Tuesday, July 6, 2010

‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்...’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்!

அரசு செலவில் ஊர்ச்சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்! மேலாண்மை குறித்த பயிற்சி என்ற பெயரில் லண்டனை சுற்றிப் பார்க்க, எட்டு கூடுதல் டி.ஜி.பி-க்கள் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருப்பதைத் தொடர்ந்து தான் இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

கூடுதல் டி.ஜி.பி-க்கள் தரத்தில் உள்ள அதிகாரிகளை பயிற்சிக்கு அனுப்பியிருப்பது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் பயிற்சிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி-க்களாக இருக்கும் கே.ராதாகிருஷ்ணன், ஆர்.சேகர், டி.கே.ராஜேந்திரன், லல்லாம் சங்கா, டி.ராஜேந்திரன், டி.ராதாகிருஷ்ணன். கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா ஆகியோர் பங்கேற்கப் போவதாக முன்பே செய்திகள் கசிந்தது.


இந்தப் பயிற்சிப் பயணம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருந்து ஆரம்பமாகிறது. முதல் மூன்று வாரங்களுக்கு, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல்துறை பயிற்சிக் கல்லூரியிலும் அதையடுத்து, லண்டனில் உள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூலிலும் நடைபெறுமாம்.



லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் மேலாண்மை பயிற்சி எடுக்கவிருக்கிறார்களாம், நம்முடைய காவல்துறை அதிகாரிகள்.
இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்த்தில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு காவல்துறையில் 25 ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மேலாண்மை சம்பந்தப்பட்ட பயிற்சியை அளிக்கத் திடுமென ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்பது குறித்து தான் இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இது போன்ற மூத்த அதிகாரிகளை இந்தமாதிரியான பயிற்சிகளுக்கு அனுப்பாமல், எஸ்.பி. அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகளை அனுப்பினால், வரக்கூடிய காலங்களில் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்ய ஏதுவாக அமையும் என்று கூறுகிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
மேலும், இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துள்ள அதிகாரிகளில், எஸ்.கே.டோக்ரா தவிர, மற்ற அனைவருமே, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி மதிப்பெண் பெறாத தனது மகனுக்கு, முதல்வர் கோட்டாவில், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் ஒதுக்கீடு பெற்றார் என்று கே.ராதாகிருஷ்ணன் மீது புகார்கள் வந்து, அது தொடர்பாக பொது நல வழக்கெல்லாம் போடப்பட்டது.

இது தவிர, இங்கிலாந்து ராணி விருதுத் தொகையை செலவழித்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதலில், முக்கியப் பங்கு வகித்ததாக, நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர்தான் இந்த கே.ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்.சேகர், சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தபோது, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டபோது, காவல்துறை அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்தது தொடர்பாக உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட்டவர்.


கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்தபோது, தினந்தோறும் 12 நாளிதழ்கள் வாங்கிப் படிப்பது போல போலிப் பட்டியல் தயாரித்து ரகசிய நிதியை கையாடல் செய்தார் என்றும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தனது மகளை கல்லூரிக்கு அழைத்துச்செல்ல உரிய நேரத்தில் வரவில்லை என்பதால், ஒரு காவலரை மணிமுத்தாறுக்கு மாறுதல் செய்தார் என்றும், எஸ்.பி-யாக இருந்தபோது தன்னிடம் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மேல் லஞ்ச ஒழிப்புத் துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்குப்பதிவு செய்ததால், அந்த வழக்கிலிருந்து அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த பொழுது, காப்பாற்றியதாகவும் குற்றச் சாட்டுகள் உண்டு.

இதுதவிர, தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, தவறான பதவி உயர்வு வழங்கியதாகவும், இவர் மீது புகார்கள் உண்டு.
லல்லாம் சங்கா எஸ்.பி-யாக இருந்த காலத்தில் ஏற்பட்ட ஊழல் புகார்கள் பற்றிய ஒரு பூர்வாங்க விசாரணை, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்தது.

பிறகு, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கு மூடப்பட்டது. டி.ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே காவலர் தேர்வில் கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டில், சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளானவர். மேலும், தன்னுடைய மனைவி நடத்தும் நிதி நிறுவனத்தின் மூலமாக, நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், காவல்துறையில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி உரிய வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்ததாகவும், சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.


கே.பி.மகேந்திரன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் மொத்தம் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இரண்டு வழக்குகளும், வடக்கு மண்டல ஐ.ஜி-யாக ஆனதும் இரண்டு வழக்குகளும் விசாரணையில் இருந்தன. இவர் கட்டியிருந்த வீட்டின் சாலை வழியே, கனரக வாகனங்கள் எதுவும் வரக்கூடாது என்று காவல்துறையை விட்டு, அந்த வழியே வரும் கனரக வாகனங்கள் அனைத்தையும், பிடித்து வைத்து அலைக்கழித்தது உள்ளிட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்பட்டன.

இவர் குறுகிய காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இவர் மீது நடந்த ஊழல் வழக்கின் கோப்பை பார்வையிட கேட்டு, அது உயர் அதிகாரிகளின் காதில் போடப்பட்டு, பெரும் சர்ச்சையானது.


சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் டி.ராஜேந்திரனைப் பற்றிய விவரங்கள் ஊரறிந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழாவின் போது, முதல்வர் முன்னிலையிலேயே, பெரும் வன்முறை நடந்த போது, தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களை அடித்துத் துவைத்தபோது, அது அத்தனையையும் வேடிக்கை பார்த்து விட்டு, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான புகாரைப் பதிவு செய்வதற்குக் கூட, தலைமைச் செயலாளரிடம் மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசிய பிறகு தான் நடவடிக்கை எடுத்தார்.

இவர் காலத்தில்தான் சென்னை நகரில் குற்றங்கள் பெருகியுள்ளன.

இவர்களில் எஸ்.கே.டோக்ரா மீது மட்டும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. ஊழல் தொடர்பான விவகாரங்களை துளியும் அனுமதிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த அதிகாரிகளைத் தவிர, தகுதியான வேறு அதிகாரிகள் உண்டா என்றால் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உளவுத் துறை அதிகாரி என்று பெயர் வாங்கிய ராமானுஜம், தன்னுடைய பணியில் சிறிதும் சளைக்காத, எந்த புகார்களுக்கும் இடம் தராத அனூப் ஜெய்ஸ்வால், நேர்மையான அதிகாரியான டாக்டர் மெஹபூப் ஆலம், மிகச் சிறந்த நிர்வாக அதிகாரியும், கடும் உழைப்பாளியுமான அசோக்குமார், “கருணாநிதியின் நள்ளிரவு கைதில்“ முக்கியப் பங்கு வகித்ததால், நான்கு ஆண்டுகளாக, கன்னியாகுமரியில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும், ஐ.ஐ.டி-யில் பொறியியல் படித்த ஜார்ஜ், போன்ற தகுதி வாய்ந்த அதிகாரிகள் இருக்கையில், ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறுவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளான இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து லண்டனில் பயிற்சிக்கு அனுப்பியதற்கான காரணம் என்ன, என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுகின்றன.


லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, இவர்களை லண்டனுக்கு பயிற்சிக்கு அனுப்பியிருப்பதால், காவல்துறைக்கு என்ன பயன் என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு, இவர்களை பயிற்சிக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குப் பதில், சென்னையை அடுத்துள்ள ஊமனஞ்சேரியில் உள்ள காவல்துறை பயிற்சி அகாடமியை மேம்படுத்தினால், தகுதியான பல காவல்துறையினர் உருவாவார்கள் என்றும் கூறுகின்றனர்.


மேலும் முக்கியப் பொறுப்பு உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே, செம்மொழி மாநாட்டுக்காக பத்து நாட்களுக்கும் மேலாக கோவையில் இருந்ததால், பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு மாதம் பயிற்சி என்ற பெயரில், இந்த அதிகாரிகள் ஹைதராபாத்துக்கும் லண்டனுக்கும் பயணமானதால், கோப்புகள் தேங்கி, நிர்வாகம் தேக்கமடைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.


மேலும், லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாளர்களுக்கும், பிசினஸில் ஈடுபடுபவர்களுக்கும் பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளான இவர்கள் என்ன பயிற்சி எடுக்கப்போகிறார்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

உயர் அதிகாரிகளான இவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அரசு, கீழ்நிலையில் உள்ள காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு பணியில் சேர்ந்த பின், இதுபோன்ற எந்தப் பயிற்சியுமே சுத்தமாக தருவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு எந்தப் பயிற்சியுமே இல்லாத காரணத்தால், இவர்கள் தொந்தியும் தொப்பையுமாக, எந்த ஒரு பணியையும் விரைவாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களின் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இது போன்ற பயிற்சி அளிப்பது என்பது, காவல்துறையில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு, தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்பவர்கள் வரலாம் என்று அரசு உத்தரவிடுமேயானால், ஒருவர் கூட கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பயிற்சி என்ற பெயரில், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்று ஒரு தரப்புக் கூறினாலும், இந்தப் பயிற்சியை முடித்து வரும் அதிகாரிகள், காவல்துறையில் தங்கள் பயிற்சியின் அனுபவத்தை புகுத்தி, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை விரைவாகக் கண்டுபிடிக்கவும், பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சம்பந்த்ப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு உறுதியளித்தார்களானால், அவர்களை பயிற்சிக்கு அனுப்பியதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை.

அதை விடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு பிஸினஸ் சம்பந்தப்பட்ட மேலாண்மை பயிற்சி எதற்கு என்று கேட்கப்படும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அரசாங்கத் தரப்பில் இந்த கேள்விகளுக்கான நியாயமான பதில்தான் என்ன?

சொன்னால், இதோ லண்டனுக்குச் சென்றிருக்கிறார்களே போலீஸ் அதிகாரிகள்... அவர்கள் போனதற்கும் - திரும்புவதற்கும் சேர்த்து வரி செலுத்தும் அப்பாவி பொதுஜனங்கள் தெரிந்து கொள்வார்கள்தானே? செய்வார்களா?

நன்றி நம்தினமதி நாளிதழ்

சவுக்கு

‘பயிற்சிக்காக லண்டனுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள்...’வெடித்துக் கிளம்பும் சர்ச்சைகள்!

அரசு செலவில் ஊர்ச்சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்! மேலாண்மை குறித்த பயிற்சி என்ற பெயரில் லண்டனை சுற்றிப் பார்க்க, எட்டு கூடுதல் டி.ஜி.பி-க்கள் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருப்பதைத் தொடர்ந்து தான் இப்படியொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

கூடுதல் டி.ஜி.பி-க்கள் தரத்தில் உள்ள அதிகாரிகளை பயிற்சிக்கு அனுப்பியிருப்பது, போலீஸ் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் பயிற்சிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி-க்களாக இருக்கும் கே.ராதாகிருஷ்ணன், ஆர்.சேகர், டி.கே.ராஜேந்திரன், லல்லாம் சங்கா, டி.ராஜேந்திரன், டி.ராதாகிருஷ்ணன். கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா ஆகியோர் பங்கேற்கப் போவதாக முன்பே செய்திகள் கசிந்தது.


இந்தப் பயிற்சிப் பயணம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இருந்து ஆரம்பமாகிறது. முதல் மூன்று வாரங்களுக்கு, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல்துறை பயிற்சிக் கல்லூரியிலும் அதையடுத்து, லண்டனில் உள்ள லண்டன் பிசினஸ் ஸ்கூலிலும் நடைபெறுமாம்.



லண்டனில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் தங்கியிருந்து லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் மேலாண்மை பயிற்சி எடுக்கவிருக்கிறார்களாம், நம்முடைய காவல்துறை அதிகாரிகள்.
இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்த்தில் இருப்பவர்கள்.

அவர்களுக்கு காவல்துறையில் 25 ஆண்டுகளுக்குக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மேலாண்மை சம்பந்தப்பட்ட பயிற்சியை அளிக்கத் திடுமென ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்பது குறித்து தான் இப்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இது போன்ற மூத்த அதிகாரிகளை இந்தமாதிரியான பயிற்சிகளுக்கு அனுப்பாமல், எஸ்.பி. அந்தஸ்த்தில் உள்ள அதிகாரிகளை அனுப்பினால், வரக்கூடிய காலங்களில் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்ய ஏதுவாக அமையும் என்று கூறுகிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
மேலும், இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துள்ள அதிகாரிகளில், எஸ்.கே.டோக்ரா தவிர, மற்ற அனைவருமே, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதி மதிப்பெண் பெறாத தனது மகனுக்கு, முதல்வர் கோட்டாவில், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் ஒதுக்கீடு பெற்றார் என்று கே.ராதாகிருஷ்ணன் மீது புகார்கள் வந்து, அது தொடர்பாக பொது நல வழக்கெல்லாம் போடப்பட்டது.

இது தவிர, இங்கிலாந்து ராணி விருதுத் தொகையை செலவழித்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர் மீதான தாக்குதலில், முக்கியப் பங்கு வகித்ததாக, நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானவர்தான் இந்த கே.ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆர்.சேகர், சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தபோது, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டபோது, காவல்துறை அமைதியாக கைகட்டி வேடிக்கை பார்த்தது தொடர்பாக உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட்டவர்.


கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்தபோது, தினந்தோறும் 12 நாளிதழ்கள் வாங்கிப் படிப்பது போல போலிப் பட்டியல் தயாரித்து ரகசிய நிதியை கையாடல் செய்தார் என்றும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தனது மகளை கல்லூரிக்கு அழைத்துச்செல்ல உரிய நேரத்தில் வரவில்லை என்பதால், ஒரு காவலரை மணிமுத்தாறுக்கு மாறுதல் செய்தார் என்றும், எஸ்.பி-யாக இருந்தபோது தன்னிடம் பணியாற்றிய காவல் ஆய்வாளர் மேல் லஞ்ச ஒழிப்புத் துறை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக வழக்குப்பதிவு செய்ததால், அந்த வழக்கிலிருந்து அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக இருந்த பொழுது, காப்பாற்றியதாகவும் குற்றச் சாட்டுகள் உண்டு.

இதுதவிர, தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி, தவறான பதவி உயர்வு வழங்கியதாகவும், இவர் மீது புகார்கள் உண்டு.
லல்லாம் சங்கா எஸ்.பி-யாக இருந்த காலத்தில் ஏற்பட்ட ஊழல் புகார்கள் பற்றிய ஒரு பூர்வாங்க விசாரணை, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்தது.

பிறகு, போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கு மூடப்பட்டது. டி.ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே காவலர் தேர்வில் கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டில், சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளானவர். மேலும், தன்னுடைய மனைவி நடத்தும் நிதி நிறுவனத்தின் மூலமாக, நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், காவல்துறையில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி உரிய வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுத்ததாகவும், சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.


கே.பி.மகேந்திரன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறையில் மொத்தம் நான்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இரண்டு வழக்குகளும், வடக்கு மண்டல ஐ.ஜி-யாக ஆனதும் இரண்டு வழக்குகளும் விசாரணையில் இருந்தன. இவர் கட்டியிருந்த வீட்டின் சாலை வழியே, கனரக வாகனங்கள் எதுவும் வரக்கூடாது என்று காவல்துறையை விட்டு, அந்த வழியே வரும் கனரக வாகனங்கள் அனைத்தையும், பிடித்து வைத்து அலைக்கழித்தது உள்ளிட்ட புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்பட்டன.

இவர் குறுகிய காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய போது, இவர் எஸ்.பி-யாக இருந்த காலத்தில் இவர் மீது நடந்த ஊழல் வழக்கின் கோப்பை பார்வையிட கேட்டு, அது உயர் அதிகாரிகளின் காதில் போடப்பட்டு, பெரும் சர்ச்சையானது.


சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் டி.ராஜேந்திரனைப் பற்றிய விவரங்கள் ஊரறிந்தது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழாவின் போது, முதல்வர் முன்னிலையிலேயே, பெரும் வன்முறை நடந்த போது, தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களை அடித்துத் துவைத்தபோது, அது அத்தனையையும் வேடிக்கை பார்த்து விட்டு, பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான புகாரைப் பதிவு செய்வதற்குக் கூட, தலைமைச் செயலாளரிடம் மூத்த பத்திரிக்கையாளர்கள் பேசிய பிறகு தான் நடவடிக்கை எடுத்தார்.

இவர் காலத்தில்தான் சென்னை நகரில் குற்றங்கள் பெருகியுள்ளன.

இவர்களில் எஸ்.கே.டோக்ரா மீது மட்டும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. ஊழல் தொடர்பான விவகாரங்களை துளியும் அனுமதிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த அதிகாரிகளைத் தவிர, தகுதியான வேறு அதிகாரிகள் உண்டா என்றால் இருக்கிறார்கள். மிகச் சிறந்த உளவுத் துறை அதிகாரி என்று பெயர் வாங்கிய ராமானுஜம், தன்னுடைய பணியில் சிறிதும் சளைக்காத, எந்த புகார்களுக்கும் இடம் தராத அனூப் ஜெய்ஸ்வால், நேர்மையான அதிகாரியான டாக்டர் மெஹபூப் ஆலம், மிகச் சிறந்த நிர்வாக அதிகாரியும், கடும் உழைப்பாளியுமான அசோக்குமார், “கருணாநிதியின் நள்ளிரவு கைதில்“ முக்கியப் பங்கு வகித்ததால், நான்கு ஆண்டுகளாக, கன்னியாகுமரியில் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும், ஐ.ஐ.டி-யில் பொறியியல் படித்த ஜார்ஜ், போன்ற தகுதி வாய்ந்த அதிகாரிகள் இருக்கையில், ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறுவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளான இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து லண்டனில் பயிற்சிக்கு அனுப்பியதற்கான காரணம் என்ன, என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுகின்றன.


லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, இவர்களை லண்டனுக்கு பயிற்சிக்கு அனுப்பியிருப்பதால், காவல்துறைக்கு என்ன பயன் என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்வாறு, இவர்களை பயிற்சிக்கு வெளிநாட்டுக்கு அனுப்புவதற்குப் பதில், சென்னையை அடுத்துள்ள ஊமனஞ்சேரியில் உள்ள காவல்துறை பயிற்சி அகாடமியை மேம்படுத்தினால், தகுதியான பல காவல்துறையினர் உருவாவார்கள் என்றும் கூறுகின்றனர்.


மேலும் முக்கியப் பொறுப்பு உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே, செம்மொழி மாநாட்டுக்காக பத்து நாட்களுக்கும் மேலாக கோவையில் இருந்ததால், பல கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு மாதம் பயிற்சி என்ற பெயரில், இந்த அதிகாரிகள் ஹைதராபாத்துக்கும் லண்டனுக்கும் பயணமானதால், கோப்புகள் தேங்கி, நிர்வாகம் தேக்கமடைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.


மேலும், லண்டன் பிசினஸ் ஸ்கூல் என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாளர்களுக்கும், பிசினஸில் ஈடுபடுபவர்களுக்கும் பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளான இவர்கள் என்ன பயிற்சி எடுக்கப்போகிறார்கள் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

உயர் அதிகாரிகளான இவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அரசு, கீழ்நிலையில் உள்ள காவலர்கள் தலைமைக் காவலர்களுக்கு பணியில் சேர்ந்த பின், இதுபோன்ற எந்தப் பயிற்சியுமே சுத்தமாக தருவதில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறு எந்தப் பயிற்சியுமே இல்லாத காரணத்தால், இவர்கள் தொந்தியும் தொப்பையுமாக, எந்த ஒரு பணியையும் விரைவாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களின் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இது போன்ற பயிற்சி அளிப்பது என்பது, காவல்துறையில் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு, தங்கள் சொந்த செலவில் கலந்து கொள்பவர்கள் வரலாம் என்று அரசு உத்தரவிடுமேயானால், ஒருவர் கூட கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பயிற்சி என்ற பெயரில், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்று ஒரு தரப்புக் கூறினாலும், இந்தப் பயிற்சியை முடித்து வரும் அதிகாரிகள், காவல்துறையில் தங்கள் பயிற்சியின் அனுபவத்தை புகுத்தி, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை விரைவாகக் கண்டுபிடிக்கவும், பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சம்பந்த்ப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு உறுதியளித்தார்களானால், அவர்களை பயிற்சிக்கு அனுப்பியதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை.

அதை விடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு பிஸினஸ் சம்பந்தப்பட்ட மேலாண்மை பயிற்சி எதற்கு என்று கேட்கப்படும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அரசாங்கத் தரப்பில் இந்த கேள்விகளுக்கான நியாயமான பதில்தான் என்ன?

சொன்னால், இதோ லண்டனுக்குச் சென்றிருக்கிறார்களே போலீஸ் அதிகாரிகள்... அவர்கள் போனதற்கும் - திரும்புவதற்கும் சேர்த்து வரி செலுத்தும் அப்பாவி பொதுஜனங்கள் தெரிந்து கொள்வார்கள்தானே? செய்வார்களா?

நன்றி நம்தினமதி நாளிதழ்

சவுக்கு

Saturday, July 3, 2010

சவுக்கின் செம்மொழி சிறப்பு பாடல்

சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்று தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. இந்தப் பாடல் தயாரித்து வெளியிடப்பட மட்டும் நமது வரிப்பணம் 7.5 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இந்த விழா நடந்த விதத்தைப் பார்க்கும் போது, அந்தப் பாடல் செம்மொழி மாநாட்டுக்கு பொருத்தமாக இருந்ததா என்றால் இல்லை.


அதனால், இதற்கான பொருத்தமான பாடலை சவுக்கே, தேர்ந்தெடுத்துள்ளது. அந்த பாடல் இதோ… ….


“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் கொய்யா….

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..


வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி…

பேமிலி பங்ஷனுக்கு போணும் தானே..
கூட ஆபீசர் எல்லாரும் வரணும்தானே…
மாநாடு ரொம்ப ரொம்ப ஹிட்டானது..
இந்த கொடநாடு அம்மாதான் காண்டானது..

ஜெயிப்போம்னு நம்பிக்கை இல்லவே இல்லப்பா
பேமிலியால ஒரே தொல்லைன்னா தொல்லப்பா..

என்னடா லைப்பு இது… காட்டுக்கு போற வயசு இது


வேர் ஈஸ் த பார்ட்டி கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி கொடீசியாவுல பார்ட்டி

“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் பைய்யா ….

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கோயம்பத்தூர்ல

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
தமிழ்நாட்ல
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொட்டக் காட்ல

முன்னெல்லாம் முதுகுல அரிப்பு வந்தா …
அட நானேதான் கைய வச்சு சொறிஞ்சுக்குவேன்…

இப்பொல்லாம் நான் ஒரு வார்த்த சொன்னா
நம்ம டிஜிபி வர்றாரு முதுகு சொறிய….

எதிர்க்கட்சியெல்லாமே டம்மியான பீஸுடா..
வீல் சேரில் வர்ற நானு ஜெயிக்கிற கேஸுடா…

கண்டதையும் பேசாத… வண்டிய வேகமா தள்ளாத…

வேர் ஈஸ் த பார்ட்டி ….
கோயம்பத்தூர்ல பார்ட்டி

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கொடீசியாவுல பார்ட்டி

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பெரிய வீட்ல….

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
அட சின்ன வீட்ல…

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொண்ணு வீட்ல

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
சுடுகாட்ல…

சவுக்கின் செம்மொழி சிறப்பு பாடல்

சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்று தயாரிக்கப் பட்டு வெளியிடப் பட்டது. இந்தப் பாடல் தயாரித்து வெளியிடப்பட மட்டும் நமது வரிப்பணம் 7.5 கோடி செலவிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இந்த விழா நடந்த விதத்தைப் பார்க்கும் போது, அந்தப் பாடல் செம்மொழி மாநாட்டுக்கு பொருத்தமாக இருந்ததா என்றால் இல்லை.


அதனால், இதற்கான பொருத்தமான பாடலை சவுக்கே, தேர்ந்தெடுத்துள்ளது. அந்த பாடல் இதோ… ….


“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் கொய்யா….

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..


வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி அட கோவையில பார்ட்டி…

பேமிலி பங்ஷனுக்கு போணும் தானே..
கூட ஆபீசர் எல்லாரும் வரணும்தானே…
மாநாடு ரொம்ப ரொம்ப ஹிட்டானது..
இந்த கொடநாடு அம்மாதான் காண்டானது..

ஜெயிப்போம்னு நம்பிக்கை இல்லவே இல்லப்பா
பேமிலியால ஒரே தொல்லைன்னா தொல்லப்பா..

என்னடா லைப்பு இது… காட்டுக்கு போற வயசு இது


வேர் ஈஸ் த பார்ட்டி கோவையில பார்ட்டி
வேர் ஈஸ் த பார்ட்டி கொடீசியாவுல பார்ட்டி

“ஏ டோலு மையா டோலு மையா டோல மையா டையா
ஏ பையா ஏ டையா….
ஏ டுமீலு டுமீலு… டும்மாங் டும்மாங் கொய்யா
ஏ டும்மமாங் டும்மாங் பைய்யா ….

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கோயம்பத்தூர்ல

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
தமிழ்நாட்ல
வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொட்டக் காட்ல

முன்னெல்லாம் முதுகுல அரிப்பு வந்தா …
அட நானேதான் கைய வச்சு சொறிஞ்சுக்குவேன்…

இப்பொல்லாம் நான் ஒரு வார்த்த சொன்னா
நம்ம டிஜிபி வர்றாரு முதுகு சொறிய….

எதிர்க்கட்சியெல்லாமே டம்மியான பீஸுடா..
வீல் சேரில் வர்ற நானு ஜெயிக்கிற கேஸுடா…

கண்டதையும் பேசாத… வண்டிய வேகமா தள்ளாத…

வேர் ஈஸ் த பார்ட்டி ….
கோயம்பத்தூர்ல பார்ட்டி

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
கொடீசியாவுல பார்ட்டி

இன்னாமோ பண்ணலாம் கோயம்பத்தூர் போவலாம்
மாநாடு போடலாம் பணத்த அள்ளி வீசலாம்
ஆல்ரெடி நேரமாச்சு… கஜானாவும் காலியாச்சு..

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பெரிய வீட்ல….

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
அட சின்ன வீட்ல…

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
பொண்ணு வீட்ல

வேர் ஈஸ் த பார்ட்டி டுனைட்….
சுடுகாட்ல…

Thursday, July 1, 2010

சவுக்கை முடக்கு ! அதிரடி திட்டம்.


நித்யானந்தா மற்றும், கர்மவீரர் ஆகிய பதிவுகள், சமூகத்தில் பெரிய மனிதர் வேடத்தில் உலா வரும் பலரின் முகத்திரையை கிழித்ததையும், அந்த பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றதையும், சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.

இந்த பதிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது போலவே, சவுக்குக்கு மிரட்டல்களையும் எச்சரிக்கைகளையும் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

சில மூத்த பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் சவுக்குக்கு, இப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று, கோரிக்கையாகவும், மிரட்டலாகவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர். ஆனால், இவ்வாறு பேசியவர்கள் அனைவருமே, தவறாமல் சொன்ன ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

“நீங்க எழுதியிருக்கறதெல்லாம் கரெக்ட்தான்.. ஆனாலும் டெலிட் பண்ணுங்க“ என்றுதான் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவது, ஆணவத்தினாலா, அறியாமையினாலா என்பது புரியவில்லை. ஆனால், இது குறித்து விவாதித்த, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு, பதிவுகளை நீக்குவதில்லை என்று முடிவெடுத்தது. எதிர்ப்பு வந்தால், அதை சந்திப்பது என்றும் முடிவெடுத்துள்ளது. தேவைப்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, ஆதரவு கேட்பது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சவுக்கை தனிமைப் படுத்தவும், சவுக்கின் மீது, ஏதாவதொரு வகையில் தாக்குதல் தொடரவும் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு, பல முக்கிய தலைகள் ஒருங்கே சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னையில் இருந்தால், பல்வேறு வேலைகளுக்கிடையில் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டிருக்கும்.

ஆனால், கூடி கும்மியடிப்பதற்காக ஐந்து நாட்கள் காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் கோப்பையில் மன்னிக்கவும், கோவையில் கூடியதால் அனைவரும் சந்தித்துப் பேச அருமையான வாய்ப்பாக அமைந்தது.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உளவுத் துறை தலைவர் ஜாபர் சேட் தலைமையிலான “டர்ட்டி பாய்ஸின்“ கூட்டம் கோவையில் நடந்திருக்கிறது. இந்த “டர்ட்டி பாய்ஸ்“ குழுவின் மற்ற உறுப்பினர்கள், போலிப் பாதிரி ஜகத் கஸ்பர், நக்கீரன் கோபால், காம வீரர், மன்னிக்கவும், கர்ம வீரர் காமராஜ் ஆகியோர்.





இந்த “டர்ட்டி பாய்ஸ்“ குழு உறுப்பினர்கள் அனைவருமே சவுக்கடிக்கு ஆளானவர்கள் என்பதால், சவுக்கை ஏதாவது செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளனர்.

ஜாபர் சேட், “This fellow has to be taught a lesson. He thinks too much of himself“ என்று கூறியுள்ளார். உடனடியாக இதை ஆமோதித்த கர்ம வீரர், “ஆமாண்ணே, என்னப் பத்தி கூட தப்புத் தப்பா எழுதிருக்காண்ணே“ என்று தன் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.





நம்மைப் பற்றி இனிமேல்தானே வரப் போகிறது என்ற பயத்தில் நக்கீரன் கோபால், இருவர் சொல்வதற்கும் தலையாட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.



கஸ்பர், இவனுங்க ஆர்வக் கோளாறுல ஏதாவது பண்ணி, நம்மளுக்கு சிக்கல் கொண்டு வந்துடப் போறானுங்க என்று அமைதியாக இருந்திருக்கிறார்.

சவுக்கை என்ன செய்யலாம் என்று கர்ம வீரர் ஒரு “மஞ்சள்“ திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

அது என்னவென்றால், சவுக்கைப் பற்றியும், சவுக்கின் குடும்பத்தில் உள்ள பெண்களைப் பற்றியும், சவுக்கின் நண்பர்களைப் பற்றியும், அவர்கள் குடும்பத்துப் பெண்கள் பற்றியும் அசிங்க அசிங்கமாக எழுதலாம் என்ற அற்புதமான “மஞ்சள்“ யோசனையை தெரிவித்துள்ளார். இந்த யோசனை பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், புறக்கணிக்கப் படவில்லை.

ஜாபர் சேட், இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளார். அதாவது, இவர்களைப் பற்றி எழுதிய பதிவுகளையெல்லாம் மறைத்து விட்டு, கருணாநிதியை விமர்சித்து எழுதிய பதிவுகளை மட்டும் பிரிண்ட் போட்டு, முதல்வரிடம் கொடுக்கலாம்.

கொடுத்தால், பழ.கருப்பையாவுக்கு நடந்தது போல, சவுக்கை வாயிலேயே குத்துவார்கள். அப்போ அடங்கிடுவான் என்று கூறியுள்ளார். கருணாநிதியைப் பற்றிய பதிவுகளைப் பற்றி மட்டுமே காட்டுவார்கள், ஏனென்றால், ஜாபர் சேட்டுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை காட்டினால், நள்ளிரவுக் கைதில், இவரின் ஆக்க பூர்வமான contribution தெரிந்து விடுமே ?




இந்த யோசனை மற்ற மூவராலும் வரவேற்கப் பட்டது. ஜாபர் சேட் முதல் கட்டமாக, சவுக்கின் தொடர்புகளுக்கு தொந்தரவு கொடுத்து, சவுக்கிடம் இருந்து அந்த தொடர்புகளை பிரிக்கலாம் என்று சொன்ன ஆலோசனை ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

முதல் கட்டமாக, சவுக்கோடு தொடர்பில் உள்ள, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மாநில உளவுத்துறை அதிகாரிகள், காவல்துறையின் மூத்த அதிகாரிகள், காவலர்கள், தலைமைக் காவலர்கள், இளைய மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் “செக்“ வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் முதல் கட்டமாக, “I will put all their calls under monitoring“ என்று கூறியுள்ளார், சேட். என்னவென்றால், அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்கத் தொடங்குகிறேன் என்று கூறியுள்ளார். இப்போது, ஜாபர் சேட் வசமுள்ள ஒட்டுக் கேட்பு Technology என்ன தெரியுமா ? Voice analysis.

கம்ப்யூட்டரில் ஒருவரது குரலை பதிவு செய்து, அதை அலசி அதன் ப்ரீக்வென்சியையும் தாக்கத்தையும் வைத்து, சவுண்ட் ஸ்பெக்டோக்ராம் என்ற பைலாக உருவாக்கி வைத்துக் கொள்வது. இந்த சவுண்ட் ஸ்பெக்டோக்ராம் கைரேகை போன்றது. ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள ஒரு நபரின் குரலை கம்ப்யூட்டர் அடையாளம் கண்டவுடன், பதிவு செய்ய தொடங்கி விடும். அதனால், புது சிம்கார்ட் நண்பர் பெயரில் வாங்கி, அதில் ரகசியமாக பேசினாலும் இந்த Voice Recognition டெக்னாலஜியிடம் இருந்து தப்ப முடியாது.
நான் இந்த வேலையைப் பார்த்துக் கொள்கிறேன்.

Lets find out who is behind him and who is feeding him information என்று கூறியுள்ளார் ஜாபர் சேட்.

நக்கீரன் கோபால், ஏதாவது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விட்டு, அப்புறம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு வருடத்துக்கு உள்ளே தள்ளி விடலாம் என்று கூறியிருக்கிறார். இந்த ஆலோசனை, என்ன வழக்கு போடலாம் என்று, பல்வேறு திட்டங்களுக்கு இட்டுச் சென்று, முடிவாக, போட்டால் எளிதில் பெயில் கிடைக்க முடியாத வழக்காக போடலாம் என்று முடிவாகியிருக்கிறது.

கடைசியாக, ரவுடிகளை விட்டுத் தாக்கலாம் என்பதும் ஆலோசிக்கப் பட்டு, எந்த முடிவும் எடுக்கப் படாமல் பரிசீலனையில் வைக்கப் பட்டுள்ளது.

கர்மவீரர் அவர்களே, உங்கள் மீதும் ஜாபர் சேட் மீதும், போலிப் பாதிரி கஸ்பர் மீதும், கோபால் மீதும், சவுக்குக்கு தனிப்பட்ட கோபமோ, வெறுப்போ இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.

உங்களைப் பற்றி இவ்வளவு எழுதியும், நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக் கொண்டீர்களா ? கர்ம வீரர் பதிவு எழுதிய பிறகு வந்த அத்தனை நக்கீரன் இதழ்கள் அனைத்தின் கவர் ஸ்டோரியும் செக்ஸ் தானே ? இந்த இதழில் கூட, அட்டைப் படத்தில் ரஞ்சிதா தானே ? ரஞ்சிதா யாரோடு படுத்துக் கொள்கிறார், எப்படிப் படுத்துக் கொள்கிறார் என்பதை அறிந்து இந்த சமூகம் என்ன செய்யப் போகிறது ?



அந்த ஆபாசமான நக்கீரன் இதழை கோவையில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைக்கு படிக்கத் தருவீர்களா என்று கேட்பதை விட, நீங்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வது போல இன்னும் எப்படிக் கேட்க வேண்டும் ? இவ்வாறு கேட்ட பிறகும், இதை தமிழகத்தின் ஏறக்குறைய அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் படித்த பின்பும், ரஞ்சிதாவின் உள்பாவாடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உங்களை சவுக்கால் அடிக்காமல் என்ன செய்வது ?

ஜாபர் சேட் மீது சவுக்குக்கு தனிப்பட்ட முறையில் என்ன கோபம் ? அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்து, இச்சமூகத்துக்கு நற்பணியாற்ற வேண்டும் என்பதுதானே சவுக்கின் அவா ?

அரசு வேலையைப் பாருய்யான்னா, சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருக்கற ஆள என்ன சொல்லுவீங்க ? உளவுத் துறைன்னா என்னன்னு தெரியுமா ? கடைசி வரைக்கும் உளவுத் துறை அதிகாரிகள் யார் என்பதே வெளியில் தெரியக் கூடாது.




பத்திரிக்கையாளர் ஜுடித் மில்லர்


அமெரிக்காவில், ஒரு வாலேரி ப்ளேம் என்ற சிஐஏ ஏஜென்டின் அடையாளத்தை வெளியே சொல்லி விட்டார் என்பதற்காக, ஜுடித் மில்லர் என்ற ஒரு பத்திரிக்கையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது தெரியுமா ?




சிஐஏ ஏஜென்ட் வாளேரி ப்ளேம்


சினிமாவில் நடித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கேடுகெட்ட உளவுத்துறை அதிகாரியைப் பார்த்திருக்கிறீர்களா ?

இவர்களை விமர்சனம் செய்வது அப்படிப் பட்ட தவறா ?

இந்த விமர்சனமெல்லாம் நியாயமற்ற விமர்சனமா ?


இவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம்.

விமர்சித்தால் ஆள் வைத்து அடிப்பார்களாம்.

சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள், சவுக்கில் பதிவுகள், சமூகத்தில் குறைந்து வரும் நேர்மையையும், வளர்ந்து வரும் நேர்மையற்ற போக்கையும் பார்த்து கவலையடைந்து, வேதனையடைந்து, உழன்று, இந்த ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எழுதப் பட்டு வருகிறது என்பதை அறிவீர்கள் தானே ?

இது நியாயமற்ற, Biased விமர்சனமாக இருந்திருந்தால், சவுக்கு வாசகர்கள், எப்போதோ சவுக்கை புறக்கணித்திருப்பார்கள்.

வேலையெல்லாம் விட்டு விட்டு, இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பதிவு எழுதுவது பொழுது போக்குக்கா ? வலி அய்யா.. வலி.

சமூகத்தில் உள்ள நேர்மையானவர்கள் சாத்திரங்கள் பிணம் தின்பதைக் காண சகியாமல் வேதனைப் படுவதையுமே சவுக்கு பதிவு செய்கிறது.

பாரிமுனையில் நடைபாதைகளில் கடை வைத்து, பாரிமுனையின் சந்துகளில் வாழ்க்கையை நடத்தி, சாலையிலேயே, உண்டு, உடுத்தி, கழித்து, உடலுறவு கொண்டு தங்கள் வாழ்வை நடத்தும், நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்து மனம் வேதனையடைந்து கொண்டு இருக்கும் போது, ஒரு மாநாட்டுப் பாடலுக்காக ஏழரை கோடி செலவு செய்து, ஐந்து நாட்கள், ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாட்டம் நடத்துபவர்களைப் பற்றி என்ன எழுதுவீர்கள் ?

சாதாரண பதிவுத் தளமாக தொடங்கப் பட்ட சவுக்கு, இன்று ஒரு இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் சவுக்கின் நேர்மை, நேர்மை, நேர்மை மட்டுமே.
இந்த டர்ட்டி பாய்ஸ் விடுத்திருக்கும் நேரடியான சவாலுக்கும், மிரட்டலுக்கும் சவுக்கின் பதில் என்ன ?

குழந்தைகளுக்காக எழுதப் பட்ட பாடலில் முண்டாசுக் கவிஞன் என்ன சொல்லியிருக்கிறான் ?

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா.. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.

குழந்தைகளுக்கே இந்த அறிவுரை என்றால், சவுக்குக்கு ஏழு கழுதை வயசாகிறது.
இந்த மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சவுக்கு அடிபணியாது.

அநீதியை எதிர்த்தும், நியாயத்தை நிலைநாட்டவும், அயோக்கியர்களை அம்பலப்படுத்தவும், சவுக்கு தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும்.


ஆனால் இந்த மிரட்டலால் உடனடி விளைவு ஒன்று ஏற்படப் போகிறது. ஜுலை மூன்றாவது வாரத்தில் தொடங்குவதாக இருந்த சந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு தொடர், வரும் புதன், ஜுலை 7 இரவு தொடங்குகிறது. ஒவ்வொரு புதனன்றும் இத்தொடர் பதிவேற்றப் படும்.

விடை பெறும் முன் டர்ட்டி பாய்ஸுக்கு மாவோவை நினைவூட்ட விரும்புகிறேன்.




மரணம் பொதுவானது..

சில நேரங்களில் இறகை விட லேசானது
சில நேரங்களில் மலையை விடக் கடினமானது.
மக்களுக்காக வாழ்ந்து மடிதல் என்பது
மலையை விடக் கடினமானது.
ஏகாதிபத்தியத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும்
அடிமைப் பட்டுச் சாவதென்பது
இறகை விட லேசானது.
ஆக மரணம் பொதுவானது.



சவுக்கு

சவுக்கை முடக்கு ! அதிரடி திட்டம்.


நித்யானந்தா மற்றும், கர்மவீரர் ஆகிய பதிவுகள், சமூகத்தில் பெரிய மனிதர் வேடத்தில் உலா வரும் பலரின் முகத்திரையை கிழித்ததையும், அந்த பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றதையும், சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள்.

இந்த பதிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது போலவே, சவுக்குக்கு மிரட்டல்களையும் எச்சரிக்கைகளையும் கொண்டு வந்து சேர்த்துள்ளன.

சில மூத்த பத்திரிக்கையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் சவுக்குக்கு, இப்பதிவுகளை நீக்க வேண்டும் என்று, கோரிக்கையாகவும், மிரட்டலாகவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்திருந்தனர். ஆனால், இவ்வாறு பேசியவர்கள் அனைவருமே, தவறாமல் சொன்ன ஒரு விஷயம் என்ன தெரியுமா ?

“நீங்க எழுதியிருக்கறதெல்லாம் கரெக்ட்தான்.. ஆனாலும் டெலிட் பண்ணுங்க“ என்றுதான் பேசுகிறார்கள். இவ்வாறு பேசுவது, ஆணவத்தினாலா, அறியாமையினாலா என்பது புரியவில்லை. ஆனால், இது குறித்து விவாதித்த, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு, பதிவுகளை நீக்குவதில்லை என்று முடிவெடுத்தது. எதிர்ப்பு வந்தால், அதை சந்திப்பது என்றும் முடிவெடுத்துள்ளது. தேவைப்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, ஆதரவு கேட்பது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் சவுக்கை தனிமைப் படுத்தவும், சவுக்கின் மீது, ஏதாவதொரு வகையில் தாக்குதல் தொடரவும் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு, பல முக்கிய தலைகள் ஒருங்கே சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னையில் இருந்தால், பல்வேறு வேலைகளுக்கிடையில் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டிருக்கும்.

ஆனால், கூடி கும்மியடிப்பதற்காக ஐந்து நாட்கள் காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் கோப்பையில் மன்னிக்கவும், கோவையில் கூடியதால் அனைவரும் சந்தித்துப் பேச அருமையான வாய்ப்பாக அமைந்தது.

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உளவுத் துறை தலைவர் ஜாபர் சேட் தலைமையிலான “டர்ட்டி பாய்ஸின்“ கூட்டம் கோவையில் நடந்திருக்கிறது. இந்த “டர்ட்டி பாய்ஸ்“ குழுவின் மற்ற உறுப்பினர்கள், போலிப் பாதிரி ஜகத் கஸ்பர், நக்கீரன் கோபால், காம வீரர், மன்னிக்கவும், கர்ம வீரர் காமராஜ் ஆகியோர்.





இந்த “டர்ட்டி பாய்ஸ்“ குழு உறுப்பினர்கள் அனைவருமே சவுக்கடிக்கு ஆளானவர்கள் என்பதால், சவுக்கை ஏதாவது செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதித்துள்ளனர்.

ஜாபர் சேட், “This fellow has to be taught a lesson. He thinks too much of himself“ என்று கூறியுள்ளார். உடனடியாக இதை ஆமோதித்த கர்ம வீரர், “ஆமாண்ணே, என்னப் பத்தி கூட தப்புத் தப்பா எழுதிருக்காண்ணே“ என்று தன் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார்.





நம்மைப் பற்றி இனிமேல்தானே வரப் போகிறது என்ற பயத்தில் நக்கீரன் கோபால், இருவர் சொல்வதற்கும் தலையாட்டிக் கொண்டு இருந்திருக்கிறார்.



கஸ்பர், இவனுங்க ஆர்வக் கோளாறுல ஏதாவது பண்ணி, நம்மளுக்கு சிக்கல் கொண்டு வந்துடப் போறானுங்க என்று அமைதியாக இருந்திருக்கிறார்.

சவுக்கை என்ன செய்யலாம் என்று கர்ம வீரர் ஒரு “மஞ்சள்“ திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

அது என்னவென்றால், சவுக்கைப் பற்றியும், சவுக்கின் குடும்பத்தில் உள்ள பெண்களைப் பற்றியும், சவுக்கின் நண்பர்களைப் பற்றியும், அவர்கள் குடும்பத்துப் பெண்கள் பற்றியும் அசிங்க அசிங்கமாக எழுதலாம் என்ற அற்புதமான “மஞ்சள்“ யோசனையை தெரிவித்துள்ளார். இந்த யோசனை பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், புறக்கணிக்கப் படவில்லை.

ஜாபர் சேட், இதை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளார். அதாவது, இவர்களைப் பற்றி எழுதிய பதிவுகளையெல்லாம் மறைத்து விட்டு, கருணாநிதியை விமர்சித்து எழுதிய பதிவுகளை மட்டும் பிரிண்ட் போட்டு, முதல்வரிடம் கொடுக்கலாம்.

கொடுத்தால், பழ.கருப்பையாவுக்கு நடந்தது போல, சவுக்கை வாயிலேயே குத்துவார்கள். அப்போ அடங்கிடுவான் என்று கூறியுள்ளார். கருணாநிதியைப் பற்றிய பதிவுகளைப் பற்றி மட்டுமே காட்டுவார்கள், ஏனென்றால், ஜாபர் சேட்டுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தை காட்டினால், நள்ளிரவுக் கைதில், இவரின் ஆக்க பூர்வமான contribution தெரிந்து விடுமே ?




இந்த யோசனை மற்ற மூவராலும் வரவேற்கப் பட்டது. ஜாபர் சேட் முதல் கட்டமாக, சவுக்கின் தொடர்புகளுக்கு தொந்தரவு கொடுத்து, சவுக்கிடம் இருந்து அந்த தொடர்புகளை பிரிக்கலாம் என்று சொன்ன ஆலோசனை ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

முதல் கட்டமாக, சவுக்கோடு தொடர்பில் உள்ள, மத்திய உளவுத் துறை அதிகாரிகள், மாநில உளவுத்துறை அதிகாரிகள், காவல்துறையின் மூத்த அதிகாரிகள், காவலர்கள், தலைமைக் காவலர்கள், இளைய மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் என அனைவருக்கும் “செக்“ வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் முதல் கட்டமாக, “I will put all their calls under monitoring“ என்று கூறியுள்ளார், சேட். என்னவென்றால், அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்கத் தொடங்குகிறேன் என்று கூறியுள்ளார். இப்போது, ஜாபர் சேட் வசமுள்ள ஒட்டுக் கேட்பு Technology என்ன தெரியுமா ? Voice analysis.

கம்ப்யூட்டரில் ஒருவரது குரலை பதிவு செய்து, அதை அலசி அதன் ப்ரீக்வென்சியையும் தாக்கத்தையும் வைத்து, சவுண்ட் ஸ்பெக்டோக்ராம் என்ற பைலாக உருவாக்கி வைத்துக் கொள்வது. இந்த சவுண்ட் ஸ்பெக்டோக்ராம் கைரேகை போன்றது. ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள ஒரு நபரின் குரலை கம்ப்யூட்டர் அடையாளம் கண்டவுடன், பதிவு செய்ய தொடங்கி விடும். அதனால், புது சிம்கார்ட் நண்பர் பெயரில் வாங்கி, அதில் ரகசியமாக பேசினாலும் இந்த Voice Recognition டெக்னாலஜியிடம் இருந்து தப்ப முடியாது.
நான் இந்த வேலையைப் பார்த்துக் கொள்கிறேன்.

Lets find out who is behind him and who is feeding him information என்று கூறியுள்ளார் ஜாபர் சேட்.

நக்கீரன் கோபால், ஏதாவது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விட்டு, அப்புறம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு வருடத்துக்கு உள்ளே தள்ளி விடலாம் என்று கூறியிருக்கிறார். இந்த ஆலோசனை, என்ன வழக்கு போடலாம் என்று, பல்வேறு திட்டங்களுக்கு இட்டுச் சென்று, முடிவாக, போட்டால் எளிதில் பெயில் கிடைக்க முடியாத வழக்காக போடலாம் என்று முடிவாகியிருக்கிறது.

கடைசியாக, ரவுடிகளை விட்டுத் தாக்கலாம் என்பதும் ஆலோசிக்கப் பட்டு, எந்த முடிவும் எடுக்கப் படாமல் பரிசீலனையில் வைக்கப் பட்டுள்ளது.

கர்மவீரர் அவர்களே, உங்கள் மீதும் ஜாபர் சேட் மீதும், போலிப் பாதிரி கஸ்பர் மீதும், கோபால் மீதும், சவுக்குக்கு தனிப்பட்ட கோபமோ, வெறுப்போ இல்லை என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.

உங்களைப் பற்றி இவ்வளவு எழுதியும், நீங்கள் உங்கள் போக்கை மாற்றிக் கொண்டீர்களா ? கர்ம வீரர் பதிவு எழுதிய பிறகு வந்த அத்தனை நக்கீரன் இதழ்கள் அனைத்தின் கவர் ஸ்டோரியும் செக்ஸ் தானே ? இந்த இதழில் கூட, அட்டைப் படத்தில் ரஞ்சிதா தானே ? ரஞ்சிதா யாரோடு படுத்துக் கொள்கிறார், எப்படிப் படுத்துக் கொள்கிறார் என்பதை அறிந்து இந்த சமூகம் என்ன செய்யப் போகிறது ?



அந்த ஆபாசமான நக்கீரன் இதழை கோவையில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைக்கு படிக்கத் தருவீர்களா என்று கேட்பதை விட, நீங்கள் நாக்கை பிடுங்கிக் கொள்வது போல இன்னும் எப்படிக் கேட்க வேண்டும் ? இவ்வாறு கேட்ட பிறகும், இதை தமிழகத்தின் ஏறக்குறைய அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் படித்த பின்பும், ரஞ்சிதாவின் உள்பாவாடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உங்களை சவுக்கால் அடிக்காமல் என்ன செய்வது ?

ஜாபர் சேட் மீது சவுக்குக்கு தனிப்பட்ட முறையில் என்ன கோபம் ? அவர் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியாக இருந்து, இச்சமூகத்துக்கு நற்பணியாற்ற வேண்டும் என்பதுதானே சவுக்கின் அவா ?

அரசு வேலையைப் பாருய்யான்னா, சினிமாவுல நடிச்சுக்கிட்டு இருக்கற ஆள என்ன சொல்லுவீங்க ? உளவுத் துறைன்னா என்னன்னு தெரியுமா ? கடைசி வரைக்கும் உளவுத் துறை அதிகாரிகள் யார் என்பதே வெளியில் தெரியக் கூடாது.




பத்திரிக்கையாளர் ஜுடித் மில்லர்


அமெரிக்காவில், ஒரு வாலேரி ப்ளேம் என்ற சிஐஏ ஏஜென்டின் அடையாளத்தை வெளியே சொல்லி விட்டார் என்பதற்காக, ஜுடித் மில்லர் என்ற ஒரு பத்திரிக்கையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது தெரியுமா ?




சிஐஏ ஏஜென்ட் வாளேரி ப்ளேம்


சினிமாவில் நடித்துக் கொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கேடுகெட்ட உளவுத்துறை அதிகாரியைப் பார்த்திருக்கிறீர்களா ?

இவர்களை விமர்சனம் செய்வது அப்படிப் பட்ட தவறா ?

இந்த விமர்சனமெல்லாம் நியாயமற்ற விமர்சனமா ?


இவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்களாம்.

விமர்சித்தால் ஆள் வைத்து அடிப்பார்களாம்.

சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள், சவுக்கில் பதிவுகள், சமூகத்தில் குறைந்து வரும் நேர்மையையும், வளர்ந்து வரும் நேர்மையற்ற போக்கையும் பார்த்து கவலையடைந்து, வேதனையடைந்து, உழன்று, இந்த ஜனநாயகத்தையும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எழுதப் பட்டு வருகிறது என்பதை அறிவீர்கள் தானே ?

இது நியாயமற்ற, Biased விமர்சனமாக இருந்திருந்தால், சவுக்கு வாசகர்கள், எப்போதோ சவுக்கை புறக்கணித்திருப்பார்கள்.

வேலையெல்லாம் விட்டு விட்டு, இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பதிவு எழுதுவது பொழுது போக்குக்கா ? வலி அய்யா.. வலி.

சமூகத்தில் உள்ள நேர்மையானவர்கள் சாத்திரங்கள் பிணம் தின்பதைக் காண சகியாமல் வேதனைப் படுவதையுமே சவுக்கு பதிவு செய்கிறது.

பாரிமுனையில் நடைபாதைகளில் கடை வைத்து, பாரிமுனையின் சந்துகளில் வாழ்க்கையை நடத்தி, சாலையிலேயே, உண்டு, உடுத்தி, கழித்து, உடலுறவு கொண்டு தங்கள் வாழ்வை நடத்தும், நூற்றுக்கணக்கான மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்து மனம் வேதனையடைந்து கொண்டு இருக்கும் போது, ஒரு மாநாட்டுப் பாடலுக்காக ஏழரை கோடி செலவு செய்து, ஐந்து நாட்கள், ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாட்டம் நடத்துபவர்களைப் பற்றி என்ன எழுதுவீர்கள் ?

சாதாரண பதிவுத் தளமாக தொடங்கப் பட்ட சவுக்கு, இன்று ஒரு இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் சவுக்கின் நேர்மை, நேர்மை, நேர்மை மட்டுமே.
இந்த டர்ட்டி பாய்ஸ் விடுத்திருக்கும் நேரடியான சவாலுக்கும், மிரட்டலுக்கும் சவுக்கின் பதில் என்ன ?

குழந்தைகளுக்காக எழுதப் பட்ட பாடலில் முண்டாசுக் கவிஞன் என்ன சொல்லியிருக்கிறான் ?

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா.. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா.

குழந்தைகளுக்கே இந்த அறிவுரை என்றால், சவுக்குக்கு ஏழு கழுதை வயசாகிறது.
இந்த மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சவுக்கு அடிபணியாது.

அநீதியை எதிர்த்தும், நியாயத்தை நிலைநாட்டவும், அயோக்கியர்களை அம்பலப்படுத்தவும், சவுக்கு தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும்.


ஆனால் இந்த மிரட்டலால் உடனடி விளைவு ஒன்று ஏற்படப் போகிறது. ஜுலை மூன்றாவது வாரத்தில் தொடங்குவதாக இருந்த சந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு தொடர், வரும் புதன், ஜுலை 7 இரவு தொடங்குகிறது. ஒவ்வொரு புதனன்றும் இத்தொடர் பதிவேற்றப் படும்.

விடை பெறும் முன் டர்ட்டி பாய்ஸுக்கு மாவோவை நினைவூட்ட விரும்புகிறேன்.




மரணம் பொதுவானது..

சில நேரங்களில் இறகை விட லேசானது
சில நேரங்களில் மலையை விடக் கடினமானது.
மக்களுக்காக வாழ்ந்து மடிதல் என்பது
மலையை விடக் கடினமானது.
ஏகாதிபத்தியத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும்
அடிமைப் பட்டுச் சாவதென்பது
இறகை விட லேசானது.
ஆக மரணம் பொதுவானது.



சவுக்கு

Wednesday, June 30, 2010

அனாதையாக 560 பேர் .. .. ..




தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்ற புகார் எழுந்தபோது, டக்ளஸ் தேவானந்தா சொன்ன பதில், 1987ல் ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, அனைத்துக் குற்றவாளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப் பட்டு விட்டது என்பதுதான்.

இவரின் கூற்றுப் படி அனைத்துக் குற்றவாளிகளும் மன்னிக்கப் பட்டு விட்டார்களா ?

560 இலங்கைத் தமிழர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கைச் சிறைகளில் விசாரணைச் சிறையாளிகளாக இருந்து வருகிறார்கள் என்று சவுக்குக்கு பிரத்யேகமாக தகவல்கள் வந்துள்ளது.

இலங்கையில் மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், பபுல்லா, கண்டி போகாம்பரா ஆகிய இடங்களில் சிறைச்சாலைகள் உள்ளன. இது தவிர, கொழும்பு நகரில் மட்டும், வெளிக்கடை, நியூ மேகசின் மற்றும், விசாரணைச் சிறை என்று மூன்று சிறைகள் உள்ளன.

இந்தச் சிறைச்சாலைகளில் 560 தமிழர்கள், விசாரணைச் சிறையாளிகளாக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப் பட்டுள்ளனர். இந்த 560 தமிழர்களைப் பற்றியும், வெளியுலகம் அறியாது. இவர்கள், சமாதான காலங்களில் கைது செய்யப் பட்டவர்கள். விடுதலைப் புலிகளாகவோ, போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தால், இவர்கள் எப்போதோ இலங்கை ராணுவத்தாலும், உளவுப் படையாலும் கொன்றழிக்கப் பட்டிருப்பார்கள்.




இவர்கள் அனைவரும், தேநீர்க் கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதும், கைது செய்யப் பட்டவர்கள். “ஆள் பாக்க கடினமாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போவான்“ என்று கூறுகிறார்கள். ஒரு நபரின் தோற்றம் சற்று கரடு முரடாக இருந்தால் கூட பிடித்துக் கொண்டு போய் விடுவார்களாம். சிங்களம் பேசத் தெரியவில்லை என்பதற்கெல்லாம் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறையில் 100 கைதிகள் உள்ளனர். இவர்களைத் தவிர 51 பெண்கள் இந்தச் சிறையில் உள்ளனர். இந்த பெண்களில் ஆறு பேருக்கு குழந்தைகள் உள்ளன. இவற்றுள் 6 மாதக் குழந்தையும், ஒரு வயதுக் குழந்தையும் உண்டு. இந்தப் பெண்களுள் குண்டு வீச்சில் கால்களை இழந்தவர்களும், கைகளை இழந்தவர்களும் உள்ளனர்.


எட்டு ஆண்டுகளாய் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் இவர்கள் மீது, இலங்கை காவல்துறை இது வரை எந்தக் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வில்லை. 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றம் சென்று நீதிபதி முன்பு இவர்களின் காவல் நீட்டிக்கப் படுகிறது.



ஒவ்வொரு முறையும் காவல் நீட்டிப்பு செய்யப் படும் போதும், காவல்துறை, வழக்கின் புலனாய்வு இன்னும் முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதை, நீதிபதியும் ஏற்றுக் கொண்டு, விசாரணை நீட்டிப்புச் செய்து வருகிறார். இந்தக் கைதிகள், நீதிபதியிடம் எட்டு ஆண்டுகளாய் புலனாய்வு முடியவில்லை என்று காவல்துறை வேண்டுமென்றே சிறையில் அடைத்து தங்களை அலைக்கழிப்பதாக இவர்கள் கூறும் புகார்களுக்கு, உங்களை விடுவிக்க எனக்கு அதிகாரம் இல்லை என்பதையே காரணமாக கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மே 2009ல் போர் முடிந்தவுடன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு என்றும், பிணையில் விடுவிக்கப் படுவார்கள் என்றும் கூறுவது, இந்த 560 நபர்களுக்கு பொருந்தாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த 560 பேரின் உறவினர்கள், பெரும்பாலும் போரில் இறந்து விட்டதாலும், மீதம் உள்ளவர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைக்கப் பட்டு விட்டதாலும், சிறையில் உள்ள இவர்களைப் பார்ப்பதற்கு யாருமே வருவதில்லை. பார்க்க யாரும் வராததால், இரண்டு ஆண்டுகளாய் ஒரே துணியை உடுத்தியுள்ளனர்.


31 வயதான ஒரு இளைஞரின் தந்தை ஒரு காலை இழந்தவர். இவரின் தாயார், இறந்த போது இறுதிச் சடங்கு செய்வதற்கு கூட இவர் அனுமதிக்கப் படவில்லை. நான்கு ஆண்டுகளாய் இச்சிறையில் இருக்கும் ஒருவரின் மனைவி இறந்த போது, அவரும் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இவரின் ஒரு மகன் முள்வேலி முகாமில் அடைக்கப் பட்டுள்ளார். மகள், உறவினர் ஒருவரின் பராமரிப்பில் ஒரு ஹாஸ்டலில் தங்கியுள்ளார்.



லண்டனைச் சேர்ந்த புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் தங்களது உறவினரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளார். இவரையும் சந்தேகப் பட்டு, இந்த நியூ மேகசின் சிறையில் அடைத்து வைத்துள்ளது இலங்கை காவல்துறை. பிரித்தானிய குடிமனான இவரை சிறையில் இருந்து மீட்டெடுக்க இங்கிலாந்து தூதரகமும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.


தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விபரமும் தெரியாமல், சிறையை விட்டு வெளியே வருவோமா இல்லையா என்ற விபரமும் தெரியாமல் அலைக்கழிக்கப் பட்டு, மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.
இலங்கை காவல்துறை இந்தச் சிறையாளிகளின் வழக்கை விசாரித்து முடிக்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பதற்கான நோக்கம், காவல்துறையிடம் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதுதான் என்று கூறுகிறார்கள்.


இவர்களுக்காக புலம் பெயர்ந்த தமிழர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.


இந்த பதிவை படிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்கள் நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் மூலமாகவோ, ஏதாவது அமைப்பு மூலமாகவோ, இந்த 560 அனாதைகளுக்காக குரல் கொடுக்கவும், சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே சவுக்கின் வேண்டுகோள்.



சவுக்கு