Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தாலும், காற்று வராது





கடந்த வாரமும், இந்த வாரமும் நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை. முதல் சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரின் அதீத தாக்குதலால் பலியான மூன்று மாணவர்கள். இரண்டாவது சம்பவம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த, பத்திரிக்கையாளரின் பார்வையில் ஸ்டாலின் என்ற நூல் வெளியீட்டு விழா. மூன்றாவது சம்பவம், அருள்மிகு ஸ்ரீ நித்யானந்த பரமஹம்ச ஸ்வாமிகள் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.



மூன்று சம்பவங்களும், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால், மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நிறைந்த அரசியல் பின்னணி கொண்டது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து, தமிழகத்திலேயே முதல் போராட்டம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தான் வெடித்தது. அப்போராட்டத்தை முன்னெடுத்த, உதயக்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அவர் உடலையே அவர் பெற்றோர்கள் தங்கள் மகன் இல்லை என்று அடையாளம் கூறியதும் வரலாறு.

அந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கடந்த வாரம் கவுதம் குமார் என்ற மாணவர், சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவருக்கு, சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை, சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் அம்மாணவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தின் ஆணைப்படி, செயல்பட்ட கருணாநிதி அரசின் காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், சுமித் குமார், ஆசிஷ் ரஞ்சன் குமார், சர்பராஸ் என்ற மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டனர். இந்தப் பிரச்சினை பூதாகரமான மாணவர் பிரச்சினையாக உருவாகும் தகுதி படைத்தது.



மாணவர்கள் சடலம் எடுத்து வரப்படுகிறது

கொல்லப்பட்ட மாணவர்கள், வட இந்திய மாணவர்கள் ஆதலால், உடனடியாக பெரும் பிரச்சினை கிளம்பவில்லை. ஆனால், வட இந்திய மாணவர்கள், மாணவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.




ஒரு மாணவர்கள் சடலம் ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது


ஆனால் திட்டமிட்டது போல, இந்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தன. நேற்று இரண்டு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதும், கடலூல் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த மாணவர்களின் கொலை, தமிழகமெங்கும் பரவும் சூழ்நிலை உருவானது.


அடுத்து இரண்டாவது சம்பவம். நேற்று சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினைப் பற்றி, “ஸ்டாலின். மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில், தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சோந்தாலியா, பெரியார் மடத் தலைவர் வீரமணி, திமுக நிலைய வித்வான் கமலஹாசன், குமுதம் குழும தலைவர் பா.வரதராஜன், தினமலர் குழும உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜீ, இந்து நாளிதழின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்.ராம், விகடன் குழும முதலாளி பா.சீனிவாசன், தினத்தந்தி, மாலைச்சுடர் முதலாளி பாலசுப்ரமணிய ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




இதில் செய்தி என்னவென்றால், தமிழக அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், பத்திரிக்கையாளர்களும், அதன் முதலாளிகளும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழாவில் பங்கு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என்பது, இயல்பான ஒரு நிகழ்வு அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

உண்மையில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைப்பது நோக்கமென்றால், ஜெயா டிவி எடிட்டர், நமது எம்ஜிஆர், மாலைச்சுடர், மக்கள் குரல், ந்யூஸ் டுடே ஆகிய பத்திரிக்கையாளர்களை வாழ்த்துச் சொல்ல அழைக்க வேண்டியதுதானே ? ஏன் அழைக்கவில்லை.


ஏன் அழைக்கவில்லை என்றால், திமுகவின் பிடிக்குள் வந்து, திமுகவின் துதிபாடிகளாக ஆன பத்திரிக்கைகள் மட்டுமே இவ்விழாவிற்கு அழைக்கப் பட்டன. மேற்கூறிய பத்திரிக்கைகள் எதிலுமே திமுக அரசுக்கு எதிராக பெரிதாக எந்த செய்திகளும் வருவதில்லை. இந்தப் பத்திரிக்கைகளைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கைகளும் பிரபலமான மக்களைச் சென்றடையும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் சாபக் கேடு.



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும், உழைப்பால் உயர்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே, தங்கள் தகப்பனாரின் உழைப்பில் விளைந்த சொத்துக்களை இன்று அனுபவிக்கும் கூட்டத்தினர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் வந்துவிட்டால், பிறகு, நான்காவது தூணுக்கு என்ன வேலை ? நான்காவது தூணுக்கு வேலை இல்லாமல் செய்வதுதான் கருணாநிதியின் வேலை.


பெரும்பாலான பத்திரிக்கைகளை அழைத்து, உங்களுக்கு, பரபரப்பான செய்திகளால் பத்திரிக்கை விற்பனை அதிகரித்தால் உங்களுக்கு என்ன வருமானம் வருமோ, அந்த வருமானத்தை விளம்பரத்தால் உறுதி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, அதைச் செயல்படுத்தியும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதையும் மீறி, தலைமைச் செயலகம் திறக்க இருக்கும் இந்த நேரத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கொலை பற்றிய செய்திகள் வெளிவந்தால் ? அது சிக்கலை உருவாக்கும் அல்லவா ?


அங்குதான் மூன்றாவது சம்பவம் வருகிறது. சுவாமி நித்யானந்தாவின் படம் நேற்று இரவு அனைத்து தமிழ் காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டே ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. இரவு 8.30 மணிக்கு முதன் முறையாக காட்சி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர், உடனடியாக நித்யானந்தாவின் படத்தை கிழித்தும், எரித்தும், போராட்டம் நடத்தியதை, சன் டிவி விரிவாக ஒளிபரப்பியது.


இதற்கு விரிவாக கவரேஜ் கொடுத்த, சன் டிவி, தலித்துகள், இன்னும், ஆலயத்தினுள் நுழைய வராமல் தடுக்கப் படுவதையும், தலித் தெருக்களில் கடவுள் தேரை கொண்டு வர, நீதிமன்றம் வர வேண்டிய அவல நிலை இருப்பதையும் இந்த இந்து மக்கள் கட்சியும், இதர இந்துக் கட்சிகளும் ஏன் கண்டிக்கவோ, போராடவோ தவறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப மறுக்கிறது.


சுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா ? எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா ? நீங்களாக நித்யானந்தாவுக்கு, செக்ஸ் உணர்வு கிடையாது என்று கற்பனை செய்து கொண்டு, இப்படி ஒரு வீடியோ வெளியானதும், நித்யானந்தா நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்று கூறுகிறீர்களே … இது எந்த விதத்தில் நியாயம் ?


நித்யானந்தா கைது செய்யப் பட வேண்டும் என்று இன்று போராட்டம் நடத்தும் இந்து மக்கள் கட்சியினர் இது நடிகை ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ? யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் ரஞ்சிதா அல்லவா புகார் கொடுக்க வேண்டும் ?

இரண்டு வயது வந்த நபர்கள், தன் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வதால் சமுதாயத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது ?


மேலும், இந்த வீடியோ எடுக்கப் பட்ட ஆண்டு மிகவும் முந்தையது என்று தோன்றுகிறது. வீடியோவில், ரஞ்சிதா, தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்கையில் இருந்தது போல இருக்கிறார். இப்போதைய ரஞ்சிதாவிற்கும், வீடியோவில் தென்படும் ரஞ்சிதாவிற்கும் நிறைய வயது மற்றும் தோற்ற வேறுபாடு தெரிகிறது.


பழைய ரஞ்சிதா




தற்போதைய ரஞ்சிதா



எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.


அதற்கேற்றார்போல, இன்று காலை முதல், டீக்கடை, பத்திரிக்கை கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், என்று மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் நித்யானந்தாவைப் பற்றித்தான் பேச்சு.


இது கருணாநிதியின் திட்டமாக இருந்தால், அவர் மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டார்.
கருணாநிதியின் நயவஞ்சகத்தையும், சூதையும் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய ஆச்சர்யமாகத் தோன்றாது.


இப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், மக்களும், சோரம் போன பத்திரிக்கைகளும் இருக்கையில், எத்தனை கதவுகள் திறந்தாலும், காற்று வரப்போவதில்லை.



சவுக்கு

கதவைத் திறந்தாலும், காற்று வராது





கடந்த வாரமும், இந்த வாரமும் நடந்த சம்பவங்கள் மிக முக்கியமானவை. முதல் சம்பவம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரின் அதீத தாக்குதலால் பலியான மூன்று மாணவர்கள். இரண்டாவது சம்பவம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த, பத்திரிக்கையாளரின் பார்வையில் ஸ்டாலின் என்ற நூல் வெளியீட்டு விழா. மூன்றாவது சம்பவம், அருள்மிகு ஸ்ரீ நித்யானந்த பரமஹம்ச ஸ்வாமிகள் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.



மூன்று சம்பவங்களும், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால், மூன்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், நிறைந்த அரசியல் பின்னணி கொண்டது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்து, தமிழகத்திலேயே முதல் போராட்டம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தான் வெடித்தது. அப்போராட்டத்தை முன்னெடுத்த, உதயக்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அவர் உடலையே அவர் பெற்றோர்கள் தங்கள் மகன் இல்லை என்று அடையாளம் கூறியதும் வரலாறு.

அந்த அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் கடந்த வாரம் கவுதம் குமார் என்ற மாணவர், சாலை விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவருக்கு, சரியான சிகிச்சை அளிக்கப் படவில்லை, சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால் அம்மாணவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தின் ஆணைப்படி, செயல்பட்ட கருணாநிதி அரசின் காவல்துறை மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில், சுமித் குமார், ஆசிஷ் ரஞ்சன் குமார், சர்பராஸ் என்ற மூன்று மாணவர்கள் கொல்லப் பட்டனர். இந்தப் பிரச்சினை பூதாகரமான மாணவர் பிரச்சினையாக உருவாகும் தகுதி படைத்தது.



மாணவர்கள் சடலம் எடுத்து வரப்படுகிறது

கொல்லப்பட்ட மாணவர்கள், வட இந்திய மாணவர்கள் ஆதலால், உடனடியாக பெரும் பிரச்சினை கிளம்பவில்லை. ஆனால், வட இந்திய மாணவர்கள், மாணவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசி, ஒரு பெரும் போராட்டத்தை நடத்த உத்தேசித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.




ஒரு மாணவர்கள் சடலம் ஆற்றில் இருந்து எடுத்து வரப்படுகிறது


ஆனால் திட்டமிட்டது போல, இந்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தன. நேற்று இரண்டு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப் பட்டதும், கடலூல் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்தது. இந்த மாணவர்களின் கொலை, தமிழகமெங்கும் பரவும் சூழ்நிலை உருவானது.


அடுத்து இரண்டாவது சம்பவம். நேற்று சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினைப் பற்றி, “ஸ்டாலின். மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் என்ற நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில், தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சோந்தாலியா, பெரியார் மடத் தலைவர் வீரமணி, திமுக நிலைய வித்வான் கமலஹாசன், குமுதம் குழும தலைவர் பா.வரதராஜன், தினமலர் குழும உரிமையாளர் ஆர்.ஆர்.கோபால்ஜீ, இந்து நாளிதழின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் என்.ராம், விகடன் குழும முதலாளி பா.சீனிவாசன், தினத்தந்தி, மாலைச்சுடர் முதலாளி பாலசுப்ரமணிய ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.




இதில் செய்தி என்னவென்றால், தமிழக அரசியல் சூழலை நன்கு புரிந்தவர்கள், பத்திரிக்கையாளர்களும், அதன் முதலாளிகளும், ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கான பாராட்டு விழாவில் பங்கு கொண்டு வாழ்த்து தெரிவிப்பது என்பது, இயல்பான ஒரு நிகழ்வு அல்ல. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

உண்மையில் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைப்பது நோக்கமென்றால், ஜெயா டிவி எடிட்டர், நமது எம்ஜிஆர், மாலைச்சுடர், மக்கள் குரல், ந்யூஸ் டுடே ஆகிய பத்திரிக்கையாளர்களை வாழ்த்துச் சொல்ல அழைக்க வேண்டியதுதானே ? ஏன் அழைக்கவில்லை.


ஏன் அழைக்கவில்லை என்றால், திமுகவின் பிடிக்குள் வந்து, திமுகவின் துதிபாடிகளாக ஆன பத்திரிக்கைகள் மட்டுமே இவ்விழாவிற்கு அழைக்கப் பட்டன. மேற்கூறிய பத்திரிக்கைகள் எதிலுமே திமுக அரசுக்கு எதிராக பெரிதாக எந்த செய்திகளும் வருவதில்லை. இந்தப் பத்திரிக்கைகளைத் தவிர, வேறு எந்த பத்திரிக்கைகளும் பிரபலமான மக்களைச் சென்றடையும் பத்திரிக்கைகள் இல்லை என்பதுதான் சாபக் கேடு.



இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரும், உழைப்பால் உயர்ந்தவர்கள் கிடையாது. அனைவருமே, தங்கள் தகப்பனாரின் உழைப்பில் விளைந்த சொத்துக்களை இன்று அனுபவிக்கும் கூட்டத்தினர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பத்திரிக்கைகளும், கருணாநிதியின் கைப்பிடிக்குள் வந்துவிட்டால், பிறகு, நான்காவது தூணுக்கு என்ன வேலை ? நான்காவது தூணுக்கு வேலை இல்லாமல் செய்வதுதான் கருணாநிதியின் வேலை.


பெரும்பாலான பத்திரிக்கைகளை அழைத்து, உங்களுக்கு, பரபரப்பான செய்திகளால் பத்திரிக்கை விற்பனை அதிகரித்தால் உங்களுக்கு என்ன வருமானம் வருமோ, அந்த வருமானத்தை விளம்பரத்தால் உறுதி செய்வதாக ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, அதைச் செயல்படுத்தியும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதையும் மீறி, தலைமைச் செயலகம் திறக்க இருக்கும் இந்த நேரத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் கொலை பற்றிய செய்திகள் வெளிவந்தால் ? அது சிக்கலை உருவாக்கும் அல்லவா ?


அங்குதான் மூன்றாவது சம்பவம் வருகிறது. சுவாமி நித்யானந்தாவின் படம் நேற்று இரவு அனைத்து தமிழ் காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டே ஒளிபரப்பப் பட்டதாகத் தெரிகிறது. இரவு 8.30 மணிக்கு முதன் முறையாக காட்சி ஒளிபரப்பான சில மணி நேரங்களிலேயே இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி போன்ற இந்து அமைப்பினர், உடனடியாக நித்யானந்தாவின் படத்தை கிழித்தும், எரித்தும், போராட்டம் நடத்தியதை, சன் டிவி விரிவாக ஒளிபரப்பியது.


இதற்கு விரிவாக கவரேஜ் கொடுத்த, சன் டிவி, தலித்துகள், இன்னும், ஆலயத்தினுள் நுழைய வராமல் தடுக்கப் படுவதையும், தலித் தெருக்களில் கடவுள் தேரை கொண்டு வர, நீதிமன்றம் வர வேண்டிய அவல நிலை இருப்பதையும் இந்த இந்து மக்கள் கட்சியும், இதர இந்துக் கட்சிகளும் ஏன் கண்டிக்கவோ, போராடவோ தவறுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப மறுக்கிறது.


சுவாமி நித்யானந்தா அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? நித்யானந்தா ஒவ்வொருவரிடமும் சென்று, எனக்கு பாலியல் உணர்வுகள் கிடையாது என்று சொன்னாரா ? எனக்கு செக்ஸ் ஆசை அறவே கிடையாது என்று தினத்தந்தியில் முதல்பக்க விளம்பரம் கொடுத்தாரா ? நீங்களாக நித்யானந்தாவுக்கு, செக்ஸ் உணர்வு கிடையாது என்று கற்பனை செய்து கொண்டு, இப்படி ஒரு வீடியோ வெளியானதும், நித்யானந்தா நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்று கூறுகிறீர்களே … இது எந்த விதத்தில் நியாயம் ?


நித்யானந்தா கைது செய்யப் பட வேண்டும் என்று இன்று போராட்டம் நடத்தும் இந்து மக்கள் கட்சியினர் இது நடிகை ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ? யாராவது புகார் கொடுக்க வேண்டும் என்றால் ரஞ்சிதா அல்லவா புகார் கொடுக்க வேண்டும் ?

இரண்டு வயது வந்த நபர்கள், தன் விருப்பத்தோடு உறவு வைத்துக் கொள்வதால் சமுதாயத்தில் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படப் போகிறது ?


மேலும், இந்த வீடியோ எடுக்கப் பட்ட ஆண்டு மிகவும் முந்தையது என்று தோன்றுகிறது. வீடியோவில், ரஞ்சிதா, தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்கையில் இருந்தது போல இருக்கிறார். இப்போதைய ரஞ்சிதாவிற்கும், வீடியோவில் தென்படும் ரஞ்சிதாவிற்கும் நிறைய வயது மற்றும் தோற்ற வேறுபாடு தெரிகிறது.


பழைய ரஞ்சிதா




தற்போதைய ரஞ்சிதா



எப்போதோ எடுக்கப் பட்ட ஒரு வீடியோ, இப்போது, சிதம்பரம் மாணவர்கள் கொலையை மறைக்கவும், கருணாநிதியின் குடும்பப் பிரச்சினையை மறைக்கவும், தமிழ்நாட்டில் உள்ள இதர பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி, கிரிக்கெட் உலக கோப்பை நடக்கையில், மக்கள் அனைத்தையும் மறந்து, போதையில் உலவுவது போல், இந்த வீடியோவால் மக்களை போதையில் உலவ விட்டு, தலைமைச் செயலக திறப்பு விழாவை, எவ்வித பிரச்சியையும் இன்றி முடிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் திட்டத்தை, தமிழக உளவுத்துறை செயல்படுத்தி முடித்து விட்டதோ என்ற அய்யம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.


அதற்கேற்றார்போல, இன்று காலை முதல், டீக்கடை, பத்திரிக்கை கடை, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சாலைகள், பேருந்து நிலையங்கள், என்று மக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும் நித்யானந்தாவைப் பற்றித்தான் பேச்சு.


இது கருணாநிதியின் திட்டமாக இருந்தால், அவர் மிகப் பெரிய வெற்றியை அடைந்து விட்டார்.
கருணாநிதியின் நயவஞ்சகத்தையும், சூதையும் அறிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய ஆச்சர்யமாகத் தோன்றாது.


இப்படிப்பட்ட அரசியல்வாதிகளும், மக்களும், சோரம் போன பத்திரிக்கைகளும் இருக்கையில், எத்தனை கதவுகள் திறந்தாலும், காற்று வரப்போவதில்லை.



சவுக்கு

Tuesday, March 2, 2010

அவர் பெயர் ஞானப்பிரகாசம்


இந்த ஞானப்பிரகாசம் போன்ற நபர்களை நம்மில் பல பேர் சட்டை செய்திருக்க மாட்டோம், இந்த ஞானப்பிரகாசம் கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரில்லை. தமிழாய்ந்த அறிஞர் இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியும் இல்லை. யார் இந்த ஞானப்பிரகாசம் ?

அது தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போது வேலைக்குச் சேர்ந்த புதிது. இளம் வயது. அப்போது நண்பருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் மாலை ஆனவுடன், மனைவிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையெல்லாம் இல்லாத இன்பமான காலம் அது. மவுண்ட் ரோடிலேயே அலுவலகம் அமைந்து விட்டதால், மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஊரைச் சுற்றுவதுதான் வேலை.

ஜெமினி மேம்பாலம் அருகே அலுவலகம் இருந்தது. சத்யம் தியேட்டர் இப்பொழுது போல் மேல்தட்டு பணக்காரக் களையை கொண்டிருக்கவில்லை. டிக்கெட்டின் அதிகபட்ச விலை 30 ரூபாய். சத்யம், சாந்தம், சுபம் என்ற மூன்றே தியேட்டர்கள் தான். சத்யம் மற்றும் சாந்தம் தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.

தமிழ்ப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்ற விதியினால், சுபம் தியேட்டரில் மட்டும் தமிழ்ப்படம் ஓடும். “சினிமான்னா அது இங்கிலீஷ் படம்தான்“ என்ற கருத்து கொண்டிருந்த காலம். மாலை அலுவலகம் முடிந்ததும், சத்யம் தியேட்டரில் என்ன ஆங்கிலப்படம் திரையிடப்பட்டாலும் தவறாமல் பார்க்கும் வழக்கம். வசனங்கள் சுத்தமாக புரியாது. இருந்தாலும், உத்தேசமாக ஒரு திரைக்கதையை மனதினுள் கற்பனை செய்து கொண்டு, இதுதான் கதை என்று கற்பனை செய்து கொண்டு என்ன படம் போட்டாலும் பார்க்கும் காலம்.

தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களுக்கு படம் மாற்றா விட்டால், அடுத்து, அலங்கார், தேவி, மெலடி என்று தியேட்டர், தியேட்டராக சுற்றுவதுதான் தலையாய பணி. எல்லாப் படத்தையும் பார்த்து முடித்து விட்டால், ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி, க்ரீம்ஸ் ரோடு பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கும் கடையில் வேர்க்கடலை வாங்கிக் கொண்டு கொரித்தபடி சாந்தி தியேட்டர் வரை, நடந்து சென்று, மீண்டும் ஜெமினி திரும்புவதுதான் பொழுது போக்கு.


இப்படி ஒரு சாயங்கால வேளையில்தான் ஞானப்பிரகாசத்தை சந்தித்தேன். ஞானப்பிரகாசம் ஸ்பென்சர் பிளாசா அருகில் கடை வைத்திருப்பவர். ஸ்பென்சர் ப்ளாசா அருகில் என்றதும், ஸ்பென்சர் ப்ளாசாவிற்குள் என்று நினைத்து விடாதீர். ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், நடை பாதையில் பெல்ட் விற்கும் கடை வைத்திருக்கிறார். என் நினைவு சரியாக இருந்தால், 1992 பிப்ரவரியில்தான் அவரைச் சந்தித்தேன்.



ஞானப்பிரகாசம்


நானும் என் நண்பரும் வழக்கம் போல, வேர்க்கடலை கொரித்தபடி, நடந்து வந்து கொண்டிருந்தபோது, அன்று பெல்ட் வாங்க வேண்டும் என்றார் நண்பர். நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு, சினிமா பார்த்தது போக, பெரிய கடைகளிலெல்லாம் சென்று பெல்ட் வாங்க முடியாது. மேலும், பெரிய கடைகளில் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணம் வேறு. அதனால், ஒவ்வொரு ப்ளாட்பார கடையாக பார்த்துக் கொண்டே வந்தோம்.


ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், ஞானப்பிரகாசத்தின் கடைக்கு வந்தபொழுது, நல்ல தரமான லெதர் பெல்ட் இருந்ததைப் பார்த்தோம். அப்போது ஒரு பெல்ட், 60 ரூபாய் சொன்னார். முடியவே முடியாது என்று பேரம் பேசி, 50 ரூபாய்க்கு வாங்கினோம். அதற்குப் பிறகு, அவருடனான எங்கள் நட்பு, எங்களுக்குத் தெரிந்த, பெல்ட் வேண்டும் என்று கூறும் அனைத்து நண்பர்களையும், அவரின் வாடிக்கையாளர்களாக்குவதில் சென்று முடிந்தது.

ஞானப்பிரகாசத்தின் பெல்ட்டுகள், தரமானவையாக இருப்பதால், குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது வரும். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் கடைக்குச் சென்றாலும், தினமும், நூற்றுக்கணக்கான பேர்களைச் சந்திக்கும் அந்த நபர், நிறைந்த திருமுகத்தோடு, “சார் எப்படி இருக்கீங்க ? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா ? “ என்று அன்பொழுகக் கேட்பார். பகட்டாகப் பேசி, பகட்டாகப் பழகி, போலி முகமூடிகளைப் போட்டு வாழப் பழகிய மனதுக்கு, அவரின் வெள்ளந்தியான அன்பு, வியப்பையும், உணர்ச்சி ஊற்றையும் ஒரு சேர ஏற்படுத்தும்.


அதன் பிறகு, ஓரளவு விபரம் தெரிந்தபின், அவர் கடைக்குச் செல்லும்போதெல்லாம், பெல்ட் வாங்குகையில் அவர் சொல்வதுதான் விலை. மனதினுள், இந்த ஆள் கொஞ்சம் கூட விலை சொல்லக் கூடாதா என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், அவர், “என்னா சார் ? உங்களுக்கு என்னா வெல சொல்றது ? குடுக்கறத குடு சார்“ என்று இயல்பாகக் கூறுவார்.


இப்படி ஒரு நாள், அவர் கடைக்கு பெல்ட் வாங்கச் செல்லுகையில், திடீரென்று ஒரு மதிப்பெண் சான்றிதழின் நகலை எடுத்து நீட்டினார். அது ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ். அந்த மதிப்பெண்ணைப் பார்த்தால், 1200க்கு 1019 இருந்தது. “யாருங்க இது ? “ என்று கேட்டதற்கு, “ என் தம்பி பையன் சார். இவன நான்தான் சார் வளக்குறேன். நல்லா படிப்பான் சார். இவனுக்கு நல்ல காலேஜுல சீட் வாங்கனும் சார்“ என்றார். என் மனதில் தோன்றியபடி, இந்த மார்க்குக்கு, எந்த காலேஜுலையும் சீட் கிடைக்கும் கவலைப் படாதீங்க என்று கூறினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்தபோது, லயோலா கல்லூரியில் தன் தம்பி மகன் ரொனால்ட் ஆன்ட்ரூஸுக்கு பிகாம் சீட் கிடைத்தது என்பதை கண்களில் பெருமை வழியச் சொன்ன போது, அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ந்தேன். பணம் உதவி ஏதாவது வேணுமா என்று கேட்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை, என்னுடைய சகாவாக இவரைக் கருத வேண்டும் என்ற எண்ணத்தால் அடக்கி விட்டு, ஸ்காலர்ஷிப்புக்கு ட்ரை பண்ணுங்க என்று கூறினேன்.

அவர் “சார், அங்க ஒரு ஃபாதர் இருக்குறார் சார். இவன் படிப்ப நான் பாத்துக்கறேன்னு சொன்னார் சார்“ என்று கூறியபோது, என்னையறியாமல், என் மனது நிம்மதி அடைந்ததை உணர்ந்தேன்.


இரண்டு ஆண்டுகளுக்க முன், பல வேலைகள் இருந்தாலும், கட்டாயம் இதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில், என் திருமணத்திற்கு, அழைப்பிதழ் வைத்தேன். “கண்டிப்பா வரேன் சார். உன் கல்யாணத்துக்கு வராம அத்த விட எனக்கு இன்னா வேலை சார்“ என்றார் ஞானப்பிரகாசம். திருமண வேலைகளில், ஞானப்பிரகாசம் என் நினைவு அடுக்களில் இருந்து தொலைந்து போனார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பணக்காரர்களும், உயர் அதிகாரிகளும் வந்து போன போதும், ஞானப்பிரகாசம் நினைவுக்கு வரவில்லை.

வரவேற்பு முடியும் தருவாயில், அவரிடம் இருப்பதிலேயே, சிறந்து உடை என்று அவர் கருதிய கசங்கிய உடையை அணிந்தபடி, தயங்கித் தயங்கி மேடையேறினார் ஞானப்பிரகாசம். என் அருகே வந்து, ஒரு பார்சலை அளித்தார். திருமண வரவேற்புக்கு எவர் வந்திருந்தபோதும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவரை நெகிழ்ச்சியோடு பார்த்து, “வாங்க, போட்டோ எடுக்கலாம் “ என்று கூறினேன். வெட்கத்தோடு “வேண்டாம் சார்“ என்றார். “வந்து நில்லுங்க“ என்று கண்டிப்பாகக் கூறி, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

திருமண மேடையில் இருந்து இறங்கிச் சென்று, அவரை சாப்பிட அமர வைக்க வேண்டும் என்ற ஆவல், யதார்த்தத்தின் கட்டாயத்தால் இயலாமல் போனது.


திருமண பரபரப்புகள் முடிந்ததும், பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கத் துவங்கிய போது, முதலில் பிரித்தது ஞானப்பிரகாசத்தின் பார்சலைத் தான். அந்த பார்சலுள், ஒரு லெதர் பெல்ட், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால், ஒரு பெண்களுக்கான பர்ஸ், எனக்கு ஒரு பர்ஸ் இருந்தது. என் மனது நெகிழ்ந்தது. ஒரு வியாபாரி, அவன் கஸ்டமர் என்பதைத் தாண்டி, எங்களுக்கள் ஒரு ஆழ்ந்த நட்பு இருந்ததை நான் எப்போதோ உணரத் தொடங்கினாலும், அந்நட்பு மேலும் இறுக்கமானதை உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, திருமணம் கசந்து போனாலும், ஞானப்பிரகாசத்தின் அன்பளிப்பு இனிமையாகவே இருக்கிறது.


அந்த ஞானப்பிரகாசத்தின் வரலாற்றில் தென்றல் தீண்டவேயில்லை. அவர் வாழ்க்கை தொடங்கியது முதல், வறுமை, வறுமை, வறுமை. ஆனாலும், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற பிடிவாதம், தன் தொழிலின் மீது உள்ள பக்தி, அனைவரின் மீதும் காட்டும் வெள்ளந்தியான அன்பு, இவைதான் மனிதத்தின் சிகரம்.


சென்னை, சிந்தாதிரிப்பேட்டைதான் ஞானப்பிரகாசத்தின் பூர்வீகம். ஒரு அக்கா, ஒரு தம்பி. கூட்டுக் குடும்பம். இவர் தந்தை, பாம்புத் தோலில், பர்ஸ், பெல்ட்டுகள் செய்து விற்பனை செய்துவர். வனவிலங்குச் சட்டம் கடுமையானவுடன், இந்த லெதர் தொழிலில் இறங்கினர். எஸ்எஸ்எல்சி தேர்வில், பெயிலானவுடன், தன் குடும்பத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்த ஞானப்பிரகாசம், இதே மவுண்ட் ரோடில், தனது 17வது வயதில், இப்போது இருக்கும் இதே ஸ்பென்சர் ப்ளாசா அருகில் கடையைத் தொடங்கினார்.


ஞானப்பிரகாசத்தின் அக்காவுக்கு, 3 மகள்கள் 1 மகன். முதல் மகளுக்கு திருமணமாகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “அது பாக்க கொஞ்சம் குண்டா இருக்கும் சார். பொண்ணு பாக்க வரவங்க எல்லாம், ரெண்டாவது பொண்ணு இல்ல மூணாவது பொண்ணக் கேட்டாங்களா, அதுனால மீதி ரெண்டு பொண்ணுக்கும் நான்தான் சார் கல்யாணம் பண்ணி வெச்சேன். “ என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் சொன்னார்.“


“நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? “ என்று கேட்டதற்கு, “நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? என் தம்பிக்கு மோசமான பழக்கம் உண்டு சார். கஞ்சா அடிப்பான். பவுடர் அடிப்பான். நான்தான் சார் அவனுக்கு, தாஜ் ஹோட்டல் பக்கத்துல கடை வெச்சுக் குடுத்தேன். மதியம் 12 மணிக்கெல்லாம் வர்ற காச எடுத்துட்டு போய் கஞ்சா அடிக்கப் போயிடுவான் சார். அவன் இந்த மாதிரி இருக்கப்போ, நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம், தம்பி பசங்கள யார் சார் பாக்கறது ? அவங்கள படிக்க வெக்க வேண்டாமா சார் ? இப்போ பாரு சார். தம்பி பையன படிக்க வைச்சேன். அவன் டிசிஎஸ்ல வேலப் பாக்குறான் சார். தம்பி பொண்ணு ஏபிடி பார்சல் சர்வீசுல வேலப் பாக்குது. நான் கல்யாணம் பண்ணிருந்தா, இப்படி படிக்க வெச்சுருக்க முடியுமா சார் ?“ என்று எவ்வித கழிவிரக்கமும் இல்லாமல் சொன்னார்.


தன் வாழ்கையையே குடும்பத்திற்காக அர்பணித்து, தன்னை அழித்து பிறரை வாழச் செய்து வருகிறோம் என்ற எவ்வித பெருமித உணர்ச்சியையோ, என் வாழ்க்கை வீணாகப் போய் விட்டது என்ற எவ்வித சுயபச்சாதாபமோ ஞானப்பிரகாசத்திடம் துளியும் இல்லை. “வியாபாரம் எப்பிடிங்க இருக்கு ? “ என்றதற்கு “புதுசா செக்ரேட்ரியட் கட்றாங்களாம் சார். அதுனால கடை வெக்கக் கூடாதுன்னு ஒரே கெடுபிடி சார். டிசம்பர் மாசம் பூரா கடையே வெக்கல சார். அப்பப்போ போலீஸ் வந்து தொந்தரவு பண்ணுவாங்க சார். அதுனால ஒண்ணும் இல்ல சார். நமக்கு கிடைக்கறத யாராலும் தடுக்க முடியாது சார். ஆண்டவன் சும்மாவா உட்ருவான் ? “ என்று மிக இயல்பாகச் சொன்னார் ஞானப்பிரகாசம்.


இரண்டு பெல்ட் வாங்கி விட்டு, அவர் மீதம் தர வேண்டிய 50 ரூபாயை, வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைப்பார் என்று, “அடுத்த வாரம் வரேன், இன்னும் ரெண்டு பெல்ட் வேண்டும், அதுக்கு அட்வான்சா வெச்சுக்குங்க“ என்று கூறி விட்டு புறப்பட்டேன்.


பளீரென்ற புன்னகையுடன், “போய்ட்டு வா சார். அடிக்கடி வந்து போ சார். உன் தோஸ்த கேட்டதா சொல்லு சார்“ என்றார்.



ஞானப்பிரகாசம்


நடைபாதையில் கடை வைத்துக் கொண்டு இன்றோ, நாளையோ என்று புதிய தலைமைச் செயலகத்தில் தனது விதியை அடகு வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் ஞானப்பிரகாசத்தோடு, பிடிவாதமாக, குடியே முழுகினாலும், புதிய தலைமைச் செயலகம் கட்டி, அதைத் திறந்தே தீருவேன் என்று, காடு அழைக்கும் காலத்தில், பிடிவாதம் பிடிக்கும் நபரை ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.




சவுக்கு

அவர் பெயர் ஞானப்பிரகாசம்


இந்த ஞானப்பிரகாசம் போன்ற நபர்களை நம்மில் பல பேர் சட்டை செய்திருக்க மாட்டோம், இந்த ஞானப்பிரகாசம் கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவரில்லை. தமிழாய்ந்த அறிஞர் இல்லை. பல கோடிகளுக்கு அதிபதியும் இல்லை. யார் இந்த ஞானப்பிரகாசம் ?

அது தொண்ணூறுகளின் தொடக்கம். அப்போது வேலைக்குச் சேர்ந்த புதிது. இளம் வயது. அப்போது நண்பருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதால் மாலை ஆனவுடன், மனைவிக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையெல்லாம் இல்லாத இன்பமான காலம் அது. மவுண்ட் ரோடிலேயே அலுவலகம் அமைந்து விட்டதால், மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் ஊரைச் சுற்றுவதுதான் வேலை.

ஜெமினி மேம்பாலம் அருகே அலுவலகம் இருந்தது. சத்யம் தியேட்டர் இப்பொழுது போல் மேல்தட்டு பணக்காரக் களையை கொண்டிருக்கவில்லை. டிக்கெட்டின் அதிகபட்ச விலை 30 ரூபாய். சத்யம், சாந்தம், சுபம் என்ற மூன்றே தியேட்டர்கள் தான். சத்யம் மற்றும் சாந்தம் தியேட்டர்களில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்படும்.

தமிழ்ப்படம் கட்டாயமாக திரையிடப்பட வேண்டும் என்ற விதியினால், சுபம் தியேட்டரில் மட்டும் தமிழ்ப்படம் ஓடும். “சினிமான்னா அது இங்கிலீஷ் படம்தான்“ என்ற கருத்து கொண்டிருந்த காலம். மாலை அலுவலகம் முடிந்ததும், சத்யம் தியேட்டரில் என்ன ஆங்கிலப்படம் திரையிடப்பட்டாலும் தவறாமல் பார்க்கும் வழக்கம். வசனங்கள் சுத்தமாக புரியாது. இருந்தாலும், உத்தேசமாக ஒரு திரைக்கதையை மனதினுள் கற்பனை செய்து கொண்டு, இதுதான் கதை என்று கற்பனை செய்து கொண்டு என்ன படம் போட்டாலும் பார்க்கும் காலம்.

தொடர்ந்து இரண்டு, மூன்று வாரங்களுக்கு படம் மாற்றா விட்டால், அடுத்து, அலங்கார், தேவி, மெலடி என்று தியேட்டர், தியேட்டராக சுற்றுவதுதான் தலையாய பணி. எல்லாப் படத்தையும் பார்த்து முடித்து விட்டால், ஜெமினி மேம்பாலத்தில் தொடங்கி, க்ரீம்ஸ் ரோடு பஸ் நிறுத்தத்தின் அருகில் இருக்கும் கடையில் வேர்க்கடலை வாங்கிக் கொண்டு கொரித்தபடி சாந்தி தியேட்டர் வரை, நடந்து சென்று, மீண்டும் ஜெமினி திரும்புவதுதான் பொழுது போக்கு.


இப்படி ஒரு சாயங்கால வேளையில்தான் ஞானப்பிரகாசத்தை சந்தித்தேன். ஞானப்பிரகாசம் ஸ்பென்சர் பிளாசா அருகில் கடை வைத்திருப்பவர். ஸ்பென்சர் ப்ளாசா அருகில் என்றதும், ஸ்பென்சர் ப்ளாசாவிற்குள் என்று நினைத்து விடாதீர். ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், நடை பாதையில் பெல்ட் விற்கும் கடை வைத்திருக்கிறார். என் நினைவு சரியாக இருந்தால், 1992 பிப்ரவரியில்தான் அவரைச் சந்தித்தேன்.



ஞானப்பிரகாசம்


நானும் என் நண்பரும் வழக்கம் போல, வேர்க்கடலை கொரித்தபடி, நடந்து வந்து கொண்டிருந்தபோது, அன்று பெல்ட் வாங்க வேண்டும் என்றார் நண்பர். நாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு, சினிமா பார்த்தது போக, பெரிய கடைகளிலெல்லாம் சென்று பெல்ட் வாங்க முடியாது. மேலும், பெரிய கடைகளில் ஏமாற்றுவார்கள் என்ற எண்ணம் வேறு. அதனால், ஒவ்வொரு ப்ளாட்பார கடையாக பார்த்துக் கொண்டே வந்தோம்.


ஸ்பென்சர் ப்ளாசா வாசலில், ஞானப்பிரகாசத்தின் கடைக்கு வந்தபொழுது, நல்ல தரமான லெதர் பெல்ட் இருந்ததைப் பார்த்தோம். அப்போது ஒரு பெல்ட், 60 ரூபாய் சொன்னார். முடியவே முடியாது என்று பேரம் பேசி, 50 ரூபாய்க்கு வாங்கினோம். அதற்குப் பிறகு, அவருடனான எங்கள் நட்பு, எங்களுக்குத் தெரிந்த, பெல்ட் வேண்டும் என்று கூறும் அனைத்து நண்பர்களையும், அவரின் வாடிக்கையாளர்களாக்குவதில் சென்று முடிந்தது.

ஞானப்பிரகாசத்தின் பெல்ட்டுகள், தரமானவையாக இருப்பதால், குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது வரும். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் கடைக்குச் சென்றாலும், தினமும், நூற்றுக்கணக்கான பேர்களைச் சந்திக்கும் அந்த நபர், நிறைந்த திருமுகத்தோடு, “சார் எப்படி இருக்கீங்க ? வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா ? “ என்று அன்பொழுகக் கேட்பார். பகட்டாகப் பேசி, பகட்டாகப் பழகி, போலி முகமூடிகளைப் போட்டு வாழப் பழகிய மனதுக்கு, அவரின் வெள்ளந்தியான அன்பு, வியப்பையும், உணர்ச்சி ஊற்றையும் ஒரு சேர ஏற்படுத்தும்.


அதன் பிறகு, ஓரளவு விபரம் தெரிந்தபின், அவர் கடைக்குச் செல்லும்போதெல்லாம், பெல்ட் வாங்குகையில் அவர் சொல்வதுதான் விலை. மனதினுள், இந்த ஆள் கொஞ்சம் கூட விலை சொல்லக் கூடாதா என்ற எண்ணம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஆனால், அவர், “என்னா சார் ? உங்களுக்கு என்னா வெல சொல்றது ? குடுக்கறத குடு சார்“ என்று இயல்பாகக் கூறுவார்.


இப்படி ஒரு நாள், அவர் கடைக்கு பெல்ட் வாங்கச் செல்லுகையில், திடீரென்று ஒரு மதிப்பெண் சான்றிதழின் நகலை எடுத்து நீட்டினார். அது ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ். அந்த மதிப்பெண்ணைப் பார்த்தால், 1200க்கு 1019 இருந்தது. “யாருங்க இது ? “ என்று கேட்டதற்கு, “ என் தம்பி பையன் சார். இவன நான்தான் சார் வளக்குறேன். நல்லா படிப்பான் சார். இவனுக்கு நல்ல காலேஜுல சீட் வாங்கனும் சார்“ என்றார். என் மனதில் தோன்றியபடி, இந்த மார்க்குக்கு, எந்த காலேஜுலையும் சீட் கிடைக்கும் கவலைப் படாதீங்க என்று கூறினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து அவரைச் சந்தித்தபோது, லயோலா கல்லூரியில் தன் தம்பி மகன் ரொனால்ட் ஆன்ட்ரூஸுக்கு பிகாம் சீட் கிடைத்தது என்பதை கண்களில் பெருமை வழியச் சொன்ன போது, அவருடன் சேர்ந்து நானும் மகிழ்ந்தேன். பணம் உதவி ஏதாவது வேணுமா என்று கேட்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை, என்னுடைய சகாவாக இவரைக் கருத வேண்டும் என்ற எண்ணத்தால் அடக்கி விட்டு, ஸ்காலர்ஷிப்புக்கு ட்ரை பண்ணுங்க என்று கூறினேன்.

அவர் “சார், அங்க ஒரு ஃபாதர் இருக்குறார் சார். இவன் படிப்ப நான் பாத்துக்கறேன்னு சொன்னார் சார்“ என்று கூறியபோது, என்னையறியாமல், என் மனது நிம்மதி அடைந்ததை உணர்ந்தேன்.


இரண்டு ஆண்டுகளுக்க முன், பல வேலைகள் இருந்தாலும், கட்டாயம் இதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில், என் திருமணத்திற்கு, அழைப்பிதழ் வைத்தேன். “கண்டிப்பா வரேன் சார். உன் கல்யாணத்துக்கு வராம அத்த விட எனக்கு இன்னா வேலை சார்“ என்றார் ஞானப்பிரகாசம். திருமண வேலைகளில், ஞானப்பிரகாசம் என் நினைவு அடுக்களில் இருந்து தொலைந்து போனார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பணக்காரர்களும், உயர் அதிகாரிகளும் வந்து போன போதும், ஞானப்பிரகாசம் நினைவுக்கு வரவில்லை.

வரவேற்பு முடியும் தருவாயில், அவரிடம் இருப்பதிலேயே, சிறந்து உடை என்று அவர் கருதிய கசங்கிய உடையை அணிந்தபடி, தயங்கித் தயங்கி மேடையேறினார் ஞானப்பிரகாசம். என் அருகே வந்து, ஒரு பார்சலை அளித்தார். திருமண வரவேற்புக்கு எவர் வந்திருந்தபோதும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவரை நெகிழ்ச்சியோடு பார்த்து, “வாங்க, போட்டோ எடுக்கலாம் “ என்று கூறினேன். வெட்கத்தோடு “வேண்டாம் சார்“ என்றார். “வந்து நில்லுங்க“ என்று கண்டிப்பாகக் கூறி, அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

திருமண மேடையில் இருந்து இறங்கிச் சென்று, அவரை சாப்பிட அமர வைக்க வேண்டும் என்ற ஆவல், யதார்த்தத்தின் கட்டாயத்தால் இயலாமல் போனது.


திருமண பரபரப்புகள் முடிந்ததும், பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கத் துவங்கிய போது, முதலில் பிரித்தது ஞானப்பிரகாசத்தின் பார்சலைத் தான். அந்த பார்சலுள், ஒரு லெதர் பெல்ட், எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால், ஒரு பெண்களுக்கான பர்ஸ், எனக்கு ஒரு பர்ஸ் இருந்தது. என் மனது நெகிழ்ந்தது. ஒரு வியாபாரி, அவன் கஸ்டமர் என்பதைத் தாண்டி, எங்களுக்கள் ஒரு ஆழ்ந்த நட்பு இருந்ததை நான் எப்போதோ உணரத் தொடங்கினாலும், அந்நட்பு மேலும் இறுக்கமானதை உணர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, திருமணம் கசந்து போனாலும், ஞானப்பிரகாசத்தின் அன்பளிப்பு இனிமையாகவே இருக்கிறது.


அந்த ஞானப்பிரகாசத்தின் வரலாற்றில் தென்றல் தீண்டவேயில்லை. அவர் வாழ்க்கை தொடங்கியது முதல், வறுமை, வறுமை, வறுமை. ஆனாலும், உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற பிடிவாதம், தன் தொழிலின் மீது உள்ள பக்தி, அனைவரின் மீதும் காட்டும் வெள்ளந்தியான அன்பு, இவைதான் மனிதத்தின் சிகரம்.


சென்னை, சிந்தாதிரிப்பேட்டைதான் ஞானப்பிரகாசத்தின் பூர்வீகம். ஒரு அக்கா, ஒரு தம்பி. கூட்டுக் குடும்பம். இவர் தந்தை, பாம்புத் தோலில், பர்ஸ், பெல்ட்டுகள் செய்து விற்பனை செய்துவர். வனவிலங்குச் சட்டம் கடுமையானவுடன், இந்த லெதர் தொழிலில் இறங்கினர். எஸ்எஸ்எல்சி தேர்வில், பெயிலானவுடன், தன் குடும்பத் தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்த ஞானப்பிரகாசம், இதே மவுண்ட் ரோடில், தனது 17வது வயதில், இப்போது இருக்கும் இதே ஸ்பென்சர் ப்ளாசா அருகில் கடையைத் தொடங்கினார்.


ஞானப்பிரகாசத்தின் அக்காவுக்கு, 3 மகள்கள் 1 மகன். முதல் மகளுக்கு திருமணமாகவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, “அது பாக்க கொஞ்சம் குண்டா இருக்கும் சார். பொண்ணு பாக்க வரவங்க எல்லாம், ரெண்டாவது பொண்ணு இல்ல மூணாவது பொண்ணக் கேட்டாங்களா, அதுனால மீதி ரெண்டு பொண்ணுக்கும் நான்தான் சார் கல்யாணம் பண்ணி வெச்சேன். “ என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் சொன்னார்.“


“நீங்க கல்யாணம் பண்ணிக்கலையா ? “ என்று கேட்டதற்கு, “நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? என் தம்பிக்கு மோசமான பழக்கம் உண்டு சார். கஞ்சா அடிப்பான். பவுடர் அடிப்பான். நான்தான் சார் அவனுக்கு, தாஜ் ஹோட்டல் பக்கத்துல கடை வெச்சுக் குடுத்தேன். மதியம் 12 மணிக்கெல்லாம் வர்ற காச எடுத்துட்டு போய் கஞ்சா அடிக்கப் போயிடுவான் சார். அவன் இந்த மாதிரி இருக்கப்போ, நான் எப்டி சார் கல்யாணம் பண்றது ? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம், தம்பி பசங்கள யார் சார் பாக்கறது ? அவங்கள படிக்க வெக்க வேண்டாமா சார் ? இப்போ பாரு சார். தம்பி பையன படிக்க வைச்சேன். அவன் டிசிஎஸ்ல வேலப் பாக்குறான் சார். தம்பி பொண்ணு ஏபிடி பார்சல் சர்வீசுல வேலப் பாக்குது. நான் கல்யாணம் பண்ணிருந்தா, இப்படி படிக்க வெச்சுருக்க முடியுமா சார் ?“ என்று எவ்வித கழிவிரக்கமும் இல்லாமல் சொன்னார்.


தன் வாழ்கையையே குடும்பத்திற்காக அர்பணித்து, தன்னை அழித்து பிறரை வாழச் செய்து வருகிறோம் என்ற எவ்வித பெருமித உணர்ச்சியையோ, என் வாழ்க்கை வீணாகப் போய் விட்டது என்ற எவ்வித சுயபச்சாதாபமோ ஞானப்பிரகாசத்திடம் துளியும் இல்லை. “வியாபாரம் எப்பிடிங்க இருக்கு ? “ என்றதற்கு “புதுசா செக்ரேட்ரியட் கட்றாங்களாம் சார். அதுனால கடை வெக்கக் கூடாதுன்னு ஒரே கெடுபிடி சார். டிசம்பர் மாசம் பூரா கடையே வெக்கல சார். அப்பப்போ போலீஸ் வந்து தொந்தரவு பண்ணுவாங்க சார். அதுனால ஒண்ணும் இல்ல சார். நமக்கு கிடைக்கறத யாராலும் தடுக்க முடியாது சார். ஆண்டவன் சும்மாவா உட்ருவான் ? “ என்று மிக இயல்பாகச் சொன்னார் ஞானப்பிரகாசம்.


இரண்டு பெல்ட் வாங்கி விட்டு, அவர் மீதம் தர வேண்டிய 50 ரூபாயை, வேண்டாம் என்று சொன்னால் தவறாக நினைப்பார் என்று, “அடுத்த வாரம் வரேன், இன்னும் ரெண்டு பெல்ட் வேண்டும், அதுக்கு அட்வான்சா வெச்சுக்குங்க“ என்று கூறி விட்டு புறப்பட்டேன்.


பளீரென்ற புன்னகையுடன், “போய்ட்டு வா சார். அடிக்கடி வந்து போ சார். உன் தோஸ்த கேட்டதா சொல்லு சார்“ என்றார்.



ஞானப்பிரகாசம்


நடைபாதையில் கடை வைத்துக் கொண்டு இன்றோ, நாளையோ என்று புதிய தலைமைச் செயலகத்தில் தனது விதியை அடகு வைத்துக் கொண்டு நம்பிக்கையோடு காத்திருக்கும் ஞானப்பிரகாசத்தோடு, பிடிவாதமாக, குடியே முழுகினாலும், புதிய தலைமைச் செயலகம் கட்டி, அதைத் திறந்தே தீருவேன் என்று, காடு அழைக்கும் காலத்தில், பிடிவாதம் பிடிக்கும் நபரை ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.




சவுக்கு

Friday, February 26, 2010

பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா



ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.




திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.

விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.

விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர். டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.




முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.



“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள். அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது.

எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான்.
இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?

ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?


செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன். அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “


அடுத்து துரை முருகன். “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம். நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.

தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.

ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு. என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“ (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.




“ கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !

நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு
தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு

உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..
உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு

அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு
உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு

புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு
உன்னால நிரம்புது என் பாக்கெட்டு

தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு
உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு
உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு ! “


அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.




“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே
உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே

நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… …
நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல

உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்
ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்

எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்
நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து
மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.

மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி
உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.




கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க. அதை நான் வரவேற்கிறேன். ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன். நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும்.

பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார். நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது. அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன். நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.

கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான். நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.

கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.

அடுத்து கமலஹாசன்.




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா. இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.


மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது. அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன்.

நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று. தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?


இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன். கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கருணாநிதி ஏற்புரை

என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி” டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.

இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை. நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன். அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.


ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது. அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.


எனக்கா இப்படி பாராட்டு ? ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும். அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி.

அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள். நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.

என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர். அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள். இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.

தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.

அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது. என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழா ஹைலைட்.

விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.

டெண்டுல்கருக்கு,


சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும்,

25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும்,

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும்

வழங்கப் பட்டது.




பின் குறிப்பு.

கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது.

சவுக்கு