Tuesday, February 23, 2010

W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.



அது 1991ம் ஆண்டு. மே மாத இறுதி. பதின் பருவ வயதில் இருந்த எங்களுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி என்று ஒரு தியேட்டர் விடாமல் சென்று சினிமா பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று சுற்றிக் கொண்டிருந்த காலம்.

எங்களோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்த நண்பர், “ரெண்டு வாரத்துக்கு சினிமாவுக்கு வரமாட்டேன்“ என்று சொன்னார். எங்களக்கெல்லாம் ஆச்சர்யம். “அப்புடி என்னடா பண்ணப் போற ? “ என்று கேட்டதற்கு “W.R க்கு எலெக்ஷன் வொர்க் பண்ணப் போறேன்“ என்றார். அப்போதெல்லாம் மார்க்சியம், கம்யூனிசம் என்பதெல்லாம் பரிச்சயம் இல்லாத காலம். “எவ்ளோடா துட்டு குடுப்பாங்க“ என்று கேட்டதற்கு நண்பர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம். “துட்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. நம்மதான் செலவு பண்ணணும்“ என்றார்.


W.R என்ற அந்தப் பெயரே பிடிக்கவில்லை எனக்கு. உச்சரிக்க கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது. தமிழில் இன்னும் மோசம். உ.ரா.வரதராஜன். என்னடா பேரு இது என்று நாங்கள் அந்த நண்பரை கிண்டல் செய்வோம்.

சில வருடங்களில் மார்க்சியம் எல்லாம் பரிச்சயமாகி W.R கூட்டங்களுக்கெல்லாம் சென்ற பிறகு, W.R என்ற அந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் தேனாக இனித்தது.

1994ம் ஆண்டு என்று ஞாபகம். தி.நகர் பனகல் பூங்காவில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை W.R வரதராஜன் மொழிபெயர்த்தார். அப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் இன்று வரை கண்டதில்லை.

சுர்ஜித், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கிறாரோ தமிழ் மொழி பெயர்ப்பிலும் அதே இடத்தில் அழுத்தம் கொடுப்பார் வரதராஜன். நானும், ஏதாவது ஒரு வார்த்தையையாவது இந்த ஆள் மொழி பெயர்ப்பில் கோட்டை விடுகிறாரா பார்ப்போம் என்று உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால், 1 சதவிகிதம் கூட தவறு நேராமல், மொழி பெயர்ப்பில் சிறிது கூட பிசிறு இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு செய்யப் பட்ட வரதராஜனின் மொழி பெயர்ப்பு, சுர்ஜித் உரையை விட கூட்டத்தை எழுச்சி கொள்ளச் செய்தது.

சமீபத்தில் இந்திய அமேரிக்காவோடு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஒரு பத்திரிக்கையாளர் “இது என்ன சார், எனக்கு புரியலை“ என்று கேட்டார். 20 நிமிடம், குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி எளிமையாக புரிய வைத்தார் என்று அந்தப் பத்திரிக்கையாளர் சிலாகிக்கிறார்.

W.R வரதராஜன் வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முற்போக்கான மனம் படைத்த வரதராஜன், சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக இருந்த வரதராஜன் 1984ம் ஆண்டு வங்கிப் பணியை துறந்து சிபிஎம்மின் முழு நேர ஊழியரானார்.


W.R வரதராஜனின் ஆற்றல் பன்முகத் தன்மை வாய்ந்தது. கணிதத்தில் நிபுணர். அவர் தொழிலே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். சிறந்த பொருளாதார நிபுணர். பட்ஜெட்டை அலசுவதில் அசாத்திய திறமை படைத்தவர். எழுத்தாளர். பேச்சாளர். சுருக்கமாக சொல்லப் போனால், சிபிஎம் கட்சியின் மிக முக்கிய தூணாக விளங்கியவர்.

ஆனால் அதுவே வரதராஜனுக்கு வினையாக முடிந்ததுதான் காலத்தின் கோலம். பொய்யும், புரட்டும், சூதும், சுயநலமும் பல்கிப் பெருகி, பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பேன் என்ற நிலைக்கு மக்களே மாறிப்போன இச்சூழலில் சிபிஎம் கட்சி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

வரதராஜன் மத்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டதிலிருந்தே சிபிஎம்மின் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பொறாமை கனன்றது. நம்பள்ளாம் இருக்கும் போது இவன் எப்படி மத்தியக் குழு உறுப்பினராகலாம் என்ற பொறாமை பெரும்பாலான தலைவர்களை பிடித்து ஆட்டியது. சிஐடியு பொதுச் செயலாளராக வேண்டும் என்று விருப்பப் பட்ட வரதராஜனின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது, சிபிஎம்மின் கொல்கத்தா லாபி.

சிஐடியு எங்களுக்குத் தான் சொந்தம், தென்னிந்தியர் சிஐடியு பொதுச் செயலாளர் ஆவதை விடமாட்டோம் என்று கங்கணம் கட்டினர். பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் எம்.கே.பாந்தேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினார்.


தமிழக சிபிஎம்மில், பி.ராமமூர்த்தி, சங்கரைய்யா, நல்லசிவன், வி.பி.சிந்தன் போன்ற, மக்களிடமும், தொண்டர்களிடமும் அசாத்திய செல்வாக்கு படைத்த தலைவர் இன்று ஒருவர் கூட இல்லை. இப்போதைய தமிழ் மாநிலக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் என்.வரதராஜன் உட்பட தமிழ் மாநில நிர்வாகிகள் அனைவருமே தொண்டர்கள் செல்வாக்கை பெற்றதேயில்லை.

இன்றைய சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் போல செயல்படுபவர்கள்.

தமிழகம் திரும்பிய வரதராஜன் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார். எழுதத் தொடங்கினார். கூட்டங்களில் பேசத் தொடங்கினார். தொண்டர்களை சந்திக்கத் தொடங்கினார். வரதராஜனின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளை மிகுந்த எரிச்சல் அடையச் செய்தது.

இன்று சிபிஎம் தமிழ் மாநிலக் குழுவில் இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் கோஷ்டிகள் இரண்டுக்குமே வரதராஜன் என்றால் வேப்பங்காய். தங்களின் பதவிக்கு வரதராஜனை அச்சுறுத்தலாகவே இந்த இரண்டு கோஷ்டிகளும் பார்த்தது. வரதராஜன் மீது ஒரு புகார் என்றதும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த இரண்டு கோஷ்டிகளும் வரதராஜனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று புறப்பட்டன.

ஜனநாயக மாதர் சங்கம் என்ற போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பல குடும்பங்களை சீரழித்த உ.வாசுகி தலைமையில் வரதராஜனுக்கு எதிரான சதி தொடங்கியது. வரதராஜனின் மனைவி சரஸ்வதியை வைத்து வரதராஜன் மீது ஒரு பொய்யான பாலியல் குற்றச் சாட்டை கட்சியிடம் புகாராக கொடுக்க வைத்தனர்.

புகார் வந்ததும் உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, “தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வரதராஜன் நீக்கப் பட்டார்“ என்று முடிவெடுத்து, அனைத்து கட்சிக் குழுக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. கட்சித் தொண்டர்களிடையே எதற்காக நீக்கப் பட்டார், என்ன காரணம் என்று எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. இந்த நீக்கம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முதலாளிகளோடு பேரம் பேசி, தொழிலாளியின் வயிற்றில் அடித்தவர்களெல்லாம் இன்று சிபிஎம்மில் நல்ல பதவிகளில் இருக்கையில், பொய்யான ஒரு பாலியல் குற்றச் சாட்டின் அடிப்படையில் வரதராஜனை நீக்கியதற்கு சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளில் அகங்காரமும் பொறாமையையும் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

ஏறக்குறைய 10 ஆண்டுகளாகவே, மனைவியோடு பிணக்கில் இருந்து வந்ததால், வரதராஜனுக்கு மனைவி சரஸ்வதியின் நடவடிக்கைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தான் பெரிதும் நேசித்த கட்சி தன்னை இப்படி அவமானப் படுத்தியதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை.

தோழர் வரதராஜனின் முடிவில் எமக்கு உடன்பாடு இல்லை யெனினும்

மயிர் நீப்பின் வாழக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறள் போலவே இம்முடிவை எடுத்துள்ளார்.

தோழர் வரதராஜனை கொலை செய்து விட்டு, அவரது இறுதி ஊர்வலத்திலும் வெட்கமில்லாமல் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் தூக்கி எறியப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தோழரின் மரணத்துக்கு காரணமான துரோகிகள் இக்கொலைக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். இதுவும் காலத்தின் கட்டாயமே.



சவுக்கு

W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.



அது 1991ம் ஆண்டு. மே மாத இறுதி. பதின் பருவ வயதில் இருந்த எங்களுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி என்று ஒரு தியேட்டர் விடாமல் சென்று சினிமா பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று சுற்றிக் கொண்டிருந்த காலம்.

எங்களோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்த நண்பர், “ரெண்டு வாரத்துக்கு சினிமாவுக்கு வரமாட்டேன்“ என்று சொன்னார். எங்களக்கெல்லாம் ஆச்சர்யம். “அப்புடி என்னடா பண்ணப் போற ? “ என்று கேட்டதற்கு “W.R க்கு எலெக்ஷன் வொர்க் பண்ணப் போறேன்“ என்றார். அப்போதெல்லாம் மார்க்சியம், கம்யூனிசம் என்பதெல்லாம் பரிச்சயம் இல்லாத காலம். “எவ்ளோடா துட்டு குடுப்பாங்க“ என்று கேட்டதற்கு நண்பர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம். “துட்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. நம்மதான் செலவு பண்ணணும்“ என்றார்.


W.R என்ற அந்தப் பெயரே பிடிக்கவில்லை எனக்கு. உச்சரிக்க கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது. தமிழில் இன்னும் மோசம். உ.ரா.வரதராஜன். என்னடா பேரு இது என்று நாங்கள் அந்த நண்பரை கிண்டல் செய்வோம்.

சில வருடங்களில் மார்க்சியம் எல்லாம் பரிச்சயமாகி W.R கூட்டங்களுக்கெல்லாம் சென்ற பிறகு, W.R என்ற அந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் தேனாக இனித்தது.

1994ம் ஆண்டு என்று ஞாபகம். தி.நகர் பனகல் பூங்காவில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை W.R வரதராஜன் மொழிபெயர்த்தார். அப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் இன்று வரை கண்டதில்லை.

சுர்ஜித், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கிறாரோ தமிழ் மொழி பெயர்ப்பிலும் அதே இடத்தில் அழுத்தம் கொடுப்பார் வரதராஜன். நானும், ஏதாவது ஒரு வார்த்தையையாவது இந்த ஆள் மொழி பெயர்ப்பில் கோட்டை விடுகிறாரா பார்ப்போம் என்று உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால், 1 சதவிகிதம் கூட தவறு நேராமல், மொழி பெயர்ப்பில் சிறிது கூட பிசிறு இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு செய்யப் பட்ட வரதராஜனின் மொழி பெயர்ப்பு, சுர்ஜித் உரையை விட கூட்டத்தை எழுச்சி கொள்ளச் செய்தது.

சமீபத்தில் இந்திய அமேரிக்காவோடு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஒரு பத்திரிக்கையாளர் “இது என்ன சார், எனக்கு புரியலை“ என்று கேட்டார். 20 நிமிடம், குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி எளிமையாக புரிய வைத்தார் என்று அந்தப் பத்திரிக்கையாளர் சிலாகிக்கிறார்.

W.R வரதராஜன் வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முற்போக்கான மனம் படைத்த வரதராஜன், சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக இருந்த வரதராஜன் 1984ம் ஆண்டு வங்கிப் பணியை துறந்து சிபிஎம்மின் முழு நேர ஊழியரானார்.


W.R வரதராஜனின் ஆற்றல் பன்முகத் தன்மை வாய்ந்தது. கணிதத்தில் நிபுணர். அவர் தொழிலே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். சிறந்த பொருளாதார நிபுணர். பட்ஜெட்டை அலசுவதில் அசாத்திய திறமை படைத்தவர். எழுத்தாளர். பேச்சாளர். சுருக்கமாக சொல்லப் போனால், சிபிஎம் கட்சியின் மிக முக்கிய தூணாக விளங்கியவர்.

ஆனால் அதுவே வரதராஜனுக்கு வினையாக முடிந்ததுதான் காலத்தின் கோலம். பொய்யும், புரட்டும், சூதும், சுயநலமும் பல்கிப் பெருகி, பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பேன் என்ற நிலைக்கு மக்களே மாறிப்போன இச்சூழலில் சிபிஎம் கட்சி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

வரதராஜன் மத்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டதிலிருந்தே சிபிஎம்மின் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பொறாமை கனன்றது. நம்பள்ளாம் இருக்கும் போது இவன் எப்படி மத்தியக் குழு உறுப்பினராகலாம் என்ற பொறாமை பெரும்பாலான தலைவர்களை பிடித்து ஆட்டியது. சிஐடியு பொதுச் செயலாளராக வேண்டும் என்று விருப்பப் பட்ட வரதராஜனின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது, சிபிஎம்மின் கொல்கத்தா லாபி.

சிஐடியு எங்களுக்குத் தான் சொந்தம், தென்னிந்தியர் சிஐடியு பொதுச் செயலாளர் ஆவதை விடமாட்டோம் என்று கங்கணம் கட்டினர். பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் எம்.கே.பாந்தேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினார்.


தமிழக சிபிஎம்மில், பி.ராமமூர்த்தி, சங்கரைய்யா, நல்லசிவன், வி.பி.சிந்தன் போன்ற, மக்களிடமும், தொண்டர்களிடமும் அசாத்திய செல்வாக்கு படைத்த தலைவர் இன்று ஒருவர் கூட இல்லை. இப்போதைய தமிழ் மாநிலக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் என்.வரதராஜன் உட்பட தமிழ் மாநில நிர்வாகிகள் அனைவருமே தொண்டர்கள் செல்வாக்கை பெற்றதேயில்லை.

இன்றைய சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் போல செயல்படுபவர்கள்.

தமிழகம் திரும்பிய வரதராஜன் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார். எழுதத் தொடங்கினார். கூட்டங்களில் பேசத் தொடங்கினார். தொண்டர்களை சந்திக்கத் தொடங்கினார். வரதராஜனின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளை மிகுந்த எரிச்சல் அடையச் செய்தது.

இன்று சிபிஎம் தமிழ் மாநிலக் குழுவில் இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் கோஷ்டிகள் இரண்டுக்குமே வரதராஜன் என்றால் வேப்பங்காய். தங்களின் பதவிக்கு வரதராஜனை அச்சுறுத்தலாகவே இந்த இரண்டு கோஷ்டிகளும் பார்த்தது. வரதராஜன் மீது ஒரு புகார் என்றதும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த இரண்டு கோஷ்டிகளும் வரதராஜனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று புறப்பட்டன.

ஜனநாயக மாதர் சங்கம் என்ற போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பல குடும்பங்களை சீரழித்த உ.வாசுகி தலைமையில் வரதராஜனுக்கு எதிரான சதி தொடங்கியது. வரதராஜனின் மனைவி சரஸ்வதியை வைத்து வரதராஜன் மீது ஒரு பொய்யான பாலியல் குற்றச் சாட்டை கட்சியிடம் புகாராக கொடுக்க வைத்தனர்.

புகார் வந்ததும் உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, “தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வரதராஜன் நீக்கப் பட்டார்“ என்று முடிவெடுத்து, அனைத்து கட்சிக் குழுக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. கட்சித் தொண்டர்களிடையே எதற்காக நீக்கப் பட்டார், என்ன காரணம் என்று எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. இந்த நீக்கம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முதலாளிகளோடு பேரம் பேசி, தொழிலாளியின் வயிற்றில் அடித்தவர்களெல்லாம் இன்று சிபிஎம்மில் நல்ல பதவிகளில் இருக்கையில், பொய்யான ஒரு பாலியல் குற்றச் சாட்டின் அடிப்படையில் வரதராஜனை நீக்கியதற்கு சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளில் அகங்காரமும் பொறாமையையும் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

ஏறக்குறைய 10 ஆண்டுகளாகவே, மனைவியோடு பிணக்கில் இருந்து வந்ததால், வரதராஜனுக்கு மனைவி சரஸ்வதியின் நடவடிக்கைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தான் பெரிதும் நேசித்த கட்சி தன்னை இப்படி அவமானப் படுத்தியதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை.

தோழர் வரதராஜனின் முடிவில் எமக்கு உடன்பாடு இல்லை யெனினும்

மயிர் நீப்பின் வாழக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறள் போலவே இம்முடிவை எடுத்துள்ளார்.

தோழர் வரதராஜனை கொலை செய்து விட்டு, அவரது இறுதி ஊர்வலத்திலும் வெட்கமில்லாமல் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் தூக்கி எறியப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தோழரின் மரணத்துக்கு காரணமான துரோகிகள் இக்கொலைக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். இதுவும் காலத்தின் கட்டாயமே.



சவுக்கு

Sunday, February 7, 2010

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்

கடிதத்தை பெரிதாக்க க்ளிக் செய்யவும்


முதல் பக்கம்



இரண்டாம் பக்கம்



மூன்றாம் பக்கம்



நான்காம் பக்கம்



ஐந்தாம் பக்கம்



ஆறாம் பக்கம்




ஏழாம் பக்கம்


படித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அருள் கூர்ந்து அனுப்புங்கள். கருணாநிதியின் முகத்திரையை கிழியுங்கள்

சவுக்கு

செங்கல்பட்டு முகாமில் நடந்தது என்ன ? கண்ணீர் வாக்குமூலம்

கடிதத்தை பெரிதாக்க க்ளிக் செய்யவும்


முதல் பக்கம்



இரண்டாம் பக்கம்



மூன்றாம் பக்கம்



நான்காம் பக்கம்



ஐந்தாம் பக்கம்



ஆறாம் பக்கம்




ஏழாம் பக்கம்


படித்தவர்கள் தங்கள் நண்பர்களுக்கு அருள் கூர்ந்து அனுப்புங்கள். கருணாநிதியின் முகத்திரையை கிழியுங்கள்

சவுக்கு

Friday, February 5, 2010

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்




டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




இம்மனுவை எதிர்த்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கெதிராக தானே நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று நளினி தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நளினி முன் விடுதலை தொடர்பாக அமைக்கப் பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அது வந்தாலும், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது, மத்திய அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

(2ம் தேதியே, வேலூரில் உள்ள ஆலோசனைக் குழு தன் முடிவை அரசிடம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.)




இதையடுத்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.

திடீரென்று கோபமடைந்த நீதிபதி எலிப்பி தர்மா ராவ், டாக்டர்.சுவாமி வழக்கறிஞரைப் பார்த்து "நீங்கள் சுப்ரமணிய சுவாமிக்காக ஆஜராகி வாதாடுகிறீர்கள், ஆனால், சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களில் வாதாடிக் கொண்டிருக்கிறாரே.. ! நீதிமன்ற விசாரணையில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது என்பது உங்கள் கட்சிக் காரருக்குத் தெரியாதா ?

நளினி நேரில் ஆஜராகக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்ல இவர் யார் ? இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் தெரியுமா ?

நாங்கள் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். சுப்ரமணியன் சுவாமி, சட்டம் படித்தவர், ஒரு முனைவர் பட்டம் பெற்றவர், ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதுதான் அவர் நீதிமன்றத்துக்கு காட்டும் மரியாதையா ?

இந்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவர் ஏற்கனவே, ஊடகங்களில் முடிவு செய்து விட்டது போலப் பேசியிருக்கிறாரே ?

இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா " என்று கேட்டனர். அதற்கு சுவாமி வழக்கறிஞர், பார்க்கவில்லை என்று கூறினார். " என்ன கவுன்செல், செய்தித்தாள் படிக்காமல் எப்படி தேநீர் அருந்துகிறீர்கள்" என்று கூறிய நீதிபதி, இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர்.சுவாமியின் வழக்கறிஞர், சுவாமி சார்பில், தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் கூறினர்.

இதையடுத்து நீதிபதிகள், நளினி நேரில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.


சவுக்கு

சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்




டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி 7 வருடம் முடித்தவர்களை விடுதலை செய்துள்ளதால், தன்னையும் முன் விடுதலைக்கு பரிசீலிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.




இம்மனுவை எதிர்த்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கெதிராக தானே நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று நளினி தாக்கல் செய்திருந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி நளினி முன் விடுதலை தொடர்பாக அமைக்கப் பட்ட ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை. அது வந்தாலும், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது, மத்திய அரசோடு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

(2ம் தேதியே, வேலூரில் உள்ள ஆலோசனைக் குழு தன் முடிவை அரசிடம் அளித்து விட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.)




இதையடுத்து டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.

திடீரென்று கோபமடைந்த நீதிபதி எலிப்பி தர்மா ராவ், டாக்டர்.சுவாமி வழக்கறிஞரைப் பார்த்து "நீங்கள் சுப்ரமணிய சுவாமிக்காக ஆஜராகி வாதாடுகிறீர்கள், ஆனால், சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களில் வாதாடிக் கொண்டிருக்கிறாரே.. ! நீதிமன்ற விசாரணையில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கையில் இவ்வாறு ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது என்பது உங்கள் கட்சிக் காரருக்குத் தெரியாதா ?

நளினி நேரில் ஆஜராகக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்ல இவர் யார் ? இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் தெரியுமா ?

நாங்கள் இந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக் கொள்கிறோம். சுப்ரமணியன் சுவாமி, சட்டம் படித்தவர், ஒரு முனைவர் பட்டம் பெற்றவர், ஒரு அரசியல் கட்சித் தலைவர். இதுதான் அவர் நீதிமன்றத்துக்கு காட்டும் மரியாதையா ?

இந்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவர் ஏற்கனவே, ஊடகங்களில் முடிவு செய்து விட்டது போலப் பேசியிருக்கிறாரே ?

இன்று செய்தித் தாள் பார்த்தீர்களா " என்று கேட்டனர். அதற்கு சுவாமி வழக்கறிஞர், பார்க்கவில்லை என்று கூறினார். " என்ன கவுன்செல், செய்தித்தாள் படிக்காமல் எப்படி தேநீர் அருந்துகிறீர்கள்" என்று கூறிய நீதிபதி, இது போன்ற நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர்.சுவாமியின் வழக்கறிஞர், சுவாமி சார்பில், தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், இது போன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் கூறினர்.

இதையடுத்து நீதிபதிகள், நளினி நேரில் ஆஜராகலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.


சவுக்கு

Thursday, February 4, 2010

செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்



செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில், கருணாநிதியின் கைக்கூலி காவல்துறையால் நடத்தப் பட்ட கொடிய தாக்குதலைக் கண்டித்து இன்று (04.02.2010) மாலை சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று இதழாளர் அய்யநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் பா.புகழேந்தி, தமிழ் நியூஸ் ஆசிரியர் TSS மணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெகு விரைவாக, துரித காலத்திற்குள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து சிறப்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய இதழாளர் அய்யநாதன் அவர்களுக்கு என்றென்றும் எங்கள் நன்றி உரியது.

ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட ஒளிப்படங்கள்




































சவுக்கு