Sunday, June 20, 2010

சந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ஆரம்பம்


வீரப்பன். இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடகக் கண்மணி ராஜ்குமாரை கடத்திய போது இருந்த பரபரப்புக்கும், அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லை.

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த போது நடந்தது என்ன என்று, கர்நாடக டிஜிபி தினகர் ஒரு புத்தகம் எழுதியுள்ளா. நக்கீரனில் இது பற்றி விரிவாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அது மட்டுமே உண்மையா என்றால் இல்லை.

இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் இன்னும் மர்மங்களாகவே உள்ளன.
நக்கீரனில் வந்த தொடர்களில், நக்கீரன் கோபால் காட்டுக்கு தூதுவராக போகாமல் இருந்திருந்தாலோ, தம்பி காமராஜ் சென்னையில் அதற்கான Coordination வேலைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தாலோ, ராஜ்குமார் உயிரோடு வெளியே வந்தே இருக்க மாட்டார் என்பது போலவும், கர்நாடக, தமிழக அரசுகளுக்கு இவர்கள் இருவரும் பாலமாக இருந்து செயல்பட்டார்கள் என்பது போலவும், பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள்.

ஆனால், இதெல்லாம் உண்மையா ? இது மட்டும்தான் நடந்ததா ? இந்த விவகாரத்தில், கோபால் மற்றும் காமராஜின் பங்கு என்ன, என்பது போன்ற விவகாரங்கள் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் தானே ?

நக்கீரன் தொடர்களை படித்து விட்டு, உங்களைப் போலவே நானும், இவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்றுதான் சவுக்கும் ரொம்ப நாளைக்கு நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் விசாரித்தால் வெளி வரும் உண்மைகள், பல பேரின் முகத்திரையை கிழிக்கிறது. அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்வது தனது கடமை என்றே சவுக்கு கருதுகிறது.
இந்தத் தொடருக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. வெகு விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக பல பேரின் முகத்திரைகளை கிழிக்கும் இந்தத் தொடர் வர இருக்கிறது.


சவுக்கு

சந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ஆரம்பம்


வீரப்பன். இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடகக் கண்மணி ராஜ்குமாரை கடத்திய போது இருந்த பரபரப்புக்கும், அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லை.

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த போது நடந்தது என்ன என்று, கர்நாடக டிஜிபி தினகர் ஒரு புத்தகம் எழுதியுள்ளா. நக்கீரனில் இது பற்றி விரிவாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அது மட்டுமே உண்மையா என்றால் இல்லை.

இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் இன்னும் மர்மங்களாகவே உள்ளன.
நக்கீரனில் வந்த தொடர்களில், நக்கீரன் கோபால் காட்டுக்கு தூதுவராக போகாமல் இருந்திருந்தாலோ, தம்பி காமராஜ் சென்னையில் அதற்கான Coordination வேலைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தாலோ, ராஜ்குமார் உயிரோடு வெளியே வந்தே இருக்க மாட்டார் என்பது போலவும், கர்நாடக, தமிழக அரசுகளுக்கு இவர்கள் இருவரும் பாலமாக இருந்து செயல்பட்டார்கள் என்பது போலவும், பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள்.

ஆனால், இதெல்லாம் உண்மையா ? இது மட்டும்தான் நடந்ததா ? இந்த விவகாரத்தில், கோபால் மற்றும் காமராஜின் பங்கு என்ன, என்பது போன்ற விவகாரங்கள் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் தானே ?

நக்கீரன் தொடர்களை படித்து விட்டு, உங்களைப் போலவே நானும், இவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்றுதான் சவுக்கும் ரொம்ப நாளைக்கு நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் விசாரித்தால் வெளி வரும் உண்மைகள், பல பேரின் முகத்திரையை கிழிக்கிறது. அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்வது தனது கடமை என்றே சவுக்கு கருதுகிறது.
இந்தத் தொடருக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. வெகு விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக பல பேரின் முகத்திரைகளை கிழிக்கும் இந்தத் தொடர் வர இருக்கிறது.


சவுக்கு

Friday, June 18, 2010

எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்….




மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது.

சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வளவு விரிவானது என்று பாருங்கள்.





இந்த லட்சணத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாம். சிறப்பு தற்செயல் விடுப்பு என்றால் என்ன தெரியுமா ? ஐந்து நாட்கள் விடுமுறை என்பதற்கு மறு பெயர். வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பெண்கள் மட்டும் தாமதமாக வரலாம் என்று ஜெயலலிதா அரசாங்கம் வெளியிட்ட ஒரு முட்டாள்த்தனமான அரசாணையை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி எதற்கென்றால், பெண்கள் வெள்ளிக்கிழமை தான் தலைக்கு குளிப்பார்களாம். இதன் காரணமாக உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு, 10 மணி அலுவலகத்திற்கு 12 மணிக்கு வரும் பெண் அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப் பட்ட அரசு ஊழியர்களுக்கு, 5 நாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு அளித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் விடாதா ?

அப்படி அரசு நிர்வாகத்தையே முடக்கி விட்டு இப்படிப் பட்ட ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?


தான் முதுகு சொறிந்து கொள்வதற்கும் இது வரை கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களின் தொகுப்பாக நடைபெறப் போகும், செம்மொழி மாநாட்டுக்க நமது வரிப்பணம் 400 கோடி…..

இதர நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை உண்டு. இதற்கான சட்டம் 1956ல் வந்தது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்ற நீதிமன்றங்களிலும், கிராமத்துப் பின்னணியில் இருந்து வரும் வழக்கறிஞர்கள், எளிமையாக தமிழிலேயே வாதாடி வருகின்றனர்.


ஆனால், இந்தியாவில், எல்லா கீழமை நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைத்து விடுகிறதா என்ன ? உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதல்லவா ? இங்கேதான் வருகிறது சிக்கல். கிராமங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி ஆவது கனவில் கூட நடக்காதே … சென்னை உயர்நீதிமன்றத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டு, நீதிபதிகளின் பின்னே காவடி தூக்கும் வழக்கறிஞர்கள் தானே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகிறார்கள்.



மதுரையிலோ, தேனியிலோ தமிழில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடியுமா ? அவ்வாறு முடியாத பட்சத்தில் நீதிபதிகளாக வந்து அமர்பவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபு வம்சத்தினர் தானே ? அவர்கள் எப்படி தமிழில் வாதாடுவதை விரும்புவார்கள் ? இதனால்தான், 1956ல் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டாலும் இன்று வரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழ் மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் மொழிக்காக பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை காவல்துறையை வைத்து கைது செய்வது எப்படிப் பட்ட காலத்தின் கோலம் ?

காமராஜர் கொண்டு வந்த மொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட கருணாநிதிக்கு வலிக்கிறதென்றால், தமிழின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி, ஆன்மீகத்தின் பேரால் மோசடி செய்த சுவாமி நித்யானந்தாவை போன்றவர் தானே ? நித்யானந்தாவுக்கு ஆன்மீகம் கருணாநிதிக்கு தமிழ்.
வழக்கறிஞர்கள் கேட்பது நியாயம் தானே ?

சட்ட மேலவையை ஒரு வாரத்தில் கொண்டு வர முடிந்த கருணாநிதியால், உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வர முடியாதா ? மத்திய அரசில் முக்கிய கூட்டணித் தலைவராக இருக்கும் கருணாநிதி உண்மையில் தமிழை நேசிப்பவராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?





கருணாநிதியின் நடவடிக்கைகளை பாருங்கள். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் படுகொலை என்றால் கடிதம். ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டுமென்றால் கடிதம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றால் கடிதம். பெட்ரோல் விலையை கூட்டக் கூடாது என்றால் கடிதம். இதற்கெல்லாம் கடிதம்.

தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் தள்ளுவண்டியில் டெல்லி செல்வாராம். எப்படி இருக்கிறது முத்தமிழ் அறிஞரின் தமிழ் உணர்வு ?


இந்தக் கருணாநிதியை நம்பினால் எந்த முன்னேற்றமும் நடக்காது என்பதை நன்கு உணர்ந்த மதுரை வழக்கறிஞர்கள், கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பட்டினிப் போரட்டம் நடத்திய வழக்கறிஞர்களிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர், மதுரைக் கிளையின் பெயர்ப் பலகை மூன்று நாட்களில் மாற்றப் படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இன்று வரை பெயர்ப்பலகை கூட மாற்றப் படவில்லை என்றால், அந்த வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வழி ?


பகத்சிங். மதுரையில் பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை தலைமையேற்று நடத்தி இன்று கைதாகி இருப்பவர். கொள்கை பிடிப்பானவர். கொண்ட நோக்கத்தில் உறுதியானவர். போராட்டத்தையே தன் வாழ்க்கை பாதையாக எடுத்துக் கொண்டவர். சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நிவாரணம் பெற்றுத் தந்தவர். தமிழ் மற்றம் தமிழகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்பவர். மேலவளவு கொலை வழக்கில் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.





பத்து நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தி போராட்டம் நடத்தியவரை நேற்று இரவு கருணாநிதியின் காவல்துறை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி கைது செய்தது. கைதாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பகத் சிங் சொன்னது என்ன தெரியுமா ?

“எங்களது இந்த போராட்டம் சிறையிலும் தொடரும். எங்கள் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும். வழக்கறிஞர் சமூகம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். தமிழ் மொழிக்காக எங்களது உயிரைக் கொடுப்பதில் எங்களுக்கு இன்பமே.

உயர்நீதிமன்றத்தில் இல்லாத தமிழுக்கு எதற்கு மாநாடு ? எங்களின் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும். வலுக்கட்டாயமாக எங்களுக்கு உணவு கொடுக்க முயற்சித்தால், அதை எதிர்ப்போம். இதிலிருந்து அணுவளவும் பின் வாங்க மாட்டோம்” என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

இப்படி ஒரு உறுதியோடு, உயிரையும் இழக்கத் தயாராக ஒரு கூட்டம் இருக்கையில் கருணாநிதியும் அவர் காவல்துறையும் என்னதான் செய்து விட முடியும் ?

என் அன்பான சவுக்கு வாசகர்களே…. புலம் பெயர்ந்த தமிழர்களே…. முதன் முதலாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.




இந்தப் பதிவை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்புங்கள். குறிப்பாக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கு அனுப்புங்கள். அல்லக்கைகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்கள், கருணாநிதி தலையிலிருந்து ஒரு மயிர் உதிர்ந்து விழுந்து, மயிர் இழந்த கவரிமான் என்று கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தால் கூட முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் உட்காருவார்கள்.


ஆகையால், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனசாட்சி உள்ளவர்களுக்கும் இதை அனுப்புங்கள். செம்மொழி மாநாடு என்னும் கருணாநிதியின் பாராட்டுக் கூட்டங்களின் தொகுப்பு விழாவை, புறக்கணியுங்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு செய்யும் மகத்தான சேவை. இந்த வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்காமல் செய்து முடிப்பீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. சவுக்கு வாசகர்களல்லவா நீங்கள் ?


எங்கள் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும்….




மதுரையில் 10வது நாளாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங், நடராஜன், ராஜேந்திரன், பாரதி, எழிலரசன் மற்றும் ராஜு ஆகியோரை எப்போதுமே வழக்கறிஞர்களை காவல்துறையினரை வைத்து ஒடுக்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதியின் காவல்துறை நேற்று இரவு, ஒரு பெரும் படையோடு எஸ்.பி.மனோகரன் தலைமையில் கைது செய்திருக்கிறது.

சொந்த மகன் பாராளுமன்றத்தில் தமிழ் பேச முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை. ஆனால் தமிழுக்கு செம்மொழி மாநாடாம்… இந்த வெட்கங்கெட்டவர்களை என்னவென்று சொல்வது. இதில் ஒரு வாரம் இருமுறை பத்திரிக்கை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் செவ்வாயன்றே கடைகளில் கிடைக்கும், அதே விலைக்கு இரண்டு புத்தகங்கள் என்று விளம்பரம் வேறு செய்கிறது என்றால் இந்த வெட்கங்கெட்டவர்களின் கூட்டணி எவ்வளவு விரிவானது என்று பாருங்கள்.





இந்த லட்சணத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாம். சிறப்பு தற்செயல் விடுப்பு என்றால் என்ன தெரியுமா ? ஐந்து நாட்கள் விடுமுறை என்பதற்கு மறு பெயர். வெள்ளிக்கிழமை ஒரு மணி நேரம் பெண்கள் மட்டும் தாமதமாக வரலாம் என்று ஜெயலலிதா அரசாங்கம் வெளியிட்ட ஒரு முட்டாள்த்தனமான அரசாணையை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அனுமதி எதற்கென்றால், பெண்கள் வெள்ளிக்கிழமை தான் தலைக்கு குளிப்பார்களாம். இதன் காரணமாக உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர முடியாது என்பதால் ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்ற இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு, 10 மணி அலுவலகத்திற்கு 12 மணிக்கு வரும் பெண் அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப் பட்ட அரசு ஊழியர்களுக்கு, 5 நாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு அளித்தால் அரசு நிர்வாகம் முடங்கிப் போய் விடாதா ?

அப்படி அரசு நிர்வாகத்தையே முடக்கி விட்டு இப்படிப் பட்ட ஒரு செம்மொழி மாநாடு தேவையா ?


தான் முதுகு சொறிந்து கொள்வதற்கும் இது வரை கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களின் தொகுப்பாக நடைபெறப் போகும், செம்மொழி மாநாட்டுக்க நமது வரிப்பணம் 400 கோடி…..

இதர நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட உரிமை உண்டு. இதற்கான சட்டம் 1956ல் வந்தது. இதன் காரணமாக, மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்ற நீதிமன்றங்களிலும், கிராமத்துப் பின்னணியில் இருந்து வரும் வழக்கறிஞர்கள், எளிமையாக தமிழிலேயே வாதாடி வருகின்றனர்.


ஆனால், இந்தியாவில், எல்லா கீழமை நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைத்து விடுகிறதா என்ன ? உயர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கிறதல்லவா ? இங்கேதான் வருகிறது சிக்கல். கிராமங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி ஆவது கனவில் கூட நடக்காதே … சென்னை உயர்நீதிமன்றத்தில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டு, நீதிபதிகளின் பின்னே காவடி தூக்கும் வழக்கறிஞர்கள் தானே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகிறார்கள்.



மதுரையிலோ, தேனியிலோ தமிழில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக முடியுமா ? அவ்வாறு முடியாத பட்சத்தில் நீதிபதிகளாக வந்து அமர்பவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பிரபு வம்சத்தினர் தானே ? அவர்கள் எப்படி தமிழில் வாதாடுவதை விரும்புவார்கள் ? இதனால்தான், 1956ல் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப் பட்டாலும் இன்று வரை உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை.

மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. தமிழ் மொழியினால் ஆட்சிக்கு வந்த திமுக தமிழ் மொழிக்காக பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை காவல்துறையை வைத்து கைது செய்வது எப்படிப் பட்ட காலத்தின் கோலம் ?

காமராஜர் கொண்டு வந்த மொழிச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு கூட கருணாநிதிக்கு வலிக்கிறதென்றால், தமிழின் பெயரால் ஆட்சி நடத்திக் கொண்டு தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி, ஆன்மீகத்தின் பேரால் மோசடி செய்த சுவாமி நித்யானந்தாவை போன்றவர் தானே ? நித்யானந்தாவுக்கு ஆன்மீகம் கருணாநிதிக்கு தமிழ்.
வழக்கறிஞர்கள் கேட்பது நியாயம் தானே ?

சட்ட மேலவையை ஒரு வாரத்தில் கொண்டு வர முடிந்த கருணாநிதியால், உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வர முடியாதா ? மத்திய அரசில் முக்கிய கூட்டணித் தலைவராக இருக்கும் கருணாநிதி உண்மையில் தமிழை நேசிப்பவராக இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா இல்லையா ?





கருணாநிதியின் நடவடிக்கைகளை பாருங்கள். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் படுகொலை என்றால் கடிதம். ஈழத் தமிழரை காப்பாற்ற வேண்டுமென்றால் கடிதம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி என்றால் கடிதம். பெட்ரோல் விலையை கூட்டக் கூடாது என்றால் கடிதம். இதற்கெல்லாம் கடிதம்.

தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் தள்ளுவண்டியில் டெல்லி செல்வாராம். எப்படி இருக்கிறது முத்தமிழ் அறிஞரின் தமிழ் உணர்வு ?


இந்தக் கருணாநிதியை நம்பினால் எந்த முன்னேற்றமும் நடக்காது என்பதை நன்கு உணர்ந்த மதுரை வழக்கறிஞர்கள், கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல் பட்டினிப் போரட்டம் நடத்திய வழக்கறிஞர்களிடம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளர், மதுரைக் கிளையின் பெயர்ப் பலகை மூன்று நாட்களில் மாற்றப் படும் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் இன்று வரை பெயர்ப்பலகை கூட மாற்றப் படவில்லை என்றால், அந்த வழக்கறிஞர்களுக்கு போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு என்ன வழி ?


பகத்சிங். மதுரையில் பட்டினிப் போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்களை தலைமையேற்று நடத்தி இன்று கைதாகி இருப்பவர். கொள்கை பிடிப்பானவர். கொண்ட நோக்கத்தில் உறுதியானவர். போராட்டத்தையே தன் வாழ்க்கை பாதையாக எடுத்துக் கொண்டவர். சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நிவாரணம் பெற்றுத் தந்தவர். தமிழ் மற்றம் தமிழகத்தின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்நிற்பவர். மேலவளவு கொலை வழக்கில் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தவர்.





பத்து நாட்களாக தண்ணீரை மட்டுமே அருந்தி போராட்டம் நடத்தியவரை நேற்று இரவு கருணாநிதியின் காவல்துறை வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றி கைது செய்தது. கைதாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பகத் சிங் சொன்னது என்ன தெரியுமா ?

“எங்களது இந்த போராட்டம் சிறையிலும் தொடரும். எங்கள் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போரட்டம் தொடரும். வழக்கறிஞர் சமூகம் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கருணாநிதியின் இந்த அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம். தமிழ் மொழிக்காக எங்களது உயிரைக் கொடுப்பதில் எங்களுக்கு இன்பமே.

உயர்நீதிமன்றத்தில் இல்லாத தமிழுக்கு எதற்கு மாநாடு ? எங்களின் பிணங்களின் மீதுதான் செம்மொழி மாநாடு நடக்கும். வலுக்கட்டாயமாக எங்களுக்கு உணவு கொடுக்க முயற்சித்தால், அதை எதிர்ப்போம். இதிலிருந்து அணுவளவும் பின் வாங்க மாட்டோம்” என்று சிங்கம் போல கர்ஜித்தார்.

இப்படி ஒரு உறுதியோடு, உயிரையும் இழக்கத் தயாராக ஒரு கூட்டம் இருக்கையில் கருணாநிதியும் அவர் காவல்துறையும் என்னதான் செய்து விட முடியும் ?

என் அன்பான சவுக்கு வாசகர்களே…. புலம் பெயர்ந்த தமிழர்களே…. முதன் முதலாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.




இந்தப் பதிவை உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும் அனுப்புங்கள். குறிப்பாக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்களுக்கு அனுப்புங்கள். அல்லக்கைகளுக்கு அனுப்பாதீர்கள். அவர்கள், கருணாநிதி தலையிலிருந்து ஒரு மயிர் உதிர்ந்து விழுந்து, மயிர் இழந்த கவரிமான் என்று கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடந்தால் கூட முண்டியடித்துக் கொண்டு முன் வரிசையில் உட்காருவார்கள்.


ஆகையால், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனசாட்சி உள்ளவர்களுக்கும் இதை அனுப்புங்கள். செம்மொழி மாநாடு என்னும் கருணாநிதியின் பாராட்டுக் கூட்டங்களின் தொகுப்பு விழாவை, புறக்கணியுங்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு செய்யும் மகத்தான சேவை. இந்த வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்காமல் செய்து முடிப்பீர்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. சவுக்கு வாசகர்களல்லவா நீங்கள் ?


Wednesday, June 16, 2010

கர்ம வீரர்…



கர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.

இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா ? நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் ?

இவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன ? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.

“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.

அப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா ?

நக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா ? கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் ?



இந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகளை வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.
யார் இந்த காமராஜ் ? பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.

சென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.


1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.




இவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.

குறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.


தூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.


ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.

காட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.

அந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.
சிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.


காமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.
எப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.



இச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.


படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.

இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.


இந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே ?




இந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.

கருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.


இப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.

சென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


பெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.


திருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


இது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.


சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.

விரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ? ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.


மஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வேஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.


சாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ? ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.

தமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”

இந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.

இந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
என்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே ?


சவுக்கு

கர்ம வீரர்…



கர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.

இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா ? நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் ?

இவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன ? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.

“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.

அப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா ?

நக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா ? கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் ?



இந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகளை வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.
யார் இந்த காமராஜ் ? பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.

சென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.


1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.




இவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.

குறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.


தூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.


ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.

காட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.

அந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.
சிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.


காமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.
எப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.



இச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.


படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.

இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.


இந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே ?




இந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.

கருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.


இப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.

சென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


பெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.


திருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


இது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.


சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.

விரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ? ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.


மஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வேஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.


சாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ? ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.

தமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”

இந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.

இந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
என்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே ?


சவுக்கு

Tuesday, June 15, 2010

நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.





பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.

சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.





ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.



இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.

ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.






அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.

இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.

இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.

இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.

இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.

1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.

அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.



இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.

ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.



தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.



காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.



இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.



இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.



இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.


சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.


சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.

இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?


ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.


ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?



அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.

இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.


எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.


சவுக்கு