Saturday, April 10, 2010

காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை




தமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில் பலிகடா சட்டம் ஒழுங்குதான்.


தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வழக்கறிஞர்கள் மோதலைத் தொடர்ந்து, காவல்துறையில் ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமை உணர்வு காணப்பட்டது.

ஆனால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அரசு மற்றும் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார்பாகவும், உச்ச நீதிமன்ற் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். இவ்வழக்கிற்காக ராஜீவ் தவானுக்கு ஒரு நாள் விவாதத்திற்கு ரூ.ஐந்து லட்சம் கட்டணமாக அரசு செலவில் வழங்கப் பட்டது.




இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் சிறப்புச் செயலராக நியமிக்கப் படுவதற்காக டெல்லி உறைவிட ஆணையராக மாற்றப் பட்டார். இந்நியமனத்தை பிரதம மந்திரி தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் அளிக்கும் முன்பு, பிரதமருக்கு, ஏ.கே.விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய ஆவணங்களும் ஆதாரங்களும் பிரதமர் பார்வைக்கு வைக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரதமர், அழகிரியின் சிறப்புச் செயலராக ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கு தடை விதித்தார். பிரதமர் பார்வைக்கு இந்த ஊழல் தொடர்பான ஆதாராங்கள் கிடைத்ததற்கு, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டும் காரணம் என்று ஏ.கே.விஸ்வநாதன் கருதினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.விஸ்வநாதன் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில் அபிடவிட் தாக்கல் செய்கையில் தடியடி நடத்த உத்தரவிட்டது ராதாகிருஷ்ணன்தான், அவர் அவ்வாறு உத்தரவிடவில்லையெனில், அன்று கலவரமே நடைபெற்றிருக்காது என்று அந்த அபிடவிட்டில் தெரிவித்தார்.




ஏ.கே.விஸ்வநாததின் இந்த அபிடவிட்டால், ஒற்றுமையாக இருந்த காவல்துறை கூடாரம் கலக்கமடைய ஆரம்பித்தது. இந்த அபிடவிட்டால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும், ஜாபர்சேட்டும், உள்துறை செயலாளர் மாலதிக்கு நெருக்கடி கொடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை அடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் ஒரு வருட விடுப்பில் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.




இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்த ஏ.கே.விஸ்வநாதன், அந்த அபிடவிட்டில் தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு காரணமே ராதாகிருஷ்ணன் தான் என்றும், ராதாகிருஷ்ணனை பாதுகாக்க பல செய்திகள் வேலை செய்கின்றன என்றும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்று அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான் தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, லத்திக்கா சரணை காவல்துறை தலைமை இயக்குநராக தமிழக அரசு நியமித்துள்ளது, பல பேரின் புருவத்தை உயர்த்தியுள்ளது தவிரவும் பல பேரின் மன வருத்தத்துக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், 1971ம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியை சேர்ந்த கே.பி.ஜெயின் விடுப்பில் சென்றதற்கும் காரணம் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேல் என்ற காவல் உதவி ஆய்வாளர், நடு சாலையில், அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க இறந்தது குறித்து, அமைச்சர்களின் செயலிழந்த நிலை குறித்து, தொலைபேசியில் கே.பி.ஜெயின் தனது வருத்தத்தை சிறிது கடுமையான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உரையாடல் டேப் செய்யப் பட்டு முதல்வருக்கு காண்பிக்கப் பட்டதாகவும், அதனாலேயே, முதல்வர் ஜெயினை விடுப்பில் செல்லச் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சமீபத்தில் வெளியான தொலைபேசி ஒட்டுக் கேட்பு பட்டியலில் பல காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் இருந்ததனால் பல காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் உயர் அதிகாரி மீது ஏக கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லத்திக்கா சரணை விட பணியில் மூத்த என்.பாலச்சந்திரன், நட்ராஜ், கே.விஜயக்குமார் ஆகிய அதிகாரிகள் இருக்க, செப்டம்பர் 2009ல் டிஜிபி யாக பதவி உயர்வு பெற்ற லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியது பல பேருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று இதை எதிர்த்து, டிஜிபி நட்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, லத்திக்கா சரணின் நியமனம் இந்த ரிட் பெட்டிஷனின் முடிவைப் பொருத்ததே என்று ஆணையிட்டுள்ளனர்.

மேலும், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி, தன் மீதான துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தும், அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து விட்டு, உபாத்யாய்க்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேறு, நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்குள் இவ்வாறு பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், கீழ் நிலையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை கட்டுப் படுத்த உயர் அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாதனால், கீழ் மட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கடுமையான தவறுகளை செய்வதாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு ஊழல் வழக்குகளில் மூன்று ஆய்வாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.




பணியில் மூத்தவர்கள் இருக்க, லத்திக்கா சரண் போன்ற இளையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, விதிகளை மீறியும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்த்தும் பதவிகளை வழங்குவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், சமூகத்துக்கே கேடு. என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.



சவுக்கு

காங்கிரஸ் கட்சியை விஞ்சும் தமிழக காவல்துறை




தமிழக காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது. கோஷ்டிகளை வளர்த்து மோதிக்கொள்வதில், தமிழக காங்கிரஸ் கட்சியை விஞ்ச ஒருவரும் கிடையாது. தற்போது காங்கிரஸ் கட்சியையும் விஞ்சும் வகையில், தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இந்த கோஷ்டி மோதலில் பலிகடா சட்டம் ஒழுங்குதான்.


தமிழக காவல்துறையில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த காவல்துறை வழக்கறிஞர்கள் மோதலைத் தொடர்ந்து, காவல்துறையில் ஒரு கட்டுக் கோப்பான ஒற்றுமை உணர்வு காணப்பட்டது.

ஆனால் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அரசு மற்றும் கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் சார்பாகவும், உச்ச நீதிமன்ற் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். இவ்வழக்கிற்காக ராஜீவ் தவானுக்கு ஒரு நாள் விவாதத்திற்கு ரூ.ஐந்து லட்சம் கட்டணமாக அரசு செலவில் வழங்கப் பட்டது.




இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் அழகிரியின் சிறப்புச் செயலராக நியமிக்கப் படுவதற்காக டெல்லி உறைவிட ஆணையராக மாற்றப் பட்டார். இந்நியமனத்தை பிரதம மந்திரி தலைமையிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்புதல் அளிக்கும் முன்பு, பிரதமருக்கு, ஏ.கே.விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்கள் பற்றிய ஆவணங்களும் ஆதாரங்களும் பிரதமர் பார்வைக்கு வைக்கப் பட்டதைத் தொடர்ந்து பிரதமர், அழகிரியின் சிறப்புச் செயலராக ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கு தடை விதித்தார். பிரதமர் பார்வைக்கு இந்த ஊழல் தொடர்பான ஆதாராங்கள் கிடைத்ததற்கு, கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனும், உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டும் காரணம் என்று ஏ.கே.விஸ்வநாதன் கருதினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஏ.கே.விஸ்வநாதன் வழக்கறிஞர் காவல்துறையினர் மோதல் தொடர்பான வழக்கில் அபிடவிட் தாக்கல் செய்கையில் தடியடி நடத்த உத்தரவிட்டது ராதாகிருஷ்ணன்தான், அவர் அவ்வாறு உத்தரவிடவில்லையெனில், அன்று கலவரமே நடைபெற்றிருக்காது என்று அந்த அபிடவிட்டில் தெரிவித்தார்.




ஏ.கே.விஸ்வநாததின் இந்த அபிடவிட்டால், ஒற்றுமையாக இருந்த காவல்துறை கூடாரம் கலக்கமடைய ஆரம்பித்தது. இந்த அபிடவிட்டால், ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணனும், ஜாபர்சேட்டும், உள்துறை செயலாளர் மாலதிக்கு நெருக்கடி கொடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை அடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் ஒரு வருட விடுப்பில் சென்றார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.




இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்த ஏ.கே.விஸ்வநாதன், அந்த அபிடவிட்டில் தன் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு காரணமே ராதாகிருஷ்ணன் தான் என்றும், ராதாகிருஷ்ணனை பாதுகாக்க பல செய்திகள் வேலை செய்கின்றன என்றும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அபிடவிட் தாக்கல் செய்தால், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை வரும் என்று அதிகாரிகளை மிரட்டுவதற்காகத்தான் தன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, லத்திக்கா சரணை காவல்துறை தலைமை இயக்குநராக தமிழக அரசு நியமித்துள்ளது, பல பேரின் புருவத்தை உயர்த்தியுள்ளது தவிரவும் பல பேரின் மன வருத்தத்துக்கு காரணமாகியுள்ளது. ஏனெனில், 1971ம் ஆண்டு ஐபிஎஸ் தொகுதியை சேர்ந்த கே.பி.ஜெயின் விடுப்பில் சென்றதற்கும் காரணம் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேல் என்ற காவல் உதவி ஆய்வாளர், நடு சாலையில், அமைச்சர்கள் முன்னிலையில் துடி துடிக்க இறந்தது குறித்து, அமைச்சர்களின் செயலிழந்த நிலை குறித்து, தொலைபேசியில் கே.பி.ஜெயின் தனது வருத்தத்தை சிறிது கடுமையான வார்த்தைகளால் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த உரையாடல் டேப் செய்யப் பட்டு முதல்வருக்கு காண்பிக்கப் பட்டதாகவும், அதனாலேயே, முதல்வர் ஜெயினை விடுப்பில் செல்லச் சொன்னதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சமீபத்தில் வெளியான தொலைபேசி ஒட்டுக் கேட்பு பட்டியலில் பல காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் இருந்ததனால் பல காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் உயர் அதிகாரி மீது ஏக கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லத்திக்கா சரணை விட பணியில் மூத்த என்.பாலச்சந்திரன், நட்ராஜ், கே.விஜயக்குமார் ஆகிய அதிகாரிகள் இருக்க, செப்டம்பர் 2009ல் டிஜிபி யாக பதவி உயர்வு பெற்ற லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியது பல பேருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நியமனம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று இதை எதிர்த்து, டிஜிபி நட்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, நீதிபதிகள் டி.முருகேசன் மற்றும் சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு, லத்திக்கா சரணின் நியமனம் இந்த ரிட் பெட்டிஷனின் முடிவைப் பொருத்ததே என்று ஆணையிட்டுள்ளனர்.

மேலும், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்த, உபாத்யாய் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் சிக்கி, தன் மீதான துறை விசாரணையில் குற்றமற்றவர் என்று விசாரணை அதிகாரி அறிக்கை கொடுத்தும், அவரை விட பணியில் இளையவரான லத்திக்கா சரணுக்கு டிஜிபி பதவி உயர்வு அளித்து விட்டு, உபாத்யாய்க்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேறு, நேர்மையான அதிகாரிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் அதிகாரிகளுக்குள் இவ்வாறு பல்வேறு குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால், கீழ் நிலையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களை கட்டுப் படுத்த உயர் அதிகாரிகள் சரிவர கவனம் செலுத்தாதனால், கீழ் மட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கடுமையான தவறுகளை செய்வதாகவும் கூறுகிறார்கள். கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு ஊழல் வழக்குகளில் மூன்று ஆய்வாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.




பணியில் மூத்தவர்கள் இருக்க, லத்திக்கா சரண் போன்ற இளையவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, விதிகளை மீறியும் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம் பார்த்தும் பதவிகளை வழங்குவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், சமூகத்துக்கே கேடு. என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.



சவுக்கு

Sunday, April 4, 2010

விடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞர் தாமரை









நளினி விடுதலை, அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில், நளினி விடுதலையை பல்வேறு கோணங்களில் அலசும் ஒரு கருத்தரங்கை, கீற்று டாட் காம் இணைய தளம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, இதழாளர் அருள் எழிலன், கவிஞர் தாமரை, விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.







வழக்கறிஞர் சுந்தரராஜன்




வழக்கறிஞர் சுந்தரராஜன் தனது உரையில் நளினியின் விடுதலை குறித்து மக்களிடம் பரவலான கருத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இன்று சிறையில் இருப்பது நளினியாக இருக்கலாம். நாளை இதுவே நம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.









வழக்கறிஞர் சுந்தரராஜன்




ஆகையால் நளினி விடுதலையை, இச்சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவே பார்க்க வேண்டும். இப்பிரச்சினையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல, பரந்துபட்ட சமூகம் இருக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றுவதற்கான வேலையில் நாம் இறங்க வேண்டும், அதுதான் நளினிக்கு நலம் பயக்கும் என்று கூறினார்.







அருள் எழிலன்




இதழாளர் அருள் எழிலன் பேசுகையில், நளினி விடுதலை குறித்த விவாதங்களின் போது எப்போதுமே ராஜீவ் கொலை மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறது.







அருள் எழிலன்






ஆனால் அமைதிப்படையின் அட்டூழியங்கள் வசதியாக மறைக்கப் படுகின்றன. அமைதிப்படையால் பல ஆயிரம் உயிர்கள் பறிக்கப் பட்டதைப் பற்றி யாருமே பேசவில்லை. சாத்தானின் படைகள் என்று அமைதிப்படை வர்ணிக்கப் பட்டதே ? அந்தச் சாத்தான் யார் என்பதை யாரும் பேச முற்படுவதில்லை.



நளினி யாரிடமும் கருணை கேட்கவில்லை. அவரது விடுதலை சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமை. இது வரை தமிழ்நாட்டில் எத்தனை கொலைகாரர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் ? நளினி மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கூறினார். மேலும் நளினி விடுதலைக்காக ஒரு பெரிய இயக்கம் கட்டப் பட வேண்டும். போராட்டம் ஒன்றே நளினியை விடுதலை செய்யும் என்று கூறினார்.



கவிஞர் தாமரை தனது உரையில், நளினிக்காக நான் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். சாதாரண மக்கள் கையெழுத்து இட்டால், அது அரசின் கவனத்தை ஈர்க்காதோ என்று முக்கிய நபர்களிடம் கையெழுத்து இட்டேன். இந்த இயக்கத்தை எடுக்கும் முன் இவ்வழக்கு தொடர்பான அவ்வளவு ஆவணங்களையும் விரிவாக படித்தேன். அண்ணா நூற்றாண்டில் கைதிகளை விடுவிக்கப் போகிறார்கள் என்ற காரணத்தால் விரைவாக வாங்கினேன். கனிமொழி மூலமாக முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கி, நான், கவிஞர் க்ருஷாங்கிணி, தியாகு ஆகியோர் கருணாநிதியை சந்தித்தோம்.







கவிஞர் தாமரை






அப்போது கருணாநிதி “எனக்கு நளினியை விடுதலை செய்வதில் ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் சோனியாவுக்கு ஆட்சேபம் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சோனியா சரி என்றால் எனக்கு விடுதலை செய்வதில் தடையேதும் இல்லை“ என்று கூறினார். அப்போது நான் கருணாநிதியிடம் “அய்யா அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் படி, இது மாநில அரசின் அதிகாரம். நீங்கள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கூறினேன். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.



இதுவரை எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே 19 ஆண்டுகளாக நளினியை சிறையில் அடைத்துள்ளார்கள்.



முன் விடுதலையை கைதி உரிமையாகக் கோர முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், மற்ற கைதிகளைப் போல என்னை சமமாக நடத்து என்பதற்கு அனைத்துக் கைதிகளுக்கும் உரிமை உண்டு. ஆலோசனைக் குழுமம் என்பது ஒரு சடங்கு. விடுதலை செய்ய முடியாது என்பதற்காக அந்தக் குழுமம் கூறியுள்ள காரணங்கள் நகைச்சுவையானவை.



மேலும் நளினி விடுதலைக்கு எதிராக கூறப்படும் மற்றொரு காரணம், நளினி தேசத்திற்கெதிரான குற்றத்தை புரிந்துள்ளார் என்பது. எது தேசத்திற்கெதிரான குற்றம் ?







கவிஞர் தாமரை




1984ம் ஆண்டு, போபாலில் விஷவாயுவைக் கசிய விட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்ததே யூனியன் கார்பைடு நிறுவனம்…. அது தேசத்திற்கெதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை இன்று வரை கைது செய்யாமல் இருக்கிறதே அரசாங்கம் ? யூனியன் கார்பைடு நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டு அந்த நிறுவனமும் இன்று இந்தியாவில் கால் பதித்துள்ளதே !



அது தேசத்திற்கெதிரான குற்றம் இல்லையா ? இந்தியாவில் அணு விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை அதற்கு காரணமான நிறுவனங்கள் ஏற்க வேண்டாம் என்ற Nuclear Liability Bill கொண்டு வரப்பட்டுள்ளதே. அதற்கு காரணமான மன்மோகன் சிங் தேசத்திற்கெதிரான குற்றத்தை புரியவில்லையா ?



தீவிரவாதம், தீவிரவாதம் என்கிறார்களே. உச்சநீதிமன்றமே ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டப் பிரிவில் இக்கொலை வழக்கு விசாரிக்கப் பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்ததை ஏன் அனைவரும் வசதியாக மறந்து விட்டார்கள் ? தடா சட்டம் இவ்வழக்கில் செல்லாது என்று எப்போது உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததோ, அப்போதே இவ்வழக்கு சாதாரண, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் கீழ், மீண்டும் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் துர்பாக்கியசாலிகள்.



அதனால், தடா சட்டம் செல்லாது என்றாலும், அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கு விசாரணை மட்டும் செல்லும் என்று முடிவு செய்யப் பட்டது.





எத்தனை புலம்பினாலும் ராஜீவ் மரணத்தை மாற்ற முடியாது. அதனால், அதை விட்டு நகர்ந்து முன் செல்ல வேண்டும். நளினி படித்துப் பட்டம் பெற்றார் என்ற காரணத்தால் அவரை விடுதலை செய்ய முடியாது என்று கூறுகிறார்களே, நளினி படிக்காமல் சிறையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தால் மட்டும் விடுதலை செய்திருப்பார்களா ?





இது போன்ற காரணங்களைக் கூறியதற்காக தமிழக அரசு வெட்கப் பட வேண்டும். இந்தக் காரணங்களை நீதிமன்றங்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நளினியின் உரிமை. சோனியா கருணாநிதியின் முடிவு அல்ல என்று பேசினார்.





விடுதலை ராசேந்திரன் பேசுகையில், கையெழுத்து இயக்கம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க கனிமொழி நேரம் வாங்கிக் கொடுத்தபோதே அவர் டெல்லியில் மனு கொடுங்கள் என்று தாமரையிடம் கூறியிருக்கிறார். தாமரைதான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நம் எல்லோரையும் விட, கனிமொழிக்கு தனது தந்தையை நன்கு புரியும் அல்லவா. அதனால்தான் டெல்லிக்கு மனு கொடுங்கள் என்று கூறியுள்ளார். தாமரைதான் கருணாநிதியை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.







விடுதலை ராசேந்திரன்




நளினி விடுதலை குறித்து, இடதுசாரிகள் கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாத போது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியம். தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதா கூட, ஒரு பெண் என்ற வகையில் கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.





நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, என்று கூறுகிறார்களே, நளினி நான்தான் கொன்றேன், என்று கழுத்தில் ஒரு போர்டையா மாட்டிக்கொண்டு சுற்ற முடியும் ?



தேர்தலில் தோற்கும் அரசியல் கட்சிகள், குறைந்த பட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா ? குறைந்தபட்ச இந்தத் தார்மீக பொறுப்பு கூட இல்லாத பொழுது நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரி, டி.ஆர்.கார்த்திக்கேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.





ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட போது, அந்த அறிக்கையில் திமுகவினருக்கு ராஜீவ் கொலை வழக்கில் பங்கு இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பாது பதவியில் இருந்த ஐ.கே.குஜ்ரால் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றது, இதே காங்கிரஸ் அல்லவா ? அதற்கு பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா ?





இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்கிறது ? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே, ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே… அவர் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா ?







கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பகுதியினர்




பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டினார் என்கிறார்களே… அதற்குப் பிறகுதானே, ஈழத்தில் போர் தீவிரமடைந்தது ? மே 21 ராஜீவ் இறந்தார் என்றால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகத் தானே, மே 20 முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். நளினியின் விடுதலை நம் அனைவரின் பொறுப்பு. அதற்காக நான் ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம் என்று பேசினார்.







சவுக்கு

விடுதலை கேட்பது நளினியின் உரிமை, சலுகை அல்ல: கவிஞர் தாமரை









நளினி விடுதலை, அரசியல் சிக்கலும், சட்டச் சிக்கலும் என்ற தலைப்பில், நளினி விடுதலையை பல்வேறு கோணங்களில் அலசும் ஒரு கருத்தரங்கை, கீற்று டாட் காம் இணைய தளம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் எழுத்தாளர் பூங்குழலி, இதழாளர் அருள் எழிலன், கவிஞர் தாமரை, விடுதலை ராசேந்திரன், வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.







வழக்கறிஞர் சுந்தரராஜன்




வழக்கறிஞர் சுந்தரராஜன் தனது உரையில் நளினியின் விடுதலை குறித்து மக்களிடம் பரவலான கருத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், இன்று சிறையில் இருப்பது நளினியாக இருக்கலாம். நாளை இதுவே நம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.









வழக்கறிஞர் சுந்தரராஜன்




ஆகையால் நளினி விடுதலையை, இச்சமூகத்தை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகவே பார்க்க வேண்டும். இப்பிரச்சினையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல, பரந்துபட்ட சமூகம் இருக்கிறது. ஆனால், இந்தப் போக்கை மாற்றுவதற்கான வேலையில் நாம் இறங்க வேண்டும், அதுதான் நளினிக்கு நலம் பயக்கும் என்று கூறினார்.







அருள் எழிலன்




இதழாளர் அருள் எழிலன் பேசுகையில், நளினி விடுதலை குறித்த விவாதங்களின் போது எப்போதுமே ராஜீவ் கொலை மட்டும் தான் பேசுபொருளாக இருக்கிறது.







அருள் எழிலன்






ஆனால் அமைதிப்படையின் அட்டூழியங்கள் வசதியாக மறைக்கப் படுகின்றன. அமைதிப்படையால் பல ஆயிரம் உயிர்கள் பறிக்கப் பட்டதைப் பற்றி யாருமே பேசவில்லை. சாத்தானின் படைகள் என்று அமைதிப்படை வர்ணிக்கப் பட்டதே ? அந்தச் சாத்தான் யார் என்பதை யாரும் பேச முற்படுவதில்லை.



நளினி யாரிடமும் கருணை கேட்கவில்லை. அவரது விடுதலை சட்டம் அவருக்கு வழங்கியுள்ள உரிமை. இது வரை தமிழ்நாட்டில் எத்தனை கொலைகாரர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் ? நளினி மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கூறினார். மேலும் நளினி விடுதலைக்காக ஒரு பெரிய இயக்கம் கட்டப் பட வேண்டும். போராட்டம் ஒன்றே நளினியை விடுதலை செய்யும் என்று கூறினார்.



கவிஞர் தாமரை தனது உரையில், நளினிக்காக நான் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். சாதாரண மக்கள் கையெழுத்து இட்டால், அது அரசின் கவனத்தை ஈர்க்காதோ என்று முக்கிய நபர்களிடம் கையெழுத்து இட்டேன். இந்த இயக்கத்தை எடுக்கும் முன் இவ்வழக்கு தொடர்பான அவ்வளவு ஆவணங்களையும் விரிவாக படித்தேன். அண்ணா நூற்றாண்டில் கைதிகளை விடுவிக்கப் போகிறார்கள் என்ற காரணத்தால் விரைவாக வாங்கினேன். கனிமொழி மூலமாக முதல்வரைச் சந்திக்க அனுமதி வாங்கி, நான், கவிஞர் க்ருஷாங்கிணி, தியாகு ஆகியோர் கருணாநிதியை சந்தித்தோம்.







கவிஞர் தாமரை






அப்போது கருணாநிதி “எனக்கு நளினியை விடுதலை செய்வதில் ஆட்சேபம் எதுவும் இல்லை. ஆனால் சோனியாவுக்கு ஆட்சேபம் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சோனியா சரி என்றால் எனக்கு விடுதலை செய்வதில் தடையேதும் இல்லை“ என்று கூறினார். அப்போது நான் கருணாநிதியிடம் “அய்யா அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 ன் படி, இது மாநில அரசின் அதிகாரம். நீங்கள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கூறினேன். ஆனால் அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.



இதுவரை எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசைக் கேட்க வேண்டும், மத்திய அரசைக் கேட்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறியே 19 ஆண்டுகளாக நளினியை சிறையில் அடைத்துள்ளார்கள்.



முன் விடுதலையை கைதி உரிமையாகக் கோர முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், மற்ற கைதிகளைப் போல என்னை சமமாக நடத்து என்பதற்கு அனைத்துக் கைதிகளுக்கும் உரிமை உண்டு. ஆலோசனைக் குழுமம் என்பது ஒரு சடங்கு. விடுதலை செய்ய முடியாது என்பதற்காக அந்தக் குழுமம் கூறியுள்ள காரணங்கள் நகைச்சுவையானவை.



மேலும் நளினி விடுதலைக்கு எதிராக கூறப்படும் மற்றொரு காரணம், நளினி தேசத்திற்கெதிரான குற்றத்தை புரிந்துள்ளார் என்பது. எது தேசத்திற்கெதிரான குற்றம் ?







கவிஞர் தாமரை




1984ம் ஆண்டு, போபாலில் விஷவாயுவைக் கசிய விட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்ததே யூனியன் கார்பைடு நிறுவனம்…. அது தேசத்திற்கெதிரான குற்றம். அந்தக் குற்றத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சனை இன்று வரை கைது செய்யாமல் இருக்கிறதே அரசாங்கம் ? யூனியன் கார்பைடு நிறுவனம், வேறு ஒரு நிறுவனத்தால் வாங்கப் பட்டு அந்த நிறுவனமும் இன்று இந்தியாவில் கால் பதித்துள்ளதே !



அது தேசத்திற்கெதிரான குற்றம் இல்லையா ? இந்தியாவில் அணு விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்ட ஈட்டை அதற்கு காரணமான நிறுவனங்கள் ஏற்க வேண்டாம் என்ற Nuclear Liability Bill கொண்டு வரப்பட்டுள்ளதே. அதற்கு காரணமான மன்மோகன் சிங் தேசத்திற்கெதிரான குற்றத்தை புரியவில்லையா ?



தீவிரவாதம், தீவிரவாதம் என்கிறார்களே. உச்சநீதிமன்றமே ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டப் பிரிவில் இக்கொலை வழக்கு விசாரிக்கப் பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்ததை ஏன் அனைவரும் வசதியாக மறந்து விட்டார்கள் ? தடா சட்டம் இவ்வழக்கில் செல்லாது என்று எப்போது உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததோ, அப்போதே இவ்வழக்கு சாதாரண, குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் கீழ், மீண்டும் விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் துர்பாக்கியசாலிகள்.



அதனால், தடா சட்டம் செல்லாது என்றாலும், அச்சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கு விசாரணை மட்டும் செல்லும் என்று முடிவு செய்யப் பட்டது.





எத்தனை புலம்பினாலும் ராஜீவ் மரணத்தை மாற்ற முடியாது. அதனால், அதை விட்டு நகர்ந்து முன் செல்ல வேண்டும். நளினி படித்துப் பட்டம் பெற்றார் என்ற காரணத்தால் அவரை விடுதலை செய்ய முடியாது என்று கூறுகிறார்களே, நளினி படிக்காமல் சிறையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தால் மட்டும் விடுதலை செய்திருப்பார்களா ?





இது போன்ற காரணங்களைக் கூறியதற்காக தமிழக அரசு வெட்கப் பட வேண்டும். இந்தக் காரணங்களை நீதிமன்றங்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது நளினியின் உரிமை. சோனியா கருணாநிதியின் முடிவு அல்ல என்று பேசினார்.





விடுதலை ராசேந்திரன் பேசுகையில், கையெழுத்து இயக்கம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க கனிமொழி நேரம் வாங்கிக் கொடுத்தபோதே அவர் டெல்லியில் மனு கொடுங்கள் என்று தாமரையிடம் கூறியிருக்கிறார். தாமரைதான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நம் எல்லோரையும் விட, கனிமொழிக்கு தனது தந்தையை நன்கு புரியும் அல்லவா. அதனால்தான் டெல்லிக்கு மனு கொடுங்கள் என்று கூறியுள்ளார். தாமரைதான் கருணாநிதியை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.







விடுதலை ராசேந்திரன்




நளினி விடுதலை குறித்து, இடதுசாரிகள் கூட குரல் கொடுக்கத் தயாராக இல்லாத போது, பொது மக்கள் கருத்தை நளினிக்கு ஆதரவாக உருவாக்குவது மிக மிக அவசியம். தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய செல்வி.ஜெயலலிதா கூட, ஒரு பெண் என்ற வகையில் கூட நளினி விடுதலை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.





நளினி குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை, என்று கூறுகிறார்களே, நளினி நான்தான் கொன்றேன், என்று கழுத்தில் ஒரு போர்டையா மாட்டிக்கொண்டு சுற்ற முடியும் ?



தேர்தலில் தோற்கும் அரசியல் கட்சிகள், குறைந்த பட்சம் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்களா ? குறைந்தபட்ச இந்தத் தார்மீக பொறுப்பு கூட இல்லாத பொழுது நளினி மட்டும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம்.

ராஜீவ் கொலை வழக்கின் புலனாய்வு அதிகாரி, டி.ஆர்.கார்த்திக்கேயன் தான் எழுதிய புத்தகத்தில் எழுதியுள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அவர் இந்த வழக்கில் தடா சட்டம் மட்டும் இல்லையென்றால் இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க முடியாது என்று கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.





ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப் பட்ட ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட போது, அந்த அறிக்கையில் திமுகவினருக்கு ராஜீவ் கொலை வழக்கில் பங்கு இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பாது பதவியில் இருந்த ஐ.கே.குஜ்ரால் அரசாங்கத்துக்கான ஆதரவை வாபஸ் பெற்றது, இதே காங்கிரஸ் அல்லவா ? அதற்கு பயந்துதான் இன்று தமிழனின் மானத்தை திமுக காங்கிரஸ் காலடியில் அடகு வைத்துள்ளதா ?





இங்கே, நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட அரசியல் தீர்மானிக்கும் அவல நிலை நிலவி வருகிறது. ராஜீவ் படுகொலை என்ற பெயரில், எத்தனை தமிழர்களின் உயிர் பறிக்கப் பட்டிருக்கிறது ? கோடியக்கரை சண்முகம் என்பவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே, ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில். இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டாரே… அவர் உயிரை பறித்தது இந்திய அரசாங்கம் அல்லவா ?







கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பகுதியினர்




பிரியங்கா நளினியைச் சந்தித்ததால் அவர் கருணை காட்டினார் என்கிறார்களே… அதற்குப் பிறகுதானே, ஈழத்தில் போர் தீவிரமடைந்தது ? மே 21 ராஜீவ் இறந்தார் என்றால் அதற்கு முன் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகத் தானே, மே 20 முள்ளிவாய்க்காலில், பிரபாகரன் போன்ற ஒரு உடலைக் காட்டினார்கள். நளினியின் விடுதலை நம் அனைவரின் பொறுப்பு. அதற்காக நான் ஒவ்வொருவரும் குரல் கொடுப்போம் என்று பேசினார்.







சவுக்கு

Friday, April 2, 2010

நளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து ?




என்ன இது ? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், இவ்வாறுதான் கருணாநிதி தலைமையிலான அரசு, நளினி முன் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு, மிகுந்த தாமதத்துக்குப் பிறகு, சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும், கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும், மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்திருக்கிறார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினரான ப்ரோபேஷன் ஆபீசர், விடுதலை ஆன பின் நளினி, தனது, தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதையே, நளினியை முன் விடுதலை செய்ய பரிந்துரை செய்வதற்கான காரணமாக குறிப்பிட்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த ஆலோசனைக் குழுமத்தின் மற்றொரு உறுப்பினரான உளவியல் ஆலோசகர், எவ்வித தீர்மானமான முடிவையும் வழங்கவில்லை என்று அரசாணை குறிப்பிடுகிறது. உளவியல் ஆலோசகர், நளினி சரியான மனநிலையில் உள்ளாரா இல்லையா என்று மட்டும் தானே அறிக்கை தர இயலும் ? தீர்மானமான முடிவை அவர் எப்படி வழங்க முடியும் ?


ப்ரோபேஷன் ஆபிசர் தனது அறிக்கையை ஜுலை 2009ல் அளித்திருக்கிறார். இந்த அறிக்யை பெற்ற பின்னர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்தால் இத்தாலிக் கோமகளின் மனது கோணும் என்ற ஐயத்தில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையை பெறுகிறார்.

அந்த அறிக்கையில், கருணாநிதி கூறியபடி அறிக்கை தந்த அந்த ஆய்வாளர், நளினி விடுதலை பெற்ற பின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமேரிக்க தூதரகம் மற்றும், மிக மிக முக்கிய பிரமுகர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் வசிக்கும் பகுதி, ஆதலால், நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் யார் ? அமேரிக்க தூதரகத்தின் பின்புறம் தனது பல வீடுகளில் ஒரு வீட்டை வைத்துள்ள கருணாநிதியைத் தவிர வேறு யார் ? கண்டிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டைப் பற்றி கருணாநிதி கவலைப் பட்டிருக்க மாட்டார்.




நளினியை விடுதலை செய்ய மறுக்கும் இந்த அரசாணையின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்.
முதல் காரணம், நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது. ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல், அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். ராஜீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும்.

நளினியில் கணவர், இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார்.
ஒரு கொலை பயங்கரமான கொலை வழக்காக இருந்தால், அக்கொலை வழக்கில் தண்டனை பெற்றவர், எந்தக் காலத்திலும் விடுதலை செய்யப் படவே கூடாது என்று எந்தச் சட்டம் சொல்கிறது. திமுக அரசை எதிர்த்து, மதுரை மாமன்றத்தில் அரசியல் செய்தார் என்பதற்காக, மதுரை கவுன்சிலர் லீலாவதியை அவரது தெருவிலேயே வெட்டிக் கொன்றார்களே .. …

அது பயங்கரமான குற்றம் இல்லையா ?

அந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை பெற்று, இன்று, மதுரையில் அஞ்சாநெஞ்சனின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே ?


உச்சநீதிமன்ற நீதிபதி, கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில், ராஜீவ் படுகொலை, நளினிக்கு, மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால், நளினி, இக்குற்றத்தில், தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறாரே … .. ! இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி முட்டாளா ?


அடுத்த காரணம், நளினி, சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதி காலில் விழுந்து மன்றாட வேண்டுமா ? நளினியை சிறையில் சந்தித்த பிறகு, டெல்லியில் ஒரு பேட்டியின் போது, ராஜீவ் மகள் பிரியங்கா என்ன கூறினார் தெரியுமா ?


“நளினியை மன்னிக்க வேண்டும் என்றுதான் அவரை சிறையில் சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரை சந்தித்த பிறகுதான், அவரை மன்னிக்க நான் யார் என்று உணர்ந்தேன். நான் அனுபவித்த கஷ்டங்களை விட நளினி பல மடங்கு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார். “ என்று கூறினார்.

பாதிக்கப் பட்ட ராஜீவின் மகளே, நளினியை மன்னிக்கையில், நளினி, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. இந்தக் காரணம், கருணாநிதியின் கயமை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?


2008ல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த, பல்வேறு கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற, 1408 கைதிகளை கருணாநிதி விடுவித்தாரே .. … .. அந்த 1408 பேரும், குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதியின் காலில் விழுந்து மன்றாடினார்களா ? வருத்தம் தெரிவித்தார்களா ? என்ன அயோக்கியத்தனமான வாதம் இது ?

அடுத்த காரணம், நளினி விடுதலைக்குப் பின், அவரை தங்கவைத்து பாதுகாக்க, அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும், தம்பியும், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது.




அஞ்சா நெஞ்சன் அழகிரி கூடத்தான், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டில் தங்க மாட்டாரா ? கருணாநிதி கூடத்தான், ஊரான் சொத்தை அடித்து உலையில் போட்ட ஊழல் வழக்குக்காக பல முறை கைது செய்யப் பட்டுள்ளார். இப்போது அவர் என்ன காட்டிலா தங்கியுள்ளார் ?




மேலும், உச்சநீதிமன்றம், நளினியின் தாயையும், தம்பியையும் விடுதலை செய்த பிறகு, இந்தக் கேள்வியை எழுப்ப இவர்கள் யார் ?

ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்ற அபத்தமான காரணத்தை ஏற்கனவே பார்த்து விட்டோம். அடுத்த காரணம், நளினி தனது 20.01.2010 நாளிட்ட மனுவில், தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயார் என்பதால் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண் குழந்தை என்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா ?

கருணாநிதியைப் போல, மூன்று மனைவிகள், முப்பது பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? சிறையில் பிறந்து, தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அந்த அப்பாவி பெண் குழந்தையின் நலனுக்காக என்னை விடுதலை செய்யுங்கள் என்ற நளினியின் அவலக் குரல், அரக்கர்களுக்கு எங்கே புரியப் போகிறது ?

அடுத்த காரணம், மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் பரிசீலித்து, 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் ஒரு தேசத்திற்கு எதிரான குற்றத்தை புரிந்ததற்காக நளினியை முன் விடுதலை செய்ய இயலாது, என்று காரணம் கூறுகிறது அந்த அரசாணை.


ஜுலை 2009ல் நளினி தன் தாயாரோடு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கையளித்த ப்ரோபேஷன் அதிகாரி, ஜனவரி 2010ல் ராயப்பேட்டை ஆய்வாளரின் அறிக்கையை பரிசீலித்தவுடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, ‘ஆமாம், நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடும்‘ என்று ஒத்து ஊதுகிறார்.

ராஜீவ் உயிர் மட்டும் தான் உயிரா ? கருணாநிதியால் ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்யப் பட்ட 1408 கைதிகளால் இழந்த உயிர்கள் எல்லாம் மயிரா ? லீலாவதி கொலை வழக்கில் கருணாநிதியால் விடுதலை செய்யப் பட்ட, நல்லமருது, அஞ்சா நெஞ்சன் இருக்கும் தைரியத்தில், இன்னும் தனது ரவுடித்தனத்தை மதுரை மாநகரில் அரங்கேற்றி வருகிறாரே, இதனால் சட்டம் ஒழுங்கு கெடவில்லையா ?

நல்லமருது, 2008ம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்டபோது, மதுரை மாநகரில் ஒட்டப் பட்ட போஸ்டர்கள் என்ன தெரியுமா ?

"மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா! ’ "

2001ல் கட்சியை விட்டு நீக்கப் பட்ட ஒரே காரணத்துக்காக, 8 அரசு பேருந்துகளை அழகிரியின் அடியாட்கள் எரித்தனரே.. ?

குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட வேண்டியவரல்லவா அழகிரி ?

2001ல் சிறையில் அடைத்திருந்தால், 2007ல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாயிருக் காதே ? தா.கிருஷ்ணன் உயிரை விட்டிருக்க மாட்டாரே ?

19 ஆண்டுகளாக, தன் வாழ்வின் முக்கியமான இளமைப் பகுதியை சிறையில் கழித்த நளினியை விடுதலை செய்தால், இத்தாலிக் கோமகளின் மனம் கோணும் என்று, கருணாநிதி நளினியை அவமானப் படுத்துவது போல, இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டிருப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?

ராஜீவ் தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருகையில் இறந்தார். அவரோடு, இறந்தவர் அனைவரும் போலீஸ் காரர்களும், பொது மக்களும் தானே ? தமிழ்நாடு மாநில காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறதே ?




இதற்கு என்ன பதில். “ஆப்டவனுக்கு அஷ்டமத்துல சனி. ஓடுனவனுக்கு ஒன்பொதுல குரு“ என்ற பழமொழிக்கு ஏற்ப, மாட்டிக் கொண்டதால் நளினி தலையில் இக்குற்றத்தின் பெரும் பகுதி கட்டப் பட்டது என்பதுதானே உண்மை.

ராஜீவ் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால்தானே Multi Disciplinary Monitoring Agency (MDMA) என்ற அமைப்பை ஏற்படுத்தி, 1998 முதல் இன்னும் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கிறேன் என்ற பேரில், இது வரை சிபிஐ அதிகாரிகள் 12 முறை வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போயிருக்கிறார்கள் என்பது தெரியுமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த MDMA இது வரை 1998 முதல் 2009 வரை, ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க 12 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறது என்பது தெரியுமா ?

ஆனால், இது வரை உருப்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க நளினி என்ன பாவம் செய்தார் ?

புதிதாக திருமணம் ஆன பெண், திருமணம் ஆன முதல் வாரத்தில், தான் எது செய்தால் கணவருக்குப் பிடிக்கும், எது செய்தால் பிடிக்காது என்று அறியாமல் திணறுவது போல, நளினி விஷயத்தில் என்ன செய்தால் சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இத்தனை பேர் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட கருணாநிதிக்கு என்ன தண்டனை என்பதை காலம்தான் முடிவு செய்யும்.


சவுக்கு

நளினியால் கருணாநிதி உயிருக்கு ஆபத்து ?




என்ன இது ? பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா ? பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், இவ்வாறுதான் கருணாநிதி தலைமையிலான அரசு, நளினி முன் விடுதலை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் விடுதலை செய்யுங்கள் என்று கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு, மிகுந்த தாமதத்துக்குப் பிறகு, சிறை விதிகளின் படி ஒரு ஆலோசனைக் குழுமத்தை அமைத்தது. அந்த ஆலோசனைக் குழுமத்தில் அனைவரும், கருணாநிதியின் அடிவருடிகளாக இருந்தாலும், மனசாட்சி உள்ள சில அதிகாரிகள் நியாயமான அறிக்கையைத் தரவே செய்திருக்கிறார்கள்.

ஆலோசனைக் குழுமத்தின் ஒரு உறுப்பினரான ப்ரோபேஷன் ஆபீசர், விடுதலை ஆன பின் நளினி, தனது, தாயார், தம்பி, மற்றும் தம்பி மனைவி ஆகியோரோடு தங்குவார், அவர் அவ்வாறு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பதையே, நளினியை முன் விடுதலை செய்ய பரிந்துரை செய்வதற்கான காரணமாக குறிப்பிட்டிருக்கிறார் அந்த அதிகாரி. இந்த ஆலோசனைக் குழுமத்தின் மற்றொரு உறுப்பினரான உளவியல் ஆலோசகர், எவ்வித தீர்மானமான முடிவையும் வழங்கவில்லை என்று அரசாணை குறிப்பிடுகிறது. உளவியல் ஆலோசகர், நளினி சரியான மனநிலையில் உள்ளாரா இல்லையா என்று மட்டும் தானே அறிக்கை தர இயலும் ? தீர்மானமான முடிவை அவர் எப்படி வழங்க முடியும் ?


ப்ரோபேஷன் ஆபிசர் தனது அறிக்கையை ஜுலை 2009ல் அளித்திருக்கிறார். இந்த அறிக்யை பெற்ற பின்னர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்தால் இத்தாலிக் கோமகளின் மனது கோணும் என்ற ஐயத்தில் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரிடமிருந்து ஒரு அறிக்கையை பெறுகிறார்.

அந்த அறிக்கையில், கருணாநிதி கூறியபடி அறிக்கை தந்த அந்த ஆய்வாளர், நளினி விடுதலை பெற்ற பின், ராயப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்குவார். அந்தப் பகுதி, அமேரிக்க தூதரகம் மற்றும், மிக மிக முக்கிய பிரமுகர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் வசிக்கும் பகுதி, ஆதலால், நளினி அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிவித்திருக்கிறார்.

அப்பகுதியில் வசிக்கும் மிக மிக முக்கியப் பிரமுகர் யார் ? அமேரிக்க தூதரகத்தின் பின்புறம் தனது பல வீடுகளில் ஒரு வீட்டை வைத்துள்ள கருணாநிதியைத் தவிர வேறு யார் ? கண்டிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டைப் பற்றி கருணாநிதி கவலைப் பட்டிருக்க மாட்டார்.




நளினியை விடுதலை செய்ய மறுக்கும் இந்த அரசாணையின் மற்ற அம்சங்களைப் பார்ப்போம்.
முதல் காரணம், நளினி புரிந்த குற்றம் மிகப் பயங்கரமானது. ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளிகளோடு பழகியது மட்டுமல்லாமல், அக்குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றத்தை நளினி செய்திருக்கிறார். ராஜீவ் படுகொலைப் பற்றி நளினிக்கு முன்பே தெரியும்.

நளினியில் கணவர், இக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருக்கிறார்.
ஒரு கொலை பயங்கரமான கொலை வழக்காக இருந்தால், அக்கொலை வழக்கில் தண்டனை பெற்றவர், எந்தக் காலத்திலும் விடுதலை செய்யப் படவே கூடாது என்று எந்தச் சட்டம் சொல்கிறது. திமுக அரசை எதிர்த்து, மதுரை மாமன்றத்தில் அரசியல் செய்தார் என்பதற்காக, மதுரை கவுன்சிலர் லீலாவதியை அவரது தெருவிலேயே வெட்டிக் கொன்றார்களே .. …

அது பயங்கரமான குற்றம் இல்லையா ?

அந்தக் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள், ஏழு ஆண்டுகளுக்குள் விடுதலை பெற்று, இன்று, மதுரையில் அஞ்சாநெஞ்சனின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார்களே ?


உச்சநீதிமன்ற நீதிபதி, கே.டி.தாமஸ் தனது தீர்ப்பில், ராஜீவ் படுகொலை, நளினிக்கு, மே 21 அன்று ஸ்ரீ பெரும்புதூருக்கு கிளம்பும் போதுதான் தெரியும். முருகன் மீது ஏற்பட்ட காதலால், நளினி, இக்குற்றத்தில், தன்னையறியாமல் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார், அவர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இக்குற்றத்தில் பங்கெடுத்தார் என்று சொல்ல இயலாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுருக்கிறாரே … .. ! இந்த உச்ச நீதிமன்ற நீதிபதி முட்டாளா ?


அடுத்த காரணம், நளினி, சிறையில் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொண்டார் என்பதால் அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார் என்று பொருளல்ல. இப்போது கூட அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதி காலில் விழுந்து மன்றாட வேண்டுமா ? நளினியை சிறையில் சந்தித்த பிறகு, டெல்லியில் ஒரு பேட்டியின் போது, ராஜீவ் மகள் பிரியங்கா என்ன கூறினார் தெரியுமா ?


“நளினியை மன்னிக்க வேண்டும் என்றுதான் அவரை சிறையில் சந்திக்கச் சென்றேன். ஆனால், அவரை சந்தித்த பிறகுதான், அவரை மன்னிக்க நான் யார் என்று உணர்ந்தேன். நான் அனுபவித்த கஷ்டங்களை விட நளினி பல மடங்கு கஷ்டத்தை அனுபவித்திருக்கிறார். “ என்று கூறினார்.

பாதிக்கப் பட்ட ராஜீவின் மகளே, நளினியை மன்னிக்கையில், நளினி, தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது. இந்தக் காரணம், கருணாநிதியின் கயமை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?


2008ல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடித்த, பல்வேறு கொலை வழக்குகளில் தண்டனை பெற்ற, 1408 கைதிகளை கருணாநிதி விடுவித்தாரே .. … .. அந்த 1408 பேரும், குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணாநிதியின் காலில் விழுந்து மன்றாடினார்களா ? வருத்தம் தெரிவித்தார்களா ? என்ன அயோக்கியத்தனமான வாதம் இது ?

அடுத்த காரணம், நளினி விடுதலைக்குப் பின், அவரை தங்கவைத்து பாதுகாக்க, அவரின் தாயார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். நளினியில் தாயாரும், தம்பியும், இவ்வழக்கில் கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டவர்கள். அதனால், நளினியை விடுதலை செய்ய இயலாது.




அஞ்சா நெஞ்சன் அழகிரி கூடத்தான், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு விடுதலை செய்யப் பட்டார். அதனால், கருணாநிதி அவர் வீட்டில் தங்க மாட்டாரா ? கருணாநிதி கூடத்தான், ஊரான் சொத்தை அடித்து உலையில் போட்ட ஊழல் வழக்குக்காக பல முறை கைது செய்யப் பட்டுள்ளார். இப்போது அவர் என்ன காட்டிலா தங்கியுள்ளார் ?




மேலும், உச்சநீதிமன்றம், நளினியின் தாயையும், தம்பியையும் விடுதலை செய்த பிறகு, இந்தக் கேள்வியை எழுப்ப இவர்கள் யார் ?

ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்ற அபத்தமான காரணத்தை ஏற்கனவே பார்த்து விட்டோம். அடுத்த காரணம், நளினி தனது 20.01.2010 நாளிட்ட மனுவில், தான் ஒரு பெண் குழந்தைக்கு தாயார் என்பதால் விடுதலை செய்யப் பட வேண்டும் என்ற காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பெண் குழந்தை என்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்களா ?

கருணாநிதியைப் போல, மூன்று மனைவிகள், முப்பது பிள்ளைகள் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? சிறையில் பிறந்து, தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்த அந்த அப்பாவி பெண் குழந்தையின் நலனுக்காக என்னை விடுதலை செய்யுங்கள் என்ற நளினியின் அவலக் குரல், அரக்கர்களுக்கு எங்கே புரியப் போகிறது ?

அடுத்த காரணம், மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும் பரிசீலித்து, 18 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் ஒரு தேசத்திற்கு எதிரான குற்றத்தை புரிந்ததற்காக நளினியை முன் விடுதலை செய்ய இயலாது, என்று காரணம் கூறுகிறது அந்த அரசாணை.


ஜுலை 2009ல் நளினி தன் தாயாரோடு தங்குவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கையளித்த ப்ரோபேஷன் அதிகாரி, ஜனவரி 2010ல் ராயப்பேட்டை ஆய்வாளரின் அறிக்கையை பரிசீலித்தவுடன் தன் கருத்தை மாற்றிக் கொண்டு, ‘ஆமாம், நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடும்‘ என்று ஒத்து ஊதுகிறார்.

ராஜீவ் உயிர் மட்டும் தான் உயிரா ? கருணாநிதியால் ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்யப் பட்ட 1408 கைதிகளால் இழந்த உயிர்கள் எல்லாம் மயிரா ? லீலாவதி கொலை வழக்கில் கருணாநிதியால் விடுதலை செய்யப் பட்ட, நல்லமருது, அஞ்சா நெஞ்சன் இருக்கும் தைரியத்தில், இன்னும் தனது ரவுடித்தனத்தை மதுரை மாநகரில் அரங்கேற்றி வருகிறாரே, இதனால் சட்டம் ஒழுங்கு கெடவில்லையா ?

நல்லமருது, 2008ம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்டபோது, மதுரை மாநகரில் ஒட்டப் பட்ட போஸ்டர்கள் என்ன தெரியுமா ?

"மேகச் சிறை கிழித்து மேலெழும்பும் `தியாகச்’ சூரியனே!’, `மருதுவை எங்களுக்கு மீட்டுத்தந்த மகத்தான தலைவா! ’ "

2001ல் கட்சியை விட்டு நீக்கப் பட்ட ஒரே காரணத்துக்காக, 8 அரசு பேருந்துகளை அழகிரியின் அடியாட்கள் எரித்தனரே.. ?

குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட வேண்டியவரல்லவா அழகிரி ?

2001ல் சிறையில் அடைத்திருந்தால், 2007ல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாயிருக் காதே ? தா.கிருஷ்ணன் உயிரை விட்டிருக்க மாட்டாரே ?

19 ஆண்டுகளாக, தன் வாழ்வின் முக்கியமான இளமைப் பகுதியை சிறையில் கழித்த நளினியை விடுதலை செய்தால், இத்தாலிக் கோமகளின் மனம் கோணும் என்று, கருணாநிதி நளினியை அவமானப் படுத்துவது போல, இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டிருப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லாமல் வேறு என்ன ?

ராஜீவ் தமிழ்நாட்டுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வருகையில் இறந்தார். அவரோடு, இறந்தவர் அனைவரும் போலீஸ் காரர்களும், பொது மக்களும் தானே ? தமிழ்நாடு மாநில காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி மக்கள் மனதில் இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறதே ?




இதற்கு என்ன பதில். “ஆப்டவனுக்கு அஷ்டமத்துல சனி. ஓடுனவனுக்கு ஒன்பொதுல குரு“ என்ற பழமொழிக்கு ஏற்ப, மாட்டிக் கொண்டதால் நளினி தலையில் இக்குற்றத்தின் பெரும் பகுதி கட்டப் பட்டது என்பதுதானே உண்மை.

ராஜீவ் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்று வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதால்தானே Multi Disciplinary Monitoring Agency (MDMA) என்ற அமைப்பை ஏற்படுத்தி, 1998 முதல் இன்னும் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கிறேன் என்ற பேரில், இது வரை சிபிஐ அதிகாரிகள் 12 முறை வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போயிருக்கிறார்கள் என்பது தெரியுமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த MDMA இது வரை 1998 முதல் 2009 வரை, ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க 12 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறது என்பது தெரியுமா ?

ஆனால், இது வரை உருப்படியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க நளினி என்ன பாவம் செய்தார் ?

புதிதாக திருமணம் ஆன பெண், திருமணம் ஆன முதல் வாரத்தில், தான் எது செய்தால் கணவருக்குப் பிடிக்கும், எது செய்தால் பிடிக்காது என்று அறியாமல் திணறுவது போல, நளினி விஷயத்தில் என்ன செய்தால் சோனியாவுக்குப் பிடிக்கும், என்ன செய்தால் பிடிக்காது, ஏதாவது செய்து அவர் மனம் கோணுமோ என்ற கற்பனையிலேயே நளினியை சிறையில் வாட விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

இத்தனை பேர் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட கருணாநிதிக்கு என்ன தண்டனை என்பதை காலம்தான் முடிவு செய்யும்.


சவுக்கு

Wednesday, March 31, 2010

காலம் 2012.


2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்று, அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீண்டும் வெளி உலகிற்கு வந்து புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் எண்பதுகளின் இறுதியில் இருந்தது போன்ற ஆதரவு உள்ளது. அப்போதும் (அப்போதுமா ?) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி இருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு பெருகுவதைக் கண்டு, நளினியை சிறையில் இருந்து விடுதலை செய்கிறார் செல்வி.ஜெயலலிதா. இதைக் கண்டதும், கடுப்படைந்த கருணாநிதி, உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இதோ..

உடன்பிறப்பே,
இன்று நளினியை அந்த அம்மையார் விடுதலை செய்ததை ஊடகங்கள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. கோபுரத்தின் மேல் உட்கார்ந்து எக்காளச் சிரிப்பு சிரிக்கிறார் அந்த அம்மையார். தன் கணவரை கொன்றவரை விடுதலை செய்தார் என்ற கோபம் சிறிதும் இல்லாமல், இவரோடு கூட்டணி வைத்துக் கொண்டு, இவர் கொள்ளைக்குத் துணை போகிறார் அந்த இத்தாலி கோமகள்.

பெரியார் பிறந்த மண்ணிலே, தமிழனுக்கு எதிராக தமிழிலேயே எழுதும் ஊடகங்கள், அந்த அம்மையார் நளினியை விடுதலை செய்ததை மகத்தான சாதனையாக கருதி தலையங்கங்கள் எழுதுகின்றன. இந்த ஏடுகள் அறியா நளினியை விடுதலை செய்ய நான் எடுத்த முயற்சிகள். தமிழகத்தையும், தமிழினத்தையும் இன்று பீடித்திருக்கும், இந்தப் பார்ப்பனீயக் கூட்டம் இன்று தமிழின ஆதரவு வேஷம் போடுவதை நாடு நெடுநாள் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருக்காது.


நளினிக்கு மட்டுமா ? இன்று புலிகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கி, புறநானூற்றுத் தமிழனின் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும், என் அருமைத் தம்பி பிரபாகரனுக்கு ஒரு நெருக்கடி என்று அறிந்தவுடன், நான்கு மணி நேரம், எனக்குப் பிடித்த நாட்டுக் கோழி குழம்பைக் கூட சுவைக்காமல், கடற்கரையிலே, அறிஞர் அண்ணா துயிலும் இடத்தில் அவர் காலடியிலே, ‘போர் நிற்க வேண்டும்‘ ‘என் அருமைத் தம்பியின் உயிர் காக்கப் பட வேண்டும்‘ என்பதற்காக 2009லேயே குரல் கொடுத்தவன் நான் என்பதை, இந்தப் பார்ப்பன ஏடுகள் மறந்திருந்தாலும், முன்னணி நாளேடான முரசொலியில் பதிவு செய்திருப்பதை காலம் காணத் தவறாது.

நான்தான் தமிழ் என்று நாள்தோறும் சொல்லி விட்டு, ஆங்கிலம் படித்து, அகந்தை பிடித்து, ஆட்சி இருக்கிறது என்று ஆணவத்தில் ஆடும் அந்த அம்மையாரை வாழ்த்திக் கொண்டிருக்கும், பதராகிக் போன என் அன்புத் தம்பி வைரமுத்து அறியாததா ஈழத் தமிழருக்காக நான் பட்ட இன்னல் ?


ஈழத் தமிழருக்காக என் உடல் பொருள் (தப்பு) ஆவி அனைத்தையும் அர்பணித்த என்னையா இந்த அற்பப் பதர்கள் கேள்வி கேட்கிறார்கள் ?

நளினியை விடுதலை செய்ய நான் எடுக்காத முயற்சிகளா ? 2010லே, நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமத்தை அமைத்ததே கழக அரசுதான் என்பதை நாடு மறக்காவிட்டாலும் இந்த ஏடுகள் மறந்து விட்டது அந்த அம்மையாரின் சூழ்ச்சியல்லாமல் வேறு என்ன ?

ஆலோசனைக் குழுமத்தை அமைத்தவன் நான் என்றாலும், அதன் உறுப்பினர்கள், கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்பதற் காகவே நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று பரிந்துரை செய்தது யார் குற்றம் ? குழுமத்தின் குற்றமா, குழுமத்தை அமைத்தவன் குற்றமா ?

நான் முதலமைச்சராக இருந்தபோதும், எனக்குக் கீழே பணியாற்றிய ராயப்பேட்டை ஆய்வாளர் நளினியை விடுதலை செய்தால், அமெரிக்க தூதரகத்துக்கு ஆபத்து என்று சொல்லியது நான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதால் எனது ஆட்சிக்கு அவப்பெயர் தேடித்தர வேண்டும் என்ற காரணத்தைத் தவிர வேறு என்ன ?

இவ்வாறு அந்த ஆய்வாளர் அறிக்கை தருவார், அதற்கு என் வீட்டையும் பாதுகாப்புக் காரணத்துக்காக காட்டுவார், அதனால் ஒரு தமிழச்சியின் விடுதலை தடைபடும் என்ற காரணத்தினாலல்லவா நான் அமெரிக்க தூதரகம் பின்புறம் இருக்கும் எனது கோபாலபுரம் வீட்டை அரசுக்கு எழுதிக் கொடுத்தேன் ?


என்னுடைய தமிழையும், தமிழாய்ந்த அறிவையும், கற்றுக்கொள்ளாமல், என்னிடம் உள்ள காலித்தனத்தை மட்டும் கற்றுக் கொண்டு, என்னோடு, கோபலபுரத்தில் வசிக்கும், கழக உடன்பிறப்புகளால், நளினிக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்றல்லவா நான் நளினி ராயப்பேட்டையில் வசிப்பதை தடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தேன்.

கோபாலபுரம் வீட்டை எழுதிக் கொடுத்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, அது என் மறைவுக்குப் பிறகு என்று அதன் கீழே நான் எழுதியிருந்த குறிப்பை படிக்காமல் இந்த அம்மையார் என் வீட்டை நர்சுகள் தங்கும் விடுதியாக அறிவித்திருப்பது நான் தமிழன் என்பதனால் அல்லாமல் வேறு எதனால் ?


வேறு யாருக்கும் சொல்லாத ரகசியம் ஒன்றை உனக்கு மட்டும் சொல்கிறேன் உடன்பிறப்பே. நளினி எனக்கு ரகசிய தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அத்தகவலில் வீரத் தமிழச்சி நளினி சொல்லியிருந்த சேதி என்னவென்று அறிவாயா ? “நான் இப்போது இருக்கும் சிறையில் இருந்து வெளியே வர எனக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீங்கள் என்னை வெளியே விட்டீர்கள் என்றால், கோடானு கோடி, கழக உடன்பிறப்புகளைப் போல, உங்கள் இதயத்தில் என்றென்றும் நான் சிறையிருக்க நேரிடும். அதனால் என்னை சிறையை விட்டு வெளியே விடாதீர்கள்“ என்ற தகவலை அந்த வீரத் தமிழச்சி எனக்கு அனுப்பியிருந்ததை, அந்த அம்மையார் அறிவாரா ?


என் அம்மாவோடு வசிக்கப் போகிறேன் என்று, நளினி கூறியதை, நான் அந்த அம்மையாரோடு வசிக்கப் போகிறார் என்றல்லவா தவறாகக் கருதி விட்டேன் ? அந்த அம்மையாரோடு வசிக்க மாட்டேன் என்று நான் அறிந்திருந்தால், அண்ணா அறிவாலயத்தில் அல்லவா அந்த வீரத்தமிழச்சிக்கு இடம் அளித்திருப்பேன் !


இந்திய அமைதிப் படை இலங்கையில் செய்த அட்டூழியங்களை அறிந்தவர்கள் கூட, அந்தப் படை திரும்பி வருகையில் வரவேற்க செல்லுகையில், அப்போது மத்தியிலே இருந்த அரசுடன் கூட்டணி இல்லாத காரணத்தால் அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் நான் இருந்ததை தமிழ் கூறும் நல்லுகம் மறக்குமா ,


இத்தாலிக் கோமகள் சோனியா கோபித்தாலும் பரவாயில்லை என்று, நளினியை விடுதலை செய்வதற்கு இரண்டு முறை ஆலோசனைக் குழுமம் அமைத்தது கழக அரசு அல்லவா ?
நளினியைச் சிறையிலிருந்து நான் விடுதலை செய்யவில்லை என்று கூறுகிறார்களே … …


நான் மட்டும் கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், அறிவாலயத்திலும் நாள்தோறும் சிறையிருக்கவில்லையா ? இப்போது கூட நான் விரும்புவது என்ன ? தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையில் என்னை நிரந்தரமாக சிறை வையுங்கள் என்றுதானே கேட்கிறேன் ? எனக்கு மட்டுமா சிறைவாசம் வேண்டும் என்று கேட்கிறேன் ? எனது மகன்களை முதல்வர் அறைக்கு பக்கத்தில் துணை முதல்வர் அறையில், சிறையில் அடையுங்கள் என்றால் அவர்கள் இரண்டு பேரும், ஒரே அறையில் இருக்க மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன செய்வது ?


இப்போது மட்டும் மத்திய அரசு, இந்த அம்மையாரின் ஆட்சியை கலைத்து விட்டு, என்னை மீண்டும் முதல்வராக்கட்டும். மீண்டும் நளினியை கைது செய்து மீண்டும் விடுதலை செய்ய கழக அரசு என்றுமே தயங்காது என்பதை தமிழ் கூறும் நல்லுலகு அறியும். இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?

அன்புடன் மு.க.


சவுக்கு