Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Monday, January 25, 2010

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

Thursday, September 24, 2009

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு !




ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி... “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது. மக்களால் பேசப்படாத சமஸ்கிருதம், இன்று ஏட்டளவில்தான் உள்ளது என்பதை மறக்கவியலாது.

மொழியைவிட, அம்மொழி பேசும் மக்களால்தான் எந்த மொழிக்குமே சிறப்பு. 4 நாட்கள் பட்டினியாய் இருக்கும் ஒருவனிடம், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என்று கூறினால், “போடா மயிறு“ என்று திட்டுவான். எல்லாவற்றிலும், மக்களே பிரதானம். மக்களால்தான், கடவுளுக்குக் கூட சிறப்பு. மக்கள் கூட்டம் செல்லாத கோயிலுக்குக் கூட பெருமையில்லை.

இன்று 9வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்கும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு அறிவிப்புக்கு, தினமணி நாளேடு, கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது.

“14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி! “

இந்த 9ம் உலகத் தமிழ் மாநாடு, நடைபெறும் இந்தச் சூழ்நிலையை, ஆராய்ந்து பார்ப்பது, சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமை.

இன்று தமிழர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் ? தமிழர்கள் என்றதும், ஈழத்தை நினைக்காமல் இருக்க இயலாது.

ஈழத்தில், தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், காயங்களுக்கு மருந்தில்லாமலும், உணவில்லாமலும், ஈசல்களைப் போல செத்து மடிந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
அக்டோபர் 2008லிருந்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனுதினமும் உண்ணாவிரதங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?


“போரை நிறுத்து“ என்ற முழக்கம் தமிழத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



மனிதச் சங்கிலி நடத்தி, “காப்பாற்றுங்கள் தாயே“ என்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு, இப்போரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொள்ள தெரியவில்லை. 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, “போர் நின்று விட்டது“ என்று போலி அறிவிப்பு வெளியிடத் தெரிந்த கருணாநிதிக்கு, இந்தியா தலையிடாவிட்டால், ஆதரவு வாபஸ் என்று சொல்லத் தெரியவில்லை.


உண்ணாவிரதத்திற்குப் பின் இன்னும் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு, மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்று பசப்பத் தெரிந்த கருணாநிதிக்கு ரத்தக் கரங்களுக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்று சொல்லத் தெரியவில்லை. மகனுக்கும் மகளுக்கும் மந்திரி பதவி வேண்டி, டெல்லி சென்று, தள்ளு வண்டியில், சோனியா வீட்டுக்குச் சென்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்துங்கள் என்று மிரட்டத் தெரியவில்லை.


கேட்ட பதவி கிடைக்கவில்லை என்றதும், பதவியேற்பு விழாவில் பங்கெடுக்காமல், கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொள்ளத் தெரியவில்லை.
பிரிந்த குடும்பம் இணைந்தவுடன் “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது“ என்று மகிழ்ந்த கருணாநிதிக்கு தமிழர்களின் மரணமும் இதயத்தில் இனித்ததோ என்னவோ ?



போர் முடிந்ததுமாவது, முகாம்களுக்குள் அடைபட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தாரா இந்தக் கருணாநிதி ?




டெல்லிக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு எனது கடமை முடிந்து விட்டது என புதிதாக கட்டப் பட்டு கொண்டிருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றிப் பார்க்க தனது தள்ளு வண்டியில் கிளம்பி விடுகிறார்.



ஈழத்தில் இருக்கும் தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்களான மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே .... ! 300க்கும் மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்களே; என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்தக் கருணாநிதி ? முன்புதான் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கொன்றார்கள். இப்பொழுது இவர்கள் கணக்குப்படிதான் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டார்களே. நாள்தோறும் தமிழக மீனவர்கள், கச்சத் தீவு அருகிலும், இந்திய எல்லைக்குள்ளாகவும் துரத்தித் துரத்தித் தாக்கப் படுகிறார்களே.... என்ன செய்கிறார் இந்தக் கருணாநிதி ?

உலகத் தமிழர்கள் கருணாநிதியால் ஏமாந்து போனார்கள் என்று நெடுமாறன் அறிக்கை விட்டால், என் உயிரைப் பிரிக்க சதி என்று பதிலறிக்கை விடுகிறார். கருணாநிதியின் உயிரை எடுப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கருணாநிதியின் குடும்பத்தில் வேண்டுமானால் யாராவது சதி செய்யலாம். என் உயிரைப் பறிக்க சதி என்று அறிக்கை விட்டால், கருணாநிதியின் துரோகங்கள் மறைந்து, மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று கருணாநிதி பகல் கனவு காணுவாரேயானால் அவரது கனவு பலிக்காது.


தமிழர்கள் இத்தனை துயரத்தில் இருக்கையில், தமிழுக்கு மாநாடு நடத்துவது யார் காதில் பூச் சுற்ற ? இத்தனை தமிழர்களின் பிணங்களின் மேல் தன் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, கருணாநிதி நடத்தும் இந்த மாநாட்டை தமிழன்னை விரும்பமாட்டாள். இந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழர்களுக்கு நடத்தப்படும் கருமாதியே தவிர வேறு இல்லை.


/ஒப்பாரி/

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு !




ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி... “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது. மக்களால் பேசப்படாத சமஸ்கிருதம், இன்று ஏட்டளவில்தான் உள்ளது என்பதை மறக்கவியலாது.

மொழியைவிட, அம்மொழி பேசும் மக்களால்தான் எந்த மொழிக்குமே சிறப்பு. 4 நாட்கள் பட்டினியாய் இருக்கும் ஒருவனிடம், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என்று கூறினால், “போடா மயிறு“ என்று திட்டுவான். எல்லாவற்றிலும், மக்களே பிரதானம். மக்களால்தான், கடவுளுக்குக் கூட சிறப்பு. மக்கள் கூட்டம் செல்லாத கோயிலுக்குக் கூட பெருமையில்லை.

இன்று 9வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்கும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு அறிவிப்புக்கு, தினமணி நாளேடு, கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது.

“14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி! “

இந்த 9ம் உலகத் தமிழ் மாநாடு, நடைபெறும் இந்தச் சூழ்நிலையை, ஆராய்ந்து பார்ப்பது, சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமை.

இன்று தமிழர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் ? தமிழர்கள் என்றதும், ஈழத்தை நினைக்காமல் இருக்க இயலாது.

ஈழத்தில், தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், காயங்களுக்கு மருந்தில்லாமலும், உணவில்லாமலும், ஈசல்களைப் போல செத்து மடிந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
அக்டோபர் 2008லிருந்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனுதினமும் உண்ணாவிரதங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?


“போரை நிறுத்து“ என்ற முழக்கம் தமிழத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



மனிதச் சங்கிலி நடத்தி, “காப்பாற்றுங்கள் தாயே“ என்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு, இப்போரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொள்ள தெரியவில்லை. 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, “போர் நின்று விட்டது“ என்று போலி அறிவிப்பு வெளியிடத் தெரிந்த கருணாநிதிக்கு, இந்தியா தலையிடாவிட்டால், ஆதரவு வாபஸ் என்று சொல்லத் தெரியவில்லை.


உண்ணாவிரதத்திற்குப் பின் இன்னும் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு, மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்று பசப்பத் தெரிந்த கருணாநிதிக்கு ரத்தக் கரங்களுக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்று சொல்லத் தெரியவில்லை. மகனுக்கும் மகளுக்கும் மந்திரி பதவி வேண்டி, டெல்லி சென்று, தள்ளு வண்டியில், சோனியா வீட்டுக்குச் சென்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்துங்கள் என்று மிரட்டத் தெரியவில்லை.


கேட்ட பதவி கிடைக்கவில்லை என்றதும், பதவியேற்பு விழாவில் பங்கெடுக்காமல், கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொள்ளத் தெரியவில்லை.
பிரிந்த குடும்பம் இணைந்தவுடன் “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது“ என்று மகிழ்ந்த கருணாநிதிக்கு தமிழர்களின் மரணமும் இதயத்தில் இனித்ததோ என்னவோ ?



போர் முடிந்ததுமாவது, முகாம்களுக்குள் அடைபட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தாரா இந்தக் கருணாநிதி ?




டெல்லிக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு எனது கடமை முடிந்து விட்டது என புதிதாக கட்டப் பட்டு கொண்டிருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றிப் பார்க்க தனது தள்ளு வண்டியில் கிளம்பி விடுகிறார்.



ஈழத்தில் இருக்கும் தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்களான மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே .... ! 300க்கும் மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்களே; என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்தக் கருணாநிதி ? முன்புதான் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கொன்றார்கள். இப்பொழுது இவர்கள் கணக்குப்படிதான் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டார்களே. நாள்தோறும் தமிழக மீனவர்கள், கச்சத் தீவு அருகிலும், இந்திய எல்லைக்குள்ளாகவும் துரத்தித் துரத்தித் தாக்கப் படுகிறார்களே.... என்ன செய்கிறார் இந்தக் கருணாநிதி ?

உலகத் தமிழர்கள் கருணாநிதியால் ஏமாந்து போனார்கள் என்று நெடுமாறன் அறிக்கை விட்டால், என் உயிரைப் பிரிக்க சதி என்று பதிலறிக்கை விடுகிறார். கருணாநிதியின் உயிரை எடுப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கருணாநிதியின் குடும்பத்தில் வேண்டுமானால் யாராவது சதி செய்யலாம். என் உயிரைப் பறிக்க சதி என்று அறிக்கை விட்டால், கருணாநிதியின் துரோகங்கள் மறைந்து, மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று கருணாநிதி பகல் கனவு காணுவாரேயானால் அவரது கனவு பலிக்காது.


தமிழர்கள் இத்தனை துயரத்தில் இருக்கையில், தமிழுக்கு மாநாடு நடத்துவது யார் காதில் பூச் சுற்ற ? இத்தனை தமிழர்களின் பிணங்களின் மேல் தன் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, கருணாநிதி நடத்தும் இந்த மாநாட்டை தமிழன்னை விரும்பமாட்டாள். இந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழர்களுக்கு நடத்தப்படும் கருமாதியே தவிர வேறு இல்லை.


/ஒப்பாரி/