Monday, June 1, 2009

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !




அன்பரே !


உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும்.

உங்களுக்கு அப்போது பிடித்த 'காகிதப் பூ' கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், உங்கள் நடிப்பில் நான் மனதைப் பறிகொடுத்ததுதான் உண்மை.

அனைத்து சாதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நீங்கள் என்னை மணம் புரிந்தீர்களா என்பதை நான் அறியேன்; ஆனால் திருமணமான நாள் முதலாகவே, என்னை நீங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தடத்தி வந்திருக்கிறீர்கள்.

என்னதான் ஆயினும் அக்காள் தயாளுதான் மூத்தவர் என்பதால் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுரிமை அளித்ததை இத்தனை காலம் பொறுத்தே வந்திருக்கிறேன். ஆனாலும், இனி பொறுப்பது பயன் தராது என்று தோன்றுகிறது.

எங்களோடு நெருக்கமாக இருக்கும், எங்கள் உறவினர், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையை என்ன பாடு படுத்தினீர்கள் ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாவோடு அப்படி என்ன தவறாக பேசி விட்டார் ?
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அவர் அத்தை மகனை நடவடிக்கை எடுக்காமல் விடச் சொன்னார் !

இது என்ன அப்படி ஒரு குற்றமா ?

அந்த வீணாய்ப் போன உபாத்யாய் இதையெல்லாம் டேப் பண்ணி வைத்திருப்பார் என்று யாருக்கு தெரியும் ?

அப்படி எல்லோரும் டேப் பண்ணி வைத்திருந்தால் நீங்கள் எத்தனை முறை பதவி விலக நேர்ந்திருக்கும் ?

சர்க்காரியா கமிஷன் உங்களை விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சொல்லவில்லையா ?

அதற்குப் பிறகு நீங்கள் முதல்வராக வில்லையா ?

உங்களோடு அமைச்சர்களாக இருக்கும் எத்தனை பேர் ஊழல் குற்றச் சாட்டுக்கு
ஆளானார்கள் ?

அனைவரும் பதவி விலகி விட்டார்களா என்ன ?

ஏதோ போன் பேசி விட்டார் என்று பூங்கோதையை ராஜினாமா செய்யச் சொல்லி எவ்வளவு நெருக்கடி தந்து ராஜினாமா செய்ய வைத்தீர்கள் ? உங்கள் நெருக்கடி இல்லையென்றால் பூங்கோதை தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு சுயமரியாதை உள்ளவரா என்ன ?

தேர்தல் நெருங்கவும் நாடார்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத் தான் பூங்கோதையை மீண்டும் அமைச்சர் ஆக்கினீர்கள் என்பது நாங்கள் அறியாததா ?

பிறகு நான் உங்களிடம் வேறு என்ன கேட்டேன் ? நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டு வந்தார்கள் என்பதற்காக, கள் இறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மக்கள் என் "மந்திரத் தமிழில் மயங்கிக் கிடக்கிறார்கள்; அவர்களுக்கு வேறு போதை வேண்டியதில்லை" என்று "இருட்டுக் கடை அல்வா" கொடுத்தீர்கள்.

ஆனால் மூத்தவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.

கடந்த மன்மோகன் அரசாங்கதில் என் மகளை நான் பெற்ற செல்வத்தை, கனிமொழியை மந்திரியாக்குங்கள் என்று மன்றாடிக் கேட்டும் மறுத்து விட்டீர்கள். மூத்தவர் பிள்ளைகளுக்கும் உங்கள் அக்காள் பேரன்களுக்கும் மட்டும் கட்சிப் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் வாரி வழங்குகின்றீர்கள். இந்த மந்திரி சபையிலாவது கேபினெட் அமைச்சர் பதவி வாங்கித் தருவீர்கள் என் எதிர்ப்பார்த்தால் முதல் முறை எம்பி ஆன மூத்தவர் மகனுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.

தற்போது, ஸ்டாலினையும், துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்தது போல் எனக்கும் என் மகளுக்கும் இதயத்தில் இடம் அளிக்கிறேன் என்ற வழக்கமான அல்வாவைத்தான் கிண்டிக் கொடுப்பீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மூத்தவர் மகன் அழகிரிக்கு முன் என் மகள் எம்.பி ஆகவில்லையா ? ஆனால் அவர் அமைச்சராகி விட்டார், என் மகள் இன்னும் எம்.பியாகவே உள்ளார். இதுதான் உங்கள் நெஞ்சுக்கு நீதியா ?

ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் உங்கள் கபட நாடகத்தை நான் கண்டு கொண்டேன். மந்திரி பதவி தருகிறேன், தருகிறேன் என்று கடைசியில் என் மகள் கனிமொழியை "சென்னை சங்கமத்தில்" கரகாட்டம் ஆட விட்டு விடுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது.

ஏற்கனவே மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில், டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுரில் "தலப்பாக்கட்டு பிரியாணி" கடை வைத்து விட்டார். என் மகளும் கரகாட்டப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறாள்.

இதற்கு மேலும், உங்களுடன் இருந்து, நீங்கள் கொடுக்கும் அல்வாவை சாப்பிட நானும் என் மகளும் தயாராக இல்லை.

அதனால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து விட்டேன். விவாகரத்து பெறலாம் என்றால், ஏற்கனவே நீங்கள் போலீசை வைத்து வக்கீல்களை அடித்து நொறுக்கியதால், என் வழக்கை எந்த வக்கீலும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். வேறு வழியில்லாமல், என் வழக்கை நானே வாதாடி நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஜீவனாம்சம் வழங்குவதிலாவது, குறை வைக்காமல், நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் ஒரு லட்சம் கோடியை, சரியாக பங்கீடு செய்து, எனக்கும் என் மகளுக்கும் பிரித்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

கனத்த இதயத்தோடு உங்களை விட்டுப் பிரியும்


காகிதப்பூ கதாநாயகி
கனிமொழியின் தாய்.

கருணாநிதிக்கு ராசாத்தி அம்மாள் மனந்திறந்த மடல் !




அன்பரே !


உங்களைப் போல் கொஞ்சும் தமிழில் எனக்கு எழுதத் தெரியாது. மந்திரத் தமிழில் மயக்கத் தெரியாது. என் மனதை எழுதத் தெரியும்.

உங்களுக்கு அப்போது பிடித்த 'காகிதப் பூ' கதாநாயகி இப்போது உங்கள் மனம் கவராமல் போனது காலத்தின் கோலமே ! காகிதப்பூ நாடகத்தில் நான் கதாநாயகியாக இருந்தாலும், உங்கள் நடிப்பில் நான் மனதைப் பறிகொடுத்ததுதான் உண்மை.

அனைத்து சாதிக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் நீங்கள் என்னை மணம் புரிந்தீர்களா என்பதை நான் அறியேன்; ஆனால் திருமணமான நாள் முதலாகவே, என்னை நீங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் தடத்தி வந்திருக்கிறீர்கள்.

என்னதான் ஆயினும் அக்காள் தயாளுதான் மூத்தவர் என்பதால் அவருக்கும் அவர் பிள்ளைகளுக்கும் தாங்கள் முன்னுரிமை அளித்ததை இத்தனை காலம் பொறுத்தே வந்திருக்கிறேன். ஆனாலும், இனி பொறுப்பது பயன் தராது என்று தோன்றுகிறது.

எங்களோடு நெருக்கமாக இருக்கும், எங்கள் உறவினர், ஆலடி அருணாவின் மகள் பூங்கோதையை என்ன பாடு படுத்தினீர்கள் ?
அந்த வீணாய்ப் போன உபாத்யாவோடு அப்படி என்ன தவறாக பேசி விட்டார் ?
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அவர் அத்தை மகனை நடவடிக்கை எடுக்காமல் விடச் சொன்னார் !

இது என்ன அப்படி ஒரு குற்றமா ?

அந்த வீணாய்ப் போன உபாத்யாய் இதையெல்லாம் டேப் பண்ணி வைத்திருப்பார் என்று யாருக்கு தெரியும் ?

அப்படி எல்லோரும் டேப் பண்ணி வைத்திருந்தால் நீங்கள் எத்தனை முறை பதவி விலக நேர்ந்திருக்கும் ?

சர்க்காரியா கமிஷன் உங்களை விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று சொல்லவில்லையா ?

அதற்குப் பிறகு நீங்கள் முதல்வராக வில்லையா ?

உங்களோடு அமைச்சர்களாக இருக்கும் எத்தனை பேர் ஊழல் குற்றச் சாட்டுக்கு
ஆளானார்கள் ?

அனைவரும் பதவி விலகி விட்டார்களா என்ன ?

ஏதோ போன் பேசி விட்டார் என்று பூங்கோதையை ராஜினாமா செய்யச் சொல்லி எவ்வளவு நெருக்கடி தந்து ராஜினாமா செய்ய வைத்தீர்கள் ? உங்கள் நெருக்கடி இல்லையென்றால் பூங்கோதை தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யும் அளவுக்கு சுயமரியாதை உள்ளவரா என்ன ?

தேர்தல் நெருங்கவும் நாடார்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகத் தான் பூங்கோதையை மீண்டும் அமைச்சர் ஆக்கினீர்கள் என்பது நாங்கள் அறியாததா ?

பிறகு நான் உங்களிடம் வேறு என்ன கேட்டேன் ? நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டு வந்தார்கள் என்பதற்காக, கள் இறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மக்கள் என் "மந்திரத் தமிழில் மயங்கிக் கிடக்கிறார்கள்; அவர்களுக்கு வேறு போதை வேண்டியதில்லை" என்று "இருட்டுக் கடை அல்வா" கொடுத்தீர்கள்.

ஆனால் மூத்தவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறீர்கள்.

கடந்த மன்மோகன் அரசாங்கதில் என் மகளை நான் பெற்ற செல்வத்தை, கனிமொழியை மந்திரியாக்குங்கள் என்று மன்றாடிக் கேட்டும் மறுத்து விட்டீர்கள். மூத்தவர் பிள்ளைகளுக்கும் உங்கள் அக்காள் பேரன்களுக்கும் மட்டும் கட்சிப் பதவிகளையும் அரசுப் பதவிகளையும் வாரி வழங்குகின்றீர்கள். இந்த மந்திரி சபையிலாவது கேபினெட் அமைச்சர் பதவி வாங்கித் தருவீர்கள் என் எதிர்ப்பார்த்தால் முதல் முறை எம்பி ஆன மூத்தவர் மகனுக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள்.

தற்போது, ஸ்டாலினையும், துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்.

இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடம் அளித்தது போல் எனக்கும் என் மகளுக்கும் இதயத்தில் இடம் அளிக்கிறேன் என்ற வழக்கமான அல்வாவைத்தான் கிண்டிக் கொடுப்பீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. மூத்தவர் மகன் அழகிரிக்கு முன் என் மகள் எம்.பி ஆகவில்லையா ? ஆனால் அவர் அமைச்சராகி விட்டார், என் மகள் இன்னும் எம்.பியாகவே உள்ளார். இதுதான் உங்கள் நெஞ்சுக்கு நீதியா ?

ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் உங்கள் கபட நாடகத்தை நான் கண்டு கொண்டேன். மந்திரி பதவி தருகிறேன், தருகிறேன் என்று கடைசியில் என் மகள் கனிமொழியை "சென்னை சங்கமத்தில்" கரகாட்டம் ஆட விட்டு விடுவீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது.

ஏற்கனவே மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில், டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதுரில் "தலப்பாக்கட்டு பிரியாணி" கடை வைத்து விட்டார். என் மகளும் கரகாட்டப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் போகிறேன் என்று சொல்கிறாள்.

இதற்கு மேலும், உங்களுடன் இருந்து, நீங்கள் கொடுக்கும் அல்வாவை சாப்பிட நானும் என் மகளும் தயாராக இல்லை.

அதனால், உங்களிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்து விட்டேன். விவாகரத்து பெறலாம் என்றால், ஏற்கனவே நீங்கள் போலீசை வைத்து வக்கீல்களை அடித்து நொறுக்கியதால், என் வழக்கை எந்த வக்கீலும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். வேறு வழியில்லாமல், என் வழக்கை நானே வாதாடி நடத்துவது என்று முடிவெடுத்து விட்டேன்.

ஜீவனாம்சம் வழங்குவதிலாவது, குறை வைக்காமல், நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் ஒரு லட்சம் கோடியை, சரியாக பங்கீடு செய்து, எனக்கும் என் மகளுக்கும் பிரித்துத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

கனத்த இதயத்தோடு உங்களை விட்டுப் பிரியும்


காகிதப்பூ கதாநாயகி
கனிமொழியின் தாய்.

Wednesday, May 27, 2009

யாருக்கும் வெட்கமில்லை !


நன்றி. துக்ளக்

ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி, கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதை, முதலில் வீராவேசம் காட்டி எதிர்த்த கருணாநிதி, பின்பு அமைதியாக ஏற்றுக் கொண்டார். மொத்தம் திமுகவுக்கு கிடைத்த மூன்று கேபினேட் அமைச்சர் பதவிகளில், இரண்டை குடும்பத்துக்கும், மூன்றாவதை குடும்பத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் வாரி வழங்கிய ராசாவுக்கும் வழங்கியுள்ளார் கருணாநிதி. இதற்காக இவர் டெல்லி சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து பேரம் பேசி தோல்வியுடன் திரும்பியதை, இந்தியாவே பரிதாபமாக பார்த்தது.


முதல் முறை எம்.பி யான தன் மகன் அழகிரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுப்பதற்காக, கட்சியின் மூத்த உறுப்பினரும், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக பல முறை இருந்துள்ள டி.ஆர்.பாலு காவு கொடுக்கப் பட்டுள்ளார். ஜெயலலிதா அரசாங்கத்தால் நள்ளிரவில் கைது செய்யப் பட்டு, சி.பி.சிஐடி அலுவலகத்தில் கருணாநிதி வைக்கப் பட்டிருந்தபோது, அங்கே வந்து பொதுமக்களுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும், போராட்டம் நடத்தியது டி.ஆர்.பாலு என்பதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.





1996ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அழகிரியைவிட பன்மடங்கு தகுதி பெற்ற திருச்சி சிவா, இணை அமைச்சராகக் கூட பரிசீலிக்கப் படவில்லை.

கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருந்தும், வெளிப்படையாக வெட்கமில்லாமல் தன் குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் கருணாநிதிக்கு தன் மறைவுக்கு பின்னால், திராவிட முன்னேற்ற கழகம், பல துண்டுகளாக உடையும் அபாயம் உள்ளது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறார் என்று புரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் குடும்ப சொத்து என்பதை, ஆற்காடு வீராசாமியிடமிருந்து, பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த பொருளாளர் பதவியை பறித்ததன் மூலமும், அழகிரிக்கு கட்சிப் பதவி அளித்து, தற்போது கேபினெட் அமைச்சராக ஆக்கியிருப்பதன் மூலமும், திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெளிவாகி உள்ளது.



மாறன் சகோதரர்கள் பிரிந்து இருக்கையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில் வண்ண விளம்பரங்கள் வெளியிட்டதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தினமும் விரிவான செய்தியாக தமிழகம் முழுவதும் பரவச் செய்ததில் சன் டிவியின் பங்கு மறக்க முடியாதது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணம் முந்தைய அமைச்சர் தயாநிதி எடுத்த முடிவுகள்தான் என ராஜாவும், நான் அமைச்சராக இருக்கையில் ஊழலே நடைபெறவில்லை என்று தயாநிதியும், மாறி மாறி பேட்டி கொடுத்தையும் இந்த தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

மாறன் சகோதரர்களை ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மதுரையில் அழகிரி ராயல் கேபிள் விஷன் தொடங்கியதும், சென்னையில் ஹாத்வே நிறுவனத்துடன் இணைந்து சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க அழகிரி எடுத்த முயற்சிகளும், சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் மதுரையை ஒட்டிய பகுதிகளில் திரையிட விடாமல், அழகிரியின் கூட்டம் செய்த அராஜகத்தையும், அந்த அராஜகத்தை சன் டிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய தயாநிதியும் நடத்திய கேலிக்கூத்துக்களையும் இத்தமிழகம் கண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும் என்று கருணாநிதியே முன்னின்று நடத்திய நாடகம் தான், அரசு கேபிள் கார்ப்பரேஷன். அரசுப் பணத்தில் பல கிலோமீட்டர்களுக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் போடப்பட்டு, பிறகு அவை மாறன் சகோதரர்களின் ஏற்பாட்டால் பல இடங்களில் அறுத்து எறியப்பட்டதும், அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், உமா சங்கர், மனம் வெறுத்து, சுமங்கலி கேபிள் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததையும், அதன் மறுநாள் அவர் மாற்றப் பட்டதையும், ஏதோ ஒரு வெற்றுக் காரணத்தை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதையும்தான் இத் தமிழகம் பார்த்திருக்கிறது.

இத்தனை அநியாயங்கள் நடந்தும், சிறு சலனமும் இல்லாமல் தமிழக மக்கள் அமைதியாக இருப்பது ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தத் தான் என்று சிலர் எண்ணக் கூடும்.

எந்த மாற்றமும் இல்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்ததைவிட அதிகமான தொகையை கொடுக்கக் கூடிய வல்லமை படைத்தது திமுகவா அதிமுகவா என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.

சரி தேர்தல் வரும் வரை என்ன செய்வது ?

அதையெல்லாம் மறந்து சிரிக்கத்தானே இருக்கிறது, ஆதித்யாவும் சிரிப்பொலியும்.....


அதுவும் போர் அடித்தால் "மானான மயிலாட" பார்த்தால் மனது மகிழாதா என்ன ?

யாருக்கும் வெட்கமில்லை.... ... .... ... !



//ஒப்பாரி//

யாருக்கும் வெட்கமில்லை !


நன்றி. துக்ளக்

ஒரு வழியாக கருணாநிதி நடத்திய உள்ளே வெளியே நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. தமிழினத் தலைவராய் இருப்பதைக் காட்டிலும், குடும்பத் தலைவராய் இருப்பதுதான் பிரதான பணி என அப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார். காங்கிரஸ் தலைமையும், திமுக தலைமையை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்தி, கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதை, முதலில் வீராவேசம் காட்டி எதிர்த்த கருணாநிதி, பின்பு அமைதியாக ஏற்றுக் கொண்டார். மொத்தம் திமுகவுக்கு கிடைத்த மூன்று கேபினேட் அமைச்சர் பதவிகளில், இரண்டை குடும்பத்துக்கும், மூன்றாவதை குடும்பத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் வாரி வழங்கிய ராசாவுக்கும் வழங்கியுள்ளார் கருணாநிதி. இதற்காக இவர் டெல்லி சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து பேரம் பேசி தோல்வியுடன் திரும்பியதை, இந்தியாவே பரிதாபமாக பார்த்தது.


முதல் முறை எம்.பி யான தன் மகன் அழகிரிக்கு கேபினெட் அமைச்சர் பதவி கொடுப்பதற்காக, கட்சியின் மூத்த உறுப்பினரும், ஏற்கனவே கேபினெட் அமைச்சராக பல முறை இருந்துள்ள டி.ஆர்.பாலு காவு கொடுக்கப் பட்டுள்ளார். ஜெயலலிதா அரசாங்கத்தால் நள்ளிரவில் கைது செய்யப் பட்டு, சி.பி.சிஐடி அலுவலகத்தில் கருணாநிதி வைக்கப் பட்டிருந்தபோது, அங்கே வந்து பொதுமக்களுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும், போராட்டம் நடத்தியது டி.ஆர்.பாலு என்பதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.





1996ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் அழகிரியைவிட பன்மடங்கு தகுதி பெற்ற திருச்சி சிவா, இணை அமைச்சராகக் கூட பரிசீலிக்கப் படவில்லை.

கட்சியில் பல மூத்த உறுப்பினர்கள் இருந்தும், வெளிப்படையாக வெட்கமில்லாமல் தன் குடும்பத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் கருணாநிதிக்கு தன் மறைவுக்கு பின்னால், திராவிட முன்னேற்ற கழகம், பல துண்டுகளாக உடையும் அபாயம் உள்ளது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறார் என்று புரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், தன் குடும்ப சொத்து என்பதை, ஆற்காடு வீராசாமியிடமிருந்து, பல ஆண்டுகளாக அவரிடம் இருந்த பொருளாளர் பதவியை பறித்ததன் மூலமும், அழகிரிக்கு கட்சிப் பதவி அளித்து, தற்போது கேபினெட் அமைச்சராக ஆக்கியிருப்பதன் மூலமும், திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெளிவாகி உள்ளது.



மாறன் சகோதரர்கள் பிரிந்து இருக்கையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில் வண்ண விளம்பரங்கள் வெளியிட்டதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தினமும் விரிவான செய்தியாக தமிழகம் முழுவதும் பரவச் செய்ததில் சன் டிவியின் பங்கு மறக்க முடியாதது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணம் முந்தைய அமைச்சர் தயாநிதி எடுத்த முடிவுகள்தான் என ராஜாவும், நான் அமைச்சராக இருக்கையில் ஊழலே நடைபெறவில்லை என்று தயாநிதியும், மாறி மாறி பேட்டி கொடுத்தையும் இந்த தமிழகம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

மாறன் சகோதரர்களை ஒழித்துக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மதுரையில் அழகிரி ராயல் கேபிள் விஷன் தொடங்கியதும், சென்னையில் ஹாத்வே நிறுவனத்துடன் இணைந்து சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க அழகிரி எடுத்த முயற்சிகளும், சன் பிக்சர்ஸின் காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் மதுரையை ஒட்டிய பகுதிகளில் திரையிட விடாமல், அழகிரியின் கூட்டம் செய்த அராஜகத்தையும், அந்த அராஜகத்தை சன் டிவியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய தயாநிதியும் நடத்திய கேலிக்கூத்துக்களையும் இத்தமிழகம் கண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக, சுமங்கலி நிறுவனத்தின் ஏகபோகத்தை ஒழிக்க வேண்டும் என்று கருணாநிதியே முன்னின்று நடத்திய நாடகம் தான், அரசு கேபிள் கார்ப்பரேஷன். அரசுப் பணத்தில் பல கிலோமீட்டர்களுக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் போடப்பட்டு, பிறகு அவை மாறன் சகோதரர்களின் ஏற்பாட்டால் பல இடங்களில் அறுத்து எறியப்பட்டதும், அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், உமா சங்கர், மனம் வெறுத்து, சுமங்கலி கேபிள் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்ததையும், அதன் மறுநாள் அவர் மாற்றப் பட்டதையும், ஏதோ ஒரு வெற்றுக் காரணத்தை வைத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதையும்தான் இத் தமிழகம் பார்த்திருக்கிறது.

இத்தனை அநியாயங்கள் நடந்தும், சிறு சலனமும் இல்லாமல் தமிழக மக்கள் அமைதியாக இருப்பது ஏதோ ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தத் தான் என்று சிலர் எண்ணக் கூடும்.

எந்த மாற்றமும் இல்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்ததைவிட அதிகமான தொகையை கொடுக்கக் கூடிய வல்லமை படைத்தது திமுகவா அதிமுகவா என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்.

சரி தேர்தல் வரும் வரை என்ன செய்வது ?

அதையெல்லாம் மறந்து சிரிக்கத்தானே இருக்கிறது, ஆதித்யாவும் சிரிப்பொலியும்.....


அதுவும் போர் அடித்தால் "மானான மயிலாட" பார்த்தால் மனது மகிழாதா என்ன ?

யாருக்கும் வெட்கமில்லை.... ... .... ... !



//ஒப்பாரி//

Tuesday, May 26, 2009

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.



நன்றி தினமணி


ஒரு வழியாய் கருணாநிதியின் "உள்ளே வெளியே" ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன.

2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி இன்று 206 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை கருணாநிதி மறந்து, மீண்டும் 2004ல் உள்ளது போல் பிரதமர் பதவி தவிர அத்தனை பதவிகளையும் கேட்டுப் பெற்று விடமுடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டே டெல்லி சென்றார். தன்னுடன் அவரது "பெரிய" குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், அதிகாரிகளையும், அமைச்சர் பெருமக்களையும் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வாங்கி அதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தார். ஆனால், 206 இடங்களைப் பெற்ற காங்கிரசின் இறுமாப்பு எப்படி இருக்கும் என்பதை கண்கூடாகப் பார்த்தார். 272 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் மெஜாரிட்டி என்ற நிலையில், போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க கட்சிகள் வரிசையில் நிற்கும் நிலையில் 322 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்து தெனாவெட்டாய் இருந்தது காங்கிரஸ் கட்சி. தன் பழைய செல்வாக்கை இழந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் பதவி தேவைகளை நிறைவேற்ற இயலாமல், டி.ஆர்.பாலுவை விட்டு, "வெளியில் இருந்து ஆதரவு" என்று அறிவிக்க சொல்லிவிட்டு, படை பரிவாரங்களோடு, டெல்லியிலிருந்து கிளம்பினார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறைய வருவாய் வரக்கூடிய இலாக்காக்களை காங்கிரஸ் ஒதுக்க மறுத்ததுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய பாச்சா பலிக்காது என்று நன்கு புரிந்தவுடன், காங்கிரஸ் கொடுத்த மந்திரி பதவிகளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தற்போது ஏற்றுக் கொண்டு குடும்ப மந்திரிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.




தன்னுடைய முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வீல் சேரில் டெல்லி சென்று சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்து இரண்டு நாட்கள் தங்கி பேரம் நடத்தத் தெரிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் என்ன செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா ?

1) மன்மோகன் சிங்குக்கு கடிதம்
2) சட்டசபையில் தீர்மானம்
3) மனிதச் சங்கிலி
4) எம்.பி. பதவி ராஜினாமா என்ற நாடகம்
5) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை
6) டெல்லிக்குத் தந்தி
7) சோனியாவுக்கு கடிதம்
8) ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்
9) மீண்டும் சட்டசபையில் தீர்மானம்
10) மீண்டும் டெல்லிக்கு தந்தி
11) குடும்பத்துடன் நான்கு மணி நேர உண்ணாவிரதம்


ஆனால், குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவிக்கான பேரம் என்றதும், விரைவாக டெல்லி சென்று பேரம் நடத்திவிட்டு, பேரம் படியவில்லை என்றதும், பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு கடும் கோபத்துடன் திரும்பி வந்தார். இப்போது மந்திரி பதவி கேட்டு தந்தி அடிப்பது தானே ? தந்தி அடித்தாலோ கடிதம் அனுப்பினாலோ பதவி கிடைக்காது என்று தெரிந்துதான், நேரில் டெல்லி சென்றார்.


இதே முயற்சியை கருணாநிதி இலங்கை தமிழர் விஷயத்தில் எடுத்திருந்தாரேயானால், எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் ? எத்தனை பேர் உடல் ஊனமாகாமல் இருந்திருப்பர் ?

குற்றுயிரும் குலை உயிருமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மருத்துவ வசதி இல்லாமல் ஈழத்திலே அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், பதவி பேரம் நடத்தும் இந்தக் கருணாநிதியை என்ன சொல்வது ?

... ச்சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு

/ஒப்பாரி/

உள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.



நன்றி தினமணி


ஒரு வழியாய் கருணாநிதியின் "உள்ளே வெளியே" ஓரங்க நாடகம் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த ஒரு வாரமாய் தேசிய ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும், இந்நாடகம் குறித்த செய்திகள் புளித்துப் போகும் அளவுக்கு வந்தன.

2004 பாராளுமன்ற தேர்தலில் 145 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி இன்று 206 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை கருணாநிதி மறந்து, மீண்டும் 2004ல் உள்ளது போல் பிரதமர் பதவி தவிர அத்தனை பதவிகளையும் கேட்டுப் பெற்று விடமுடியும் என்று மனப்பால் குடித்துக் கொண்டே டெல்லி சென்றார். தன்னுடன் அவரது "பெரிய" குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரையும், அதிகாரிகளையும், அமைச்சர் பெருமக்களையும் அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி வாங்கி அதன் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு காத்திருந்தார். ஆனால், 206 இடங்களைப் பெற்ற காங்கிரசின் இறுமாப்பு எப்படி இருக்கும் என்பதை கண்கூடாகப் பார்த்தார். 272 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் மெஜாரிட்டி என்ற நிலையில், போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க கட்சிகள் வரிசையில் நிற்கும் நிலையில் 322 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்து தெனாவெட்டாய் இருந்தது காங்கிரஸ் கட்சி. தன் பழைய செல்வாக்கை இழந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களின் பதவி தேவைகளை நிறைவேற்ற இயலாமல், டி.ஆர்.பாலுவை விட்டு, "வெளியில் இருந்து ஆதரவு" என்று அறிவிக்க சொல்லிவிட்டு, படை பரிவாரங்களோடு, டெல்லியிலிருந்து கிளம்பினார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறைய வருவாய் வரக்கூடிய இலாக்காக்களை காங்கிரஸ் ஒதுக்க மறுத்ததுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. தன்னுடைய பாச்சா பலிக்காது என்று நன்கு புரிந்தவுடன், காங்கிரஸ் கொடுத்த மந்திரி பதவிகளை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தற்போது ஏற்றுக் கொண்டு குடும்ப மந்திரிகளை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார்.




தன்னுடைய முதுகு வலியையும் பொருட்படுத்தாது, வீல் சேரில் டெல்லி சென்று சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்து இரண்டு நாட்கள் தங்கி பேரம் நடத்தத் தெரிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கையில் என்ன செய்தார் என்று ஞாபகம் இருக்கிறதா ?

1) மன்மோகன் சிங்குக்கு கடிதம்
2) சட்டசபையில் தீர்மானம்
3) மனிதச் சங்கிலி
4) எம்.பி. பதவி ராஜினாமா என்ற நாடகம்
5) பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை
6) டெல்லிக்குத் தந்தி
7) சோனியாவுக்கு கடிதம்
8) ஒரு நாள் பொது வேலைநிறுத்தம்
9) மீண்டும் சட்டசபையில் தீர்மானம்
10) மீண்டும் டெல்லிக்கு தந்தி
11) குடும்பத்துடன் நான்கு மணி நேர உண்ணாவிரதம்


ஆனால், குடும்பத்தினருக்கு அமைச்சர் பதவிக்கான பேரம் என்றதும், விரைவாக டெல்லி சென்று பேரம் நடத்திவிட்டு, பேரம் படியவில்லை என்றதும், பதவியேற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டு கடும் கோபத்துடன் திரும்பி வந்தார். இப்போது மந்திரி பதவி கேட்டு தந்தி அடிப்பது தானே ? தந்தி அடித்தாலோ கடிதம் அனுப்பினாலோ பதவி கிடைக்காது என்று தெரிந்துதான், நேரில் டெல்லி சென்றார்.


இதே முயற்சியை கருணாநிதி இலங்கை தமிழர் விஷயத்தில் எடுத்திருந்தாரேயானால், எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் ? எத்தனை பேர் உடல் ஊனமாகாமல் இருந்திருப்பர் ?

குற்றுயிரும் குலை உயிருமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் மருத்துவ வசதி இல்லாமல் ஈழத்திலே அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், பதவி பேரம் நடத்தும் இந்தக் கருணாநிதியை என்ன சொல்வது ?

... ச்சீ நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு

/ஒப்பாரி/

Saturday, May 23, 2009

இதையும் பாருங்கள் !





தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தி பரப்பப் பட்டதும், தமிழகமே துயரத்தில் ஆழ்ந்து, ஏதாவதொரு மூலையில் இருந்து அவர் இறக்கவில்லை என்ற நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்தோடு, அலைந்து கொண்டிருந்தனர்.


இந்த ஏக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் சில பத்திரிக்கைகள் இதிலும் லாபம் சம்பாதிப்பது எப்படி என்று அட்டைப் படத்தில், பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்துடன் எடுத்திருந்த புகைப்படத்தை இப்போது எடுத்தது போல் அட்டைப் படத்தில் போட்டு கொள்ளை லாபம் பார்த்துள்ளன. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இத்தகைய மலிவான உத்திகளை கையாளும் பத்திரிக்கைகளை புறக்கணிப்பது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை.


இலங்கை அரசு கையாண்ட உத்திகளை நாமும் கையாள முடியும் என்பதற்கான உதாரணம் இதோ