Saturday, August 7, 2010

பாதுகாப்புக்கே பாதுகாப்பு.

அது என்ன ரவுடிக்கே ரவுடி, கில்லாடிக்கு கில்லாடி போல, பாதுகாப்புக்கே பாதுகாப்பு ? இருங்கள் விளக்கமாக சொல்லுகிறேன். ஒரு நபருக்கு சில நபர்கள் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த சில நபருக்கு அந்த ஒரு நபர் பாதுகாப்புக் கொடுத்தால் ? குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்லுகிறேன்.

ஒரு மன்னருக்கு மூன்று பேர் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும், மூன்று பொற்கிழிகளைக் கொடுத்து, அந்த மன்னர் அவர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு தந்தால் ? இது ஏதோ மன்னர் காலத்தில் நடந்த கதை அல்ல.

தற்காலத்தில், சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி, தன்னுடைய பாதுகாவலர்களாக உள்ள, மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கு, 2 கோடி மதிப்புள்ள வீட்டு மனையை வெறும் எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார். தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக.



இவர்கள் மூன்று பேர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்களா, இவரின் கான்வாயின் முன்னும் பின்னும் செல்லும் வண்டிகளில் உள்ள மற்றவர்கள் கருணாநிதியை பாதுகாப்பதில்லையா என்றால் அவர்களும் பாதுகாக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத இந்தப் பொற்கிழி இந்தப் பாண்டியனுக்கும், வினோதனுக்கும், கணேசனுக்கும் மட்டும் ஏன் என்பதை, கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

சரி, இவர்கள் நன்றாக வேலை செய்து, கருணாநிதியை நன்றாக பாதுகாக்கிறார்கள் என்றால், கோபாலபுரம் வீட்டையோ, சிஐடி காலனி வீட்டையோ அல்லவா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் ? மக்களின் சொத்தை எதற்காக இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் ?

ஏனென்றால், மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

மூன்று பாதுகாவல் அதிகாரிகளில், கணேசனுக்கும், வினோதனுக்கும் மட்டும் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்“ என்ற பிரிவின் கீழ் இரண்டு க்ரவுண்டு நிலம். பாண்டியனுக்கும் மட்டும் மனைவி மீனா பெயரில் வீட்டு மனை (பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா).

சரி, இந்த இரண்டு பேர் மட்டும் தான் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால், தமிழக அரசில் பணியாற்றும், மற்ற ஊழியர்கள் எல்லாம் அப்பழுக்குள்ள ஊழியர்களா ?

அவர்களும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிலம் ஏன் வழங்கப் படவில்லை என்ற அதிகப்பிரசங்கி கேள்விகளையெல்லாம் சவுக்கு மாதிரி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.




கருணாநிதியின் இந்த வள்ளல்தன்மை, இப்போது வந்ததல்ல. 1989-90ல் தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர்தான் இந்தக் கருணாநிதி. அவர்கள் இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

கருணாநிதி எப்படிப் பட்ட நபர் என்பதற்கு ஒரு உதாரணம். 1989ல் திமுக ஆட்சி நடக்கிறது. அப்போது பி.எஸ்.சேதுராமன் பாதுகாவல் அதிகாரி இருக்கிறார். அவரிடம் இன்னொரு போலீஸ் அதிகாரி போனில் உரையாடுகிறார்.

“என்ன சேதுராமன் எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் சார். “

“என்னங்க ஜெயலலிதா வீட்ல இருந்து ராஜினாமா கடிதம் எடுத்தாங்களாமே…. உண்மையா ? “

“ஆமா சார். தலைவர் கரெக்டாதான் சார் பண்ணார். இந்த தொரை டிஜிபி இருக்கான்ல.. அவன்தான் உள்ள பூந்து கெடுத்து உட்டுட்டான் சார். இல்லன்னா எப்பபோ அந்த அம்மா போயிருக்கும் சார்“

ஜெயலலிதா, 6 மாதத்துக்கு ஒரு முறை, பால்கனியில் மட்டும் காட்சி தரும் காலம் அது.

ஒரிரு நாள் கழித்து சேதுராமனை அழைத்த கருணாநிதி, மேற்கூறிய உரையாடலை சேதுராமனிடம் ஒரு டேப்பில் போட்டுக் காட்டுகிறார். அதிர்ந்த சேதுராமன் திருதிருவென விழிக்கிறார்.

“என்னப் பத்தில்லாம் நல்லாதான் பேசிருக்க. துரை உனக்கு உயர் அதிகாரியில்ல ? இப்படியா மரியாதை இல்லாம பேசுறது ? “


“இனிமே இப்படிப் பேசாத. போ. “ என்றார். இதுதான் கருணாநிதி. கூடுதல் தகவல், அந்த சேதுராமன், கருணாநிதியின் தூரத்து உறவினர்.

பாண்டியன், வினோதன், கணேசன் ஆகிய மூன்று பேரும், “ட்ராலி பாய்ஸ்“ என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏன் இந்தப் பெயர் வந்தது என்று வரலாற்று ஏடுகளை ஆராய்ந்ததில் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்தால் கூறவும்.





இந்த மூவருக்கும், தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி. இந்த வீட்டு மனை ஒதுக்கீட்டிற்கு, அரசு நிர்ணயித்த விலை 75 லட்ச ரூபாய். இந்த 75 லட்ச ரூபாயை இவர்கள் மூவரும் ஒரே நாளில் செலுத்துகிறார்கள்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெரும் ஒருவர் எப்படி 75 லட்ச ரூபாய் செலுத்த முடியும் என்ற சந்தேகம் எழுந்து, FACT இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்புகிறது. நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் ராமானுஜத்திடம் அந்தப் புகார் நேரில் கொடுக்கப் படுகிறது. அந்த நேர்மையான (?????) ராமானுஜம்,(சார் உங்களைப் பற்றி சவுக்கு தனியே எழுதும்) அந்தப் புகாரின் மேல் மூன்று மாதங்கள் படுத்து உறங்குகிறார். துயில் கலைந்தவுடன், டிசம்பர் 2009ல், அந்தப் புகார் நம்மிடம் இருந்தால் ஆபத்து, என்று கருதி, இதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புகிறார். (ஊழல் புகாரையெல்லாம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புரீங்களே நீங்க என்ன போஸ்ட்மேனா ராமானுஜம் சார் ? இந்த சவுக்கோட பதிவையும் ஒரு ப்ரின்ட் எடுத்து லத்திக்கா சரணுக்கு அனுப்புங்க சார்.)

இத்தோடு இந்தக் கதையில் இடைவேளை. இப்போ ஃப்ளாஷ் பேக். 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த மூவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது ஜாபர் சேட்டிடம், இந்த மூவரும் இந்தத் தகவலைத் தெரிவிக்க, அவர்களிடம் சிரித்துப் பேசி விட்டு சாதாரண இன்ஸ்பெக்டர் பயலுங்களுக்கு ரெண்டு கோடி மதிப்புள்ள வீட்டு மனையை கொடுத்தால், ஐஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பொருமுகிறார்.

அவரிடம் நெருக்கமான அந்த ஆன்டெணா அதிகாரியிடம் ஜாபர் சேட், “Has the CM gone insane ? Why is he allotting such prime property to these bloody fellows ? They are not worth it. If these fellows are rewarded like this, what respect will they have for IPS officers ? “ என்று கூறுகிறார்.




ஜுன் 2008 வாக்கில், மருத்துவர் ராமதாஸ் அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டு விட்டார் என்று, ஜாபர்சேட் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் மூலமாக முயற்சி செய்கிறார் ஜாபர் சேட்.



பாண்டியன் சார். 2008 ஜுன் மாதத்தில், மக்கள் டிவியில, உங்க மூணு பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கப் பட்டிருக்குன்னு செய்தி வந்தது தெரியுமா ? அது மக்கள் டிவிக்கு எப்படி தெரியும்னு நெனைக்கிறீங்க ?

சவுக்கு, மருத்துவர் ராமதாசை சந்தித்த போது, ராமதாஸ் மூன்று அரசாணைகளை காண்பித்து, இது உண்மையான ஆவணமா எனக் கேட்டார். அந்த அரசாணைகள் உங்கள் மூவருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த ஆவணங்கள். சவுக்கு உண்மையான ஆவணங்கள்தான் என உறுதி செய்ததும் “அந்தப் பய, இதெல்லாம் கொடுத்தா நான் அவன மன்னிச்சுடுவேன்னு நெனைக்கிறான். ஆனா, நான் அவன உட மாட்டேன்“ என்று கூறினார்.

பாண்டியன் சார். மக்கள் டிவியில் இந்தத் தகவல் ஜுன் 2008ல் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறதா ? என்னாதான் நெருங்கிப் பழகினாலும், அவங்க ஐபிஎஸ்தான், நீங்க சாதாரண காண்ஸ்டபிள் தான் சார். அதை மறந்துடாதீங்க. உங்கள என்னைக்குமே ஜாபர் சேட் மதிக்க மாட்டார் சார்.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.

FACT இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்களை விட உளவுத்துறையினர் அதிகமாக இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து சுதாகர் என்ற ஆய்வாளர் அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.

மனுதாரர் சார்பில் ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் தன் கர்ஜனையை தொடங்குகிறது. ஒரு புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த மறுத்ததற்காக நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு அவலச் சூழல் உள்ளது என்று தன் வாதத்தை தொடங்கினார்.



உடனே அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். சரவணன் சார், மனுதாரர் செல்வராஜை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எப்படி இருப்பார் என்று தெரியுமா ? அப்புறம் எதற்கு சார் இப்படி குதிக்கிறீர்கள். எவ்வளவு குதித்தாலும், நீங்கள் எந்தக் காலத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவே முடியாது.

சவுக்கு அது போன்ற ஒரு துன்பியல் சம்பவம் நடப்பதை அனுமதிக்காது. அரசு வழக்கறிஞராக நீங்கள் அந்த நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற விபரங்கள் எல்லாம் சவுக்குக்கு தெரியும்.

விளம்பரத்திற்காக என்று சரவணன் கூறியதும், சிங்கம் சீறியது. அரசு வழக்கறிஞருக்கு, இது போலக் கூறுவதற்கு உரிமையில்லை. அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.

நீதியரசர் சி.டி.செல்வம் ராதாகிருஷ்ணன் அமைதியாக இருங்கள் நீங்கள் ஏன் கோபப் படுகிறீர்கள், என்ற கூறி விட்டு, ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, உங்களிடம் அவர்கள் 75 லட்ச ரூபாயை கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. You cannot go on a fishing expedition I am going to dismiss the petition என்று கூறினார்.

75 லட்ச ரூபாயை கட்டியதற்கான ஆதாரமும், அதைக் கட்டிய அரசு ஊழியரின் மாத ஊதியம் 10,000 என்பதையும் மீறி என்ன எதிர்ப்பார்க்கிறார் நீதியரசர் என்பது வாதாடிய ராதாகிருஷ்ணனுக்கு புரியவில்லை.

அவர், நீங்கள் மனுவை தள்ளுபடி செய்யுங்கள், ஆனால் எனது வாதத்தை பதிவு செய்தவுடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்.

வேறு வழியின்றி, சரி வாதிடுங்கள் என்று கூறினார் நீதியரசர். சிங்கம் தனது கர்ஜனையை தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பணி என்ன, ஒரு புகார் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளை வந்தது.

மதியம் வழக்கு தொடங்கியதும் வழக்கமாக அவசர வழக்க குறித்த நீதிபதியிடம் முறையிடும் நடைமுறையின் படி, வழக்கறிஞர்கள், நீதியரசரிடம் தங்களது வழக்கு குறித்து முறையிட தொடங்கினார்கள். ஒரிருவரை கேட்ட நீதியரசர், நான்காவது நபர் தொடங்கியதும், சமீப காலங்களாக, நீதிமன்றத்தின் நேரத்தை மூன்றாவது நபர்கள் தேவையின்றி வீணடிப்பது நடந்து வருகிறது, இது தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அடுத்து ஒரு வழக்கறிஞர் பேச தொடங்கியதும், நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நான் வழக்கு விசாரணையை எப்படிப் பார்ப்பது என்று கோபப் பட்டார். அனைவரும் அமைதியானார்கள்.

சிங்கம் தனது கர்ஜனையை மீண்டும் தொடங்கியது. ஒரு குடிமகன், ஒரு புகாரை பதிவு செய்யக் கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட நேரிடும் ஒரு அவலம் இந்த நாட்டில்தான் உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் பூர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும் Vigilance Manual புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி விட்டு, உச்சநீதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.



ஒன்றரை மணி நேரம் வாதிட்டு முடித்தபின், அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை நீதியரசரிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதேன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தானே அறிக்கை நீதியரசரிடம் கொடுக்கப் பட்டது. அதற்கு முன்பே இதை தள்ளுபடி செய்கிறேன் என்று ஏன் நீதிபதி சொன்னார் ? என்று கேள்வி கேட்டு நீதிமன்றத்தின் உள்விவாகரங்களுக்குள் தலையிட்டீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவீர்கள் சொல்லி விட்டேன். சவுக்கு வாசகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், சவுக்குக்கு உண்டு.

இருவரும் வாதங்களை முடித்த பின் நீதியரசர், தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்த படி குனிந்து இரண்டு நிமிடங்கள் இருந்தார். பிறகு தலையை கோதினார். (நீதிக்கு தலைவணங்கு என்பதை சிம்பாலிக்கா சொல்றாரோ ?) பிறகு, டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பான தீர்ப்பு அளித்த நீதியரசரை யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள் தானே ? இதோ அந்த நீதியரசர்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால், அதை டிஜிபிக்கு அனுப்பும் ஒரு அற்புதமான நடைமுறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ? இந்த லட்சணத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சிறப்பு ஊதியமாம்.

வழக்கு முடிந்து விட்டது. இனி சவுக்கின் புலன் விசாரணை. இந்த மூன்று பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதா …. பாண்டியன் என்ன செய்கிறார்… அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.




வினோதன் என்ன செய்கிறார். தனக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார்…. அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.

புரியிற மாதிரி சொன்னா. ஒரே நாளில் “கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடி. “ ஜாபர் சேட்டுக்கு கோபம் வர்றது நியாயம் தானே ?

இப்போ பாண்டியனோட வீட்டு மனையில, பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்காங்க சார். சும்மா சூப்பரா இருக்கு.








இப்போ சொல்லுங்க சார். பாதுகாப்புக்கே பாதுகாப்பு தலைப்பு பொருத்தம் தானே ?

சவுக்கு

பாதுகாப்புக்கே பாதுகாப்பு.

அது என்ன ரவுடிக்கே ரவுடி, கில்லாடிக்கு கில்லாடி போல, பாதுகாப்புக்கே பாதுகாப்பு ? இருங்கள் விளக்கமாக சொல்லுகிறேன். ஒரு நபருக்கு சில நபர்கள் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த சில நபருக்கு அந்த ஒரு நபர் பாதுகாப்புக் கொடுத்தால் ? குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்லுகிறேன்.

ஒரு மன்னருக்கு மூன்று பேர் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும், மூன்று பொற்கிழிகளைக் கொடுத்து, அந்த மன்னர் அவர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு தந்தால் ? இது ஏதோ மன்னர் காலத்தில் நடந்த கதை அல்ல.

தற்காலத்தில், சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி, தன்னுடைய பாதுகாவலர்களாக உள்ள, மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கு, 2 கோடி மதிப்புள்ள வீட்டு மனையை வெறும் எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார். தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக.



இவர்கள் மூன்று பேர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்களா, இவரின் கான்வாயின் முன்னும் பின்னும் செல்லும் வண்டிகளில் உள்ள மற்றவர்கள் கருணாநிதியை பாதுகாப்பதில்லையா என்றால் அவர்களும் பாதுகாக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத இந்தப் பொற்கிழி இந்தப் பாண்டியனுக்கும், வினோதனுக்கும், கணேசனுக்கும் மட்டும் ஏன் என்பதை, கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

சரி, இவர்கள் நன்றாக வேலை செய்து, கருணாநிதியை நன்றாக பாதுகாக்கிறார்கள் என்றால், கோபாலபுரம் வீட்டையோ, சிஐடி காலனி வீட்டையோ அல்லவா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் ? மக்களின் சொத்தை எதற்காக இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் ?

ஏனென்றால், மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

மூன்று பாதுகாவல் அதிகாரிகளில், கணேசனுக்கும், வினோதனுக்கும் மட்டும் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்“ என்ற பிரிவின் கீழ் இரண்டு க்ரவுண்டு நிலம். பாண்டியனுக்கும் மட்டும் மனைவி மீனா பெயரில் வீட்டு மனை (பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா).

சரி, இந்த இரண்டு பேர் மட்டும் தான் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால், தமிழக அரசில் பணியாற்றும், மற்ற ஊழியர்கள் எல்லாம் அப்பழுக்குள்ள ஊழியர்களா ?

அவர்களும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிலம் ஏன் வழங்கப் படவில்லை என்ற அதிகப்பிரசங்கி கேள்விகளையெல்லாம் சவுக்கு மாதிரி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.




கருணாநிதியின் இந்த வள்ளல்தன்மை, இப்போது வந்ததல்ல. 1989-90ல் தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர்தான் இந்தக் கருணாநிதி. அவர்கள் இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

கருணாநிதி எப்படிப் பட்ட நபர் என்பதற்கு ஒரு உதாரணம். 1989ல் திமுக ஆட்சி நடக்கிறது. அப்போது பி.எஸ்.சேதுராமன் பாதுகாவல் அதிகாரி இருக்கிறார். அவரிடம் இன்னொரு போலீஸ் அதிகாரி போனில் உரையாடுகிறார்.

“என்ன சேதுராமன் எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் சார். “

“என்னங்க ஜெயலலிதா வீட்ல இருந்து ராஜினாமா கடிதம் எடுத்தாங்களாமே…. உண்மையா ? “

“ஆமா சார். தலைவர் கரெக்டாதான் சார் பண்ணார். இந்த தொரை டிஜிபி இருக்கான்ல.. அவன்தான் உள்ள பூந்து கெடுத்து உட்டுட்டான் சார். இல்லன்னா எப்பபோ அந்த அம்மா போயிருக்கும் சார்“

ஜெயலலிதா, 6 மாதத்துக்கு ஒரு முறை, பால்கனியில் மட்டும் காட்சி தரும் காலம் அது.

ஒரிரு நாள் கழித்து சேதுராமனை அழைத்த கருணாநிதி, மேற்கூறிய உரையாடலை சேதுராமனிடம் ஒரு டேப்பில் போட்டுக் காட்டுகிறார். அதிர்ந்த சேதுராமன் திருதிருவென விழிக்கிறார்.

“என்னப் பத்தில்லாம் நல்லாதான் பேசிருக்க. துரை உனக்கு உயர் அதிகாரியில்ல ? இப்படியா மரியாதை இல்லாம பேசுறது ? “


“இனிமே இப்படிப் பேசாத. போ. “ என்றார். இதுதான் கருணாநிதி. கூடுதல் தகவல், அந்த சேதுராமன், கருணாநிதியின் தூரத்து உறவினர்.

பாண்டியன், வினோதன், கணேசன் ஆகிய மூன்று பேரும், “ட்ராலி பாய்ஸ்“ என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏன் இந்தப் பெயர் வந்தது என்று வரலாற்று ஏடுகளை ஆராய்ந்ததில் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்தால் கூறவும்.





இந்த மூவருக்கும், தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி. இந்த வீட்டு மனை ஒதுக்கீட்டிற்கு, அரசு நிர்ணயித்த விலை 75 லட்ச ரூபாய். இந்த 75 லட்ச ரூபாயை இவர்கள் மூவரும் ஒரே நாளில் செலுத்துகிறார்கள்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெரும் ஒருவர் எப்படி 75 லட்ச ரூபாய் செலுத்த முடியும் என்ற சந்தேகம் எழுந்து, FACT இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்புகிறது. நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் ராமானுஜத்திடம் அந்தப் புகார் நேரில் கொடுக்கப் படுகிறது. அந்த நேர்மையான (?????) ராமானுஜம்,(சார் உங்களைப் பற்றி சவுக்கு தனியே எழுதும்) அந்தப் புகாரின் மேல் மூன்று மாதங்கள் படுத்து உறங்குகிறார். துயில் கலைந்தவுடன், டிசம்பர் 2009ல், அந்தப் புகார் நம்மிடம் இருந்தால் ஆபத்து, என்று கருதி, இதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புகிறார். (ஊழல் புகாரையெல்லாம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புரீங்களே நீங்க என்ன போஸ்ட்மேனா ராமானுஜம் சார் ? இந்த சவுக்கோட பதிவையும் ஒரு ப்ரின்ட் எடுத்து லத்திக்கா சரணுக்கு அனுப்புங்க சார்.)

இத்தோடு இந்தக் கதையில் இடைவேளை. இப்போ ஃப்ளாஷ் பேக். 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த மூவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது ஜாபர் சேட்டிடம், இந்த மூவரும் இந்தத் தகவலைத் தெரிவிக்க, அவர்களிடம் சிரித்துப் பேசி விட்டு சாதாரண இன்ஸ்பெக்டர் பயலுங்களுக்கு ரெண்டு கோடி மதிப்புள்ள வீட்டு மனையை கொடுத்தால், ஐஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பொருமுகிறார்.

அவரிடம் நெருக்கமான அந்த ஆன்டெணா அதிகாரியிடம் ஜாபர் சேட், “Has the CM gone insane ? Why is he allotting such prime property to these bloody fellows ? They are not worth it. If these fellows are rewarded like this, what respect will they have for IPS officers ? “ என்று கூறுகிறார்.




ஜுன் 2008 வாக்கில், மருத்துவர் ராமதாஸ் அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டு விட்டார் என்று, ஜாபர்சேட் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் மூலமாக முயற்சி செய்கிறார் ஜாபர் சேட்.



பாண்டியன் சார். 2008 ஜுன் மாதத்தில், மக்கள் டிவியில, உங்க மூணு பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கப் பட்டிருக்குன்னு செய்தி வந்தது தெரியுமா ? அது மக்கள் டிவிக்கு எப்படி தெரியும்னு நெனைக்கிறீங்க ?

சவுக்கு, மருத்துவர் ராமதாசை சந்தித்த போது, ராமதாஸ் மூன்று அரசாணைகளை காண்பித்து, இது உண்மையான ஆவணமா எனக் கேட்டார். அந்த அரசாணைகள் உங்கள் மூவருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த ஆவணங்கள். சவுக்கு உண்மையான ஆவணங்கள்தான் என உறுதி செய்ததும் “அந்தப் பய, இதெல்லாம் கொடுத்தா நான் அவன மன்னிச்சுடுவேன்னு நெனைக்கிறான். ஆனா, நான் அவன உட மாட்டேன்“ என்று கூறினார்.

பாண்டியன் சார். மக்கள் டிவியில் இந்தத் தகவல் ஜுன் 2008ல் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறதா ? என்னாதான் நெருங்கிப் பழகினாலும், அவங்க ஐபிஎஸ்தான், நீங்க சாதாரண காண்ஸ்டபிள் தான் சார். அதை மறந்துடாதீங்க. உங்கள என்னைக்குமே ஜாபர் சேட் மதிக்க மாட்டார் சார்.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.

FACT இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்களை விட உளவுத்துறையினர் அதிகமாக இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து சுதாகர் என்ற ஆய்வாளர் அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.

மனுதாரர் சார்பில் ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் தன் கர்ஜனையை தொடங்குகிறது. ஒரு புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த மறுத்ததற்காக நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு அவலச் சூழல் உள்ளது என்று தன் வாதத்தை தொடங்கினார்.



உடனே அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். சரவணன் சார், மனுதாரர் செல்வராஜை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எப்படி இருப்பார் என்று தெரியுமா ? அப்புறம் எதற்கு சார் இப்படி குதிக்கிறீர்கள். எவ்வளவு குதித்தாலும், நீங்கள் எந்தக் காலத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவே முடியாது.

சவுக்கு அது போன்ற ஒரு துன்பியல் சம்பவம் நடப்பதை அனுமதிக்காது. அரசு வழக்கறிஞராக நீங்கள் அந்த நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற விபரங்கள் எல்லாம் சவுக்குக்கு தெரியும்.

விளம்பரத்திற்காக என்று சரவணன் கூறியதும், சிங்கம் சீறியது. அரசு வழக்கறிஞருக்கு, இது போலக் கூறுவதற்கு உரிமையில்லை. அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.

நீதியரசர் சி.டி.செல்வம் ராதாகிருஷ்ணன் அமைதியாக இருங்கள் நீங்கள் ஏன் கோபப் படுகிறீர்கள், என்ற கூறி விட்டு, ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, உங்களிடம் அவர்கள் 75 லட்ச ரூபாயை கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. You cannot go on a fishing expedition I am going to dismiss the petition என்று கூறினார்.

75 லட்ச ரூபாயை கட்டியதற்கான ஆதாரமும், அதைக் கட்டிய அரசு ஊழியரின் மாத ஊதியம் 10,000 என்பதையும் மீறி என்ன எதிர்ப்பார்க்கிறார் நீதியரசர் என்பது வாதாடிய ராதாகிருஷ்ணனுக்கு புரியவில்லை.

அவர், நீங்கள் மனுவை தள்ளுபடி செய்யுங்கள், ஆனால் எனது வாதத்தை பதிவு செய்தவுடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்.

வேறு வழியின்றி, சரி வாதிடுங்கள் என்று கூறினார் நீதியரசர். சிங்கம் தனது கர்ஜனையை தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பணி என்ன, ஒரு புகார் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளை வந்தது.

மதியம் வழக்கு தொடங்கியதும் வழக்கமாக அவசர வழக்க குறித்த நீதிபதியிடம் முறையிடும் நடைமுறையின் படி, வழக்கறிஞர்கள், நீதியரசரிடம் தங்களது வழக்கு குறித்து முறையிட தொடங்கினார்கள். ஒரிருவரை கேட்ட நீதியரசர், நான்காவது நபர் தொடங்கியதும், சமீப காலங்களாக, நீதிமன்றத்தின் நேரத்தை மூன்றாவது நபர்கள் தேவையின்றி வீணடிப்பது நடந்து வருகிறது, இது தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அடுத்து ஒரு வழக்கறிஞர் பேச தொடங்கியதும், நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நான் வழக்கு விசாரணையை எப்படிப் பார்ப்பது என்று கோபப் பட்டார். அனைவரும் அமைதியானார்கள்.

சிங்கம் தனது கர்ஜனையை மீண்டும் தொடங்கியது. ஒரு குடிமகன், ஒரு புகாரை பதிவு செய்யக் கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட நேரிடும் ஒரு அவலம் இந்த நாட்டில்தான் உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் பூர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும் Vigilance Manual புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி விட்டு, உச்சநீதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.



ஒன்றரை மணி நேரம் வாதிட்டு முடித்தபின், அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை நீதியரசரிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதேன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தானே அறிக்கை நீதியரசரிடம் கொடுக்கப் பட்டது. அதற்கு முன்பே இதை தள்ளுபடி செய்கிறேன் என்று ஏன் நீதிபதி சொன்னார் ? என்று கேள்வி கேட்டு நீதிமன்றத்தின் உள்விவாகரங்களுக்குள் தலையிட்டீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவீர்கள் சொல்லி விட்டேன். சவுக்கு வாசகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், சவுக்குக்கு உண்டு.

இருவரும் வாதங்களை முடித்த பின் நீதியரசர், தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்த படி குனிந்து இரண்டு நிமிடங்கள் இருந்தார். பிறகு தலையை கோதினார். (நீதிக்கு தலைவணங்கு என்பதை சிம்பாலிக்கா சொல்றாரோ ?) பிறகு, டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பான தீர்ப்பு அளித்த நீதியரசரை யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள் தானே ? இதோ அந்த நீதியரசர்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால், அதை டிஜிபிக்கு அனுப்பும் ஒரு அற்புதமான நடைமுறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ? இந்த லட்சணத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சிறப்பு ஊதியமாம்.

வழக்கு முடிந்து விட்டது. இனி சவுக்கின் புலன் விசாரணை. இந்த மூன்று பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதா …. பாண்டியன் என்ன செய்கிறார்… அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.




வினோதன் என்ன செய்கிறார். தனக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார்…. அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.

புரியிற மாதிரி சொன்னா. ஒரே நாளில் “கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடி. “ ஜாபர் சேட்டுக்கு கோபம் வர்றது நியாயம் தானே ?

இப்போ பாண்டியனோட வீட்டு மனையில, பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்காங்க சார். சும்மா சூப்பரா இருக்கு.








இப்போ சொல்லுங்க சார். பாதுகாப்புக்கே பாதுகாப்பு தலைப்பு பொருத்தம் தானே ?

சவுக்கு

Thursday, August 5, 2010

சோதனைத் தமிழர்.



இந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா ? கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.

ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந்துள்ளார். ஞானி வெளியே போனதற்கும் ஜாபர் சேட் வந்ததற்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு.

ஜாபர் சேட் பற்றி சவுக்கு வாசகர்கள் அறியாததல்ல. ஆனால், சவுக்கு வாசகர்களுக்காகவே, ஏராளமான பணத்தை விரயம் செய்து குமுதம் வார இதழில் நாலரை பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

(சார் இந்த விளம்பரத்துகாவது சொந்தக் காசைக் குடுத்தீங்களா இல்ல இதுவும் ரகசிய நிதியா ? புது வாஸ்து மீன் நல்லா இருக்கா சார் ? கேட்டதா சொல்லுங்க. ஆமா அந்த மீன், நீங்க பேசுறத ஒட்டுக் கேட்குதாமே… ஜாக்ரதையா இருங்க சார். மீன் தொட்டிகிட்ட போயி ரகசியம் பேசாதீங்க)

அந்த விளம்பரம் சவுக்கு வாசகர்களுக்கான இதோ .. … … … …



(மேடம், திருவான்மியூர்ல எல்லா ஃப்ளாட்டும் வித்துப் போன சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது மேடம். தொழில் வெற்றியடைந்தால் தொழில் அதிபருக்கு சந்தோஷம் வருவது இயல்புதானே. ஆனா, இந்த ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆனாலும், எப்படி இதே மாதிரி சந்தோஷமா இருக்கறதுன்னு, ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல பயிற்சி எடுத்துக்குங்க மேடம். காமராஜ் ஹெல்ப் பண்ணுவார். அவரோடதும் கேன்சல் ஆகப் போகுது மேடம்)




(சார். சும்மா சொல்லக் கூடாது சார். நெஜம்மா ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார். சவுக்குல எப்போ பாத்தாலும் உங்க பேஸ் புக் போட்டோவையே போட்டுகிட்டு இருக்கோம்னு வாசகர்கள் வருத்தப் பட்டாங்க. அதுக்காக அத விட அழகான உங்க படத்த கொடுத்ததுக்கு நன்றி சார்.





(என்ன ஜாபர் சார். கருணாநிதிய கெடுத்தது பத்தாதுன்னு தலப்பாக் காரரையும் கெடுக்க முடிவு பண்ணீட்டீங்களா ? நாயுடு மகாஜன சபா தலைவரை பக்கத்துல வச்சுக்கிட்டு இருக்கீங்களே ? சரியான கேடி சார் அந்த ஆள். உங்களையே கவுத்துருவாரு. ஜாக்ரதையா இருங்க. உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சார் சவுக்கு சொல்லுது. கவனமா இருங்க .


எவ்வளவு அழகான குடும்பம் ? எவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறது ? சார், உங்க பேமிலில எல்லாரும் சவுக்கு வாசகர்களாமே ? உண்மையா சார் ? உங்க வெயிட்டிங் பி.சியும், அட்மின் டிஎஸ்பி ராஜ்குமாரும், சவுக்கு வாசகர்கள் என்பது சவுக்குக்கு கண்டிப்பாக தெரியும் ? பேமிலியும் சவுக்கு வாசகர்களா என்பதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும்.

சவுக்கின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார் நண்பர் ஜாபர் சேட். ஆனால், ஆட்சி மாறியதும் அவர் மீது பாயப் போவது பொய் வழக்குகள் அல்ல. உண்மை வழக்குகள். இப்போது மகிழ்ச்சியாக சிரிக்கும் குடும்பத்தில் அப்போது இந்த புன்னகை இருக்காது என்பது வேதனையான விஷயம்.

ஜாபர் சேட்டின் சவுக்குக்கே தெரியாத மறுபக்கத்தை குமுதம் இதழ் காண்பித்திருக்கிறது. ஆனால் மறுபக்கத்துக்கே மறுபக்கத்தை காட்டுவதல்லவா சவுக்கின் வேலை ?

இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?

கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )

இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம் தோழர்களே…..

சவுக்கு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்..

வெள்ளி மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டத்திலும், சனி மாலை சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் நடைபெரும் இதே தலைப்பிலான கூட்டத்திலும் தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

எனெனில் இன்று நாம் உறங்கினோமேயானால், நாளை நாம் இணையத்தில் கூட சந்திக்க முடியாது.

சவுக்கு

சோதனைத் தமிழர்.



இந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா ? கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.

ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந்துள்ளார். ஞானி வெளியே போனதற்கும் ஜாபர் சேட் வந்ததற்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு.

ஜாபர் சேட் பற்றி சவுக்கு வாசகர்கள் அறியாததல்ல. ஆனால், சவுக்கு வாசகர்களுக்காகவே, ஏராளமான பணத்தை விரயம் செய்து குமுதம் வார இதழில் நாலரை பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

(சார் இந்த விளம்பரத்துகாவது சொந்தக் காசைக் குடுத்தீங்களா இல்ல இதுவும் ரகசிய நிதியா ? புது வாஸ்து மீன் நல்லா இருக்கா சார் ? கேட்டதா சொல்லுங்க. ஆமா அந்த மீன், நீங்க பேசுறத ஒட்டுக் கேட்குதாமே… ஜாக்ரதையா இருங்க சார். மீன் தொட்டிகிட்ட போயி ரகசியம் பேசாதீங்க)

அந்த விளம்பரம் சவுக்கு வாசகர்களுக்கான இதோ .. … … … …



(மேடம், திருவான்மியூர்ல எல்லா ஃப்ளாட்டும் வித்துப் போன சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது மேடம். தொழில் வெற்றியடைந்தால் தொழில் அதிபருக்கு சந்தோஷம் வருவது இயல்புதானே. ஆனா, இந்த ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆனாலும், எப்படி இதே மாதிரி சந்தோஷமா இருக்கறதுன்னு, ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல பயிற்சி எடுத்துக்குங்க மேடம். காமராஜ் ஹெல்ப் பண்ணுவார். அவரோடதும் கேன்சல் ஆகப் போகுது மேடம்)




(சார். சும்மா சொல்லக் கூடாது சார். நெஜம்மா ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார். சவுக்குல எப்போ பாத்தாலும் உங்க பேஸ் புக் போட்டோவையே போட்டுகிட்டு இருக்கோம்னு வாசகர்கள் வருத்தப் பட்டாங்க. அதுக்காக அத விட அழகான உங்க படத்த கொடுத்ததுக்கு நன்றி சார்.





(என்ன ஜாபர் சார். கருணாநிதிய கெடுத்தது பத்தாதுன்னு தலப்பாக் காரரையும் கெடுக்க முடிவு பண்ணீட்டீங்களா ? நாயுடு மகாஜன சபா தலைவரை பக்கத்துல வச்சுக்கிட்டு இருக்கீங்களே ? சரியான கேடி சார் அந்த ஆள். உங்களையே கவுத்துருவாரு. ஜாக்ரதையா இருங்க. உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சார் சவுக்கு சொல்லுது. கவனமா இருங்க .


எவ்வளவு அழகான குடும்பம் ? எவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறது ? சார், உங்க பேமிலில எல்லாரும் சவுக்கு வாசகர்களாமே ? உண்மையா சார் ? உங்க வெயிட்டிங் பி.சியும், அட்மின் டிஎஸ்பி ராஜ்குமாரும், சவுக்கு வாசகர்கள் என்பது சவுக்குக்கு கண்டிப்பாக தெரியும் ? பேமிலியும் சவுக்கு வாசகர்களா என்பதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும்.

சவுக்கின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார் நண்பர் ஜாபர் சேட். ஆனால், ஆட்சி மாறியதும் அவர் மீது பாயப் போவது பொய் வழக்குகள் அல்ல. உண்மை வழக்குகள். இப்போது மகிழ்ச்சியாக சிரிக்கும் குடும்பத்தில் அப்போது இந்த புன்னகை இருக்காது என்பது வேதனையான விஷயம்.

ஜாபர் சேட்டின் சவுக்குக்கே தெரியாத மறுபக்கத்தை குமுதம் இதழ் காண்பித்திருக்கிறது. ஆனால் மறுபக்கத்துக்கே மறுபக்கத்தை காட்டுவதல்லவா சவுக்கின் வேலை ?

இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?

கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )

இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம் தோழர்களே…..

சவுக்கு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்..

வெள்ளி மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டத்திலும், சனி மாலை சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் நடைபெரும் இதே தலைப்பிலான கூட்டத்திலும் தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

எனெனில் இன்று நாம் உறங்கினோமேயானால், நாளை நாம் இணையத்தில் கூட சந்திக்க முடியாது.

சவுக்கு

Tuesday, August 3, 2010

தலைகீழ் விகிதங்கள்.


ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை விட, இந்த அதிகாரிகள், இச்சமுதாயத்தின் புற்று நோய் என்று சவுக்கு எப்போதுமே சொல்லி வந்திருக்கிறது.

ஊழல் செய்யும் அரசியல் வாதிகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தலித்துகள் வீட்டிலும், சேரிகளிலும், ஏழைகள் வீட்டுக்கும் வந்தே ஆக வேண்டும். அவர்களை சில சமயங்களிலாவது, கேடும் கோபம் கொண்டு, மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. பச்சோந்திகள் போல பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்து தங்கள் பிழைப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் பெரிய அளவில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தொடங்கியது 1991க்குப் பிறகு தான். அதற்கு முன்னாலும் ஊழல் இருந்ததென்றாலும், சகட்டு மேனிக்கு சகல மட்டத்திலும் ஊழல் புரையோடிப் போனது 1991 முதல் தான்.

பஞ்சாயத்துக்காக வாங்கும் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் என்றால், நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், தொட்டில் குழந்தைக்கு மோதிரம் வழங்குவதில் தொடங்கி சுடுகாட்டுக் கூரை வரை ஊழல் வானளாவிக் கிடந்தது.

அன்று தொடங்கிய ஊழல் இன்று கொடி கட்டிப் பறக்கிறது. ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும், பெரும்பாலானவர்கள் இன்று அதிகார மட்டத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கும் அவலம் இருக்கத் தான் செய்கிறது.

சி.ராமச்சந்திரன் என்று என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். இவருக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 4 பதவி நீட்டிப்புகள் கொடுக்கப் பட்டன. 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், முதலில் பணி இடை நீக்கம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரி இவர்தான்.

இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் 1996ல் பதியப் பட்டன. சிபி.சிஐடியில் ஒரு 5 வழக்குகள். இவர் மீத இத்தனை வழக்குகள் பதியப்பட்டதற்கு காரணம், மனிதர் கையெழுத்துப் போட சளைக்க மாட்டார். யாராவது ஒரு நாள் லீவ் வேண்டுமென்று கேட்டால் கூட பணம் கேட்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இவரைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதுண்டு.

திமுக ஆட்சியில் இவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

இன்று இந்த சி.ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?

உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி, திடீரென்று பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப் பட்டதற்கு காரணம் மாறன் சகோதரர்களின் எஸ்சிவி நிறுவனம்தான் என்று பரவலாக பேசப்பபடுகிறது.

ஆனால் உண்மையான மதுரையில் உள்ள அதிகார மையம் தான். எல்காட்டும், நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து “எல்நெட்” என்ற புதிய நிறுவனத்தை கூட்டாக உருவாக்குகின்றன. இந்த எல்நெட் நிறுவனம், ”ஈடிஎல்” என்ற கட்டுமான நிறுவனத்தை புதிதாக, தனியாக உருவாக்குகிறது. உருவாக்கி, எல்நெட் நிறுவனத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து, ஏறக்குறைய 700 கோடிகளை கபளீகரம் செய்து விட்டு காணாமல் போகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உமாசங்கரின் சாதிச் சான்றிதழ் கேள்விக் குறியாக்கப் படுகிறது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் படுகிறார்.

இந்த எல்நெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பவர் ”சி.ராமச்சந்திரன்”. மதுரை அதிகார மையம் காணாமல் போன அந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எப்படி இருக்கிறது ?

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்குகளில் மிகத் தீவிரம் காட்டி, வேகமாக இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத புலனாய்வு அதிகாரிகளை கடுமையாக சாடியவர் கே.ராதாகிருஷ்ணன்.

அப்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப் பட்ட வழக்கு, ஆற்காடு வீராச்சாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில், ஆற்காட்டாரின் தம்பி தேவராஜன் எழுபதுகள் முதல் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வந்த கணக்குகளால் இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால், ஆற்காட்டார் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாது என்று அந்த புலனாய்வு அதிகாரி கூறி விட்டார்.

இந்த ராதாகிருஷ்ணன், தினமும் இரண்டு முறை அந்த அதிகாரியை தனது அறைக்கு அழைப்பார். என்ன ஆச்சு குற்றப் பத்திரிக்கை என்று கேட்பார். அந்த அதிகாரி சார் எவிடென்ஸ் இல்ல சார் என்பா. ஒழுங்கா விசாரிங்க. எவிடென்ஸ் கிடைக்கும் என்பார். இப்படியே 2006 வரை போனது.



ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும், நாஞ்சில் குமரன் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பது போல ஒரு அறிக்கையை தருகிறார். ஆட்சி முடிய இரண்டு மாதங்களுக்கு முன் அந்த அறிக்கை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் படுகிறது.

இந்த ராதாகிருஷ்ணனுக்கு, இதே ஆற்காடு வீராச்சாமி திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி வாங்கித் தருகிறார். இவர்கள் இருவருக்குமான ஒரே இணைப்புப் பாலம் ”நாயுடு என்ற சாதி”

நாஞ்சில் குமரன் லஞ்ச ஒழிப்புத் தறை இயக்குநராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா ?



காலையில் அவர் மேசையில் நமது எம்ஜிஆர் பேப்பர் இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு செல்லும் கோப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகை பச்சை நிறம். தமிழ்நாட்டில் வனத் துறையை தவிர எந்த அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் பச்சை நிறத்தில் இருப்பதில்லை என்ற விதியை மீறி பச்சை நிறம்.

தன்னுடைய சன்னல் கண்ணாடிகளைக் கூட நாஞ்சில் குமரன் பச்சை நிறத்தில் மாற்றி தனது அதிமுக விசுவாசத்தை பறைசாற்றினார். இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் சன்னல் கண்ணடிகள் பச்சை நிறத்தில் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட நாஞ்சில் குமரன், தேர்தல் முடிந்த மறுநாள், காலையிலேயே மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தனது குடும்பமே திமுக குடும்பம் என்றார். சென்னை மாநகர கமிஷனர் ஆனார். எப்பூடி…..

சிவணான்டி. ஜெயலலிதா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றினாலும் டிஜிபிக்கும் மேல் ஒரு பதவி இருந்தால் என்ன அதிகாரம் இருக்குமோ அப்படி இருந்தார் சிவனாண்டி. சென்னை ஹாடோஸ் சாலையில் 65 லட்ச ரூபாய்க்கு ஒரு Flat வாங்கியதாகவும், ஒரு ஹோண்டா சிட்டி கார் வாங்கியதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

கருணாநிதியே ஒரு கூட்டத்தில் சில அதிகாரிகள், கட்சிக் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்று கூறினார். மதிமுக பொதுச் செயலர் வைகோவை, திமுக கூட்டணியிலிருந்து பிரித்து அதிமுக கூட்டணிக்கு சென்று சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார்.

அப்படிப் பட்ட சிவணான்டி, இன்று கருணாநிதி அரசில் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரி.

கருணாநிதியின் நள்ளிரவுக் கைதில் முக்கியப் பங்கு வகித்தவர் முத்துக் கருப்பன். இந்த முத்துக் கருப்பன் அவர் செய்த சில முறைகேடுகளால் ஜெயலலிதாவால் இடைநீக்கம் செய்யப் பட்டு, 2006 வரை மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.

அப்படிப் பட்ட முத்துக் கருப்பனுக்கு, மீண்டும் பதவி வழங்கியது கருணாநிதிதான்.

2001ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதியப் பட்ட மற்றொரு வழக்கு சென்னை மாநகர் முழுவதும் கழிவு நீர்க் குழாய்களை புதுப்பிப்பது. இதற்காக உலக வங்கி மற்றும் ஜப்பானிய வங்கியிடம் நிதி உதவி பெற்று வேலைகள் நடத்தப் பட்டன.

மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் விதிகளின் படி, சாலையை எங்கு வெட்டினாலும், அதை மூடும் முன், அதில் மணலைக் கொட்டி மூட வேண்டும் என்பது. கழிவு நீர்க் குழாய்கள் அனைத்தையும் மாற்றும் போது ஏராளமான மணலைக் கொட்டி மூடியிருக்க வேண்டும்.

இந்த வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, மணலை கொட்டி சாலையை மூடியதாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட மணலைக் கொட்டாமல் கொட்டியதாக போலியாக பட்டியல் தயாரித்து ஊழல் புரிந்ததில் 68 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்.

இந்த புகாரில் அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஓர் ஆண்டு விசாரணை முடிந்தவுடன், முன்னாள் மாநகர மேயர் மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, உலக வங்கிக் குழு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வு மேற்கொள்ள வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு பற்றி பவர்பாயிண்ட் ப்ரசென்டேஷன் ஒன்று தயாரிக்க உத்தரவிட்டார். அந்த ப்ரசென்டேஷனில் இந்த மணல் வழக்கில் 68 கோடி ரூபாய்க்கு பதிலாக 600 கோடி ஊழல் என்று மாற்றச் சொன்னார். எதற்கென்றால், இத்தனை கோடி ரூபாய் ஊழலை கண்டு பிடித்த ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் நமக்குத் தேவை என்று உலக வங்கி அதிகாரிகள் அழைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கம். அவர் உத்தவவுப் படியே தயாரிக்கப் பட்டது. இதை பார்வையிட்ட அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நாஞ்சில் குமரன் “யாருய்யா இதை பிரிப்பேர் பண்ணது. கொடுத்த 1000 கோடியில 700 கோடி ஊழல்னா எப்படிய்யா வேர்ல்ட்டு பேங்க்ல லோன் குடுப்பான் ? “ என்று கத்திய போது, ராதாகிருஷ்ணன் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்திருந்தார்.



பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.

அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டாம். பொறியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை என்று தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையிலான மூவர் குழு பரிந்துரை செய்தது. பொறியாளர்கள் சும்மா இருப்பார்களா ? இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.

பம்மிய அரசாங்கம் கடந்த மாதம், பொறியாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கையை கைவிட்டு ஆணை வெளியிட்டது.

மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அளித்த ராதாகிருஷ்ணன், இன்று திமுக ஆட்சியில் பலம் வாய்ந்த அதிகாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

68 கோடி ரூபாய் ஊழலில் முக்கியப் பங்கு வகித்த மாலதி ஐஏஎஸ், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையை கட்டுப் படுத்தும் விழிப்புப் பணி ஆணையர்.

68 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத் துறையால் சுட்டிக் காட்டப் பட்ட மு.க.ஸ்டாலின், வழக்கை சந்திக்காமலேயே, தனது அதிகாரத்தால் அந்த வழக்கை மூடி விட்டு, நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த ஜெயலலிதா, வழக்கை இழுத்தடிக்கிறார் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.





இதெல்லாம் தலைகீழ் விகிதங்கலல்லாமல் வேறு என்ன ?

சவுக்கு

தலைகீழ் விகிதங்கள்.


ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை விட, இந்த அதிகாரிகள், இச்சமுதாயத்தின் புற்று நோய் என்று சவுக்கு எப்போதுமே சொல்லி வந்திருக்கிறது.

ஊழல் செய்யும் அரசியல் வாதிகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தலித்துகள் வீட்டிலும், சேரிகளிலும், ஏழைகள் வீட்டுக்கும் வந்தே ஆக வேண்டும். அவர்களை சில சமயங்களிலாவது, கேடும் கோபம் கொண்டு, மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. பச்சோந்திகள் போல பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்து தங்கள் பிழைப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் பெரிய அளவில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தொடங்கியது 1991க்குப் பிறகு தான். அதற்கு முன்னாலும் ஊழல் இருந்ததென்றாலும், சகட்டு மேனிக்கு சகல மட்டத்திலும் ஊழல் புரையோடிப் போனது 1991 முதல் தான்.

பஞ்சாயத்துக்காக வாங்கும் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் என்றால், நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், தொட்டில் குழந்தைக்கு மோதிரம் வழங்குவதில் தொடங்கி சுடுகாட்டுக் கூரை வரை ஊழல் வானளாவிக் கிடந்தது.

அன்று தொடங்கிய ஊழல் இன்று கொடி கட்டிப் பறக்கிறது. ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும், பெரும்பாலானவர்கள் இன்று அதிகார மட்டத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கும் அவலம் இருக்கத் தான் செய்கிறது.

சி.ராமச்சந்திரன் என்று என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். இவருக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 4 பதவி நீட்டிப்புகள் கொடுக்கப் பட்டன. 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், முதலில் பணி இடை நீக்கம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரி இவர்தான்.

இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் 1996ல் பதியப் பட்டன. சிபி.சிஐடியில் ஒரு 5 வழக்குகள். இவர் மீத இத்தனை வழக்குகள் பதியப்பட்டதற்கு காரணம், மனிதர் கையெழுத்துப் போட சளைக்க மாட்டார். யாராவது ஒரு நாள் லீவ் வேண்டுமென்று கேட்டால் கூட பணம் கேட்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இவரைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதுண்டு.

திமுக ஆட்சியில் இவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

இன்று இந்த சி.ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?

உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி, திடீரென்று பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப் பட்டதற்கு காரணம் மாறன் சகோதரர்களின் எஸ்சிவி நிறுவனம்தான் என்று பரவலாக பேசப்பபடுகிறது.

ஆனால் உண்மையான மதுரையில் உள்ள அதிகார மையம் தான். எல்காட்டும், நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து “எல்நெட்” என்ற புதிய நிறுவனத்தை கூட்டாக உருவாக்குகின்றன. இந்த எல்நெட் நிறுவனம், ”ஈடிஎல்” என்ற கட்டுமான நிறுவனத்தை புதிதாக, தனியாக உருவாக்குகிறது. உருவாக்கி, எல்நெட் நிறுவனத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து, ஏறக்குறைய 700 கோடிகளை கபளீகரம் செய்து விட்டு காணாமல் போகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உமாசங்கரின் சாதிச் சான்றிதழ் கேள்விக் குறியாக்கப் படுகிறது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் படுகிறார்.

இந்த எல்நெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பவர் ”சி.ராமச்சந்திரன்”. மதுரை அதிகார மையம் காணாமல் போன அந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எப்படி இருக்கிறது ?

2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்குகளில் மிகத் தீவிரம் காட்டி, வேகமாக இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத புலனாய்வு அதிகாரிகளை கடுமையாக சாடியவர் கே.ராதாகிருஷ்ணன்.

அப்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப் பட்ட வழக்கு, ஆற்காடு வீராச்சாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில், ஆற்காட்டாரின் தம்பி தேவராஜன் எழுபதுகள் முதல் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வந்த கணக்குகளால் இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால், ஆற்காட்டார் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாது என்று அந்த புலனாய்வு அதிகாரி கூறி விட்டார்.

இந்த ராதாகிருஷ்ணன், தினமும் இரண்டு முறை அந்த அதிகாரியை தனது அறைக்கு அழைப்பார். என்ன ஆச்சு குற்றப் பத்திரிக்கை என்று கேட்பார். அந்த அதிகாரி சார் எவிடென்ஸ் இல்ல சார் என்பா. ஒழுங்கா விசாரிங்க. எவிடென்ஸ் கிடைக்கும் என்பார். இப்படியே 2006 வரை போனது.



ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும், நாஞ்சில் குமரன் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பது போல ஒரு அறிக்கையை தருகிறார். ஆட்சி முடிய இரண்டு மாதங்களுக்கு முன் அந்த அறிக்கை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் படுகிறது.

இந்த ராதாகிருஷ்ணனுக்கு, இதே ஆற்காடு வீராச்சாமி திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி வாங்கித் தருகிறார். இவர்கள் இருவருக்குமான ஒரே இணைப்புப் பாலம் ”நாயுடு என்ற சாதி”

நாஞ்சில் குமரன் லஞ்ச ஒழிப்புத் தறை இயக்குநராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா ?



காலையில் அவர் மேசையில் நமது எம்ஜிஆர் பேப்பர் இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு செல்லும் கோப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகை பச்சை நிறம். தமிழ்நாட்டில் வனத் துறையை தவிர எந்த அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் பச்சை நிறத்தில் இருப்பதில்லை என்ற விதியை மீறி பச்சை நிறம்.

தன்னுடைய சன்னல் கண்ணாடிகளைக் கூட நாஞ்சில் குமரன் பச்சை நிறத்தில் மாற்றி தனது அதிமுக விசுவாசத்தை பறைசாற்றினார். இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் சன்னல் கண்ணடிகள் பச்சை நிறத்தில் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட நாஞ்சில் குமரன், தேர்தல் முடிந்த மறுநாள், காலையிலேயே மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தனது குடும்பமே திமுக குடும்பம் என்றார். சென்னை மாநகர கமிஷனர் ஆனார். எப்பூடி…..

சிவணான்டி. ஜெயலலிதா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றினாலும் டிஜிபிக்கும் மேல் ஒரு பதவி இருந்தால் என்ன அதிகாரம் இருக்குமோ அப்படி இருந்தார் சிவனாண்டி. சென்னை ஹாடோஸ் சாலையில் 65 லட்ச ரூபாய்க்கு ஒரு Flat வாங்கியதாகவும், ஒரு ஹோண்டா சிட்டி கார் வாங்கியதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.

கருணாநிதியே ஒரு கூட்டத்தில் சில அதிகாரிகள், கட்சிக் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்று கூறினார். மதிமுக பொதுச் செயலர் வைகோவை, திமுக கூட்டணியிலிருந்து பிரித்து அதிமுக கூட்டணிக்கு சென்று சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார்.

அப்படிப் பட்ட சிவணான்டி, இன்று கருணாநிதி அரசில் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரி.

கருணாநிதியின் நள்ளிரவுக் கைதில் முக்கியப் பங்கு வகித்தவர் முத்துக் கருப்பன். இந்த முத்துக் கருப்பன் அவர் செய்த சில முறைகேடுகளால் ஜெயலலிதாவால் இடைநீக்கம் செய்யப் பட்டு, 2006 வரை மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.

அப்படிப் பட்ட முத்துக் கருப்பனுக்கு, மீண்டும் பதவி வழங்கியது கருணாநிதிதான்.

2001ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதியப் பட்ட மற்றொரு வழக்கு சென்னை மாநகர் முழுவதும் கழிவு நீர்க் குழாய்களை புதுப்பிப்பது. இதற்காக உலக வங்கி மற்றும் ஜப்பானிய வங்கியிடம் நிதி உதவி பெற்று வேலைகள் நடத்தப் பட்டன.

மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் விதிகளின் படி, சாலையை எங்கு வெட்டினாலும், அதை மூடும் முன், அதில் மணலைக் கொட்டி மூட வேண்டும் என்பது. கழிவு நீர்க் குழாய்கள் அனைத்தையும் மாற்றும் போது ஏராளமான மணலைக் கொட்டி மூடியிருக்க வேண்டும்.

இந்த வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, மணலை கொட்டி சாலையை மூடியதாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட மணலைக் கொட்டாமல் கொட்டியதாக போலியாக பட்டியல் தயாரித்து ஊழல் புரிந்ததில் 68 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்.

இந்த புகாரில் அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஓர் ஆண்டு விசாரணை முடிந்தவுடன், முன்னாள் மாநகர மேயர் மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, உலக வங்கிக் குழு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வு மேற்கொள்ள வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு பற்றி பவர்பாயிண்ட் ப்ரசென்டேஷன் ஒன்று தயாரிக்க உத்தரவிட்டார். அந்த ப்ரசென்டேஷனில் இந்த மணல் வழக்கில் 68 கோடி ரூபாய்க்கு பதிலாக 600 கோடி ஊழல் என்று மாற்றச் சொன்னார். எதற்கென்றால், இத்தனை கோடி ரூபாய் ஊழலை கண்டு பிடித்த ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் நமக்குத் தேவை என்று உலக வங்கி அதிகாரிகள் அழைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கம். அவர் உத்தவவுப் படியே தயாரிக்கப் பட்டது. இதை பார்வையிட்ட அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நாஞ்சில் குமரன் “யாருய்யா இதை பிரிப்பேர் பண்ணது. கொடுத்த 1000 கோடியில 700 கோடி ஊழல்னா எப்படிய்யா வேர்ல்ட்டு பேங்க்ல லோன் குடுப்பான் ? “ என்று கத்திய போது, ராதாகிருஷ்ணன் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்திருந்தார்.



பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.

அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டாம். பொறியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை என்று தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையிலான மூவர் குழு பரிந்துரை செய்தது. பொறியாளர்கள் சும்மா இருப்பார்களா ? இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.

பம்மிய அரசாங்கம் கடந்த மாதம், பொறியாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கையை கைவிட்டு ஆணை வெளியிட்டது.

மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அளித்த ராதாகிருஷ்ணன், இன்று திமுக ஆட்சியில் பலம் வாய்ந்த அதிகாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

68 கோடி ரூபாய் ஊழலில் முக்கியப் பங்கு வகித்த மாலதி ஐஏஎஸ், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையை கட்டுப் படுத்தும் விழிப்புப் பணி ஆணையர்.

68 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத் துறையால் சுட்டிக் காட்டப் பட்ட மு.க.ஸ்டாலின், வழக்கை சந்திக்காமலேயே, தனது அதிகாரத்தால் அந்த வழக்கை மூடி விட்டு, நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த ஜெயலலிதா, வழக்கை இழுத்தடிக்கிறார் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.





இதெல்லாம் தலைகீழ் விகிதங்கலல்லாமல் வேறு என்ன ?

சவுக்கு

Saturday, July 31, 2010

விக்கிலீக்கும், வின்னர் வடிவேலுவும்.



விக்கி லீக்குக்கும் வின்னர் வடிவேலுவுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா ? விக்கிலீக் இணைய தளம் வெளியிடும் ரகசிய ஆவணங்கள், சம்பந்தப் பட்ட நபர்களை “வேண்டாம்….. வலிக்குது… அப்புறம் அழுதுடுவேன். “ என்று சொல்ல வைக்கும் தன்மை படைத்தன.

விக்கிலீக் இணையதளம், சமீபத்தில் தனது இணைய தளத்தில் அப்கான் டைரிகள் என்ற அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டன. இந்த ஆவணங்கள், ஆப்கான் போரில் அமேரிக்க ராணுவம் சந்தித்த இழப்புகள் மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்தினர், கண்மூடித்தனமாக எத்தனை அப்பாவிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர் என்ற உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்த அமெரிக்க அதிபர் ஓபாமா, இது ஒன்றும் புதிய விஷயமில்லை என்று கூறியிருக்கிறார். புதிய விஷயமில்லை என்றால் ஏற்கனவே வெளியிட்டிருக்க வேண்டியதுதானே ?

இந்த இணைய தளம் 2007ம் ஆண்டு முதல் செயல் பட்டு வருகிறது. இந்த இணைய தளம் உருவான வரலாறு தெரியுமா ? இணையத்தில் உலவும் பல்வேறு தன்னார்வர்கள் உலகின் வறுமைக்கும் பஞ்சத்திற்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம் அரசுகளின் ஊழலே என்று முடிவெடுத்தனர். இந்த ஊழலை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதுதான் விக்கிலீக்.

உலகெங்கும் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். (ஜாபர் சேட் கூடவே இருந்து, சவுக்குக்கு ஆவணங்களை தருவதில்லையா ? அதுபோலத்தான்) 1971ம் ஆண்டு அமெரிக்காவில் வியட்நாம் போர் தொடர்பாக டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ஒருவர் வியட்நாம் போர் தொடர்பான 7000 பக்க ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்களில் தொடராக வெளியிடக் காரணமாக இருந்தார்.

இந்த ஆவணங்களை வெளிவரக் காரணமாக இருந்த டேனியல் எல்ஸ்பெர்க் என்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி இந்த ஆவணங்களை வெளியிட்டது குறித்து என்ன கூறினார் தெரியுமா ?

“ஒரு அமெரிக்க குடிமகனாக, இந்த தகவலை மறைப்பதில் இனியும் நான் பங்கு வகிக்க முடியும் என்று நான் கருதவில்லை. இந்தக் காரியத்தை (ஆவணங்களை வெளியிட்டது) எனக்கு ஆபத்து என்று அறிந்தே, இதற்கான விளைவுகளை சந்திக்க தயாராகவே இந்தக் காரியத்தை செய்கிறேன். “

இந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று அமெரிக்க பகீரத பிரயத்தனம் செய்தது. நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெற்றது. இந்த ஆவணங்களை பதிப்பிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் 9க்கு 3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் இந்த ஆவணங்களை வெளியிடலாம் என்று தீர்ப்பளித்து, அரசாங்கங்கள் செய்யும் தவறுகளை வெளியிடுவது பத்திரிக்கைகளின் கடமை என்று தெரிவித்தது.


உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு விரோதமாக செய்யும் நடவடிக்கைகளை மக்களிடமிருந்து மறைத்தே வந்துள்ளனர். இவ்வாறு மறைப்பதை தேசத்தின் பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மழுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், எப்படியாகிலும், என்றாவது ஒரு நாள் உண்மை வந்துதானே தீரும் ?

தமிழகத்தை பொறுத்தவரை, அரசு அலுவலகங்களில் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் ஊழல்களின் ஆவணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அரசு ஊழியர்களில் பெரும்பாலானோல், ஒன்று அந்த ஊழல்களின் பங்குதாரர்களாக உள்ளனர். அல்லது பணிப்பாதுகாப்பு காரணமாக பயப்படுகின்றனர்.

அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்ற ஒன்றை அமைத்து, அதற்கான மக்கள் வரிப்பணம் 700 கோடி ரூபாய் வீணாகிறதே என்று வருத்தப் பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகத் தானே உமாசங்கர் இன்று பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார் ?

சரி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. இனி அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு மூடு விழா நடத்தலாம். 700 கோடி ரூபாய் வீணாகப் போனால் என்ன ? மக்கள் பணம்தானே என்று அலட்சியமாக இருந்தால், இன்று தலைமைச் செயலகத்தில், கருணாநிதியின் அலுவலகத்தில் கூட பணியாற்றிக் கொண்டிருந்திருப்பார்.

இது விழிப்புப் பணி இணை ஆணையராக பணியாற்றிக் கொண்டிருந்த போது உமாசங்கர் வெளிக் கொண்டு வந்ததுதான், சிஸ்கோ பங்குகளை சகாய விலைக்கு விற்ற ஊழல்.
இப்போது ஜாபர் சேட் சர்வ வல்லமை படைத்து கோலோச்சுவது போலவே 2001-2006 அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர் என்.நாராயணன். இவர் அதிமுகவின் இறுதி காலத்தில் தலைமைச் செயலாளராக இருந்தார். லட்சுமி ப்ரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்த போது நிதித் துறைச் செயலாளராக இருந்த நாராயணன், சர்வ வல்லமை படைத்தவராக இருந்தார்.

1996ல் உமா சங்கர் இணை ஆணையராக இருந்த போது அவரது பார்வைக்கு வந்த ஒரு கோப்பு சிஸ்கோ கப்பல் கட்டும் நிறுவனத்தின் (தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனம்) பங்குகளை TIIC எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் வைத்திருந்தது. இந்தப் பங்குகளை ஸ்பிக் அதிபர் ஏ.சி.முத்தையாவுக்கு விற்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
என்ன விலைக்கு விற்பது.

இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 600 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தது. 600 ரூபாய்க்கு விற்கப் பட்ட ஒரு பங்கு ரூபாய் 2075 வரை விலை போனது. ஆனால் இந்தப் பங்கை 375 ரூபாய்க்கு விற்க ஏதுவாக, அப்போது நிதித் துறை செயலாளராக இருந்த என்.நாராயணன் ஒரு அரசாணையை வெளியிட்டார். இப்போது தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன், நாராயணனுக்கு ஒத்து ஊதி, இந்தப் பங்குகளை 375 ரூபாய்க்கு ஸ்பிக் நிறுவனத்திற்கு விற்று விட்டனர்.

இந்த நேர்வில் 170 கோடி ரூபாய்க்கு மேல் (1996ல இது பெரிய அமவுண்ட் சார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்ததும், எல்லாமே சின்ன அமவுண்ட்டா ஆயிடுச்சு) அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உமாசங்கர் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்கிறார்.

இவர் பரிந்துரையின் படி, ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. இந்த வழக்கை, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்பி யாக உள்ள எம்.ஜெயபாலன் என்பவர் கையாள்கிறார். இந்நிலையில் நெல்லை ஜெபமணி என்பவர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த அரசு, விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் எப்ஐஆர் தாக்கல் செய்யப் படும் என்றும் தெரிவிக்கிறது.
இந்நிலையில், எப்ஐஆர் தாக்கல் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்குள், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து விடுகிறது.

தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் 2001 முதல் 2006 முதல் முடிவுக்கு கொண்டு வந்த நாராயணன், இந்த வழக்கை மட்டும் முடிக்க முடியவில்லை. நெல்லை ஜெபமணி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே அதற்கு காரணம். எப்ஐஆர் தாக்கல் செய்யப் போகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விட்டு, வழக்கை எப்படி முடிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார் நாராயணன்.
2006ம் வந்து விட்டது.

ஜனவரி மாதம் முதலே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுகிறது. இந்நிலையில் தன் மீதுள்ள இந்த வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் நாராயணன், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த நாஞ்சில் குமரனிடம் இது குறித்துப் பேசுகிறார். நாஞ்சில் குமரன், இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று ஒரு அறிக்கை அனுப்புவதாகவும், அதன் அடிப்படையில் வழக்கை முடித்து விடலாம் என்றும் ஆலோசனை கூறுகிறார்.



இதற்கு பலி கடாவாக, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாலன் என்ற டிஎஸ்பி யிடம் இது தொடர்பான அறிக்கை கேட்கப் படுகிறது. பாலன், அவ்வாறே அறிக்கை அனுப்புகிறார்.

இவ்வாறு அனுப்பப் பட்ட அறிக்கை அரசை அடைவதற்குள், தேர்தல் அறிவிக்கப் பட்டு விடுகிறது. தேர்தல் முடிந்து திமுக பதவியேற்ற இரண்டாவது நாள்.

நாஞ்சில் குமரன் செய்த முதல் காரியம், பச்சை நிறத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகையை இரவோடு இரவாக நீல நிறத்தில் மாற்றுகிறார். தனக்கு கீழ் பணியாற்றும் திமுக வோடு தொடர்பு இருக்கிறது என்று கருதப்படும் அதிகாரிகளை மீட்டிங் என்று அழைத்து, எங்கள் குடும்பமே திமுக குடும்பம் என்று புளுகுகிறார்.




நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளைப் பார்த்திருக்கிறோமே எப்படி இந்த ஆட்சியில் நல்ல பதவியை வாங்குவது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நாஞ்சில் குமரன், லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி மேலாளராக இருந்த ஜெயஸ்ரீ என்பவரை அழைக்கிறார். அவர் கையில் ஒரு அரசாணையை எடுத்துக் கொடுக்கிறார். அந்த அரசாணையில் சிஸ்கோ ஊழல் தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் நாராயணன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் கைவிடப் பட்டன என்று உள்ளது.

இதை அந்த ஜெயஸ்ரீயிடம் அளித்து, இந்த கடிதம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தது போலவும், இதன் நகலை புலனாய்வு அதிகாரிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பியது போலவும் கோப்பை தயாரித்து கொண்டு வருமாறு கூறுகிறார். அப்போது கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணனும் உடன் இருக்கிறார்.


அந்த ஜெயஸ்ரீ உதவி மேலாளரல்லவா ? தனக்குக் கீழ் பணியாற்றும் உதவியாளரிடம் இது போல பழைய தேதியிட்டு கோப்பை தயாரித்து வருமாறு சொல்ல, அந்த உதவியாளர் “மேடம். இது சட்ட விரோதம். தப்பு. அதிகாரிங்க பேச்சக் கேட்டு தப்பு பண்ணாதீங்க“ என்று கூறுகிறார். அதற்கு ஜெயஸ்ரீ டைரக்டர் சொல்லும் போது கேட்டுத் தானே ஆகணும் என்று கூறுகிறார். “டைரக்டர் சொன்னா நீங்களே செய்யுங்க. நான் செய்ய மாட்டேன்“ என்று கூறுகிறார்.

இதைக் கேட்டவுடன், உதவியாளர் எழுதாமல் நாமே கோப்பை தயாரித்தால் சிக்கலாகுமே என்று தயங்குகிறார்.

இந்நிலையில் ராதாகிருஷ்ணனிடமிருந்து ஜெயஸ்ரீக்கு அழைப்பு வருகிறது. கோப்பு தயாராயிற்றா என்று கேட்கிறார். இவர் இல்லை என்றதும் உடனடியாக தயார் செய்யுங்கள் என்கிறார் ராதாகிருஷ்ணன். ஜெயஸ்ரீ நாளை தயார் செய்கிறேன் என்கிறார்.



இந்நிலையில், முன் தேதியிட்டு கோப்பை தயாரிக்க மாட்டேன் என்று மறுத்த அந்த ஊழியர், எப்படியோ, முதலமைச்சர் அலுவலகத்துக்கு இந்த கோப்பு விவகாரத்தை தெரிவிக்கிறா.
மறுநாள் காலை 6.00 மணிக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு.

சம்பந்தப் பட்ட கோப்போடு வரும்படி நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் முதல்வரின் செயலாளரிடமிருந்து அழைப்பு வருகிறது.

இரண்டு பேருக்கும் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்கிறார்கள். (திருடர்கள் போல என்ன.. திருடர்கள் தானே) உடனடியாக 6.30 மணிக்கு ஜெயஸ்ரீயை அழைக்கிறார்கள். கோப்போடு மூவரும் முதல்வரின் செயலாளரை காணச் செல்கிறார்கள்.




கோப்பை திருத்த ஏன் முயற்சித்தீர்கள் என்று கடுமையான வசவு விழுகிறது. தொங்கிய முகத்தோடு வெளியில் வந்த இரு அதிகாரிகளும் அமைதியாக அலுவலகம் திரும்புகிறார்கள்.

காலை 11.30 மணிக்கு இது எப்படி முதல்வர் அலுவலகத்திற்கு தெரிந்தது என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெயஸ்ரீயும் உடன் இருக்கிறார்.

யார் இதைப் பற்றிச் சொல்லியிருப்பார் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஜெயஸ்ரீ தனது உதவியாளரின் பெயரைச் சொல்லி “சார் அவர் கூட என்னை கையெழுத்து போட வேண்டாம்னு சொன்னார் சார். Don’t sail in a sinking ship ன்னு சொன்னார் சார் “ என்று கூறுகிறார்.

நீங்கள் போய் அந்த ஊழியரை வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார் நாஞ்சில் குமரன்.

அந்த ஊழியர் இயக்குநர் அறைக்குள் செல்கிறார்.

“என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுலே ? “ “பெரிய இவன்னு நெனப்பா ? நாங்க சீனியர் ஆபீசர்ஸ் ஏதாவது ஒரு காரணத்தோட செய்வோம் (என்ன காரணம் குமரன் சார் ? நாராயணன் கிட்ட பெரிய அமவுன்ட்ட வாங்கிட்டீங்களா ?) கையெழுத்துப் போடாதீங்கன்னு மேனேஜரையே மெறட்ரியாமே ? தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு. ஜாக்ரதை என்று கூறுகிறார்.

ஒரு படத்தில் வடிவேலு, “இவன் அடிச்சது பத்தாதுன்னு, மச்சான் ப்ரீயா இருக்கியா .. ? ஒருத்தன் சிக்கிருக்கான். அனுப்பி வைக்கிறேன்“ என்று சொல்வாரே.. ? அது போலவே நாஞ்சில் குமரன் ஐஜி ராதாகிருஷ்ணனை போய் பார்க்கும் படி சொல்கிறார்.

ராதாகிருஷ்ணன் லண்டனுக்குப் போய் ராணி விருதெல்லாம் வாங்கியவர் அல்லவா ? அதனால் வசவு ஆங்கிலத்தில்.

What do you think in your mind ? You have the guts to threaten the manager ? I fill finish your career. Be careful. என்று கூறி விட்டு, அந்த ஊழியர் ஏதோ சொல்ல வந்ததும் “ஏய். உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. கெட் அவுட்“ என்றார்.

அந்த ஊழியர் எது நம்மை தாக்கியது என்று புரியாமல் அலுவலகம் திரும்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் நாஞ்சில் குமரனும், ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றம் என்ற தகவல் வருகிறது.



திமுக பதவியேற்ற பிறகு கூட, வழக்கு ஆவணங்களை திருத்த முயன்ற, நாஞ்சில் குமரனுக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் கருணாநிதி கொடுத்த தண்டனை என்ன தெரியுமா ? இருவருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி.

ஆற்காடு வீராச்சாமி மேல் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த ப்பி.வி.தாமஸ் என்ற டிஎஸ்பியை இந்த இருவரும் அணுகி, ஆற்காட்டாரிடம் சொல்லி நல்ல பதவி வழங்குமாறு கேட்டு நல்ல பதவியை பெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.
இந்த ஜெயஸ்ரீயைப் பற்றி மற்றொரு பிரசித்தமான கதை உண்டு.

2005ம் ஆண்டில் ஜுனியர் விகடன் இதழ், ஒரு ஸ்டிங் ஆபரேஷனை செய்தது. என்னவென்றால், ப்ரோக்கர்களிடம் காசு கொடுத்து, ஒரு உடல் ஊனமுற்றவர், அமைச்சர், ஒரு எம்எல்ஏ ஆகிய மூவர் பெயரில் போலியாக ஓட்டுனர் உரிமம் பெற்றது.

பணத்தை வாங்கிக் கொண்டு கச்சிதமாக யார் எவரேன்றெல்லாம் பார்க்காமல் மூன்று பேருக்கும் ஓட்டுநர் உரிமத்தை வழங்கியது ஆர்டிஓ அலுவலகம். இந்த போலி உரிமம் வழங்கிய ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ஜுனியர் விகடன் குழு, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் ஒன்றைத் தருகிறது.

விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய எஸ்பி மஞ்சுநாதா, உடனடியாக அரசுக்கு அனுப்ப அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு உதவி மேலாளர் ஜெயஸ்ரீக்கு உத்தரவிடுகிறார். அப்போது மணி 5.45.

அந்த வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்ட ஜெயஸ்ரீ “சார். மணியாகி விட்டது. நான் வீட்டுக்குச் சென்று அடித்து விட்டு நாளை காலையில் எடுத்து வருகிறேன் “ என்று கூறுகிறார். மஞ்சுநாதாவும், இயல்பாக சரி என்கிறார்.

ஜெயஸ்ரீயும் மஞ்சுநாதா கேட்டது போலவே அறிக்கையை தயார் செய்து அளிக்கிறார்.
இதன் நடுவே மறு நாள், அந்த போலி உரிமங்களில் கையெழுத்திட்ட அதிகாரிகள் தங்களை ஏமாற்றி போலியாக உரிமம் பெற்று விட்டதாக ஆதாரங்களுடன் சென்னை மாநகர காவல்துறையில் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

போலி உரிமத்தில் கையெழுத்திட்டவர்களுள் ஒருவர் பெயர் ராணி. அவர் கண்காணிப்பாளராக ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர்கள் புகார் கொடுக்கையில் அவர்களிடம், லஞ்ச ஒழிப்புத் துறை தயார் செய்த அறிக்கையின் நகல் இருந்தது.

அறிக்கை அரசுக்கு செல்லும் முன்பே, எப்படி குற்றவாளிகளின் கைக்குச் சென்றது என்று லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் தலையை பிய்த்துக் கொண்டனர்.
பிறகுதான் தெரிந்தது அந்த ராணி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி மேலாளர் ஜெயஸ்ரீயின் சொந்த சகோதரி என்றும், ஜெயஸ்ரீயின் எதிர் வீட்டிலேயே ராணியும் குடியிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

சரி இப்போது இவர்கள் மூவரும் எங்கே இருக்கிறார்கள் ?

நாஞ்சில் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்று விட்டார். கே.ராதாகிருஷ்ணன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருக்கிறார். (இப்போ லண்டன்ல இருக்கார்)

ஜெயஸ்ரீ லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசியப் பிரிவின் தலைவர் பதவியான “ரகசியப் பிரிவு மேலாளராக“ இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்து விட்டு, திமுக ஆட்சியில் அந்தர் பல்டி அடிக்கும் அதிகாரிகளை புரிந்து கொள்ளாமல், யார் யாரோ சொல்கிறார்கள் என்று அதிகாரத்தை கொடுத்து அழகு பார்க்கும் கருணாநிதியின் பலவீனமே இந்த அதிகாரிகள் தான்.

இந்த கே.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீதான வழக்கை மூடி விட்டு, மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு முதல்வர் கோட்டாவில் அவரிடமே அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெறுகிறார். திமுக அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின், ஆதாரங்களே இல்லை என்ற வழக்குகளில் கூட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், இன்று திமுகவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.


ஆட்சிக்கு ஆட்சி நிறம் மாறும் பச்சோந்திகளான இந்த அதிகாரிகளை இன்னும் புரிந்து கொள்ளாமல் கருணாநிதி இவர்களை நம்பி அடுத்த தேர்தலை சந்திக்கச் செல்கிறார்.


இது போன்ற திருட்டுத்தனங்களை செய்யும் அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்க தமிழகத்தில் பல விக்கிலீக்குகள் உருவானால் தான் இது போன்ற அதிகாரிகளை வின்னர் வடிவேலு போல ஆக்க முடியும்.

சவுக்கு