Wednesday, April 29, 2009

பழநி பாரதியின் திராவகக் கவிதை


ஜுனியர் விகடனில் வெளிவந்த பழனி பாரதியின் கவிதை

என் சோற்றுத்தட்டில்
மலத்தை அள்ளி வைக்கிறான் அவன்
உண்ண விருப்பமில்லையென்றால்
தட்டைக் கழுவி வைக்கச் சொல்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

என் சகோதரியை அழுந்தப் பிடித்து
அவள் கருக் குழியை
சாம்பல் கிண்ணமாக்குகிறான்
இன்னும் இரண்டு சிகரெட் வாங்கிவர
சொல்கிறான் என்னை
நான் ஒன்றும் பேசவே இல்லை

வெடிகுண்டு வைத்திருக்கிறாயா என்று
ஒரு பெண்ணின் தனங்களை இறுக்குகிறான்
அதில் பாலருந்திய மழலையைக் கொன்று
என்னை எரிக்கச் சொல்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

கால்களற்ற என் உடல்
அவன் காலடியில் கிடக்கிறது
என் மார்பில் காலூன்றிக் கொண்டு
சக ராணுவக்காரனிடம்
என்னைக் குறித்து சொல்லிச் சிரிக்கிறான்
நான் ஒன்றும் பேசவே இல்லை

ஆம், இறையாண்மைக்கு எதிராக
எப்போதும் நான்
பேசுவதே இல்லை

No comments:

Post a Comment