Sunday, April 25, 2010

நளினி செல்போன். நடந்தது என்ன ?



கடந்த 20.04.2010 அன்று பத்திரிக்கைகளில் வேலு£ர் பெண்கள் சிறையில் 19 ஆண்டுகளாக இருந்து வரும், நளினியின் அறையில் செல்போன் கைப்பற்றப் பட்டதாக பத்திரிக்கைகளில் தகவல் வெளிவந்தது. இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையிலும் இச்சம்பவம் விவாதிக்கப் பட்டு, சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த வாரம் இது தொடர்பாக பேசியிருக்கிறார்.

தமிழக சிறைகளில் செல்போன்களும், சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப் படுவது இது முதல் முறை அல்ல. அக்டோபர் 2009ல் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷ்யாம்சுந்தர், கடந்த 100 நாட்களில் மட்டும் 75 செல்போன்களும், 45 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அப்போதெல்லாம் இதை பெரிய அளவில் பரபரப்புக்குள்ளாக்கி விவாதிக்காத தமிழக அரசு, நளினி அறையில் இருந்து செல்போன் எடுக்கப் பட்டது என்றதும் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரனை விட்டு கேள்வி கேட்க வைத்து, தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்வது போல நளினியிடம் பறிமுதல் செய்யப் பட்ட செல்போன் தொடர்பாக விரிவாக சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்கிறது. முதல் நாள் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன என்று அவையில் தெரிவித்த அமைச்சர், மறு நாள் ஒரு சிம் கார்டின் அழைப்பு விபரங்களை மட்டும் அவையில் தாக்கல் செய்கிறார்.

ஒரு மாதத்துக்கு முன்னால், தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களின் செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்றும், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பை செய்து வருவது, தமிழக உளவுத் துறையின் தலைமை அதிகாரி ஜாபர்சேட் என்றும், இந்த ஒட்டுக் கேட்பு, அவுட்சார் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது என்றும் தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் தமிழக உள்துறைச் செயலருக்கு புகார் அனுப்பப் பட்டது. இந்தப் புகார் மீது ஒரு மாத காலம் ஆகியும், எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடாத தமிழக அரசு எந்த அதிகாரி மீது சட்டவிரோத ஒட்டுக் கேட்பு புகார் அனுப்பப் பட்டதோ அந்த அதிகாரியிடமே நளினியிடம் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படும் செல்போனையும், சிம் கார்டையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தங்கள் கட்சியின் எம்.பி. ஜெயந்தி நடராஜனின் செல்போன் ஜாபர் சேட் என்ற அதிகாரியால் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற புகார் அளிக்கப் பட்டு பத்திரிக்கைகளில் செய்தியாக வந்த போது அப்பிரச்சினையை அவையில் எழுப்பாத வேலு£ர் எம்எல்ஏ ஞானசேகரன், நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது என்ற தகவல் வந்தவுடன் மட்டும் உடனடியாக அவையில் இத்தகவலை எழுப்புவதும், எதிர்க்கட்சிகள் முக்கியமான எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் சட்டப்பேரவையில் எழுப்ப வாய்ப்பு அளிக்காத, பேரவைத் தலைவர், ஞானசேகரன் நளினி செல்போன் விவகாரத்தை கேள்வி நேரத்தில் எழுப்பியவுடன் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவருக்கு அனுமதி அளித்துள்ளதும், அவரது கேள்விக்கு தொடர்ந்து அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளதும், நளினியின் முன் விடுதலையை தடை செய்ய வேண்டும், 19 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையோடு உள்ள நளினியை சிறைக் குற்றம் செய்தவர் என்ற பழியை சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே, இந்த சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.

சம்பவம் நடந்ததாக கூறப்படும், 20.04.2010 அன்று, வழக்கமாக காலை 6 மணிக்கு லாக்கப்பில் இருந்து திறந்து விடப்படும் கைதிகள், அன்று காலை 9.30 மணிக்கே திறந்து விடப் பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் எனக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மற்ற கைதிகள் வழக்கம் போல காலை 6 மணிக்கே திறந்து விடப்பட்டிருந்தால், நளினியிடம் சோதனை செய்து பறிமுதல் செய்யப் பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் போது, அவர்கள் சாட்சிகளாக இருந்திருக்க முடியும். ஆனால், வசதியாக மற்ற கைதிகள் காலை 9.30 மணிக்கு திறந்து விடப்பட்டிருப்பதால், இந்தச் சோதனையில் போது, சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மட்டுமே இருந்திருக்க நேரிட்டுள்ளது. இதனால், இச்சம்பவத்தின் போது தனிப்பட்ட முறையில் சுதந்திரமான சாட்சிகள் ஒருவர் கூட இல்லாதவாறு, திட்டமிட்டு தடுக்கப் பட்டுள்ளது.

செல்போன் பறிமுதல் செய்யப் பட்டதாக முதலில் சிறைத்துறை டிஜிபி ஷ்யாம் சுந்தர் பத்திரிக்கையாளர்களிடம் தகவல் சொல்கையில்

The Economic Times. 20 April 2010
ADGP (prisons) K R Shyam Sundar said: "Following a tip-off, we monitored Nalini's cell in Vellore for more than three days. On Tuesday morning, teams raided her cell. They recovered a new Nokia mobile phone and it was switched on and active."

The Hindu 20 April 2010
Additional Director-General of Police (Prisons) K.R. Shyamsundar said the possession of a mobile phone was an offence under the provisions of the Manual.
“Under Section 298, the mobile phone is listed under the contraband articles. Section 300 prescribes major and minor punishments. If found guilty, the major punishments include hard labour, forfeiture of remission and reduction to lower class. Nalini is presently lodged in an ‘A' class cell,” Mr. Shyamsundar told The Hindu here on Tuesday. He added that the phone seized from Nalini was “active.”

The New Indian Express 22 April 2010

Confirming reports that a mobile phone and two sim cards were seized from the cell of Rajiv Gandhi assassination convict Nalini at Vellore Prison, Law Minister Durai Murugan on Wednesday said they have been sent for examination. He said jail authorities have been advised to be alert to avert such crimes. “The jail authorities found a mobile phone hidden in a cloth bag. Besides, two sim cards were recovered. Nalini snatched it and threw it into a nearby toilet. However, the instrument were recovered and sent for analysis. Only after we get the report, we can say whether she had made calls to London and Canada using that phone.’’ Durai Murugan said while replying to the issue in the State Assembly.

சிறைத்துறையின் ஏடிஜிபி, செல்போன் புதிய செல்போன் என்றும், நல்ல நிலையில் இயங்கிக் கொண்டு இருந்தது என்றும் கூறுகிறார். மறுநாள் அமைச்சர் அதிகாரிகள் சோதனைக்கு வருகையில் நளினி செல்போனை கழிவறையில் வீசியதாகவும், செல்போன் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

அதற்கு மறுநாள் அமைச்சர், அவையில், யாரோ ரவி என்ற பெயரில் சிம் கார்டு வாங்கப் பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிலிருந்து லண்டன், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு அழைப்புகள் சென்றிருப்பதாகவும் கூறுகிறார்.

துணிப்பையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது என்ற ஒரு செய்தி. கழிவறையில் இருந்து கைப்பற்றப் பட்டது என்று ஒரு செய்தி. அனைத்து கழிவறைகளும் சந்திக்கும் கழிவுநீர் தொட்டியில் இருந்து எடுக்கப் பட்டது என்று ஒரு செய்தி. தண்ணீர் பக்கெட்டில் இருந்து எடுக்கப் பட்டதாக ஒரு செய்தி. செல்போன் நல்லநி¬லையில் இயங்கிக் கொண்டிருந்தது என்று ஒரு செய்தி. இயங்கவில்லை, பழுதாகி விட்டது என்று ஒரு செய்தி.

மொத்தத்தில், இந்த செல்போன் பறிமுதல் சம்பவமே, ஒரு திட்டமிட்ட ஜோடிக்கப் பட்ட, மோசமாக அரங்கேற்றப் பட்ட ஒரு நாடகமாக தெரிகிறது.

இந்த செல்போன் பறிமுதல் தொடர்பாக, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, தடயங்களை அழித்தது, அரசு ஊழியர் பணி செய்கையில் வன்முறையை பிரயோகித்து பணி செய்ய விடாமல் தடுத்தது என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யச் சொல்லி, பாகாயம் காவல் நிலைய ஆய்வாளரிடம் நிர்பந்தித்ததாகவும், அவர் அந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தால் தனக்கு சிக்கல் வரும் என்று மறுத்ததும், சிறைத்துறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர், அந்த ஆய்வாளரிடமும், வேலு£ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுசெல்வத்திடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மிரட்டி, வழக்கு பதிவு செய்யச் சொல்லி நிர்பந்தித்ததாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது.

12.04.2010 அன்று நளினி, வேலு£ர் பெண்கள் சிறையில் கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப் பட்ட பொருட்கள் சிறை நிர்வாகத்தின் துணையுடன் சிறையில் விற்கப்பட்டு வருவதாக அளித்த புகாரின் மீது, இது வரை நடவடிக்கை இல்லை என்பதும், நளினியின் உறவினர்களையும் வழக்கறிஞர்களையும் நளினியை பார்க்க விடாமல் தடுத்ததாகவும் அளித்த புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லை என்பதும் சிறைத் துறையினர், தங்கள் ஊழல்களை மறைப்பதற்காகவும், நளினி நீதிமன்றங்கள் மூலம் எவ்வித நிவாரணமும் பெறக் கூடாது என்பதற்காகவே இந்த செல்போன் பறிமுதல் சம்பவம், திட்டமிட்டு நடத்தப் பட்டுள்ளதாக நம்புகிறேன்.

நன்னடத்தை அதிகாரி 30.07.2009 அன்றே, நளினியை விடுதலை செய்யத் தகுதியானவர் என்றும், நளினியை விடுதலை செய்வதால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்று அறிக்கை அளித்த பிறகு, 19.08.2009 அன்று, எந்த அதிகாரியிடமும், எந்த நபரிடமும் அறிக்கை பெற்று, யாரையும் விடுதலை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என்ற சிறை விதித் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதே, நளினியை விடுதலை செய்யக் கூடாது என்பதில் தமிழக அரசு எப்படித் தீர்மானமாக இருக்கிறது என்பதை தெளிவு படுத்துகிறது.

ஏழு ஆண்டுகள் தண்டனை முடித்த 1405 ஆயுள் கைதிகளை 2008ம் ஆண்டில் விடுதலை செய்கையில், எந்த ஆய்வாளரிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி அறிக்கை எதுவும் கேட்காமல் விடுதலை செய்த தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தை காட்டி நளினியை விடுதலை செய்ய மறுத்ததை, நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல், நளினியை விடுதலை செய்ய இருக்கும் வாய்ப்பை பறிப்பதற்காகவே, இந்த செல்போன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக ஒரு திட்டமிட்ட கட்டுக் கதை பரப்பப் பட்டு வருவதாக நம்புகிறேன்.


சட்டவிரோதமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்பேசிகளையும், ஈமெயில்களையும், இடைமறித்து படிக்கவும், கேட்கவும் தேவையான தொழில்நுட்பத்தை கொண்ட தமிழக உளவுத்துறை நளினி, லண்டன், இலங்கை மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பேசியுள்ளார் என்பதற்கான ஆவணங்களையும் போலியாக தயார் செய்யக் கூடிய திறமை பெற்றது என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு பல்வேறு ஆவணங்களை தயார் செய்து, பத்திரிக்கைகளில் வெளியிட உளவுத் துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தமிழக அரசின் இந்தச் சதியையும், வருங்காலங்களில் செய்ய உள்ள சதித் திட்டங்களையும் நீதிமன்றங்களின் துணையோடு எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

பா.புகழேந்தி
நளினியின் வழக்கறிஞர்

1 comment:

  1. தங்கள் கட்சியின் எம்.பி. ஜெயந்தி நடராஜனின் செல்போன் ஜாபர் சேட் என்ற அதிகாரியால் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற புகார் அளிக்கப் பட்டு பத்திரிக்கைகளில் செய்தியாக வந்த போது அப்பிரச்சினையை அவையில் எழுப்பாத வேலு£ர் எம்எல்ஏ ஞானசேகரன், நளினியிடம் செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது என்ற தகவல் வந்தவுடன் மட்டும் உடனடியாக அவையில் இத்தகவலை எழுப்புவதும், எதிர்க்கட்சிகள் முக்கியமான எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் சட்டப்பேரவையில் எழுப்ப வாய்ப்பு அளிக்காத, பேரவைத் தலைவர், ஞானசேகரன் நளினி செல்போன் விவகாரத்தை கேள்வி நேரத்தில் எழுப்பியவுடன் மட்டும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அவருக்கு அனுமதி அளித்துள்ளதும், அவரது கேள்விக்கு தொடர்ந்து அமைச்சர் விரிவான பதில் அளித்துள்ளதும், நளினியின் முன் விடுதலையை தடை செய்ய வேண்டும், 19 ஆண்டுகளாக சிறையில் நன்னடத்தையோடு உள்ள நளினியை சிறைக் குற்றம் செய்தவர் என்ற பழியை சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே, இந்த சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகிக்கிறேன்.

    ReplyDelete