந்நிலையில், வீரமணியின் போக்கு பிடிக்காமல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் “பெரியார் திராவிடர் கழகம்“ என்ற அமைப்பை துவக்கி, பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரின் உழைப்பில் வெளிவந்த “குடியரசு“ இதழை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தொகுப்பை மலிவு விலையில் வெளியிட முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான் பெரியாரின் பேரனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சி செய்யும் கி.வீரமணி, இவ்வாறு “குடியரசு“, இதழ் தொகுத்து வெளியிடும் முயற்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவராயிருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் வெளியிடக் கூடாது என்றும், வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப் பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது. நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்திருந்தாலும், இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றுள்ளார் என்பது, வருத்தமளிக்கும் செய்தி.
பெரியார் கொள்கைகளை வளர்ப்பதை விட, அவற்றை முடக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.


/ஒப்பாரி/

பெரியார் திடல் எனும் சங்கர மடம்



தந்தை பெரியார் தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் பகுத்தறிவு மற்றும் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காகவே அளித்தவர். இம்மக்களை மூடத்தனத்திலிருந்து விடுவித்து, விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்க்கையை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அர்ப்பணித்தவர். அந்தப் பெரியாரின் கொள்கைகளை இவ்வுலகமெல்லாம் பரப்புவதே பகுத்தறிவு உள்ள ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க முடியும். ஆனால், பெரியாரின் சிந்தனைகள் யாரையும் சென்றடையக் கூடாது என்ற எண்ணத்தில் “குடியரசு“ இதழ் தொகுப்பை வெளியிடத் தடை கோரி பெரியார் திடலை சங்கர மடமாக மாற்றி வைத்திருக்கும் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில், திங்களன்று நீதியரசர் சந்துரு தீர்ப்பளித்தார்.

நீதியரசர் சந்துரு


வழக்கு விபரங்களுக்குச் செல்லும் முன், பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப் பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் தலைவர் வீரமணியின் செயல்பாடுகள் குறித்து காண்பது அவசியம். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, யார் ஆட்சியில் இருந்தாலும், பெரியாரின் பெயரைச் சொல்லி, அவர்களுக்கு துதிபாடுவதில் வீரமணிக்குச் சளைத்தவர்கள் யாரும் கிடையாது. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், “தடா“ என்ற ஒரு கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தில் ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டனர். இக்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஜெயலலிதாவை தஞ்சைக்கு அழைத்து “சமூக நீதி காத்த வீராங்கனை“ என்று பட்டமளித்து கைது நடவடிக்கையிலிருந்து தப்பியவர்தான் இந்த வீரமணி.



பெரியார் திடலை தன் சொந்த சொத்தாக பாவித்து யாருக்கும் அதில் உரிமை கிடையாது என்பது போல் வீரமணி நடந்து கொண்டிருக்கிறார். பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூலம் வரும் வருமானம் எவ்வளவு, அவ்வருமானம் எவ்வாறு செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.
இந்நிலையில், வீரமணியின் போக்கு பிடிக்காமல், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் “பெரியார் திராவிடர் கழகம்“ என்ற அமைப்பை துவக்கி, பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக பெரியாரின் உழைப்பில் வெளிவந்த “குடியரசு“ இதழை தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தொகுப்பை மலிவு விலையில் வெளியிட முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான் பெரியாரின் பேரனாக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சி செய்யும் கி.வீரமணி, இவ்வாறு “குடியரசு“, இதழ் தொகுத்து வெளியிடும் முயற்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவராயிருக்கும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் வெளியிடக் கூடாது என்றும், வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப் பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது. நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் எண்ணங்கள் உதிக்கட்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும்“ என்று கூறியுள்ளது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வந்திருந்தாலும், இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றுள்ளார் என்பது, வருத்தமளிக்கும் செய்தி.
பெரியார் கொள்கைகளை வளர்ப்பதை விட, அவற்றை முடக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.


/ஒப்பாரி/

Monday, July 27, 2009

சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்




கடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.


இத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.


தீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.


இந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.


இச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.


நளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.


சிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்னும் காட்சியே இது.


ஒப்பாரி