Sunday, November 8, 2009

அட கோமாளிகளா !!!!!





ரெட்டி vs யெட்டி.

கர்நாடக அரசியலில், கடந்த 15 நாட்களாக நடந்த சம்பவங்கள், விறுவிறுப்பான மசாலா படத்தை விஞ்சும் வண்ணம் இருந்தன. நகைச்சுவை, சென்டிமென்ட், த்ரில் என்று எதற்கும் பஞ்சம் இல்லை.

ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து, படகில் தமிழகம் வந்து, இனவெறியைத் தூண்டி, ஆட்சியைப் பிடித்த எடியூரப்பாவுக்கு, இந்த தலைவலி தேவைதான்.

கர்நாடக தேர்தல் முடிந்தவுடன், 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் முழு மெஜாரிட்டி என்ற நிலையில், 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எடியூரப்பாவின் நாற்காலியை காப்பாற்றியவர்கள் தான் இந்த ரெட்டி சகோதரர்கள்.


யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ? இவர்களின் வளர்ச்சி அண்ணாமலை படத்தில் ரஜினியை விட வேகமான வளர்ச்சி.


ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள்.


கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.


ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள்.

2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி.

இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள்.

இந்த ரெட்டி சகோதரர்கள் தான் இன்று கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது.


தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது.

தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து,

என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.


இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார்.

பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.


இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது.



ஆனால், எந்த அடிப்படையில் சமாதானம் எட்டப் பட்டது என்று விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
15 நாட்களுக்கும் மேலாக, மாநிலத்தையே முடக்கிப் போட்ட இவர்களின் லட்சணத்தை என்னவென்று சொல்வது.


ஜின்னாவை பாராட்டி எழுதிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியிலிருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்கிய பிஜேபி, இன்று ரெட்டி சகோதரர்களின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்தே, பிஜேபி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. பிஜேபி போன்ற ஒரு மதவாதக் கட்சி பலவீனமாவது நல்லது தான் என்றாலும், பிஜேபிக்கு சற்றும் குறைவில்லாத, காங்கிரசின் பலத்தில் இது முடிகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.



சமாதானம் பேசி, சிரித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் ரெட்டியும், எட்டியும், சுஷ்மாவும், கர்நாடக மக்களைப் பார்த்து “அடக் கோமாளிகளா !!“ என்று சொல்வது போலில்லை ?

சவுக்கு

அட கோமாளிகளா !!!!!





ரெட்டி vs யெட்டி.

கர்நாடக அரசியலில், கடந்த 15 நாட்களாக நடந்த சம்பவங்கள், விறுவிறுப்பான மசாலா படத்தை விஞ்சும் வண்ணம் இருந்தன. நகைச்சுவை, சென்டிமென்ட், த்ரில் என்று எதற்கும் பஞ்சம் இல்லை.

ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து, படகில் தமிழகம் வந்து, இனவெறியைத் தூண்டி, ஆட்சியைப் பிடித்த எடியூரப்பாவுக்கு, இந்த தலைவலி தேவைதான்.

கர்நாடக தேர்தல் முடிந்தவுடன், 6 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால்தான் முழு மெஜாரிட்டி என்ற நிலையில், 6 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எடியூரப்பாவின் நாற்காலியை காப்பாற்றியவர்கள் தான் இந்த ரெட்டி சகோதரர்கள்.


யார் இந்த ரெட்டி சகோதரர்கள் ? இவர்களின் வளர்ச்சி அண்ணாமலை படத்தில் ரஜினியை விட வேகமான வளர்ச்சி.


ஆந்திராவைச் சேர்ந்த இந்த ரெட்டி சகோதரர்களின் தந்தை ஒரு சாதாரண தலைமைக் காவலராக இருந்து ஓய்வு பெற்றவர். 2000 ஆண்டில், “Ennoble India“ என்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மக்கள் 200 கோடி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்கள் தான் இவர்கள்.


கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி ஆகிய மூன்று சகோதரர்கள் போக, ஸ்ரீராமுலு என்று அவர்கள் குடும்பத்தின் அங்கமாகவே கருதப்படும் 4 பேரும் தான் இன்று கர்நாடகாவை ஆட்டிப் படைக்கிறார்கள். 1999ல் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜுக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள் ரெட்டி சகோதரர்கள். அதிலிருந்தே, பெல்லாரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், பிஜேபியை வெற்றி பெறச் செய்வதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தகுந்தது.


ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சி, இரும்பு தாது சுரங்கத்தில்தான் தொடங்கியது. “ஓபாலபுரம் சுரங்க நிறுவனம்“ என்று தொடங்கி, கர்நாடக மாநிலத்தின் எல்லை அருகே ஆந்திராவில் இரண்டு லைசென்ஸுகள் பெற்று உள்ளனர் ரெட்டி சகோதரர்கள்.

2005ம் ஆண்டில் ஆண்டுக்கு 5 லட்சம் டன்களுக்கு முதலில் லைசென்ஸ் பெற்றவர்கள், குறுகிய காலத்திலேயே 60 லட்சம் டன்கள் எடுக்க உரிமம் பெற்றார்கள். இது எப்படி சாத்தியமாகியது என்பது புரியாத புதிர். தோராயமாக கணக்குப் பார்த்தால் ஒரு டன் 3000 ரூபாய் விற்கும் நிலையில், ஒரு நாளைக்கு 20,000 டன்கள் எடுக்கும் ரெட்டி சகோதரர்களின் ஒரு நாளைய வருவாய் 6 கோடி. ஆண்டுக்கு 1800 கோடி.

இந்த வருமானத்தில்தான், திருப்பதி வெங்கடாசலபதிக்கு 45 கோடி செலவில் கிரீடம் வாங்கி காணிக்கை செலுத்தினர் ரெட்டி சகோதரர்கள்.

இந்த ரெட்டி சகோதரர்கள் தான் இன்று கர்நாடகாவில் எல்லாமே. இவர்கள் அன்றி ஒரு அணுவும் அசையாது.


தென் மாநிலங்கள் முழுக்க வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட நிலையில் 15 நாட்களாக ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து, டெல்லியில் “கட்டப் பஞ்சாயத்து“ நடத்தி வந்திருக்கின்றனர். முதலில் கட்டப் பஞ்சாயத்து செய்த ராஜ்நாத் சிங் கின் பஞ்சயாத்தின் படி, ரெட்டி சகோதரர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் ஷோபா மற்றும் சில அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்ற சமரசம் எட்டப் பட்டது.

தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள இதற்கு சம்மதித்த எடியூரப்பா அதற்கு பின்பு அளித்த டிவி பேட்டியில், முதலைக் கண்ணீர் வடித்து,

என்னை நம்பியவர்களை மோசம் செய்து விட்டேன், வெள்ள நிவாரணப் பணிகளை பார்க்காமல் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியது தவறு, ஆண்டவன் என்னை மன்னிக்க மாட்டார் என்று அரற்றி விட்டு, அப்போதும் கர்நாடக மாநிலத்திற்கு திரும்பி வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்க்காமல், தன் நாற்காலியைக் காப்பாற்றியதற்காக, காஷ்மீர் மாநிலத்திலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் சென்று நன்றி செலுத்தினார்.


இதற்குப் பிறகாவது, படம் முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிரச்சினை முடிந்து விட்டது என்று எடியூரப்பா பேட்டி அளித்தார். முடியவில்லை, எடியூரப்பாவை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று ரெட்டி பேட்டியளிக்கிறார்.

பார்வையாளர்களின் குழப்பம் அதிகரித்துக் கொண்டே போனது. இந்த நிலையில்தான், களத்தில் இறங்குகிறார் சுஷ்மா சுவராஜ். பிஜேபி தலைவர்களாலேயே முடியாக ஒரு விஷயத்தை, தான் முடித்துக் காட்டுவதன் மூலம், கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள, ரெட்டி சகோதரர்களையும், எடியூரப்பாவையும் தன் வீட்டுக்கு அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.


இதற்குப் பிறகு நடந்த க்ளைமாக்ஸ் இருக்கிறதே. அடடா…. எடியூரப்பா ரெட்டிக்கு கேக் ஊட்டும் அந்தக் காட்சி இருக்கிறதே. காணக் கண் இரண்டு போதாது.



ஆனால், எந்த அடிப்படையில் சமாதானம் எட்டப் பட்டது என்று விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
15 நாட்களுக்கும் மேலாக, மாநிலத்தையே முடக்கிப் போட்ட இவர்களின் லட்சணத்தை என்னவென்று சொல்வது.


ஜின்னாவை பாராட்டி எழுதிவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக கட்சியிலிருந்து ஜஸ்வந்த் சிங்கை நீக்கிய பிஜேபி, இன்று ரெட்டி சகோதரர்களின் காலை நக்கிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்தே, பிஜேபி எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. பிஜேபி போன்ற ஒரு மதவாதக் கட்சி பலவீனமாவது நல்லது தான் என்றாலும், பிஜேபிக்கு சற்றும் குறைவில்லாத, காங்கிரசின் பலத்தில் இது முடிகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.



சமாதானம் பேசி, சிரித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் ரெட்டியும், எட்டியும், சுஷ்மாவும், கர்நாடக மக்களைப் பார்த்து “அடக் கோமாளிகளா !!“ என்று சொல்வது போலில்லை ?

சவுக்கு

Saturday, November 7, 2009

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்.

விஏஓக்களும், தலைமைக் காவலர்களும், சர்வேயர்களும் மட்டும்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குகிறார்களா ?

உயர் அதிகாரிகள் யாரும் வாங்குவதில்லையா ?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் தமிழ்நாட்டில் யோக்கியர்களா ?




அவர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை ? இதை ஆராயும் முன் லஞ்ச ஒழிப்புத் துறை, தன்னுடைய செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறதா என்பதை முதலில் பார்ப்போம்.


மே 2008ல், தமிழக அரசு, ஒரு ஆணையின் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் விழிப்பு பணி ஆணையம் (Vigilance Commission) ஆகிய இரு துறைகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டது. இதற்கான காரணம் அந்த அரசு ஆணையில் “தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு விலக்கு அளிக்கப் பட்டாலும், விலக்கு அளிக்கப் பட்டுள்ள துறைகளில் “ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்“ தொடர்பான தகவல்கள் கேட்கப் பட்டால், இந்த விதிவிலக்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (4) கூறுகிறது.



கடந்த ஏப்ரல் 2009ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பத்தில் “லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்து 31.12.2008ல் கே.நடராஜன், ஐபிஎஸ் என்ற அதிகாரி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அவரது வீட்டில் TN-01-G-3939 என்ற அம்பாசிடர் கார் மற்றும் TN-07-G-2524 என்ற பொலிரோ ஜீப்பும் ஓடி வருகிறது. இந்த வாகனங்களை காவலர்கள் இயக்கி வருகிறார்கள். இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில், அரசு வாகனங்கள் பயன்படுத்துவது என்பது, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13 (1) (c) r/w 13 (2) ஆகிய லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் என்றும் இந்த ஊழல் புகார் காரணமாக இந்த இரு வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர் பெயர், அவ்வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் ஒரு மாதத்துக்கு செலவாகிறது, அந்த இரு வாகனங்களின் பதிவேடுகளின் நகல்கள் போன்ற பல விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.





இந்த விண்ணப்பத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக காவல் கண்காணிப்பாளர் லட்சுமி, லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார். இந்த பதிலை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையில் மேல் முறையீடு செய்ததற்கும் இதே பதில் தான் கிடைத்தது. இதை எதிர்த்து தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், கடந்த வெள்ளியன்று, விசாரணை நடைபெற்றது.

இவ்விசாரணையில், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில், சட்டத்தின் பிரிவு 24 (4), ஊழல் மற்றும் மனித உரிமை தொடர்பான விபரங்கள் கேட்கப் பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டாலும் தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாதாடினார்.

மேலும், தனது வாதத்தின் போது, திடுக்கிடும் புகார் ஒன்றையும் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டபின், வேறு ஒரு நபருக்கு தகவல் வழங்கப் பட்டிருப்பதாகவும், இவ்வாறு, ஒரு நபருக்கு தகவல் வழங்கி, இன்னொரு நபருக்கு தகவல் வழங்காமல் இருப்பதென்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 20ன் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், பொது தகவல் அலுவலர் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடல்லாமல், ரூபாய் 25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.


அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் ஒரு மாதத்துக்கு 160 லிட்டரும், டீசல் ஒரு மாதத்துக்கு 90 லிட்டரும், உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இது போகவும், மாதத்துக்கு தலா 100 லிட்டர் வரை “எக்ஸ்ட்ரா கோட்டா“ உண்டு. மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகார்கள் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோலுக்கு 160 X 50 = 8000.

ஒரு மாதத்துக்கு 90 லிட்டர் டீசலுக்கு 90 X 35 = 3150. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள் உண்டு. ஒரு டிரைவருக்கு, காவலர் என்ற தரத்தில் வைத்துப் பார்த்தால் மாதம் 10,000 சராசரியாக ஊதியமாக இருக்கும். இரண்டு வண்டிகளுக்கு 4 டிரைவர்கள். மொத்தம் ரூபாய் 40,000. எரிபொருள், டிரைவர் ஊதியம் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மாதச் செலவு ரூபாய் 51,150. (இதில் எக்ஸ்ட்ரா கோட்டா சேர்க்கப் படவில்லை.)

இவ்வாறு, நடராஜன் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டால், தகவல் கேட்ட ஏப்ரல் மாதம் வரை ரூ.2,04,600 ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

இந்தத் தொகை, யாருடைய பணம் ? குப்பனும், சுப்பனும் கட்டும் மக்கள் வரிப்பணம். இப்படி மக்கள் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கொள்ளை அடித்தால், இதர துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த ஒரு நபர், இப்படி மக்கள் வரிப்பணத்தை, ஊழல் செய்தால், பிற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் !

எப்படி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கித்தனம் ?

சவுக்கு

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கியத்தனம்



தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு துறை, 1964ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறை உயிரோடு இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள அவ்வப்போது, செய்தித் தாளில் “லஞ்சம் வாங்கிய விஏஓ கைது“, “லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கைது“ என்று சில செய்திகளை பார்த்துள்ளோம்.

விஏஓக்களும், தலைமைக் காவலர்களும், சர்வேயர்களும் மட்டும்தான் தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்குகிறார்களா ?

உயர் அதிகாரிகள் யாரும் வாங்குவதில்லையா ?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாரும் தமிழ்நாட்டில் யோக்கியர்களா ?




அவர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பாய்வதில்லை ? இதை ஆராயும் முன் லஞ்ச ஒழிப்புத் துறை, தன்னுடைய செயல்பாடுகளில் நேர்மையாக இருக்கிறதா என்பதை முதலில் பார்ப்போம்.


மே 2008ல், தமிழக அரசு, ஒரு ஆணையின் மூலம், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் விழிப்பு பணி ஆணையம் (Vigilance Commission) ஆகிய இரு துறைகளும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளித்து ஆணையிட்டது. இதற்கான காரணம் அந்த அரசு ஆணையில் “தற்போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறு விலக்கு அளிக்கப் பட்டாலும், விலக்கு அளிக்கப் பட்டுள்ள துறைகளில் “ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்“ தொடர்பான தகவல்கள் கேட்கப் பட்டால், இந்த விதிவிலக்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24 (4) கூறுகிறது.



கடந்த ஏப்ரல் 2009ல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அந்த விண்ணப்பத்தில் “லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்து 31.12.2008ல் கே.நடராஜன், ஐபிஎஸ் என்ற அதிகாரி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகும், அவரது வீட்டில் TN-01-G-3939 என்ற அம்பாசிடர் கார் மற்றும் TN-07-G-2524 என்ற பொலிரோ ஜீப்பும் ஓடி வருகிறது. இந்த வாகனங்களை காவலர்கள் இயக்கி வருகிறார்கள். இவ்வாறு ஓய்வு பெற்ற அலுவலர்கள் வீட்டில், அரசு வாகனங்கள் பயன்படுத்துவது என்பது, லஞ்ச ஒழிப்புச் சட்டம் 13 (1) (c) r/w 13 (2) ஆகிய லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் என்றும் இந்த ஊழல் புகார் காரணமாக இந்த இரு வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர் பெயர், அவ்வாகனங்களுக்கு எவ்வளவு எரிபொருள் ஒரு மாதத்துக்கு செலவாகிறது, அந்த இரு வாகனங்களின் பதிவேடுகளின் நகல்கள் போன்ற பல விபரங்கள் கேட்கப் பட்டிருந்தன.





இந்த விண்ணப்பத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக காவல் கண்காணிப்பாளர் லட்சுமி, லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார். இந்த பதிலை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையில் மேல் முறையீடு செய்ததற்கும் இதே பதில் தான் கிடைத்தது. இதை எதிர்த்து தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததன் பேரில், கடந்த வெள்ளியன்று, விசாரணை நடைபெற்றது.

இவ்விசாரணையில், மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். தனது வாதத்தில், சட்டத்தின் பிரிவு 24 (4), ஊழல் மற்றும் மனித உரிமை தொடர்பான விபரங்கள் கேட்கப் பட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டாலும் தகவல் கொடுத்தே ஆக வேண்டும் என்று வாதாடினார்.

மேலும், தனது வாதத்தின் போது, திடுக்கிடும் புகார் ஒன்றையும் கூறினார். லஞ்ச ஒழிப்புத் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டபின், வேறு ஒரு நபருக்கு தகவல் வழங்கப் பட்டிருப்பதாகவும், இவ்வாறு, ஒரு நபருக்கு தகவல் வழங்கி, இன்னொரு நபருக்கு தகவல் வழங்காமல் இருப்பதென்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 20ன் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், பொது தகவல் அலுவலர் மீது, துறை நடவடிக்கை எடுப்பதோடல்லாமல், ரூபாய் 25,000 அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.


இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தகவல் ஆணையர் பெருமாள்சாமி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.


அரசு வாகனங்களுக்கு பெட்ரோல் ஒரு மாதத்துக்கு 160 லிட்டரும், டீசல் ஒரு மாதத்துக்கு 90 லிட்டரும், உச்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இது போகவும், மாதத்துக்கு தலா 100 லிட்டர் வரை “எக்ஸ்ட்ரா கோட்டா“ உண்டு. மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கூறியுள்ள புகார்கள் உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு 160 லிட்டர் பெட்ரோலுக்கு 160 X 50 = 8000.

ஒரு மாதத்துக்கு 90 லிட்டர் டீசலுக்கு 90 X 35 = 3150. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள் உண்டு. ஒரு டிரைவருக்கு, காவலர் என்ற தரத்தில் வைத்துப் பார்த்தால் மாதம் 10,000 சராசரியாக ஊதியமாக இருக்கும். இரண்டு வண்டிகளுக்கு 4 டிரைவர்கள். மொத்தம் ரூபாய் 40,000. எரிபொருள், டிரைவர் ஊதியம் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மாதச் செலவு ரூபாய் 51,150. (இதில் எக்ஸ்ட்ரா கோட்டா சேர்க்கப் படவில்லை.)

இவ்வாறு, நடராஜன் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி மாதத்திலிருந்து கணக்கிட்டால், தகவல் கேட்ட ஏப்ரல் மாதம் வரை ரூ.2,04,600 ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

இந்தத் தொகை, யாருடைய பணம் ? குப்பனும், சுப்பனும் கட்டும் மக்கள் வரிப்பணம். இப்படி மக்கள் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கொள்ளை அடித்தால், இதர துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது யோசியுங்கள். 300 ரூபாயும், 500 ரூபாயும் லஞ்சமாக வாங்கும் அரசு ஊழியர்களை பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன யோக்யதை இருக்கிறது ?

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்த ஒரு நபர், இப்படி மக்கள் வரிப்பணத்தை, ஊழல் செய்தால், பிற துறைகளில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள் !

எப்படி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறையின் அயோக்கித்தனம் ?

சவுக்கு

Tuesday, November 3, 2009

நீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா ?



"நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்' என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 3 அன்று கரூரில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.



கடந்த வாரம், திமுகவின் நாளேடான முரசொலியில் கருத்துப் படம் வந்திருந்தது. அதன் தலைப்பு “இரு நீதி சம நீதியா ?“ ஒரு பக்கத்தில் ஜெயலலிதா கொடநாட்டில் விதிமுறைகளை மீறி கட்டியுள்ள பங்களாவும், மறு பக்கத்தில் நீதிபதி தினகரன் திருவள்ளுர் மாவட்டத்தில் ஆக்ரமித்துள்ள நிலங்களைப் போட்டும் அதன் கீழே பாரதியார் கவிதை.


“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்“


என்ற கவிதை போடப்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா பார்ப்பனராம். தினகரன் தலித்தாம். இருவருக்கும் வேறு வேறு அளவுகோல்கள் வைக்கப் படுகின்றனவாம். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.




முதலில், நீதிபதி தினகரன் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு என்று பார்ப்போம்.


1) திருவள்ளுர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், தினகரன் 440 ஏக்கர் நிலம் தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் வைத்துள்ளார்.

2) இந்த 440 ஏக்கரில் 310.33 ஏக்கர் தினகரன் மற்றும் அவரது மனைவி விநோதினி, மகள்கள் அமுதா பொற்கொடி மற்றும் அமிர்தா பொற்பொடி பெயரில் உள்ளது.


காவேரிராஜபுரத்தில் நீதியரசர் (????) தினகரன் சாலை


3) 41.27 ஏக்கர் நிலம் அரசால் “ஏரி புறம்போக்கு“ என்று வகைப்படுத்தப்பட்டு, தினகரனால் ஆக்ரமிக்கப் பட்டுள்ள நிலம்.

4) 88.33 ஏக்கர் நிலம் “அனாதி நிலம்“ என்று அரசால் வகைப்படுத்தப்பட்ட நிலம். அனாதி நிலம் என்றால், நிலமற்ற ஏழைகளுக்காக அரசு வழங்க ஒதுக்கப் பட்ட நிலம். இந்த 88.33 நிலமும் தினகரன் ஆக்ரமித்துள்ளார்.

5) இந்த நிலங்களில், பழத் தோட்டம் போட்டுள்ளார் தினகரன். இத்தோட்டத்துக்கு, ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ள நிலத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சப் படுவதால், கிராம மக்கள் இந்நீர்நிலைகளை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

6) கும்மிடிப்பூண்டி தாலுகா பூவாலை கிராமத்தில் 50 ஏக்கர் பழத்தோட்டம் வைத்திருக்கிறார்.

7) தினகரன் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் சிகப்பு பின்னணியில் தங்க நிறத்தில் பொறிக்கப் பட்டுள்ளன. சட்டப் படி, இது போல ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மட்டுமே இது போல நம்பர் பிளேட்டுகள் வைக்க முடியும்.

8) சென்னை ஷெனாய் நகரில் 5 மாடி வணிக வளாகம். சிஎம்டிஏ இவ்வளாகம் கட்ட கொடுத்த அனுமதியில் 4 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தினகரன் 5 மாடிகள் விதிகளை மீறி கட்டியுள்ளார். இதன் மதிப்பு இரண்டரை கோடி.

9) தினகரன் மற்றும் அவரது மனைவி பெயரில் சென்னை அண்ணா நகரில் 90 லட்சத்திற்கு 4800 சதுர அடி வீட்டு மனை. இம்மனையில், தற்போது வீடு கட்டப் பட்டு வருகிறது.

10) தலா 3800 சதுர அடிக்கு சோளிங்கநல்லூரில் தனது மாமியார் பரிபூர்ணம் பெயரில் மூன்று மனைகள். மாமியார் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள் உடனடியாக இரு நாட்களுக்குள் மகள் பெயருக்கு (தினகரன் மனைவி விநோதினி) மாற்றப் படுகிறது.

11) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அண்ணா நகர் கிளையில் தினகரன் மனைவி விநோதினி 2007ம் ஆண்டு 62 லட்சமும் 2008 ம் ஆண்டு 35 லட்சமும் கடன் பெற்றுள்ளார். தினகரன் பாங்க் ஆப் பரோடாவில் 56 லட்சம் கடன் பெற்றுள்ளார். இது போக தினகரன் சேமநல நிதியிலும் அரசு கடனாக 6 லட்சமும் பெற்றுள்ளார். ஒரு மாதத்துக்கு கட்ட வேண்டிய கடன் தொகை ஏறக்குறைய 3 லட்சம். எனக்குத் தெரிந்து இந்தியாவில் எந்த நீதிபதிக்கும் மாதம் 3 லட்சம் சம்பளம் கொடுக்கப் படவில்லை.

12) தனது மாமனார், மாமியார், சகோதரி, மைத்துனர் ஆகியோரை பங்குதாரராகக் கொண்ட டியர் லேண்ட்ஸ், அமுதம் கார்டன்ஸ், அமிர்தம் கார்டன்ஸ் மற்றும் கேனான் கார்டன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

13) 4261 சதுர அடி நிலங்கள் இரண்டு தனது மனைவி பெயரில், சென்னை, சோளிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுள்ளார்.

14) ஊட்டியில் மாமியார் பரிபூர்ணம் பெயரில் 4.5 ஏக்கர் நிலம். இதன் மதிப்பு 9 கோடி. அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு 3 கோடி. ஆனால் இதன் மதிப்பு 33 லட்சம் என்று பத்திரப் பதிவு செய்யப் பட்டுள்ளது.




எப்பேர்பட்ட
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏழை
தலித் பார்த்தீர்களா ?


இது போகவும், தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருக்கும் பொழுது செய்த ஊழல்களின் பட்டியல் பெரியது. இடுகை மிகவும் பெரியதாக ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
இப்போது முதல் பத்திக்கு வருவோம்.

ஸ்டாலின் சாதியை சொல்லாதீர், தமிழன் என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார். அவர்களின் கழக நாளேடு, பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரருக்கு ஒரு நீதி என்று ஒரு கடைந்தெடுத்த ஊழல் பேர்விழிக்கு வக்காலத்து வாங்குகிறது. சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?


ஜெயலலிதாவின் ஊழல் ஊரறிந்தது.

ஆனால் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டியவரையும், ஒரு அரசியல்வாதியையும் ஒப்பீடு செய்வது சரியா ?

திமுக, தினகரன் ஊழல் செய்து, ஊரார் நிலத்தை அபகரித்தது உண்மை என்று ஒப்புக் கொள்கிறதா ?

அப்படி ஒப்புக் கொண்டும், தினகரன் தலித் என்பதால், ஊழல் புரிந்தாலும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக வேண்டுமா ?

என்னாங்கடா உங்க நியாயம் ?

ஊழல் வாதிகளுக்கு சாதி ஏது, மதம் ஏது ?




ஏழை தலித் நிலங்களையும், அரசு புறம்போக்கையும்
ஆக்ரமிக்கும் ஒரு நபரை அந்த நிலத்தின்
பெயராலேயே அழைப்பதுதானே முறை ?


திமுக வை விடுங்கள். ஆவணங்கள், பிரமாண வாக்குமூலங்கள், புகைப்படங்கள், போனில் மிரட்டிய ஒலி நாடாக்கள் என இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இன்னும் முடிவெடுக்காமல் தினகரன் அரசு நிலங்களை ஆக்ரமித்துள்ளாரா இல்லையா என்று இந்திய சர்வேயர் ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் உச்ச நீதிமன்றத்தை என்னவென்று சொல்வது ?

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்



ஒப்பாரி

நீதிபதி தினகரன் நல்லவரா கெட்டவரா ?



"நீ யாரென்று கேட்டால் சாதியைக் கூறாமல் நான் தமிழன் என்றோ அல்லது நான் மனிதன் என்றோ கூறும் நிலை வர வேண்டும்' என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்டோபர் 3 அன்று கரூரில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார்.



கடந்த வாரம், திமுகவின் நாளேடான முரசொலியில் கருத்துப் படம் வந்திருந்தது. அதன் தலைப்பு “இரு நீதி சம நீதியா ?“ ஒரு பக்கத்தில் ஜெயலலிதா கொடநாட்டில் விதிமுறைகளை மீறி கட்டியுள்ள பங்களாவும், மறு பக்கத்தில் நீதிபதி தினகரன் திருவள்ளுர் மாவட்டத்தில் ஆக்ரமித்துள்ள நிலங்களைப் போட்டும் அதன் கீழே பாரதியார் கவிதை.


“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்“


என்ற கவிதை போடப்பட்டுள்ளது. அதாவது, ஜெயலலிதா பார்ப்பனராம். தினகரன் தலித்தாம். இருவருக்கும் வேறு வேறு அளவுகோல்கள் வைக்கப் படுகின்றனவாம். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.




முதலில், நீதிபதி தினகரன் மீது அப்படி என்னதான் குற்றச் சாட்டு என்று பார்ப்போம்.


1) திருவள்ளுர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், தினகரன் 440 ஏக்கர் நிலம் தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் வைத்துள்ளார்.

2) இந்த 440 ஏக்கரில் 310.33 ஏக்கர் தினகரன் மற்றும் அவரது மனைவி விநோதினி, மகள்கள் அமுதா பொற்கொடி மற்றும் அமிர்தா பொற்பொடி பெயரில் உள்ளது.


காவேரிராஜபுரத்தில் நீதியரசர் (????) தினகரன் சாலை


3) 41.27 ஏக்கர் நிலம் அரசால் “ஏரி புறம்போக்கு“ என்று வகைப்படுத்தப்பட்டு, தினகரனால் ஆக்ரமிக்கப் பட்டுள்ள நிலம்.

4) 88.33 ஏக்கர் நிலம் “அனாதி நிலம்“ என்று அரசால் வகைப்படுத்தப்பட்ட நிலம். அனாதி நிலம் என்றால், நிலமற்ற ஏழைகளுக்காக அரசு வழங்க ஒதுக்கப் பட்ட நிலம். இந்த 88.33 நிலமும் தினகரன் ஆக்ரமித்துள்ளார்.

5) இந்த நிலங்களில், பழத் தோட்டம் போட்டுள்ளார் தினகரன். இத்தோட்டத்துக்கு, ஆக்ரமிப்பு செய்யப் பட்டுள்ள நிலத்தில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் பாய்ச்சப் படுவதால், கிராம மக்கள் இந்நீர்நிலைகளை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.

6) கும்மிடிப்பூண்டி தாலுகா பூவாலை கிராமத்தில் 50 ஏக்கர் பழத்தோட்டம் வைத்திருக்கிறார்.

7) தினகரன் பயன்படுத்தும் காரின் நம்பர் பிளேட் சிகப்பு பின்னணியில் தங்க நிறத்தில் பொறிக்கப் பட்டுள்ளன. சட்டப் படி, இது போல ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி மட்டுமே இது போல நம்பர் பிளேட்டுகள் வைக்க முடியும்.

8) சென்னை ஷெனாய் நகரில் 5 மாடி வணிக வளாகம். சிஎம்டிஏ இவ்வளாகம் கட்ட கொடுத்த அனுமதியில் 4 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தினகரன் 5 மாடிகள் விதிகளை மீறி கட்டியுள்ளார். இதன் மதிப்பு இரண்டரை கோடி.

9) தினகரன் மற்றும் அவரது மனைவி பெயரில் சென்னை அண்ணா நகரில் 90 லட்சத்திற்கு 4800 சதுர அடி வீட்டு மனை. இம்மனையில், தற்போது வீடு கட்டப் பட்டு வருகிறது.

10) தலா 3800 சதுர அடிக்கு சோளிங்கநல்லூரில் தனது மாமியார் பரிபூர்ணம் பெயரில் மூன்று மனைகள். மாமியார் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள் உடனடியாக இரு நாட்களுக்குள் மகள் பெயருக்கு (தினகரன் மனைவி விநோதினி) மாற்றப் படுகிறது.

11) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அண்ணா நகர் கிளையில் தினகரன் மனைவி விநோதினி 2007ம் ஆண்டு 62 லட்சமும் 2008 ம் ஆண்டு 35 லட்சமும் கடன் பெற்றுள்ளார். தினகரன் பாங்க் ஆப் பரோடாவில் 56 லட்சம் கடன் பெற்றுள்ளார். இது போக தினகரன் சேமநல நிதியிலும் அரசு கடனாக 6 லட்சமும் பெற்றுள்ளார். ஒரு மாதத்துக்கு கட்ட வேண்டிய கடன் தொகை ஏறக்குறைய 3 லட்சம். எனக்குத் தெரிந்து இந்தியாவில் எந்த நீதிபதிக்கும் மாதம் 3 லட்சம் சம்பளம் கொடுக்கப் படவில்லை.

12) தனது மாமனார், மாமியார், சகோதரி, மைத்துனர் ஆகியோரை பங்குதாரராகக் கொண்ட டியர் லேண்ட்ஸ், அமுதம் கார்டன்ஸ், அமிர்தம் கார்டன்ஸ் மற்றும் கேனான் கார்டன்ஸ் ஆகிய 4 நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

13) 4261 சதுர அடி நிலங்கள் இரண்டு தனது மனைவி பெயரில், சென்னை, சோளிங்கநல்லூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டின் கீழ் பெற்றுள்ளார்.

14) ஊட்டியில் மாமியார் பரிபூர்ணம் பெயரில் 4.5 ஏக்கர் நிலம். இதன் மதிப்பு 9 கோடி. அரசு நிர்ணயித்துள்ள மதிப்பு 3 கோடி. ஆனால் இதன் மதிப்பு 33 லட்சம் என்று பத்திரப் பதிவு செய்யப் பட்டுள்ளது.




எப்பேர்பட்ட
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏழை
தலித் பார்த்தீர்களா ?


இது போகவும், தினகரன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருக்கும் பொழுது செய்த ஊழல்களின் பட்டியல் பெரியது. இடுகை மிகவும் பெரியதாக ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
இப்போது முதல் பத்திக்கு வருவோம்.

ஸ்டாலின் சாதியை சொல்லாதீர், தமிழன் என்று சொல்லுங்கள் என்று கூறுகிறார். அவர்களின் கழக நாளேடு, பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரருக்கு ஒரு நீதி என்று ஒரு கடைந்தெடுத்த ஊழல் பேர்விழிக்கு வக்காலத்து வாங்குகிறது. சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?


ஜெயலலிதாவின் ஊழல் ஊரறிந்தது.

ஆனால் ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக வேண்டியவரையும், ஒரு அரசியல்வாதியையும் ஒப்பீடு செய்வது சரியா ?

திமுக, தினகரன் ஊழல் செய்து, ஊரார் நிலத்தை அபகரித்தது உண்மை என்று ஒப்புக் கொள்கிறதா ?

அப்படி ஒப்புக் கொண்டும், தினகரன் தலித் என்பதால், ஊழல் புரிந்தாலும் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக வேண்டுமா ?

என்னாங்கடா உங்க நியாயம் ?

ஊழல் வாதிகளுக்கு சாதி ஏது, மதம் ஏது ?




ஏழை தலித் நிலங்களையும், அரசு புறம்போக்கையும்
ஆக்ரமிக்கும் ஒரு நபரை அந்த நிலத்தின்
பெயராலேயே அழைப்பதுதானே முறை ?


திமுக வை விடுங்கள். ஆவணங்கள், பிரமாண வாக்குமூலங்கள், புகைப்படங்கள், போனில் மிரட்டிய ஒலி நாடாக்கள் என இத்தனை ஆதாரங்கள் இருந்தும், இன்னும் முடிவெடுக்காமல் தினகரன் அரசு நிலங்களை ஆக்ரமித்துள்ளாரா இல்லையா என்று இந்திய சர்வேயர் ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் உச்ச நீதிமன்றத்தை என்னவென்று சொல்வது ?

நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்



ஒப்பாரி

Saturday, October 31, 2009

தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார்





தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. தலைமைச் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன், ஸ்ரீபதி விழிப்புப் பணி ஆணையராக (Vigilance Commissioner) பதவி வகித்தார். அப்பதவியில் இருக்கையில், ஊழல் புகாரில் சிக்கிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணையை தடுக்கும் பொருட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநர் உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோர், ஊழல் வழக்கில் சிக்கிய செல்வி.ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளை, விசாரணை ஏதுமின்றி முடித்து விட்டு அதற்குப் பலனாக அண்ணா பல்கலைகழகத்தில், மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற தங்களது மகன் மற்றும் மகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர், இவர்கள் இருவர் மீதும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பேராசிரியர்.பிரபா.கல்விமணி என்பவர், தலைமைச் செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தப் புகார் மனு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப் பட்டது.



இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில் அப்போது விழிப்புப் பணி ஆணையராக இருந்த ஸ்ரீபதி உபாத்யாயிடம் தொலைபேசியில் “சிங் மற்றும் ராதாகிருஷ்ணன் மீது ஏதோ விசாரணை செய்கிறீர்களா ? உங்கள் துறையிலிருந்து முத்து என்ற ஆய்வாளர் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏதோ கடிதம் வேறு கொடுத்திருக்கிறாராம். அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு எதிராக இவ்வாறு விசாரணை செய்வது சரியில்லை. என்ன ? அது என்ன என்று விசாரியுங்கள். நாம் முதலில் இதைப் பற்றி விவாதிப்போம். பிறகு என்ன செய்வது என்று முடிவு செய்வோம். என்ன ? “ என்று பேசியதாக, “இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு“ செய்தி வெளியிட்டுள்ளது.



இவ்வாறு பேசியதற்காக, இவர் மீது துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஏராளமானோர் இருக்க, இப்படிப்பட்ட ஒரு ஆளை தலைமைச் செயலாளராக நியமித்து வைத்திருக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்ல ?
ஒப்பாரி