Saturday, June 27, 2009

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் முதல் 100 நாட்களுக்குள்ளே இந்த தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கான ஒரு திட்டம் தயாராகி விடும் என்று அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் இலங்கை மாடலை கடைபிடித்து மாவோயிஸ்ட் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களை அழிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தாக்குதலுக்கு உள்ளான வனவாசி சேத்னா ஆசிரமத்தை பார்வையிட வந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியல்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவிடம்தான் வெளியிடப்பட்டது.
இலங்கை மாடல் என்றவுடனே 1975ம் ஆண்டு ஜுன் 25-26 நள்ளிரவு அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்த “இந்திய அரசியலமைப்பு பிரிவு 352 (1)ல் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியாவின் பாதுகாப்பு உள்நாட்டு குழப்பங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், நெருக்கடி நிலையை அறிவிக்கிறேன்” என்று வெளியிட்ட அந்த அறிவிப்புதான் நிலைவுக்கு வருகிறது.
20 மாதகாலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை, போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் நெறிக்கப் பட்டது. பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அடங்கிப் போனார்கள்.
அரசு நிர்வாகம், வளையச் சொன்னால், தவழ்ந்து போனது. நீதித்துறையும் அடங்கிப் போய், நெருக்கடி நிலையில், குடிமக்களுக்கு “வாழும் உரிமை“ கூட இல்லை என்று தீர்ப்பளித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், அதிகாரத்தின் அடிவருடிகளாய் மாறிப்போனது.
குடியரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும், அரசு நிர்வாகம் மற்றும் அதன் உறுப்புகள் எவ்வாறு கடுந்தாக்குதலுக்கு உள்ளாகின என்பது, நெருக்கடி நிலையின் நிகழ்வுகளை தொகுக்குத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
சில ஆயிரம் நபர்களுக்கு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கைது, சித்திரவதை என்பதையும் தாண்டி நெருக்கடி நிலை, மிகவும் மோசமானது. அது சுதந்திரம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மறுத்து. உரிமைகள் வழங்க ஒரு புதிய நியதியையும், ஒரு புதிய அதிகார மையத்தையும் உருவாக்கியது. அதிகாரத்தை செலுத்துவதற்கான தடையை நீக்கி, எல்லையில்லா அதிகாரத்தை வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்துக்கும், மக்களை மாக்களாக நடத்துவதற்கும் நெருக்கடி நிலை பயன்பட்டது.
மொத்தத்தில், நேர்த்தியாக வடித்தெடுக்கப் பட்டு கவனமாக வளர்த்தெடுக்கப் பட்ட, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை நெருக்கடி நிலை, அழித்து விட்டது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் குடியாட்சி சமூகத்தின் மீது ஒருங்கிணைந்த அதிகாரத்தை செலுத்தியதன் மூலமாக, நிர்வாகமே சீர்குலைந்தது.
கொடுமை என்னவென்றால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழிந்த பின்னும், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட, அழிவுகள் சரி செய்யப்படவில்லை. மாறாக, ஒருங்கிணைந்த எதெச்சதிகாரம் இன்னும் தொடர்கிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த கொடுமைகள் இன்றும் தொடரும் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறலுக்கான அளவுகோலாக மாறி விட்டது.
இதைவிட கொடுமையான விஷயங்களும் நடக்கின்றன. அரசியல் தலைவர்களின் கொடும்பாவியை எரித்ததற்காக இளைஞர்கள் மீதும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஒரு வருடம் தொடர்ச்சியாக, விசாரணையின்றி சிறையில் வைக்க வழிவகை செய்வதுதான் “தேசிய பாதுகாப்புச் சட்டம்“‘. சிறிது காலம் முன்பு வரை பிரதமர் கனவில் இருந்த மாயாவதி, தனது மாநிலத்தில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளார். இதே மாநிலத்தில், ஒரு எட்டு வயது சிறுவன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளான்.
துணை ராணுவமும், கமாண்டோ வீரர்களும் எப்படி லால்கரை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கதையில் இன்று தேசம் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், சிபிஎம் ஆளும் இம்மாநிலத்தில், இந்தக் கதையின் பின்னால் உள்ள உண்மைக் கதை சொல்லப் படுவதில்லை. தான்தான் சிறந்த கட்சி என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வதற்கு 32 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளதை சிபிஎம் பயன் படுத்திக் கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒரு எதெச்செதிகார மையம் உருவாகி விட்டது. பஞ்சாயத்து, எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும், சிபிஎம் கட்சியினர் அனைத்தும், ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஊழலை எதிர்த்தோ, நிர்வாகக் குறைகளைப் பற்றியோ மேல் முறையீடு செய்வதள்கு எந்த வழியும் இல்லை. அடிப்படை நிர்வாகமே முடங்கிப் போய், அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு மோசமான சூழ்நிலை இது.
தேசிய அளவிலும், நிர்வாகம் பாரபட்சமாகவும், தான்தோன்றித் தனமாகவும்தான் இருக்கிறது. நெருக்கடி நிலையின் போது இருந்த அதே துதிபாடல்களும், வழிபடல்களும் இன்னும் காங்கிரசில் தொடர்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்திரா காந்தி, இன்று சோனியா காந்தி. தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகள், செல்வந்தர்கள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப் பட்டு, ஏழைகளுக்கு வறுமையை ஒழிப்போம் போன்ற வெற்று கோஷங்கள் மட்டும் வழங்கப் படுகிறது. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டு, பணக்காரர்கள் விருந்து வைத்து கொண்டாடுகையில், அதில் விழும் எச்சில் இலைகளை வைத்து உயிர் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுதான், நெருக்கடி நிலையின் தாக்கம். இதுதான், இந்திய அரசு நிர்வாகத்தின் இன்றைய சோக நிலை.
மோசமான நிர்வாகத்திற்கும், அநீதிகளுக்கும், தியான்மென் சதுக்கம் மற்றும் இலங்கையில் நடந்தது போன்ற கடும் ஒடுக்குமுறைகள் பதிலாக அளிக்கப் படுகின்றன.
“வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறுபவர்கள், மீண்டும் அத்தவறைச் செய்வார்கள்” என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறினார். நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்திய பாடப்புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும், அரசு ஆவணங்களிலும், ஆய்வறிக்கைகளிலும், வசதியாக மறைக்கப் பட்டுவிட்டதால், மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நோக்கி இந்திய ஆட்சியாளர்கள் வெகு வேகமாக சென்று வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து கடுமையாக தாக்குதலுக்குள்ளான இந்தியாவின் நிர்வாகத்தையும், அதன் உறுப்புகளையும் பலப்படுத்த தவறி தவறான பாடங்களையே கற்றுக் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தேசத்தின் ஆபத்திலேயே…

எம்.ஜி.தேவசகாயம்.

நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

புதிய வடிவில் நெருக்கடி நிலை

. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

சமீபத்தில், மனித உரிமைக் குழு ஒன்று ஈமெயில் ஒன்றை சுற்றுக்கு அனுப்பியிருந்தது. தேர்தல் முடிந்த பின்னால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் நோக்கம் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லா குழுக்களும் அழிக்கப் படுவதே நோக்கம் என்று அறிவிக்கப் பட்டு விட்டது. உள்துறை அமைச்சர் முதல் 100 நாட்களுக்குள்ளே இந்த தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கான ஒரு திட்டம் தயாராகி விடும் என்று அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாகவே, சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் இலங்கை மாடலை கடைபிடித்து மாவோயிஸ்ட் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களை அழிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தாக்குதலுக்கு உள்ளான வனவாசி சேத்னா ஆசிரமத்தை பார்வையிட வந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியல்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவிடம்தான் வெளியிடப்பட்டது.
இலங்கை மாடல் என்றவுடனே 1975ம் ஆண்டு ஜுன் 25-26 நள்ளிரவு அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்த “இந்திய அரசியலமைப்பு பிரிவு 352 (1)ல் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தியாவின் பாதுகாப்பு உள்நாட்டு குழப்பங்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான சூழலில், நெருக்கடி நிலையை அறிவிக்கிறேன்” என்று வெளியிட்ட அந்த அறிவிப்புதான் நிலைவுக்கு வருகிறது.
20 மாதகாலம் அமலில் இருந்த நெருக்கடி நிலை, போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் நெறிக்கப் பட்டது. பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அடங்கிப் போனார்கள்.
அரசு நிர்வாகம், வளையச் சொன்னால், தவழ்ந்து போனது. நீதித்துறையும் அடங்கிப் போய், நெருக்கடி நிலையில், குடிமக்களுக்கு “வாழும் உரிமை“ கூட இல்லை என்று தீர்ப்பளித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், அதிகாரத்தின் அடிவருடிகளாய் மாறிப்போனது.
குடியரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும், அரசு நிர்வாகம் மற்றும் அதன் உறுப்புகள் எவ்வாறு கடுந்தாக்குதலுக்கு உள்ளாகின என்பது, நெருக்கடி நிலையின் நிகழ்வுகளை தொகுக்குத்துப் பார்க்கும் போது தெரிகிறது.
சில ஆயிரம் நபர்களுக்கு கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு, கைது, சித்திரவதை என்பதையும் தாண்டி நெருக்கடி நிலை, மிகவும் மோசமானது. அது சுதந்திரம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மறுத்து. உரிமைகள் வழங்க ஒரு புதிய நியதியையும், ஒரு புதிய அதிகார மையத்தையும் உருவாக்கியது. அதிகாரத்தை செலுத்துவதற்கான தடையை நீக்கி, எல்லையில்லா அதிகாரத்தை வழங்கி, அதிகார துஷ்பிரயோகத்துக்கும், மக்களை மாக்களாக நடத்துவதற்கும் நெருக்கடி நிலை பயன்பட்டது.
மொத்தத்தில், நேர்த்தியாக வடித்தெடுக்கப் பட்டு கவனமாக வளர்த்தெடுக்கப் பட்ட, இந்திய ஜனநாயகத்தின் மாண்புகளை நெருக்கடி நிலை, அழித்து விட்டது. ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் குடியாட்சி சமூகத்தின் மீது ஒருங்கிணைந்த அதிகாரத்தை செலுத்தியதன் மூலமாக, நிர்வாகமே சீர்குலைந்தது.
கொடுமை என்னவென்றால், ஏறக்குறைய முப்பதாண்டுகள் கழிந்த பின்னும், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட, அழிவுகள் சரி செய்யப்படவில்லை. மாறாக, ஒருங்கிணைந்த எதெச்சதிகாரம் இன்னும் தொடர்கிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நெருக்கடி நிலையின்போது நிகழ்ந்த கொடுமைகள் இன்றும் தொடரும் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறலுக்கான அளவுகோலாக மாறி விட்டது.
இதைவிட கொடுமையான விஷயங்களும் நடக்கின்றன. அரசியல் தலைவர்களின் கொடும்பாவியை எரித்ததற்காக இளைஞர்கள் மீதும், உடல் ஊனமுற்ற ஆதரவற்றவர்கள் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. ஒரு வருடம் தொடர்ச்சியாக, விசாரணையின்றி சிறையில் வைக்க வழிவகை செய்வதுதான் “தேசிய பாதுகாப்புச் சட்டம்“‘. சிறிது காலம் முன்பு வரை பிரதமர் கனவில் இருந்த மாயாவதி, தனது மாநிலத்தில், ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளார். இதே மாநிலத்தில், ஒரு எட்டு வயது சிறுவன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளான்.
துணை ராணுவமும், கமாண்டோ வீரர்களும் எப்படி லால்கரை கைப்பற்றப் போகிறார்கள் என்ற கதையில் இன்று தேசம் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், சிபிஎம் ஆளும் இம்மாநிலத்தில், இந்தக் கதையின் பின்னால் உள்ள உண்மைக் கதை சொல்லப் படுவதில்லை. தான்தான் சிறந்த கட்சி என்று எப்போதும் மார்தட்டிக் கொள்வதற்கு 32 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளதை சிபிஎம் பயன் படுத்திக் கொண்டு வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக, ஒரு எதெச்செதிகார மையம் உருவாகி விட்டது. பஞ்சாயத்து, எம்.எல்.ஏ, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும், சிபிஎம் கட்சியினர் அனைத்தும், ஒன்றுபட்டு செயல்படுகின்றன. ஊழலை எதிர்த்தோ, நிர்வாகக் குறைகளைப் பற்றியோ மேல் முறையீடு செய்வதள்கு எந்த வழியும் இல்லை. அடிப்படை நிர்வாகமே முடங்கிப் போய், அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு மோசமான சூழ்நிலை இது.
தேசிய அளவிலும், நிர்வாகம் பாரபட்சமாகவும், தான்தோன்றித் தனமாகவும்தான் இருக்கிறது. நெருக்கடி நிலையின் போது இருந்த அதே துதிபாடல்களும், வழிபடல்களும் இன்னும் காங்கிரசில் தொடர்கிறது. ஆனால் ஒரே வித்தியாசம், அன்று இந்திரா காந்தி, இன்று சோனியா காந்தி. தேசத்தின் பொருளாதாரக் கொள்கைகள், செல்வந்தர்கள் மற்றும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப் பட்டு, ஏழைகளுக்கு வறுமையை ஒழிப்போம் போன்ற வெற்று கோஷங்கள் மட்டும் வழங்கப் படுகிறது. ஏழைகள், ஓரங்கட்டப்பட்டு, பணக்காரர்கள் விருந்து வைத்து கொண்டாடுகையில், அதில் விழும் எச்சில் இலைகளை வைத்து உயிர் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள். இதுதான், நெருக்கடி நிலையின் தாக்கம். இதுதான், இந்திய அரசு நிர்வாகத்தின் இன்றைய சோக நிலை.
மோசமான நிர்வாகத்திற்கும், அநீதிகளுக்கும், தியான்மென் சதுக்கம் மற்றும் இலங்கையில் நடந்தது போன்ற கடும் ஒடுக்குமுறைகள் பதிலாக அளிக்கப் படுகின்றன.
“வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தவறுபவர்கள், மீண்டும் அத்தவறைச் செய்வார்கள்” என்று வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறினார். நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்திய பாடப்புத்தகங்களிலும், பத்திரிக்கைகளிலும், அரசு ஆவணங்களிலும், ஆய்வறிக்கைகளிலும், வசதியாக மறைக்கப் பட்டுவிட்டதால், மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நோக்கி இந்திய ஆட்சியாளர்கள் வெகு வேகமாக சென்று வருகிறார்கள். இந்த நெருக்கடி நிலையிலிருந்து கடுமையாக தாக்குதலுக்குள்ளான இந்தியாவின் நிர்வாகத்தையும், அதன் உறுப்புகளையும் பலப்படுத்த தவறி தவறான பாடங்களையே கற்றுக் கொண்டுள்ளோம். இதன் தொடர்ச்சி தேசத்தின் ஆபத்திலேயே…

எம்.ஜி.தேவசகாயம்.

நன்றி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Monday, June 22, 2009

இந்திய அரசியலில் வெற்றிடம்…. ??


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளை நிலைகுலையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராமல் கிடைத்த வெற்றியில், இறுமாப்புடன் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சிகள், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், திசை தெரியாமல் நிற்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களத்தில் இறங்கிய பிஜேபி, பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு நாள் யஷ்வந்த் சின்கா ஒரு அறிக்கை வெளியிட்டு கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறார். மறுநாள், ஜஸ்வந்த் சிங் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். கட்சியில் குழப்பமே இல்லை என்று ஒரு தலைவர் அறிக்கை வெளியிடுகிறார். அதிகாரம் இல்லையென்றால், கட்சி நடத்த முடியாது என்பதையே இந்தக் குழப்பங்கள் காட்டுகின்றன.


பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் வருண் காந்தியின் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்த பேச்சு நாடெங்கிலும் கடுமையாக கண்டிக்கப் பட்ட போதிலும், பிஜேபியால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. “இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ, அவர்கள் பின்னால் யாரும் இல்லை என்றோ அவர்களுக்கு எதிராக யாராவது கரம் உயர்த்துவார்களேயானால், கீதையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அந்தக் கரத்தை வெட்டி எறிவேன்“ என்று மேடையில் பேசினார் வருண் காந்தி. தேர்தல் ஆணையம், வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பிஜேபிக்கு ஆலோசனை வழங்கியது. ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, வருண் காந்தி பேசியது கொஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது, முழுமையான பேச்சு இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று பேட்டியில் கூறினார். இதையெல்லாம் மீறி வருண் காந்தியின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியது பிஜேபி, வருண் காந்தி, அந்தப் பேச்சுக்களை தான் பேசவில்லை, அந்த டேப்புகள் பொய் என்று மழுப்பினார். இன்று வருண் காந்தியின் பேச்சுக்கள் உண்மை, என்று ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் நிறுவனம் சான்றளித்துள்ளது. இன்றாவது, வருண் காந்தி பேசியது தவறு என்று வெளிப்படையாக பேச முடியாமல் மழுப்பி வருகிறது பிஜேபி.


தீவிர இந்துத்வாவா அல்லது மிதமான இந்துத்துவாவா என்று ஏக குழப்பத்தில் இருந்தது பிஜேபி. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை. அத்வானி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றதும், அடுத்தக் கட்ட தலைவர்களுக்குள் தலைவர் பதவிக்கான குடுமிப் பிடி சண்டையை தவிர்க்க அத்வானியையே தலைவர் பதவியில் நீடிக்கச் செய்தது பிஜேபி.


ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவோ தலைவைலி தர முடியும் என்பதை பிஜேபி உணர மறுக்கிறது. காங்கிரஸ் கடைபிடித்து வரும் இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்க முடியாமல், உள்ளது பிஜேபி. ஏனெனில், இந்தக் கொள்கைகளை 2004 வரை பின்பற்றிய கட்சிதானே இது. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப் படும் என்று அறிவிக்கப் பட்ட பின்னர், முன்னணித் தலைவர்கள் குறைவான நேரமே பேச அனுமதிக்கப் பட்டார்கள் என்பது, இன்னும் தன்னுடைய தவறுகளை உணர பிஜேபி தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.


அடுத்து, மூன்றாவது அணி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய மார்க்சிஸ்ட் கட்சி, இன்று தன்னுடைய வேர்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிலிருந்து ஆதரவு என்பதில் தொடங்கி, ஏறக்குறைய ஆளுங்கட்சியாகவே மாறிப்போனார்கள் தோழர்கள். தினமும், மன்மோகன் சிங்கிற்கு மிரட்டல் விடுவது நாங்கள் இல்லாமல் இந்த அரசு இல்லை என்று மார்தட்டிக் கொள்வது என்று தொடங்கி, இறுதியில், மக்களிடமிருந்து அந்நியப் பட்டுப் போனார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களும், போராட்ட குணத்தை இழந்து மழுங்கிப் போனதுதான் இந்த ஐந்தாண்டுகளில் இடதுசாரிகள் கண்ட பலன்.


அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியது தவறு என்று இன்று பேசி வருகிறார்கள். அணு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் வாங்காமல், வேறு எதை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் ? காங்கிரசோடு சேர்ந்து அமெரிக்காவிற்கு துதி பாட வேண்டும் என்கிறார்களா ? ஆதரவை வாபஸ் வாங்கியவுடன், எதற்காக வாபஸ் பெற்றோம் என்பதையும், அணு ஒப்பந்தத்தால் இந்தியா சந்திக்கவிருக்கும் ஆபத்துகளையும் மக்கள் மத்தியில் விளக்கத் தவறி விட்டார்கள் இடது சாரிகள். 1991ல் புதிய பொருளாதார கொள்கை செயல்படுத்தப் பட்டபோது, அதன் ஆபத்தை விளக்கி இந்தியா முழுவதும், இடதுசாரிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களும், போராட்டங்களும் தான், அவர்களை வளர்த்து 2004 தேர்தலில், பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அதை மறந்ததால், இன்று வேர்களை இழந்து குழப்பத்தில் இருக்கிறார்கள் இடது சாரிகள்.
ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு அருகில் இருந்ததன் பலன், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள தங்களது கட்சியின் பொலிட்ப்யூரோ உறுப்பினரை பாதுகாப்பதில் முடிந்துள்ளது. இடது சாரிகளின் கோட்டையான மேற்கு வங்கம், நக்சல்பாரிகள் வலுவான தளத்தை அமைக்கும் அளவுக்கு அதன் கூடாரமே கலகலத்துப் போய் உள்ளது.



நாட்டில் உள்ள பிற கட்சிகள், தங்களிடம் இருக்கும் ஒன்று இரண்டு எம்பி சீட்டுகளை வைத்து எப்படி காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற போட்டியில், 10, ஜன்பத் சாலையில், வரிசையில் நிற்கின்றன. ஒரே மாநிலத்தில் நேரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் கூட, காங்கிரஸ் ஆதரவு என்பதில் போட்டி போடுகின்றன.



இந்தச் சூழ்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அரசியல் வானில், ஒரு பெரும் வெறுமை ஏற்பட்டுள்ளது. இந்த வெறுமை, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஏகபோகத் தன்மையை (monopoly) ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த ஏகபோகம், இந்திய பொருளாதாரத்தை, மொத்தமாக பந்நாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நிலைக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்புத் தன்மையை அழிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும்.
இடது சாரிகள் தங்கள் உறக்கத்திலிருந்து மீண்டு எழ வேண்டும். இடது சாரிகளுக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் பொறுப்பு இப்போதுதான் உள்ளது.
பிஜேபி, தனது இந்துத்வா கொள்கையை உதறி எரிந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

இல்லையெனில், வரும் ஐந்தாண்டுகளில், காங்கிரசின் துரோகங்களுக்கு மவுன சாட்சியாய் இருந்த குற்றவாளிகள் என வரலாறு இவர்களை பதிவு செய்யும்.

/ஒப்பாரி/


இந்திய அரசியலில் வெற்றிடம்…. ??


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல அரசியல் கட்சிகளை நிலைகுலையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்பாராமல் கிடைத்த வெற்றியில், இறுமாப்புடன் இருக்கிறது. பிரதான எதிர்க் கட்சிகள், இந்த தோல்வியை எப்படி எதிர்கொள்வது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், திசை தெரியாமல் நிற்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களத்தில் இறங்கிய பிஜேபி, பெருங்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு நாள் யஷ்வந்த் சின்கா ஒரு அறிக்கை வெளியிட்டு கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறார். மறுநாள், ஜஸ்வந்த் சிங் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். கட்சியில் குழப்பமே இல்லை என்று ஒரு தலைவர் அறிக்கை வெளியிடுகிறார். அதிகாரம் இல்லையென்றால், கட்சி நடத்த முடியாது என்பதையே இந்தக் குழப்பங்கள் காட்டுகின்றன.


பிலிபித் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி வேட்பாளர் வருண் காந்தியின் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்த பேச்சு நாடெங்கிலும் கடுமையாக கண்டிக்கப் பட்ட போதிலும், பிஜேபியால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. “இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ, அவர்கள் பின்னால் யாரும் இல்லை என்றோ அவர்களுக்கு எதிராக யாராவது கரம் உயர்த்துவார்களேயானால், கீதையின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அந்தக் கரத்தை வெட்டி எறிவேன்“ என்று மேடையில் பேசினார் வருண் காந்தி. தேர்தல் ஆணையம், வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பிஜேபிக்கு ஆலோசனை வழங்கியது. ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, வருண் காந்தி பேசியது கொஞ்சம்தான் வெளிவந்திருக்கிறது, முழுமையான பேச்சு இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று பேட்டியில் கூறினார். இதையெல்லாம் மீறி வருண் காந்தியின் பேச்சுக்கு வக்காலத்து வாங்கியது பிஜேபி, வருண் காந்தி, அந்தப் பேச்சுக்களை தான் பேசவில்லை, அந்த டேப்புகள் பொய் என்று மழுப்பினார். இன்று வருண் காந்தியின் பேச்சுக்கள் உண்மை, என்று ஐதராபாத்தில் உள்ள தடய அறிவியல் நிறுவனம் சான்றளித்துள்ளது. இன்றாவது, வருண் காந்தி பேசியது தவறு என்று வெளிப்படையாக பேச முடியாமல் மழுப்பி வருகிறது பிஜேபி.


தீவிர இந்துத்வாவா அல்லது மிதமான இந்துத்துவாவா என்று ஏக குழப்பத்தில் இருந்தது பிஜேபி. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை. அத்வானி தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்றதும், அடுத்தக் கட்ட தலைவர்களுக்குள் தலைவர் பதவிக்கான குடுமிப் பிடி சண்டையை தவிர்க்க அத்வானியையே தலைவர் பதவியில் நீடிக்கச் செய்தது பிஜேபி.


ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, காங்கிரஸ் அரசுக்கு எவ்வளவோ தலைவைலி தர முடியும் என்பதை பிஜேபி உணர மறுக்கிறது. காங்கிரஸ் கடைபிடித்து வரும் இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்க முடியாமல், உள்ளது பிஜேபி. ஏனெனில், இந்தக் கொள்கைகளை 2004 வரை பின்பற்றிய கட்சிதானே இது. தேசிய செயற்குழுக் கூட்டத்தில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப் படும் என்று அறிவிக்கப் பட்ட பின்னர், முன்னணித் தலைவர்கள் குறைவான நேரமே பேச அனுமதிக்கப் பட்டார்கள் என்பது, இன்னும் தன்னுடைய தவறுகளை உணர பிஜேபி தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.


அடுத்து, மூன்றாவது அணி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய மார்க்சிஸ்ட் கட்சி, இன்று தன்னுடைய வேர்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெளியிலிருந்து ஆதரவு என்பதில் தொடங்கி, ஏறக்குறைய ஆளுங்கட்சியாகவே மாறிப்போனார்கள் தோழர்கள். தினமும், மன்மோகன் சிங்கிற்கு மிரட்டல் விடுவது நாங்கள் இல்லாமல் இந்த அரசு இல்லை என்று மார்தட்டிக் கொள்வது என்று தொடங்கி, இறுதியில், மக்களிடமிருந்து அந்நியப் பட்டுப் போனார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களும், போராட்ட குணத்தை இழந்து மழுங்கிப் போனதுதான் இந்த ஐந்தாண்டுகளில் இடதுசாரிகள் கண்ட பலன்.


அணு ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியது தவறு என்று இன்று பேசி வருகிறார்கள். அணு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை வாபஸ் வாங்காமல், வேறு எதை எதிர்த்து வாபஸ் வாங்க வேண்டும் ? காங்கிரசோடு சேர்ந்து அமெரிக்காவிற்கு துதி பாட வேண்டும் என்கிறார்களா ? ஆதரவை வாபஸ் வாங்கியவுடன், எதற்காக வாபஸ் பெற்றோம் என்பதையும், அணு ஒப்பந்தத்தால் இந்தியா சந்திக்கவிருக்கும் ஆபத்துகளையும் மக்கள் மத்தியில் விளக்கத் தவறி விட்டார்கள் இடது சாரிகள். 1991ல் புதிய பொருளாதார கொள்கை செயல்படுத்தப் பட்டபோது, அதன் ஆபத்தை விளக்கி இந்தியா முழுவதும், இடதுசாரிகள் மேற்கொண்ட பிரச்சாரங்களும், போராட்டங்களும் தான், அவர்களை வளர்த்து 2004 தேர்தலில், பெரும் வெற்றியை ஈட்டித் தந்தது. அதை மறந்ததால், இன்று வேர்களை இழந்து குழப்பத்தில் இருக்கிறார்கள் இடது சாரிகள்.
ஐந்தாண்டுகள் ஆட்சிக்கு அருகில் இருந்ததன் பலன், ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள தங்களது கட்சியின் பொலிட்ப்யூரோ உறுப்பினரை பாதுகாப்பதில் முடிந்துள்ளது. இடது சாரிகளின் கோட்டையான மேற்கு வங்கம், நக்சல்பாரிகள் வலுவான தளத்தை அமைக்கும் அளவுக்கு அதன் கூடாரமே கலகலத்துப் போய் உள்ளது.



நாட்டில் உள்ள பிற கட்சிகள், தங்களிடம் இருக்கும் ஒன்று இரண்டு எம்பி சீட்டுகளை வைத்து எப்படி காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற போட்டியில், 10, ஜன்பத் சாலையில், வரிசையில் நிற்கின்றன. ஒரே மாநிலத்தில் நேரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள் கூட, காங்கிரஸ் ஆதரவு என்பதில் போட்டி போடுகின்றன.



இந்தச் சூழ்நிலையில், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அரசியல் வானில், ஒரு பெரும் வெறுமை ஏற்பட்டுள்ளது. இந்த வெறுமை, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஏகபோகத் தன்மையை (monopoly) ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த ஏகபோகம், இந்திய பொருளாதாரத்தை, மொத்தமாக பந்நாட்டு நிறுவனங்களிடம் அடகு வைக்கும் நிலைக்கும், இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்புத் தன்மையை அழிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லும்.
இடது சாரிகள் தங்கள் உறக்கத்திலிருந்து மீண்டு எழ வேண்டும். இடது சாரிகளுக்கு முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் பொறுப்பு இப்போதுதான் உள்ளது.
பிஜேபி, தனது இந்துத்வா கொள்கையை உதறி எரிந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

இல்லையெனில், வரும் ஐந்தாண்டுகளில், காங்கிரசின் துரோகங்களுக்கு மவுன சாட்சியாய் இருந்த குற்றவாளிகள் என வரலாறு இவர்களை பதிவு செய்யும்.

/ஒப்பாரி/


Saturday, June 13, 2009

ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..






இந்தியாவில், பெரிய அளவில் ஊழல் புகார்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் மன சாட்சியாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இன்று சுயபரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் எந்த மிகப் பெரிய அலை அடித்தாலும், அந்த அலையால் பாதிக்கப் படாமல், தன் வாக்கு வங்கியை மிகப் பத்திரமாக பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சிபிஎம் கட்சி இன்று மக்கள் தந்துள்ள இந்த படு தோல்வியை ஜீரணிக்க முடியாமல் நிலை குலைந்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் சிபிஎம் ன் மிகப் பெரிய வாக்கு வங்கியாக விவசாயத் தொழிலாளர்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளார்கள். இத்தொழிலாளர்கள் இவர்களுக்கு தந்த ஆதரவுக்கு காரணம், சிபிஎம், தங்கள் கட்சி என ஒவ்வொரு தொழிலாளியும் நினைத்ததுதான் காரணம். மேற்கு வங்கத்தில் முதன் முதலில் சிபிஎம் ஆட்சிக்கு வருகையில், நிலச்சுவான்தார்களின் பிடியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இருந்தன. பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நிலச்சுவான்தார்களின் ஏவலுக்கு கட்டுப் பட்டு இருந்தனர்.




ஆட்சியைப் பிடித்தவுடன், நிலச்சுவான்தார்களின் பிடியிலிருந்து நிலங்களை விடுவித்து, நிலமில்லாத விவசாயிகளுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், அனைவரையும் நில முதலாளிகளாக உருவாக்கியது சிபிஎம் ன் மிகப் பெரிய சாதனை. இச்சாதனைக்காகத்தான், தொடர்ந்து இந்த உழைப்பாளி மக்கள் ஆதரவு நல்கி வந்தார்கள்.





ஆனால் இன்றைய சிபிஎம் என்ன செய்கிறது ? ரத்தன் டாடாவுக்கு விசுவாசமாக விவசாய நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிக்கு அளிக்கிறது. இதை எதிர்த்து போராடிய மக்களை காவல் துறையை விட்டும், சிபிஎம் ரவுடிகளை விட்டும் கடுமையாக தாக்கியது. எந்த உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிபிஎம் பாடுபட்டு வந்ததோ, அந்த உழைப்பாளி மக்கள், சந்தர்ப்பவாத அரசியல்வாதியான மம்தாவின் பின் அணி திரள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. நந்திகிராமிலும், சிங்கூரிலும் நேர்ந்த மிகப் பெரிய வன்முறையை, நக்சலைட்டுகளால் நேர்ந்த வன்முறை என்று சமாளிக்கப் பார்த்தது. அவ்வளவு வன்முறைகளுக்குப் பிறகும் கூட, சுயபரிசீலனை செய்ய மறுத்தது. அதன் விளைவுகளை இன்று தேர்தலில் சந்தித்துள்ளது.


ஊழல் இத்தேசத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக இருந்து வருகிறது. ஆனால் சிபிஎம் கட்சிக்கு மட்டும், இந்த ஊழல் மற்ற கட்சிகளைப் போலவே, வசதியாக தேர்தலுக்குத் தேர்தல் பயன்படும் ஒரு ஆயுதமாகவே இருந்து வருகிறது. ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று விபிசிங் பிரதமாரான தேர்தலில், ராஜீவ் காந்தி போபர்சில் ஊழல் செய்தார் என்று கூப்பாடு போட்ட சிபிஎம், லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் பல கோடிகளை சுருட்டியதாக குற்றச் சாட்டு எழுந்தபோது மவுனம் காத்தது. இதற்கெல்லாம், சிபிஎம் சொல்லும், வசதியான காரணம், மதவாதத்தை எதிர்க்க வேண்டியுள்ளதால் என்று. மற்ற கட்சிகளைப் போலவே மூன்றாந்தர அரசியல் கட்சியாக சிபிஎம் மும் மாறி வருவதையே இது காட்டுகிறது.

2007ம் ஆண்டிலேயே, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 2 கோடி ரூபாயை மார்க்சிஸ்ட் நாளிதழ் தேசாபிமானி நன்கொடையாக பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தற்போது, கேரளாவில் மின் துறை அமைச்சராக இருந்த பினரயி விஜயன் மீது எழுந்த புகார். மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையில் மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, சட்டசபையில் எழுந்த பெரிய அமளியை பொருட்படுத்தாமல், சிபிஎம், இந்த குற்றச்சாட்டை உதாசீனப்படுத்தியது. 16.01.2007 அன்று கேரள உயர்நீதிமன்றம், இந்த ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2009ல், கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த அறிக்கையில் பினரயி விஜயனை 9வது குற்றவாளியாக சேர்த்தது.





சிபிஎம் ன் அமைச்சரவை கூடி, பினரயி விஜயன் மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க மறுத்தது.
கடந்த வாரம், கேரள ஆளுனர் பினரயி விஜயன் மேல் வழக்கு தொடர பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி வழக்கு தொடர அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை வழங்கிய ஆளுனரை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதுதான் சிபிஎம் ன் உச்சக் கட்ட அயோக்கியத்தனம். இன்று தமிழகம் முழுவதும், ஆளுனர் அனுமதி அளித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது சிபிஎம்.

இதில் வினோதம் என்னவென்றால் கேரள மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆளுநர் அனுமதி கொடுக்கும் முன் பரிசீலித்துதான் கொடுத்திருப்பார் என்று சொல்கிறார்.

சிபிஐ ஒன்றும், வானத்திலிருந்து குதித்து வந்த நேர்மையானவர்ளை மட்டுமே கொண்டதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டவுடன் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்தே தெரிகிறது, சிபிஐ ன் யோக்கியதை. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஊழல் புகார் வருகையில், அதை நேர்மையாக எதிர்கொள்வது தானே சரியாக இருக்கும்.

ஊழல் புகாரில் சிக்கிய தன் கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக தன் கட்சி ஊழியர்களை அழைத்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சிபிஎம் இன்னும் தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

/ஒப்பாரி/




ஊருக்கு உபதேசம் செய்யும் சிபிஎம் ..






இந்தியாவில், பெரிய அளவில் ஊழல் புகார்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கத்தின் மன சாட்சியாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து இன்று சுயபரிசீலனை செய்து வருகிறது.

இந்தியாவில் எந்த மிகப் பெரிய அலை அடித்தாலும், அந்த அலையால் பாதிக்கப் படாமல், தன் வாக்கு வங்கியை மிகப் பத்திரமாக பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சிபிஎம் கட்சி இன்று மக்கள் தந்துள்ள இந்த படு தோல்வியை ஜீரணிக்க முடியாமல் நிலை குலைந்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் சிபிஎம் ன் மிகப் பெரிய வாக்கு வங்கியாக விவசாயத் தொழிலாளர்கள் தொடர்ந்து இருந்து வந்துள்ளார்கள். இத்தொழிலாளர்கள் இவர்களுக்கு தந்த ஆதரவுக்கு காரணம், சிபிஎம், தங்கள் கட்சி என ஒவ்வொரு தொழிலாளியும் நினைத்ததுதான் காரணம். மேற்கு வங்கத்தில் முதன் முதலில் சிபிஎம் ஆட்சிக்கு வருகையில், நிலச்சுவான்தார்களின் பிடியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் இருந்தன. பெரும்பான்மை மக்கள் விவசாயக் கூலிகளாக நிலச்சுவான்தார்களின் ஏவலுக்கு கட்டுப் பட்டு இருந்தனர்.




ஆட்சியைப் பிடித்தவுடன், நிலச்சுவான்தார்களின் பிடியிலிருந்து நிலங்களை விடுவித்து, நிலமில்லாத விவசாயிகளுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், அனைவரையும் நில முதலாளிகளாக உருவாக்கியது சிபிஎம் ன் மிகப் பெரிய சாதனை. இச்சாதனைக்காகத்தான், தொடர்ந்து இந்த உழைப்பாளி மக்கள் ஆதரவு நல்கி வந்தார்கள்.





ஆனால் இன்றைய சிபிஎம் என்ன செய்கிறது ? ரத்தன் டாடாவுக்கு விசுவாசமாக விவசாய நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிக்கு அளிக்கிறது. இதை எதிர்த்து போராடிய மக்களை காவல் துறையை விட்டும், சிபிஎம் ரவுடிகளை விட்டும் கடுமையாக தாக்கியது. எந்த உழைப்பாளி மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிபிஎம் பாடுபட்டு வந்ததோ, அந்த உழைப்பாளி மக்கள், சந்தர்ப்பவாத அரசியல்வாதியான மம்தாவின் பின் அணி திரள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. நந்திகிராமிலும், சிங்கூரிலும் நேர்ந்த மிகப் பெரிய வன்முறையை, நக்சலைட்டுகளால் நேர்ந்த வன்முறை என்று சமாளிக்கப் பார்த்தது. அவ்வளவு வன்முறைகளுக்குப் பிறகும் கூட, சுயபரிசீலனை செய்ய மறுத்தது. அதன் விளைவுகளை இன்று தேர்தலில் சந்தித்துள்ளது.


ஊழல் இத்தேசத்தின் மிகப் பெரிய சாபக்கேடாக இருந்து வருகிறது. ஆனால் சிபிஎம் கட்சிக்கு மட்டும், இந்த ஊழல் மற்ற கட்சிகளைப் போலவே, வசதியாக தேர்தலுக்குத் தேர்தல் பயன்படும் ஒரு ஆயுதமாகவே இருந்து வருகிறது. ஐக்கிய முன்னணி வெற்றி பெற்று விபிசிங் பிரதமாரான தேர்தலில், ராஜீவ் காந்தி போபர்சில் ஊழல் செய்தார் என்று கூப்பாடு போட்ட சிபிஎம், லாலு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் பல கோடிகளை சுருட்டியதாக குற்றச் சாட்டு எழுந்தபோது மவுனம் காத்தது. இதற்கெல்லாம், சிபிஎம் சொல்லும், வசதியான காரணம், மதவாதத்தை எதிர்க்க வேண்டியுள்ளதால் என்று. மற்ற கட்சிகளைப் போலவே மூன்றாந்தர அரசியல் கட்சியாக சிபிஎம் மும் மாறி வருவதையே இது காட்டுகிறது.

2007ம் ஆண்டிலேயே, லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் இருந்து 2 கோடி ரூபாயை மார்க்சிஸ்ட் நாளிதழ் தேசாபிமானி நன்கொடையாக பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


தற்போது, கேரளாவில் மின் துறை அமைச்சராக இருந்த பினரயி விஜயன் மீது எழுந்த புகார். மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கையில் மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து, சட்டசபையில் எழுந்த பெரிய அமளியை பொருட்படுத்தாமல், சிபிஎம், இந்த குற்றச்சாட்டை உதாசீனப்படுத்தியது. 16.01.2007 அன்று கேரள உயர்நீதிமன்றம், இந்த ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஜனவரி 2009ல், கேரள உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த அறிக்கையில் பினரயி விஜயனை 9வது குற்றவாளியாக சேர்த்தது.





சிபிஎம் ன் அமைச்சரவை கூடி, பினரயி விஜயன் மேல் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்க மறுத்தது.
கடந்த வாரம், கேரள ஆளுனர் பினரயி விஜயன் மேல் வழக்கு தொடர பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி வழக்கு தொடர அனுமதி அளித்தார்.
இந்த உத்தரவை வழங்கிய ஆளுனரை எதிர்த்து போராட்டத்தை நடத்துவதுதான் சிபிஎம் ன் உச்சக் கட்ட அயோக்கியத்தனம். இன்று தமிழகம் முழுவதும், ஆளுனர் அனுமதி அளித்ததற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது சிபிஎம்.

இதில் வினோதம் என்னவென்றால் கேரள மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆளுநர் அனுமதி கொடுக்கும் முன் பரிசீலித்துதான் கொடுத்திருப்பார் என்று சொல்கிறார்.

சிபிஐ ஒன்றும், வானத்திலிருந்து குதித்து வந்த நேர்மையானவர்ளை மட்டுமே கொண்டதல்ல. மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்டவுடன் கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்தே தெரிகிறது, சிபிஐ ன் யோக்கியதை. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஊழல் புகார் வருகையில், அதை நேர்மையாக எதிர்கொள்வது தானே சரியாக இருக்கும்.

ஊழல் புகாரில் சிக்கிய தன் கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக தன் கட்சி ஊழியர்களை அழைத்து ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சிபிஎம் இன்னும் தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

/ஒப்பாரி/




Wednesday, June 10, 2009

உல்லாச கருணாநிதியும் உறங்கும் உள்துறையும்... ...





தமிழகத்தில் முதலமைச்சராக உள் துறையையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டுள்ள கருணாநிதியின் ஆட்சிக்கு மேலும் ஒரு மணிமகுடம் ஏற்றப் பட்டுள்ளது.

புழல் சிறைக்குள்ளேயே வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி சக கைதிகளால் குத்திக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

என்னால் நடக்க முடியவில்லை, உயிருக்கே ஆபத்து, மறு பிறவி எடுத்து வந்துள்ளேன், உடல் ஒத்துழைக்கவில்லை என்று கழிவிறக்கம் கொண்டு, சுய பச்சாதாபத்தில், புலம்பும் கருணாநிதி, சட்டம் ஒழுங்கு மற்றும் உள்துறை போன்ற முக்கியமான துறைகளை தன் தவப்புதல்வனிடமோ, அல்லது சுயநினைவோடு பணியாற்றக் கூடிய வேறு ஒரு அமைச்சரிடமோ கொடுத்தால் தான் என்ன ?

நடக்க முடியாமல், அடுத்தவர் உதவியோடு தள்ளு வண்டியில் பயணித்து ஆட்சி பரிபாலனம் செய்யும் லட்சணம் மிக நன்றாக விளங்குகிறது. இவருடைய நிலை கண்டு, எள்ளளவும் பயமோ மரியாதையோ இல்லாத அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக பொறுப்பற்று வேலை செய்து கொண்டு இருப்பதை தமிழகம் தொடர்ந்து கண்டு வருகிறது.

முதலில், சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இருந்ததை, முன் கூட்டியே தகவல் தெரிந்தும், கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, கைகட்டி வேடிக்கை பார்த்தது. கலவரம் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப் பட்டதை பார்த்து பொது மக்கள் கொதித்து எழுந்தவுடன் விழித்துக் கொண்ட கருணாநிதி, உடனடியாக காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டு, விசாரணை கமிஷனை அமைத்து பிரச்சினையை ஆறப் போட்டார்.

அடுத்து, மார்ச் 2009ல், நீதிமன்ற வளாகத்தில், 300க்கும் ஏற்பட்ட வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அடித்து நொறுக்கப் பட்டு, வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டு, பெரும் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி, என் உடல் நிலையை கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் போராட்டத்தை வைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்தே, வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், தமிழக நடிகர் நடிகைகளுக்கு கலைமாமணி விருதுகள் அறிவித்தார்.




ஈழப்பிரச்சினைக்காக ஒத்துழைக்காத உடல்நிலை, குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்றதும், ஒத்துழைக்க ஆரம்பித்து, டெல்லி சென்று பேரம் நடத்தினார். மூத்த மகனுக்கு மகுடம் சூட்டியவுடன், இளைய மகன் கோபிப்பானே என்று அவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

துணை முதல்வர் பதவி வழங்கினாலும், சட்டம் ஒழுங்கு, உள் துறை, அதிகாரிகள் நியமனம், ஆகிய முக்கிய துறைகளை, தன்னுடன் சக்கர வண்டியிலேயே பயணிக்க வைத்திருக்கிறார்.

தேர்தல் நாளன்று, மனிதநேய மக்கள் கட்சியினர் தாக்கப் பட்டனர். மத்திய சென்னை வேட்பாளரின் வண்டி அடித்து நொறுக்கப் பட்டது.

தேர்தல் முடிந்தவுடன் இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு, ஏறத்தாழ ஒரு கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன.

இவற்றையெல்லாம் மவுனமாக சக்கர நாற்காலியில் ஊர்ந்தபடி, வேடிக்கை பார்க்கிறார், உள்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதி.

சக்கர வண்டியிலே பயனிக்கும் உள்துறையின் செயல்பாடு இன்று சிறைக்குள்ளேயே ஒரு கொலை நடப்பதில் சென்று முடிந்திருக்கிறது.

1985ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் என்பவரை திருவெற்றியூரில் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை பெற்று வரும் வெல்டிங் குமார் என்ற ஆயுள் தண்டனைக் கைதி, இன்று புழல் சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த வெல்டிங் குமார் தி.மு.க வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வெல்டிங் குமார் கைது செய்யப் பட்டபோது

சிறைக்குள்ளேயே ஒரு ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப் பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை.

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பில்லை.

நீதிபதிகளுக்கு பாதுகாப்பில்லை.

இன்று சிறைக்குள்ளே உள்ள கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை.


அப்பொழுது, கருணாநிதியும், அவர் குடும்பத்தாரும் மட்டும் தான் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா ?

இந்த அரசு கருணாநிதிக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டும் தானா ?

சிறைக்குள்ளேயே கைதி கொல்லப் படுகிறார் என்றால், அதற்கு பொறுப்பான உள் துறை அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் அல்லவா ?

பதவி விலகுவதெல்லாம், சுயமரியாதை உள்ளவர்களுக்குத் தான்.

"ஒரு அடிமை என்ன செய்ய முடியும்" என்று ஒப்பாரி வைப்பவருக்கு எப்படி இந்த விதி பொருந்தும் ?

ஒப்பாரி